கீழக்கரை செய்திகள்
மதுரையில் எமதர்மராஜா வேடமணிந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்..
30வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவின் 3வது நாளான இன்று மதுரை கோரிப்பாளையத்தில் எமதர்மராஜா வேடமணிந்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்I.PS., தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் திரு. அருண் பால கோபாலன் IPS., (போக்குவரத்து), போக்குவரத்து காவல் அதிகாரிகள்,காவல் ஆளிநர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தனியார் பள்ளி வேன் மோதி பலி..
இராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த மூர்த்தி மகள் சாருலதா, 20. இவர் ராமநாதபுரம் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இன்று மாலை கல்லூரி வகுப்புகள் முடிந்து கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு சாலை ஓரம் நடந்து சென்றார். அப்போது அது வழி சென்ற பரமக்குடி தனியார் பள்ளி மோதியதில் சாருலதா படுகாயமடைந்தார். ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை கண்டித்து அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். செல்போனில் பேசியவாறே பள்ளி பேருந்தை டிரைவர் ஓட்டிச் சென்றதே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பென்னாகரம் அருகே 5 ஊர் ஓங்காலியம்மன் கோயில் திருவிழா ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன்..
தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அடுத்துள்ள ஆலாமரத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஓங்காலியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதத்தில் 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தீ மிதி விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம். மேலும் அம்மனை 15நாட்கள் கொழுவில் வைத்து 5ஊர் இளைஞர்கள் மட்டுமில்லாமல் வெளிஊருகளி லிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சேவாட்டாம் ஆடி மகிந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று ஓங்காலியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆலாமத்தூர், சாணாரப்பட்டி, சோளிக்கவுண்டனூர், பூதநாயக்கன்பட்டி உள்ளிட்ட 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ரோணிப்பட்டி நாகாவதி ஆற்றிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்து சக்தி கரகம் அழைத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஓங்காலியம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் விவசாயம் செழிக்கவும், குறைகள் விலகவும், பக்தர்கள் தீ குண்டத்தில் உப்பு கொட்டி ஓங்காலியம்மனை வழிப்பட்டனர். இந்த தீ மிதி விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டனர். மாலையில் 5ஊர் கிராம பெண்கள் மாவிளக்கு எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த விழாவில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.தர்மபுரி மாவட்டத்திலேயே இந்த ஊரில் மட்டும் ஓங்காலிஅம்மன் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
என். ஸ்ரீதரன் தர்மபுரி செய்தியாளர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா பொம்மிநாயக்கன்பட்டி சேர்ந்த முருகேசன் வயது 47. இவர் தற்போது திண்டுக்கல் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுபத்ரா நிலக்கோட்டை மகளிர் சிறைச்சாலையில் பழமைவாதம் ஆக பணியாற்றி வருவதால் இவர் நிலக்கோட்டையில் குடியிருந்து வந்தார், இவரும் இவரது மனைவியும டிசம்பர் மாதம் வத்தலக்குண்டுக்கு சாமி கும்பிட வண்டியில் சென்ற போது சிறு விபத்து ஏற்பட்டது. இதில் முருகேசனுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இதற்காக மதுரை மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கப்பட்டு வந்த நிலையில் அடிக்கடி மன அழுத்தம் உள்ளவர் போன்ற பேசி வந்ததாகவும், இதன் காரணமாக பித்து பிடித்தது போல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் வீட்டில் தற்கொலைக செய்து கொண்டார் . வேலைக்கு சென்ற சுபத்ரா வீட்டிலிருந்த கணவருக்கு பலமுறை போன் செய்தும் போனை எடுக்காததால் வீட்டிற்கு நேரில் வந்து பார்த்தபோது முருகேசன் அங்கிருந்த தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து போனார். இதனைப் பார்த்த மனைவி சுபத்ரா கதறியுள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி உடனடியாக வந்து முருகேசனின் உடலை தூக்கில் இருந்து இறக்கி உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் இறந்து போனார் என உறுதிப்படுத்தினார்கள். இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி சுபத்ரா கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இறந்துபோன முருகேசனுக்கு. 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் நிலக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அழகப்பா பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற “அழகு ஆரம் – 2019” கலை நிகழ்ச்சியில் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாதனை..
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற கலை நிகழ்ச்சிப் போட்டிகளில் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 02.02.2019 மற்றும் 03.02.2019 தினங்களில் நடைபெற்ற “அழகு ஆரம் – 2019” கலை நிகழ்ச்சிப் போட்டிகளில் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டு மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தனர்.
