வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள அரசினர் சட்டக்கல்லூரியில் இன்று புதியதாக சட்டப்படிப்பு பயில் கல்லூரியில் சேரும் மாணவர்கள் வரவேற்க வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் விருந்திற்கு தற்போது கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் வெஜ் பிரியாணி,வெஜ் பிரைட்ரைஸ், சிக்கன் பிரியாணி மற்றும் மாட்டுக்கறி பிரியாணியும் வைக்கப்பட்டிருந்தது. இதனை ஒரு பிரிவு மாணவர்கள் வரவேற்றனர். இதற்கு ஒரு பிரிவு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பு மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருதரப்பு மாணவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். புதிய மாணவர்கள் வரவேற்கும் நிகழ்ச்சியில் மாட்டுக்கறி விருந்தால் மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேட்டிற்கு வெளியே மாட்டுக்கறி பிரியாணி வைக்கப்பட்டது. பிறகு மாணவர்கள் அமர்ந்து பிரியாணியை சாப்பிட்டனர்.
You must be logged in to post a comment.