இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலை நகராட்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பாக மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமையில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலை கண்டித்தும் , கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளை நிர்வாகிகள் 3 நபர் மீது கத்தியால் குத்தி கொலை வெறித்தாக்குதல் நடத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும் , கீழக்கரையில் முற்றிலுமாக போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் கலந்து கொண்டு பேசுகையில் :- தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களே மத்தியிலே பாசிசத்திற்கு எதிராக பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்று அயராது உழைத்து இரவு பகல் பாராமல் ஒரு கட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றீர்கள் அதை முன்வைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதாகவும் இளைஞர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாக இருக்கின்றார்கள் என்று பலமுறை எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் மேடை மேடையாக விமர்சனம் செய்து வருகிறார். இதே நேரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முன்வந்து போதைக்கு எதிராகவும் உங்கள் ஆட்சிக்கு எதிராகவும் பிரச்சாரத்தை முன்னெடுத்தால் நாங்கள் களம் கண்டால் நீங்கள் கண்ட கனவு அடியோடு ஒளிந்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாமல் ஆகிவிடும் என்பதை நீங்கள் உணர வேண்டும் . இனியாவது போதைப் பொருள்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் போதைப் பொருளுக்கு ஆதரவாக இருக்கும் அதிகாரிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் மேலும் ஒரு சில காவலர்கள் போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு உடந்தையாக இருப்பதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது முழுமையாக தெரிந்து கொண்டு அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க விட்டால் கடுமையான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தனர் அதனை தொடர்ந்து போதைப்பொருள் கீழக்கரையில் விற்பனையை கட்டுப்படுத்தவில்லை என்றால் கீழக்கரையில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களில் அணிவகுப்போடு சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார். கீழக்கரையில் போதை பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவதாகவும் இளைஞர்கள் அழிவை நோக்கி செல்கின்றனர் இதை கீழக்கரை திமுக நகர் நிர்வாகிகள் கண்டும் காணாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கிறேன் என்றார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் போதைப்பொருள் விற்பனையாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம் தெற்கு மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்டத்துணைச் செயலாளர்கள் உஸ்மான், மீரான் மற்றும் அனைத்துக்கிளை நிர்வாகிகள் உட்பட ஐயாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்ட செயலாளர் தினாஜ்கான் நன்றி உரை வழங்கினார்.
Category:
இன்றைய நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சித்திக் ரினாஃப் ஹஸ்ஸ் ஃபௌண்டேஷன் சார்பாக ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வீட்டில் உபயோகம் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னால் நகர்மன்ற உறுபினர் மற்றும் தெற்குத்தெரு ஜாமாத் முன்னால் செயலாளர் லாஹிதுகான் , முன்னால் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலருமான ஆனா மூனா காதர் சாகிப் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நெய்னா அசாருதீன் ஹபீப் மரைக்கா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் சித்திக் ரினாஃப் ஹஸ்ஸ் ஃபௌண்டேஷன் தலைவர் ஜாஃபர் ஜலாலுதீன் நன்றி தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல்
by keelai
written by keelai
கீழக்கரை நகரில் கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க ஆங்காங்கே சமூக மற்றும் சமுதாய இயக்கத்தினர் கோடை கால கால் நீர் மோர் பந்தல் அமைத்து சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் இன்று (15.04.2018) காலை 10:30 மணியளவில் வள்ளால் சீதக்காதி சாலையில் யூஸுஃப் சுலைஹா மருத்துவமனை அருகில் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் பந்தலை பிரபுக்கள் தெருவை சேர்ந்த சகோதரர் செய்யது அஹமது அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை அறக்கட்டளையின் துணை தலைவர் அஹமது சுஹைல், செயலாளர் முஹைதீன் அடுமை, துணை செயலாளர் அய்யூப் கான் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.
