திண்டுக்கல்-அரசு பணியிடங்களை ஒழிக்கும் அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும், சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை, குறைந்தபட்ச மாத ஊதியம் 20 ஆயிரம் வழங்க கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 30க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதில் போலீசாருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு சட்டை கிழிந்ததோடு காயம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
You must be logged in to post a comment.