இக்கலை நிகழ்ச்சி போட்டிகளில் நாடகப் போட்டி மற்றும் கோலப் போட்டி இரண்டிலும் முதலிடமும், மௌன நாடகப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி இரண்டிலும் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்தனர். இதில் பல்வேறு உறுப்புக்கல்லூரிகளிலிருந்தும் பல்வேறு மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். இக்கலை நிகழ்ச்சிக்காக மாணவ மாணவியர்களை தமிழ்த்துறைத்தலைவர் திரு.P.பாலமுருகன் அவர்கள் தயார் செய்திருந்தார்.
இச்சாதனைக்கு இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் முஹம்மது யூசுப், செயலர் சர்மிளா, இயக்குநர்கள், முதல்வர் ரஜபுதீன், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு துவங்குவது மற்றும் தபால் நிலையங்கள் செயல்படுவது பற்றிய கருத்தரங்கம்…
இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு துவங்குவது மற்றும் தபால் நிலையங்கள் செயல்படுவது பற்றிய கருத்தரங்கம் பள்ளி முதல்வர் திரு.எஸ்.நந்தகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக இராமநாதபுர மாவட்ட தலைமை தபால் நிலைய அதிகாரி திரு.சீதாராமன் கலந்து கொண்டு சேமிப்பு கணக்கு தபால் நிலையங்களில் பத்து வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு மாணவனும் ரூ.50 செலுத்தி, இரண்டு புகைப்படம் மற்றும் ஆதார் ஜெராக்ஸ் கொடுத்து சேமிப்பு கணக்கை துவக்கி பணத்தை தங்கள் கணக்கில் சேமித்து கொள்ளலாம். இது உங்களுக்கு பிற்காலத்தில் மேற்படிப்புக்கு உதவியாக இருக்கும். மேலும் 18 வயது பூர்த்தியடைந்து சேமிப்பு கணக்கு துவங்கும் ஒவ்வொருவருக்கும் சேமிப்பு புத்தகத்துடன் கார்டு வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் மாணவர்கள் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை தொடர ரூ.100 பதிவு கட்டணமாகவும் குறைந்தபட்சம் ரூ.200 தபால் தலை சேமிப்புக்கு அட்வான்சாகவும் செலுத்தி தபால் தலை சேகரிக்க பதிவு செய்தால் ஒவ்வொரு முறையும் தபால் தலை அரசு வெளியீடு செய்யும் பொழுது முகவரிக்கு புதிய தபால் தலை அரசு அனுப்பிவைக்கும். நமது அட்வான்ஸ் முடிந்துவிட்டால் மேற்கொண்டு அட்வான்ஸ் தொகை செலுத்தி புதிய தபால் தலைகளை சேகரித்து கொள்ளலாம்.
பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் 55 மாணவர்கள் இராமநாதபுரம் தலைமை தபால் நிலையம் சென்று நேரடியாக தபால் நிலையம் செயல்படுவது பற்றி விரிவான விளக்கத்துடன் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.
மாணவர்கள் My Stamp என்ற திட்டத்தின் கீழ் தங்களுடைய குடும்பத்தில் நடைபெற உள்ள திருமணம், பிறந்தநாள், திருமணநாள்ää கிரகபிரவேசம் போன்ற நிகழ்ச்சியின் புகைப்படத்தை தபால் தலையாக வெளியிட பதினைந்து தினத்திற்கு முன்பே புகைபடத்துடன் ரூ.300 கட்டணம் செலுத்தினால் ரூ.5 மதிப்புள்ள 12 தபால் தலைகள் தங்கள் இல்லத்திற்கு வந்து சேரும்.
Tracking – பதிவு தபால் ஒருவா முகவரிக்கு வெளியூருக்கோ, வெளிமாநிலத்திற்கோ, வெளிநாட்டிற்கோ அனுப்பினால் அந்த தபால் எந்த இடத்தில் தற்பொழுது உள்ளது அல்லது அந்த தபால் முகவரிக்கு சென்று அடைந்து விட்டதா என்பதனை அறிந்து கொள்ளும் பதிவு தபால் வசதியும் உள்ளது என தெரிவித்தார்.
மேலும் பெற்றோர்களுக்கு வருமான வரி சலுகை பெற சேமிப்பு பத்திர வசதி செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். மாணவர்கள் தபால் நிலையத்தை நேரில் பார்வையிட்டு பல அரிய கருத்துக்களை அறிந்து பயன் அடைந்தனர் மேலும் சேமிப்பு கணக்குகள் உருவாக்க உறுதி எடுத்துக் கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காட்பாடி அரசினர் சட்டக்கல்லூரியில் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாட்டுக்கறி பிரியாணியால் ஏற்பட்ட பதற்ற சூழல் ..