அறக்கட்டளையின் ஆலோசகர்கள் சகோதரர் சீனி இப்ராஹீம் மற்றும் சகோதரர் முஹம்மது அன்ஸாரிப்பு ஆகியோர் உடனிருந்தனர். தெருவாசிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகம் முழுவதும் திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி ஏழை எளிய மக்களின் நலன் கருதி மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் ஆங்கில மருந்துகள் விற்பனை நிலையங்கள் ஜெனரிக் மெடிக்கல் திறக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கீழக்கரையில் ‘கீழை மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் கிழக்கு தெரு சிட்டி யூனியன் வங்கி அருகில் இருக்கும் இமாம் ஜகுபர் சாதிக் வணிக வளாகத்தில் மீண்டும் புது பொழிவுடன் இன்று (14.04.2018) மாலை 4.30 மணியளவில் துவங்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தகத்தை கிழக்கு தெரு ஜமாஅத் செயலாளர் நெகர் சிகாப் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கிழக்கு தெரு ஜமாஅத் துணைப்பொருளாளர் சட்டப் போராளி முகம்மது அஜிஹர், மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் சட்டப் போராளி முகைதீன் இப்ராகீம், சட்ட போராளிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் முகம்மது சாலிஹ் ஹூசைன்
அல் பையினா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஜாபீர் சுலைமான், SDPI கட்சியின் கீழக்கரை நகர் துணை தலைவர் சட்டப் போராளி நூருல் ஜமான், சட்டப் போராளி முஹம்மது அஸ்லம், கீழக்கரை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொறுப்பாளர் முகம்மது நதீர், S.M.மாசிக்கடை கலீல் ரஹ்மான் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கீழை மக்கள் மருந்தகத்தின் முதன்மை நிர்வாகி சட்டப் போராளி ஜாபீர் சுலைமான் கூறுகையில் ”இறைவனுடைய அருளால் கீழக்கரையில் திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி கடந்த ஆண்டு ஏப்ரல் 28 அன்று, மக்கள் பாதை இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் உமர் முக்தார் அவர்களால் இதே இடத்தில் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது.
மக்கள் மருந்தகம் மூலம் கீழக்கரை பகுதி ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் நிர்வாக மாறுதல் காரணமாக ஒரு சில மாதங்கள் மக்கள் சேவை முற்றிலும் தடைபட்டு இருந்தது. தற்போது அல்லாஹ்வின் கிருபையால் மீண்டும் புதுப்பொலிவுடன் இன்று முதல் ‘கீழை மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் மருந்தகம் செயல்பட துவங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வழக்கம் போல் உங்கள் ஆதரவை தந்து பயன்பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் வாரந்தோறும் நீர் மோர் பந்தல் அமைத்து தாகம் தீர்க்கும் ‘தமினா ஸ்டீல்’ நிறுவனம்
by keelai
written by keelai
கீழக்கரை முஸ்லீம் பஜாரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமாக தமினா ஸ்டைன்லஸ் ஸ்டீல் நிறுவனம் சார்பாக ஒவ்வொரு வருடமும், கோடை காலங்களில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் நீர் மோர் பந்தல் திறக்கப்படுவது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டும் கோடை வெயில் கொளுத்த துவங்கி விட்டதால் தற்போது இந்த தனியார் நிறுவனம் சார்பாக இன்று நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு கிழக்குத் தெரு ஜமாஅத் துணை பொருளாளர் சட்டப் போராளி முஹம்மது அஜிஹர் தலைமை ஏற்று பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி நிகழ்ச்சியை இனிதே துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டப் போராளி தாஜுல் அமீன், SDPI கட்சி மாவட்ட நிர்வாகி அப்பாஸ் அலி ஆலீம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நீர் மோர் பந்தல் ஏற்பாடுகளை