இராமநாதபுரம்,அக்.11- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் முனைக்காடு கடற்பகுதிக்கு நேற்று காலை வந்த பைபர் படகில் இருந்து இறங்கிய இருவர் விரைவாக தப்பி ஓடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் மண்டபம் போலீசார், மரைன் போலீசார், பாதுகாப்பு பிரிவினர் அங்கு விரைந்து சென்றனர். விசாரணையில் OFRP – A – 3156 MNR என எழுதிய பைபர் படகு இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தது என தெரிந்தது. அப்படகில் பயணித்து தப்பியோடிய 2 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்களா அல்லது கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். போலீசாரின் தொடர் விசாரணையில் இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் 50, ரோஷன் (எ) ஜெகன் 27 ஆகியோர் எனவும் மண்டபம் முகாம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தன. இதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் 2 பேரும் இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிச்சென்றனர். இலங்கையில் குற்றச்செயல்பட்ட இவர்களை மன்னார் மாவட்ட போலீஸார் தேடத்துவங்கினர். இதையடுத்து அங்கிருந்து தப்பித்து மர்மப்படகில் வந்து மண்டபம் முகாமில் மீண்டும் தஞ்சமடைய முயன்றது தெரியவந்தது. இதன்படி இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Category:
மாநில செய்திகள்
இராமநாதபுரம், அக்,11- ராமநாதபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு அறிமுக கூட்டம் சார்பில் காணொலி காட்சி மூலம் நடந்தது. மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலர் விஜயகதிரவன் தலைமை வகித்தார்.
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் பகத்சிங், மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக செயலர் பிரவீன் முன்னிலை வகித்தனர். மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலரும், அமைச்சருமான டிஆர்பி ராஜா நிர்வாகிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார்.மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராதிகா பிரபு, ராமநாதபுரம் தொகுதி ஒருங்கி ணைப்பாளர் சதீஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பா ளர்கள் நரேஷ், வசந்தகுமார், அக்பர், ராமநாதபுரம், கீழக்கரை நகர் ஒருங்கிணைப்பாளர்கள் அபுல் ஹசன், புரூக்கான், மண்டபம் மத்திய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் உதயா, ராமநாதபுரம் தெற்கு நகர் ஒருங்கிணைப்பாளர் சிவா, மண்டபம் பேரூர் ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி திருவாடானை மத்திய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முத்தழகன் மருது உள்பட பலர் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், அக்.11- இராமநாதபுரம் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச பொன் குழந்தைகள் தின விழா இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். பரதம், நாடகம், கட்டுரை, பேச்சு போட்டிகளில் வென்ற மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் பரிசு வழங்கினார்.
தேசிய அறிவியல் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர் மோகனா சோமசுந்தரம், சமூக நல அலுவலர் (பொ) தேன்மொழி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாவதி, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சத்திய நாராயணன், சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் முத்துலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம்,அக்.12-இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116-வது ஜெயந்து, 61-வது குருபூஜை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கத்துரை முன்னிலை வகித்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், ஆட்டோ, சரக்கு வாகனங்கள், சைக்கிள், திறந்த வெளி வாகனங்களில் பயணம் செய்யவோ, நடைபயனமாகவோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. 4 சக்கர சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட உட்கோட்ட அலுவலகங்களில் முன் அனுமதி பெற்று பெற்றுக்கொள்ள வேண்டும்.
வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது. வாகனத்தில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ கோஷங்களை எழுப்பவோ கூடாது. வாகனங்களில் மது பாட்டில்கள் எடுத்து செல்லக்கூடாது. வாகனங்களின் கூரை மேல் பயணம் செய்யக்கூடாது. வாகனத்தில் ஆயுதங்கள் எதும் எடுத்துச் செல்லக்கூடாது. வழித்தடங்களில் வெடி போடுவதை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் வரும்போது வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடத்தில் நிறுத்தக் கூடாது.
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 10 மணிக்குள் புறப்பட வேண்டும். தவிர்க்க இயலாத காரணங்களால் அனுமதிச் சீட்டு பெறாத வாகனங்களுக்கு சோதனைச் சாவடிகளில் அனைத்தும் சரி பார்த்த பின்னர் வழங்கப்படும். வாகன அனுமதி பெறப்படாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
பிற மாவட்ட வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் உரிய அனுமதி பெற வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் வரையறுத்த வழித்தடங்களிலேயே வந்து செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ள வழித் தடங்களில் செல்லக்கூடாது. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் அக்.29, 30 தேதிகளில் கமுதிக்கு கூடுதல் பேருந்து வசதி செய்து தரப்படும். பசும்பொன் செல்ல கூடுதல் பேருந்து தேவைப்படும் கிராமத்தினர் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் முன் மனு அளிக்க வேண்டும்.
அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்த அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் 1 வாரத்திற்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் நேரம் ஒதுக்கி தர விண்ணப்பம் அளிக்கவேண்டும். ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்து அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து அஞ்சலி செலுத்தி முடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு பிரசனை நடைபெறாமல் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. விதிமுறைகளை கண்டிப்பாக கடைபீடிக்க வேண்டும் என அனைவரிடமும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சிக்கு வருவதை கருத்தில் கொண்டு பிற மாவட்டத்தினரும் நமது மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மூலம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு போல் பேனர் வைப்பதை தடுத்திடவும், அரசு கட்டடங்களில் விளம்பரம் செய்வதை தடுத்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து இந்நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், அக்.11- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆற்றாங்கரை ஊராட்சியில் பட்டா திருத்த சிறப்பு முகாம் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு துவங்கி வைத்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
ஊராட்சி தலைவர் முஹமது அலி ஜின்னா, விஏஓ கார்த்தீஸ்வரி, துணைத் தலைவர் நூருல் அஃபான் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் கோபு
குடிமை பொருள் வட்டாட்சியர் தமீம் ராசா, துணை வட்டாட்சியர்கள் காளீஸ்வரன், சாமிநாதன் பங்கேற்றனர்.
ஆற்றங்கரை முஸ்லிம் ஜமாத் தலைவர் சவுகார், செயலாளர் நாகூர் கனி, வார்டு உறுப்பினர் நாகராஜ், இந்து சமூக நிர்வாகி தேவேந்திரன்,பாஸ்கரன் முஸ்லிம் ஜமாத் பொருளாளர் ரியாஸ், ராஜா பிரியா, பூமிநாதன், கனகு உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் கண்ணன் ஏற்பாடு செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் சணல் பைகள் தயாரிப்பு அச்சிடுதல் பயிற்சி; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாடியூர் கிராமத்தில் இலவச சணல் பைகள் தயாரிக்கும் மற்றும் அச்சிடுதல் பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாடியூர் கிராமத்தில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி நிறுவனத்தின் நிதி உதவியுடன் AOS Mission தொண்டு நிறுவனம் மகளிர் திட்ட சுய உதவிக் குழுவிற்கான இலவச ஜீட் பேக் தயாரிக்கும் பயிற்சியை 10.10.2023 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் நபார்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் ஸ்ரீ ஆர். சங்கர் நாராயணன் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சுய உதவி குழு பெண்களுக்கு சணல்பை தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் சுயஉதவி குழுவைச் சார்ந்த 90 பெண்களுக்கு 15 நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. சணல் பைகள் தயாரிப்பு, அச்சிடுதல், சந்தைப்படுத்துதல் ஆகிய துறைகளில் சிறந்த தொழில் வல்லுநர்களால் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வேலைவாய்ப்பை மேம்படுத்தி, தொழில் துறையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விழாவில் சிஸ்டர் நிவேதிதா மிஷன் டிரஸ்ட் மற்றும் நபார்டு இணைந்து நடத்திய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சான்றிதழ் மற்றும் பணிநியமன ஆணை 60 இளம் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு வங்கி) B.சசிக்குமார், உதவி மேலாளர் R.K.சுரேஷ் ராமலிங்கம், A.கணேசன் LDM இந்தியன் ஓவர்சிஸ் வங்கி (தென்காசி), எஸ்.தவசீலன் மேலாளர் (கனரா வங்கி), A.இளங்கோ FLC Lead bank, M.சிவ செல்வ பிரசன்னா பாரத ஸ்டேட் வங்கி (தென்காசி), எஸ்.சதிஸ்குமார் நிர்வாக இயக்குநர் (AOS Mission), மதன் சிஸ்டர் நிவேதிதா மிஷன் டிரஸ்ட், உதவி திட்ட அலுவலர் சிவகுமார் (மகளிர் திட்டம்), உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாடிப்பட்டி அருகே இளைஞர் தற்கொலை போலீசார் உட்பட 3 பேர் மீது உறவினர்கள் புகார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டி பசும்பொன் நகரை சேர்ந்தவர் முருகன் இவருடைய மகன் ராம்கி வயது 23 இவர் தனது வீட்டில் நேற்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் தகவல் அறிந்து வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் பின்னர் ராம்கிஉடலை பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பாக ஒரு துண்டு சீட்டில் அதிபன் முருகேசன் ஜான் முருகன் என்று ராம்கி எழுதி வைத்திருந்ததை அவருடைய குடும்பத்தினர் கைப்பற்றினர் அதில் முருகேசன் என்பவர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இதுகுறித்து ராம்கியின் தாயார் சுமதி போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது :-