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள அரசினர் சட்டக்கல்லூரியில் இன்று புதியதாக சட்டப்படிப்பு பயில் கல்லூரியில் சேரும் மாணவர்கள் வரவேற்க வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் விருந்திற்கு தற்போது கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் வெஜ் பிரியாணி,வெஜ் பிரைட்ரைஸ், சிக்கன் பிரியாணி மற்றும் மாட்டுக்கறி பிரியாணியும் வைக்கப்பட்டிருந்தது. இதனை ஒரு பிரிவு மாணவர்கள் வரவேற்றனர். இதற்கு ஒரு பிரிவு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பு மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருதரப்பு மாணவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். புதிய மாணவர்கள் வரவேற்கும் நிகழ்ச்சியில் மாட்டுக்கறி விருந்தால் மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேட்டிற்கு வெளியே மாட்டுக்கறி பிரியாணி வைக்கப்பட்டது. பிறகு மாணவர்கள் அமர்ந்து பிரியாணியை சாப்பிட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழனியில் போக்குவரத்து ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்…
அரசு போக்குவரத்து கோவை மாவட்டம் பழனி கிளையில் ஊழியர்களுக்கு மாத சம்பளம் 5ந் தேதி வரை கொடுக்காமல் இருப்பதை கண்டித்து, ஊழியர்கள் அனைவரும் கிளையின் நுழைவாயிலில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை 3வது நாளாக நடத்திக்கொண்டு இருக்கின்றனர். நிர்வாகத்தை உடனடியாக சம்பளத்தை மாதம்தோறும் 1ந்தேதி கொடுக்க சொல்லி வலியுறுத்தி கருப்பு கொடி அணிந்து போராட்டத்தில் இருக்கின்றனர்.
பழனி செய்தியாளர்:-ரியாஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேச்சு. நிலக்கோட்டை பிப்ரவரி 6. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை திமுக ஊராட்சி செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ பி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், வத்தலகுண்டு செயலாளர் முருகன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் மாயாண்டி வரவேற்று பேசினார்.
அக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசியதாவது : பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது இந்தத் தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவது உறுதி. இதற்காக கட்சித் தொண்டர்கள் பகல் பாராமல் உறுதியுடன் இருந்து கட்சிப் பணியாற்றி வேண்டுகோள் விடுத்தார். இத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் நமது கட்சி நிர்வாகிகளுடன் உள்ள சிறு சிறு பிரச்சனைகளை பெரிதாகி சம்பளத்தையும் ஒற்றுமையை சீர்குலைக்க வாய்ப்புள்ளது. எனவே கட்சி தொண்டர்கள் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு முழுமூச்சாக பாடுபடவேண்டும் என்றார். இக்கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், மாவட்ட துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிடர் பிரிவு துணைச் செயலாளர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் கழக செயலாளர் கருணாநிதி நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியை டிஎஸ்பி லோகநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
சித்தூர் பஸ் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி ஓடைபிள்ளை கோவில் வரை சென்று திரும்பியது. பேரணியில் காட்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீதாராமன் மற்றும் ஜான்சன் லிப்ட் ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூரில் காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து வந்த ரௌடி கைது..
சிறைத்துறை அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியீட்டு புல்லட் நாகராஜ் பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனைக்கு ஆஜர்படுத்தப்பட்டான்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல் மங்கலத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறைச்சாலை பெண் அதிகாரியை கொலை செய்துவிடுவதாக மிரட்டி ஆடியோ வெளியிட்டான். இதனை தொடர்ந்து பெரியகுளம் தென்கரை காவல் நிலைய பெண் ஆய்வாளரையும் மிரட்டி ஆடியோ வெளியீட்டு அதைத்தொடர்ந்து நாகராஜன் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்நிலையில் பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக இன்று ஆஜர்படுத்தப்பட்டார் வழக்கை விசாரித்த நீதிபதி அருண்குமார் மீண்டும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்து வருகின்ற 20.02.19 அன்று மீண்டும் வழக்கு விசாரனைக்கு மீண்டும் ஆககா உத்தரவிட்டார் இதனை தொடர்ந்து புல்லட் நாகராஜன் வேலூர் மத்திய சிறைக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செஸ் அசோசியேஷன், ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி சார்பில் மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியாக மாவட்ட அளவிலான 14 வது செஸ் போட்டி பிப்ரவரி 17.02.2019 அன்று நடைபெற உள்ளது. நான்கு பிரிவுகளாக நடைபெறும்.