தமினா நிறுவனத்தின் நிறுவனர் சமூக ஆர்வலர் முஹம்மது சஹீது சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் இந்த வருடமும் ஏராளமாக பொதுமக்கள் கலந்து கொண்டு சில்லென்ற நீர் மோரை அருந்தி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை வாழ்த்தி சென்றனர். வெயில் காலம் முடியும் வரை தொடர்ந்து அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும் நீர் மோர் பந்தல் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்கம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்
by keelai
written by keelai
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை இயக்கம், சென்னை சார்பாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் கீழக்கரை கடற்கரைப் பள்ளி வளாகத்தில் இன்று (30.03.2018) மாலை 5 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்கு மத்திய மாநில அரசால் வழங்கப்படும் கல்வி உதவி தொகை, முதியோர், வேலையில்லா பட்டதாரிகளுக்கான ஊக்கத் தொகை உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி அமீர்கான் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை கீழக்கரை பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கீழக்கரை நகர் நிர்வாகிகள் நதீர் சாகுல் ஹமீது, ஹமீது பைசல், சிராஜுதீன், ஜுபைர், காதர் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறுபாண்மையினருக்கு கிடைத்து வரும் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை பெண் மருத்துவர் அல் அம்ராவின் ‘அல் ஃபலா கிளினிக்’ இன்று இனிதே ஆரம்பமாகியது
by keelai
written by keelai
கீழக்கரை வடக்குத் தெரு இடி மின்னல் மளிகை கடையில் இருந்து வடக்குத் தெரு தைக்கா செல்லும் சாலையில் கீழக்கரை பெண் மருத்துவர் அல் அம்ராவின் ‘அல் ஃபலா கிளினிக்’ இன்று (30.03.2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் இனிதே ஆரம்பமாகியது. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் இருந்து சென்னைக்கு புதிய ஹைடெக் பேருந்து சேவை – ‘ஜெம்ஸ் டிராவல்ஸ்’ இன்று இனிதே துவங்கியது
by keelai
written by keelai
கீழக்கரையில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. பல நேரங்களில் சென்னைக்கு செல்ல ரெயில் மற்றும் பேருந்துகளில் சீட் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் ‘ஜெம்ஸ் டிராவல்ஸ்’ என்கிற பெயரில் கீழக்கரையில் இருந்து சென்னைக்கு புதிய ஹைடெக் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் உள்ளூர் ‘வரலாற்று சுற்றுலா’ – அல் பையினா பள்ளி மாணவர்களுடன் வரலாற்று ஆரய்ச்சியாளர்கள் பங்கேற்பு
by keelai
written by keelai
‘வரலாறு தெரியாதவர்கள் ; வரலாறு படைக்க மாட்டார்கள்’ என்பது முன்னோர்கள் வாக்கு. ஆனால் இன்று நம்முடைய தொன்மையான சரித்திரமும், மூதாதையர் வழி வரலாறும் முறையாக தெரியாததன் விளைவாக நம்முடைய பண்டைய கலாச்சாரம், இஸ்லாமிய விழுமங்கள், விருந்தோம்பல், சமத்துவ நட்புறவு சித்தாந்தம், ஆதி தொழில், பொருளாதாரம், உள்ளூர் பழக்க வழக்கங்கள், பேச்சு வழக்கு மொழி, ஆரோக்கியம், மருத்துவ முறை, சத்தான உணவு முறை, முத்தான உறவு முறை, பண்டைய உள்ளூர் விளையாட்டுகள் உள்ளிட்ட பாரம்பரிய விஷயங்கள் எல்லாம் காலப் போக்கில் மறைய துவங்கி விட்டது.
இந்நிலையில் ”கீழக்கரையில் தொன்மை வரலாற்றினை சிறுவயதிலேயே நம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் அனைவரும் தான் பிறந்த மண்ணின் வரலாற்றினை அறிந்து கொள்ள வேண்டும்” என்கிற வேண்டுகோளை கீழக்கரை வரலாற்று ஆய்வாளர், தஞ்சை தொல்லியல் கழகத்தின் ஆயுட்கால உறுப்பினர். ‘கல்வெட்டு களஞ்சியம்’ ஆனா. மூனா. சுல்தான் கல்வியாளர்களுக்கு வைத்திருந்தார்.