கடந்த எட்டாம் தேதி இரவில் எனது மகன் ராம்கி யிடம் பழைய பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு கச்சை கட்டியை சேர்ந்த ஜான் முருகன் அதிபன் ஆகியோர் மேல் வந்து ஊர் மந்தையில் வைத்து ராம்கியை அடித்தனர் அதே சமயத்தில் போலீஸ் நிலையத்திற்கு பொய்யான தகவலை கொடுத்ததில் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு வந்து முறையாக விசாரிக்காமல் எனது மகன் ராம்கியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் ஜான் முருகன் அதிபன் ஆகியோருடன் சேர்ந்து அடித்து துன்புறுத்தினார். இதனால் தான் எனது மகன் ராம்கி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான் என்று புகாரில் தெரிவித்திருந்தார். எனது மகன் தற்கொலைக்கு காரணம் ஜான் முருகன் அதிபன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் என்று தனது கைப்பட எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டான் எனவே எனது மகன் தற்கொலைக்கு காரணமான சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபுகாரில் தெரிவித்து இருந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த ராம்கியின் உறவினர்கள் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி நேற்று மாலை 6 மணிக்கு மேல் வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் செய்தனர்
மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரைஅவரது உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறினர் இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட கூடுதல் சூப்பரண்ட் கருப்பையா தலைமையில் சமயநல்லூர் காவல்துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் ஆகியோர் ராம்கியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதன் பின் ராம்கியின் உடலை பெற்றோரும் உறவினர்களும் நேற்று இரவு பெற்று சென்றனர் மதுரை வாடிப்பட்டி அருகே வாலிபரின் தற்கொலைக்கு காரணமாக போலீஸ்சப் இன்ஸ்பெக்டரே இருப்பதாக புகார் தெரிவித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருகேகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வயல்களுக்குள் வீணாகும் குடிநீர்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் இரும்பாடி வைகை ஆற்றில் இருந்து மன்னாடிமங்கலம் காடுபட்டி வழியாக திருமங்கலம் நகராட்சிக்கு குடிநீர் தேவைக்காக பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில் காடுபட்டி பகுதியில் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. குறிப்பாக காடுபட்டி ஊரின் முன்பாக தென்கரை கம்மாய் செல்லும் பாதைக்கு அருகே ஒரு பெரிய உடைப்பு ஏற்பட்டு அதனால் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் வீணாகும் தண்ணீர் குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. வீணாகும் தண்ணீரால் அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் பாழ்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழ் நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம், மதுரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து வீணாகும் தண்ணீரை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். தற்போது உள்ள பருவ நிலையின் காரணமாக மழையின் அளவு குறைந்து வருகிறது எதிர்வரும் காலங்களில் அதிகப்படியான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது அதனை கருத்தில் கொண்டு இரும்பாடி முதல் திருமங்கலம் வரை உள்ள அனைத்து உடைப்புகளையும் சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை நேதாஜி ரோடு பகுதியில் சேர்ந்த திருமதி சோலையம்மாள் அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் போது தவறி விழுந்து அதில் காயம் அடைந்து வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்பு தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி உடல் உறுப்புதானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
அன்னாரது உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா மரியாதை செலுத்தினார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை மாநகராட்சி ஆணையர் அவர்கள்,காவல் துறை துணை ஆணையர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், முன்னிலையில் மாண்புமிகு மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 3 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 5 மனுக்களும், குடிநீர் இணைப்பு வேண்டி 5 மனுக்களும், சாலை வசதி வேண்டி 5 மனுக்களும், பாதாளச்சாக்கடை இணைப்பு வேண்டி 10 மனுக்களும், தெரு விளக்கு வசதி வேண்டி 2 மனுவும், சுகாதாரம் தொடர்பாக 4 மனுக்களும், இதர கோரிக்கைகள் வேண்டி 3 மனுக்களும் என ,மொத்தம் 37 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது. சென்ற குறைதீர்க்கும் முகாமில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 20 மனுக்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் வாசுகி, துணை ஆணையாளர் சரவணன், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர் ரெங்கராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, உதவிப் பொறியாளர்கள் மணியன், ஆரோக்கிய சேவியர், சோலை மலை, பாபு, முருகன், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உதவி வருவாய் அலுவலர் ராஜாராம், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை விமானநிலையத்தை 24 மணி நேரம் இயக்க போதிய பாதுகாப்பு படை வீரர்கள் இல்லை எனக்கூறுவது அபத்தமான காரணம்..-சு.வெங்கடேசன் எம்.பி
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டம் தலைவர் மாணிக்கம் தாகூர் எம் பி, இணைத்தலைவர் சு. வெங்கடேசன் எம் பி தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சு. வெங்கடேசன் எம் பி “மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்க வேண்டும். அதேபோல பைலேட்டர் ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையத்தை இணைக்க வேண்டும். மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முதலில் நல்ல செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.