இப்போட்டிகளில் 9, 11,13, 15 வயதிற்கு உட்பட்டோர் கலந்துகொள்ளலாம். நுழைவு கட்டணம் ரூ.150, மாவட்ட பதிவு கட்டணம் ரூ.100 . மாவட்ட பதிவிற்கு அதற்குரிய விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். சொந்த சதுரங்கப்பலகை மற்றும் கடிகாரம் கொண்டு வர வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலரை 94431 34135, 82480 88338 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மாவட்ட பாதி போட்டிக்கான நுழைவு படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல chessramnad.blogspot.in மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை எண் 9 அலங்கச்சேரி தெரு மாடியில் உள்ள ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில் 13.02.2019 க்குள் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்றிடம் பெறும் ஆண்கள், பெண்களுக்கு கேடயம், 4 வது, 5 வது இடம் பெறும் ஆண்கள், பெண்களுக்கு பதக்கம் பரிசு வழங்கப்படும் என மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக உச்சிப்புளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் உச்சிப்புளி எல்கைக்குட்பட்ட கடலோர பகுதியான அரிய மான் கடற்கரை பகுதியை கண்காணித்தனர். மேலும் சேதுநகரைச் சேர்ந்த ஜெயக்மார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அங்கு தலா 2 கிலோ வீதம் பேக்கிங் செய்த 98 பொட்டல கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 196 கிலோ எடை கொண்ட கஞ்சா வின் சர்வதேச மதிப்பு ரூ.10 லட்சமாகும். பறிமுதல் செய்த கஞ்சா பொட்டலங்களை உச்சிப்புளி காவல் நிலையம் கொண்டு வந்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அரிய மான் கடற்கரை பகுதியில் தனி அறையில் பதுக்கிய கஞ்சா பொட்டலங்களை ராமேஸ்வரம் டிஎஸ்பி மகேஷ் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் சம்பந்தமாக கடத்தலில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசார் இன்று (06.02.2019) காலை முதல் விசாரணையை முடுக்கி விட்டனர். ராமேஸ்வரம் டிஎஸ்பி., மகேஷ் தலைமையில் தனிப்படையினர் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இது தொடர்பான தோப்பு உரிமையாளரான ஓய்வு தாசில்தார் ஜெயராஜ் கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து உச்சிப்புளி போலீசார் திருப்புல்லாணி அருகே சேதுநகரில் ஜெயராஜை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயராஜ், மண்டபத்தில் வருவாய் துறையில் பணியாற்றியபோது கடத்தலில் ஈடுபடும் இலங்கை அகதிகளுடன் நட்பு இருந்ததும் தெரிய வந்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதிகளில் குப்பை கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுவதால் நோய்பரவும் அபாயம்.
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதிகளில் கோழிகழிவுகள் மற்றும் அசுத்தம் ஏற்படுத்தக்கூடிய கழிகளை ஆத்தூர் செல்லும் சாலை அருகே உள்ள குளம் மற்றும் சாலையோரங்களில் ஒருசிலர் கொட்டுகிறார்கள். இதை சித்தையன் கோட்டை பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்துவதும் இல்லை கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் இல்லை இதனால், அழுக்கல் ஏற்பட்டு துர்நாற்றம் விசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
அருகில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி உதவுவதோடு, நோய்பரப்பும் வகையில் குப்பை கழிவுகளை சாலையோரம் கொட்டி அசுத்தம் ஏற்படுத்துபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆத்தூர் – அப்பாஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நத்தம் அருகே மதுரை சாலையில் உள்ள இடையபட்டியில் மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டு மின்சாரம் இல்லாமல் இருந்தாக கூறப்படுகிறது. இதைகண்ட அப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் எவ்வித முன்னெச்சரிக்கை பாதுகாப்புமின்றி மின்கம்பத்தில் ஏறி சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் தொங்கிய நிலையில் பலியானார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நத்தம் காவல்துறையினர். வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவிகள் ஆர்த்தி 15, அஸ்வினி 15, கனிகா 14 ஆகியோர் நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்பினர். பள்ளிக்கு இவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலாமல் போனது. பின்னர் விசாரணையில் அவர்கள் 3 பேரும் பள்ளிக்கு செல்லவில்லை என தெரிந்தது. மூவரின் பெற்றோர் புகாரில் தொண்டி போலீசார் வழக்கு பதிந்து இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தீவிரமாக தேடி வந்தனர். மாணவிகள் மாயமான சம்பவம் அப்பகுதி பெற்றோர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
தொண்டி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் 3 மாணவிகளையும் ரயில்வே போலீசார் மீட்டனர். விசாரணையில் மாணவிகள் மூவரின் வீட்டின் பொருளாதார சூழ் நிலையால் வேலை பார்த்து வீட்டுக்கு பணம் அனுப்பி பெற்றோரின் கடன் சுமையை குறைக்க வேண்டும் என மாணவிகள் முடிவு செய்து தொண்டியில் இருந்து ராமநாதபுரம் வந்தனர். ரயிலில் திருச்சி சென்று ஸ்டேஷனில் இறங்கிய போது ரயில்வே போலீசாரிடம் சிக்கியதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட மாணவிகள் திருச்சி குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மண்டபம் கடலில் தடை செய்த வலை மீன்பிடி விவகாரம் : ராமநாதபுரத்தில்அதிகாரிகள் முன்னிலையில் சமரசம்..