இதனையடுத்து கீழக்கரை அல் பையினா மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் ஜாபிர் சுலைமான், அல் பையினா பள்ளி சார்பாக பள்ளி மாணவர்களுக்கான வரலாற்று சுற்றுலாவினை இன்று (22.03.2018) ஏற்பாடு செய்திருந்தார். இந்த சுற்றுலா நிகழ்விற்கு வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆனா மூனா சுல்தான் தலைமையேற்று கீழக்கரை சரித்திர சம்பவங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் பள்ளி மாணவர்களுக்கு எடுத்து கூறினார். இச்சுற்றுலாவில் கலந்து கொண்ட கீழக்கரை வரலாற்று ஆராய்ச்சியாளர் அபு சாலிஹ் தொன்மையான நம் கீழக்கரை வரலாறுகளை அழகுற மாணவர்களுக்கு விளக்கினார்.
இன்றைய வரலாற்று சுற்றுலாவில் கீழக்கரை கடற்கரை பள்ளிவாசல், பழைய குத்பா பள்ளிவாசல், புனித அந்தோனியார் சர்ச், வள்ளல் சீதக்காதியின் வசந்த மாளிகை உள்ளிட்ட கீழக்கரை நகரின் வரலாற்று தொன்மைமிக்க இடங்களை அல் பையினா பள்ளி மாணவர்களை அழைத்து சென்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கீழை மாநகரின் வரலாறுகளை தெளிவான நயத்துடன் மாணவர்களுக்கு விளக்கினர்.
இந்த வரலாற்று சுற்றுலா நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புகளை அல் பையினா கல்வி குழுமத்தின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் சிறப்பாக செய்திருந்தார். வரலாற்று சுற்றுலா நிகழ்வின் ஏற்பாடுகளை பள்ளியின் விளையாட்டுத் துறை ஆசிரியர் நதீர் சாகுல் ஹமீது முன்னின்று வழி நடத்தினார். இது போன்ற வரலாற்று சுற்றுலாக்கள் மூலம் கீழக்கரை நகரின் அழகிய பாரம்பரியமும், முன்னோர்களின் போற்றுதலுக்குரிய நடைமுறை கலாச்சாரங்களும் இந்த தலைமுறையினருக்கும் மட்டுமல்லாமல் நமது அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லப்பட்டு வரலாறு நிலை நிறுத்தப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் மாவீரன் பிரபாகரன் 63வது பிறந்த நாள் விழா கீழக்கரை நாம் தமிழர் கட்சி சார்பாக உறுதி மொழியுடன் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கீழை பிரபாகரன், கீழக்கரை நகர் செயலாளர் மற்றும் முத்துராமலிங்கம், துணை தலைவர், பழனி துணை தலைவர், அயன்ராஜ் பொருளாளர் ஹவ்வில் ரஹ்மான், நகர் இணை செயலாளர் , மகேந்திரன் இளைஞர் அணி துணை செயலாளர், வாசிம் இளைஞர் அணி துணை செயலாளர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் திரளாக கூடி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ௨ணவு பொட்டலங்கள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும் இப்பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் கீழ்கண்ட உறுதி மொழியும் எடுத்தனர்.
“மொழியாகி,
எங்கள் மூச்சாகி – நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை
உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடு இங்கு
துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்
இனிமேலும் ஓயோம் உறுதி!”
வென்றெடுப்போம் தமிழர் உரிமையை
கட்டி எழுப்புவோம் தமிழர் அகிலத்தை
நாம் தமிழர்…..நாம் தமிழர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் ரமலான் மாதம் 29ம் நாள் தெற்குத் தெரு இளைஞர்கள் சார்பில் தெற்கு தெரு பள்ளி வளாகத்தில் இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் ஜமாத்தார்களும் கலந்து கொண்டார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமீரக காயிரே மில்லத் பேரவையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா இதயங்கள் காப்போம் – சமய நல்லிணக்கம் காப்போம் என்ற முழுக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. இவ்விழா 19-05-2017 வெள்ளிக் கிழமை அன்று மாலை 07.00 மணியளவில் அபுதாபியில் மினா துறைமுகம் அருகில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில் ( Indian Social and Cultural Centre, Abudhabi, Near. Mina port) நடைபெறுகிறது.