வாரத்திற்கு மூன்று நாட்கள் மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி முதல் தினசரி விமானமாக இயக்கப்பட இருக்கிறது.
மதுரை விமானநிலையத்தின் ஓடு பாதையை விரிவாக்குகிற விஷயத்தில் நிலம் கையகப்படுத்த வேண்டிய பகுதிகள் என்பது முழு முற்றாக முடிவடைந்து இருக்கிறது அதில் கடந்த ஓராண்டுகளாக தமிழக அரசு பல நல்ல முயற்சிகளை செய்தது. அதன் விளைவாக தனி நபர்களிடமிருந்து நிலங்கள் எடுக்கப்பட வேண்டியது முற்றாக முடிவு பெற்று இருக்கிறது. இரண்டு குளங்களினுடைய சிறு பகுதி என்பது வகை மாற்றம் செய்யப்பட வேண்டிய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அது முடியும். என்ற நல்ல செய்தியை பகிர்ந்து கொள்கிறோம்.
இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து மதுரை விமான நிலையம் 24*7 விமான நிலையமாக செயல்படும் என்று விமானத்துறை அறிவித்த அறிவிப்பு இப்பொழுது வரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. மதுரையினுடைய விமான நிலைய வளர்ச்சியில் ஒன்றிய அரசின் அக்கறையின்மை தொடர்ச்சியாக நீடிக்கிறது. பல அழுத்தங்களுக்கு பிறகு தான் 24×7 என்பதை ஒத்துக் கொண்டு அவர்கள் அறிவித்தார்கள் ஆனால் இன்றைக்கு வரை அதை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள். அது குறித்து இன்றைய கூட்டத்தில் மிக கவலையோடு விவாதிக்கப்பட்டது. இதனுடைய தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் தென் மாவட்டங்களில் இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்து அதேபோல மதுரை விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்களையும் இணைத்து ஒன்றிய அமைச்சரை சந்தித்து இது குறித்து வலியுறுத்துவது என்ற முடிவினை எடுத்து இருக்கிறோம்.
மதுரை மற்றும் தென் மாவட்ட தொழில் வணிக வளர்ச்சிக்கு மதுரை விமான நிலையத்தினுடைய விரிவாக்கம் சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பது மிக முக்கியமான நடவடிக்கை… இதற்கு சொத்தை காரணங்களை மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசு சொல்வது ஏற்க முடியாத ஒன்று. இன்னும் சொல்லப் போனால் நம்முடைய விமான நிலையத்தை பயன்படுத்துகிற உள்நாட்டு பயணிகளுடைய எண்ணிக்கையும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையும் மிக அதிகம். “டொமஸ்ட்டிக்” விமான நிலையங்களில் மதுரை விமான நிலையமே நாட்டில் முதலிடத்தில் இருக்கிறது. நமக்கு நியாயமான உரிமைகளை தருவதிலே தொடர்ந்து தயக்கம் மறுப்பு ஒன்றிய அரசுக்கு இருக்கிறது.