இராமநாதபுரம் மாவட்ட கடல் வளத்தை முற்றிலும் அழிக்கும் வெளியூர் முகவரி விசைப்படகுகளை வெளியேற்றக்கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மண்டபம் மீனவர்கள் 05.02.2019 அன்று உண்ணாவிரதம், கடையடைப்பு போராட்டம் நடத்தினர். தடை செய்யப்பட்ட வலை மீன்பிடிக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதம் விலக்கி கொள்ளப்பட்டது. மீனவர்கள் விவகாரத்திற்கு தீர்வு காணுவது தொடர்பான சமாதான கூட்டம் ராமநாதபுரம் கோட்டாட்சியர் சுமன் தலைமையில் நடந்தது.
இதில் அனைத்து தரப்பினரும் சட்டத்திற்கு உட்பட்டு இதுநாள் வரை உள்ள நடைமுறையை பின்பற்றி (தடை செய்யப்பட்ட அனைத்து வலைகளை தவிர்த்து) மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டும். சட்டத்தை மீறும் படகுகளுக்கு பாரபட்சமின்றி சட்ட விதிகள் படி அபராதம் விதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜனவரி 24ஆம் தேதி இரு தரப்பினர் மீதும் மீன் வளத்துறையால் போடப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். பதிவு செய்யப்பட்ட படகுகளை வருவாய் துறை, மீன்வளத்துறை கூட்டு தணிக்கை செய்து கண்டறிந்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மீனவர்களுக்கு இடையே அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அணுகி தீர்த்துக்கொள்ளவேண்டும். மீனவர்கள் வரும் காலங்களில் எவ்வித பிரச்னையுமின்றி ஒற்றுமையுடன் சுமுகமாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு மீன்பிடித் தொழில் செய்வது என முடிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மீன் வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், மண்டபம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் கோபிநாத், ராமநாதபுரம் தாசில்தார் பொன்.கார்த்திகேயன், ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் எம். மகேஷ் முன்னிலை வகித்தனர். மீனவ நலச் சங்க பிரதிநிதிகள் சிகேஎம் கணபதி எஸ்.பாலசுப்ரமணியன், பெ.பாலசுப்ரமணியன், எம்.ஜாகீர் உசேன், செய்யது சுல்தான் உபைதுல்லாஹ் கான், சி.செல்வகுமார், சர்புதீன் அபூபக்கர் என்.காளிமுத்து, மாடசாமி, வின்சென்ட், ஜோசப், தாசன், அடைக்கலம், ஜான், சவரி ராஜ், ஜான்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உதவித்தொகை வழங்கிட வலியுறுத்தி காலவரையற்ற காத்திருப்பு போராட்டம்-மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு..
15/02/19 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் ஆத்தூர் தாலுகா அலுவலகம் முன்பாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்து நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் காத்திருக்கும் பயனாளிகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பெற்று தமிழக அரசிடம் கூடுதல் நிது பெற்று இம்மாதம் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க ஏற்ப்பாடு செய்துள்ளார். ஆனால், ஆத்தூர் தாலுகாவில் மட்டும் அங்கு பணியாற்றும் சமூக நலத்துறை தாசில்தார் உதவித்தொகை வேண்டி காத்திருக்கும் பயனாளிகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்காத காரணத்தால் வெகு சிலருக்கு மட்டுமே உதவித்தொகை கிடைத்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து இம்மாதம் முதல் கிடைக்க வேண்டிய உதவித்தொகையை கிடைக்க விடாமல் பணியில் அலட்சியமாக இருந்த ஆத்தூர் சமூக நலத்துறை தாசில்தாரை கண்டித்தும், ஆத்தூர் தாலுகாவில் உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்கிட வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஆத்தூர் ஒன்றியக்குழுவின் சார்பில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இப்போராட்டத்தில் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளும் அவர்களது பாதுகாவலர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுமாறு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் திண்டுக்கல் குழு சார்பில் S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.