இவ்விழாவில் காயிதே மில்லத்தாய் வாடும் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் ஸாஹிப் என்ற தலைப்பில் பேரவையின் வெள்ளி விழா சிறப்பு வெளியீடு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.ஏம் முஹம்மது அபுபக்கர் மற்றும் தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளர் எம்.எஸ்.ஏ ஷாஜஹான் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்
இந்நிகழ்ச்சியில் பெண்களும் கலந்து கொள்ளும் வகையில் பெண்களுக்கென தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வெற்றியடைய வாழ்த்தும் நெஞ்சங்களுடன் கீழை நியூஸ் நிர்வாகமும் இணைந்து கொள்கிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று 07-05-2017 கீழக்கரை நகர் SDPI கட்சியின் சார்பாக நகர் தலைவர் குதுபு ஜமான் மற்றும் நகர் செயலாளர் கீழை அஸ்ரப் தலைமையில் புது கிழக்கு தெரு குட்லக் ஸ்டோர் முன்பு சர்பத் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியை கீழக்கரை காவல்நிலையம் உதவி ஆய்வாளர் வசந்த் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பை SDPI கிழக்கு கிளை மற்றும் தெற்கு கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். மேலும் இந்நிகழ்வில் அனைத்து கிளை SDPI நிர்வாகிகளுடன் SDTU தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இத்திறப்பு விழாவில் 150க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வடக்குத்தெரு முகைதீனியா பள்ளியில் நாளைய உலகம் நமதாகட்டும் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை வடக்குத்தெரு முகைதீனியா பள்ளியில் நாளைய உலகம் நமதாகட்டும் என்ற தலைப்பில் உம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (05-05-2018) மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு ( NASA) மற்றும் தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி இயக்கம் ஆகியோர் இணைந்நு நடத்தினர்.
இந்நிகழ்ச்சியின் வரவற்புரையை ஃபர்கான் பின் அஷ்ரஃப் வழங்கினார். நிகழ்ச்சியின் தலைமையுரையை முகைதீனியா பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ரஃபீக் பசீர் அகமது ஆகியோர் வழங்கினார். பின்னர் எது கல்வி மற்றும் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.பைசல் அஹமது சிறப்புரையும், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் எம்.முஹம்மது இஸ்மாயில் என்ன படிக்கலாம் மற்றும் எது நம் இலக்கு என்ற தலைப்பில் விழிப்புணர்வு தரும் உரையும் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் வடக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள், முகைதீனியா பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள், மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிகான அனைத்து ஏற்பாடுகளையும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 07.04.2017 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் நேரடியாக வருகை தந்து ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்.
வட்டாட்சியர் அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை சான்றுகளான சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள், உள்பட சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் என பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்றைய தினம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஆய்வு செய்ததோடு, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை உரிய முறையில் ஆய்வு செய்து தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் வறட்சியை போக்கிடும் பொருட்டு, இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்யதம்மாள் அறக்கட்டளையின் சார்பாக மரக்கன்றுகள் நடும் பணியினைத் துவக்கி வைத்தார். நடப்பாண்டில் 5000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. அதனடிப்படையில் இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்றைய தினம் 100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் வட்டாட்சியர் சுகுமாறன் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி 25ம் ஆண்டு விழா 06-04-2017 அன்று சிறப்பாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி இரண்டாம் ஆண்டு மாணவி ரஷீதத் நலீஃபா கிராத்துடன் தொடங்கியது. கல்லூரியின் முதல்வர்.சுமையா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர்.நாதிரா பானு கமால் கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மலேசிய அரசின் தென்னிந்திய தூதரக அதிகாரி அஹ்மத் பஸாரஜாம் பின் அப்துல் ஜலீல் மற்றும் அவரது துணைவியார் சித்தி நூர் மவர் பின்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஃபாத்திமா ஃபசிஹா என்ற இளநிலை மாணவிக்கும், கதீஜத்தும் நூரியா என்ற முதுநிலை மாணவிக்கும் இந்தாண்டிற்காண சிறந்த மாணவிகளுக்கான பரிசு வழங்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சி உளவியல்துறை மாணவி முஃபின் கல்ஃபா நன்றியுரையுடன் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் சீதக்காதி அறக்கட்டளையின் சேக் தாவுது கான், துறை பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகிகள், அலுவலர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா இன்று (05-04-2017) காலை 09.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி இறைவணக்கத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து முதல்வர் முனைவர்.சுமையா வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. முதல் நிர்வாகிகள் கல்லூரியின் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழா உறுதி மொழியுடன் பட்டமளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். கிருஷ்ண பாஸ்கர் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கான பட்டங்களை வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 450 இளநிலை பட்டதாரிகளுக்கும், 65 முதுநிலை பட்டதாரிகளுக்கும், 4 முதுநிலை தத்துவவியல் பிரிவு மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரித் தாளாளர் ரஹ்மத் நிஷா அப்துர்ரஹ்மான் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியல் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் தேசியக்கீத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் – இஸ்லாமியா பள்ளியில் நகராட்சி ஆணையர் துவங்கி வைத்தார்
by keelai
written by keelai
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று 02.04.17 முதல் தவணையாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. கீழக்கரை நகரில் பல்வேறு பள்ளிகளிலும், சமூக கூடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளியில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் தலைமையேற்று போலியோ சொட்டு மருந்து முகாமை துவங்கி வைத்தார். கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா அரபி மதரஸாவில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் முகாமில் ஏராளாமான பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து வருகின்றனர்.
பெற்றோர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை மறக்காமல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் DSP மகேஸ்வரிக்கு பிரிவுபசார விழா – கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ‘சிறந்த நேர்மையாளர்’ விருது வழங்கி கவுரவிப்பு
by keelai
written by keelai
கீழக்கரை நகரில் சிறப்பாக பணியாற்றி தற்போது விருதுநகருக்கு பணியிட மாறுதலில் செல்லும் கீழக்கரை துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரிக்கு இன்று மாலை 5 மணியளவில் ஹுசைனியா மஹாலில் பிரிவுபசார விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது நேர்மையோடும், கொள்கை பிடிப்போடும் கீழக்கரை நகரில் மிக சிறப்பாக பணியாற்றியமைக்காக கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ‘சிறந்த நேர்மையாளர் விருது’ வழங்கப்பட்டது. இந்த விருதினை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஸ்டேஷன் மாஸ்டர் M.M.S.செய்யது இபுறாகீம் வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பொதுநல அமைப்பினர், அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தி பேசியதோடு மட்டுமல்லாமல், DSP மகேஸ்வரிக்கு பிரியா விடை கொடுத்து வழியனுப்பினர். பல்வேறு சமுதாய அமைப்பினர் சார்பாக பொன்னாடைகளும், நற்சான்றுகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருது நகருக்கு செல்லும் நம் விருது மங்கை, இன்னும் பல சாதனை விருதுகளை வெல்ல கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் தனியார் நிறுவனம் சார்பாக தாகத்தை தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்பு
by keelai
written by keelai
கீழக்கரை முஸ்லீம் பஜாரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமாக தமினா ஸ்டைன்லஸ் ஸ்டீல் சார்பாக ஒவ்வொரு வருடமும், கோடை காலங்களில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் நீர் மோர் பந்தல் திறக்கப்படுவது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டும் கோடை வெயில் கொளுத்த துவங்கி விட்டதால் தற்போது இந்த தனியார் நிறுவனம் சார்பாக இன்று 31.03.17 நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு கிழக்குத் தெரு ஜமாஅத் துணை பொருளாளர் முஹம்மது அஜிஹர் தலைமை ஏற்று பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி நிகழ்ச்சியை இனிதே துவங்கி வைத்தார்.
நீர் மோர் பந்தல் ஏற்பாடுகளை தமினா நிறுவனத்தின் நிறுவனர் சமூக ஆர்வலர் முஹம்மது சஹீது சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமாக பொதுமக்கள் கலந்து கொண்டு சில்லென்ற நீர் மோரை அருந்தி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை வாழ்த்தி சென்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Newer Posts
You must be logged in to post a comment.