பிரதமர் மோடி அவர்களுடைய வாரணாசி தொகுதி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக இருக்கிறது. அதனை விட பலமடங்கு மதுரை விமான நிலையத்தில் பயணம் செய்கிற பயணிகளின் எண்ணிக்கை அதிகம். எனவே இது முழுக்க ஒரு அரசியல் காரணத்துக்காக செய்யப்படுகிற ஒரு வஞ்சகம் அதனால்தான் தொடர்ந்து இவ்வளோ பெரிய ஒரு போராட்டத்தை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
மதுரை விமானநிலையம் ஏப்ரல் மாதத்திலிருந்து 24 மணி நேரமும் இயங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்ட ஆணையை நடைமுறைப்படுத்துவதில் என்ன பிரச்சனை இருக்கிறது. அதற்கு இப்பொழுது பாதுகாப்பு வீரர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்ற காரணத்தை சொல்கிறார்கள். போதிய பாதுக்காப்பு படை வீரர்கள் இல்லாமல் எப்படி இந்திய விமானத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. எனவே சொத்தையான காரணங்கள் தான் இதற்கு அடிப்படை. எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் உண்மையான ஒரு அக்கறையோடு செய்ய அவர்கள் தயாராக இல்லை.
அதேபோல் தேசிய நெடுஞ்சாலையை சுரங்க பாதை வழியே இயக்குவது என்ற ஒரு ஆலோசனை விமான துறையால் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் வாரணாசியில் இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் ஆனால் மதுரை விமான நிலையம் என்று வருகிற பொழுது சுரங்கப்பாதை அமைக்க 600 கோடி ரூபாய் செலவு ஏற்படும், அதைவிட சுற்றுச்சாலைக்கு போனால் 100 கோடி ரூபாய்க்கு குறையும் என்று சொன்னார்கள். இந்த பொருளாதார கணக்கு ஏன் வாரணாசிக்கு பொருந்தவில்லை. அதே திட்டம் மதுரைக்கு என்று வருகிற பொழுது 600 கோடி ரூபாய் செலவு வீண் என்று காரணம் சொல்கிறார்கள். எனவே பல தடைகளைத் தாண்ட வேண்டி இருக்கிறது தாண்டுவோம்… நாம் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவில் பட்டா வழங்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட சர்வே உதவி ஆய்வாளர் கைது..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரண்யாவுக்கு அவரது தாயார் தானமாக வழங்கிய நிலத்திற்கு பட்டா கேட்டு திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
3 மாதங்களாக நடவடிக்கை இல்லாததால் சர்வே உதவி ஆய்வாளர் பிரேம்குமாரை அணுகியபோது, ரூ.14 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் கிருஷ்ணன் புகார் செய்துள்ளார். போலீசார் அறிவுரைபடி நேற்று மதியம் தாலுகா அலுவலகத்திற்கு கிருஷ்ணன் சென்றபோது, பிரேம்குமார் அங்கு இல்லை. அலைபேசியில் கிருஷ்ணன் தொடர்புகொண்டபோது அழகப்பன் நகர் பீல்டிற்கு வந்துள்ளதால் அங்கு வருமாறு கூறினார். அங்கு சென்ற கிருஷ்ணனிடம் ரோட்டோர மரத்தின்கீழ் லஞ்சம் வாங்கிய பிரேம்குமாரை இன்ஸ்பெக்டர் குமரகுரு தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், அக்.10- பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்செல்வகுமார் சிறப்புரை ஆற்றினார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சீனி முஹமது, சிவக்குமார், கோவிந்தன், குமரன், முருகன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக அறிவித்த வாக்குறுதியின் படி பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கோஷமிட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மனநலத்தை மேம்படுத்த இயற்கையுடன் தொடர்பில் இருங்கள்!.. உலக மனநல தினத்தை முன்னிட்டு சத்குரு அறிவுரை!.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
உலக மனநல தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், “பல்வேறு விதமான மனநல பாதிப்புகளிலிருந்து விடுபடவும், ஆரோக்கியமாக வாழவும் இயற்கையுடன் தொடர்பிலிருப்பது ” என சத்குரு கூறியுள்ளார்.
எளிய முறையில் மனநலனை மேம்படுத்தி கொள்வதற்கு சத்குரு அவர்கள் சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “இன்றைய உலகில் செயலுக்கும் புத்திக்கும் ஒதுக்கப்பட்டுள்ள சக்தி பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் போவதால், எல்லாவிதமான மன நோய்களும் மனச்சோர்வும் ஏற்படுகிறது. ஏனென்றால் உணர்ச்சியளவில் போதுமான அளவு தங்களை வெளிப்படுத்தாமலும் உடலை வருத்தாமலும் இருந்தால் மனச்சோர்வில் ஆழ்வது இயல்பானது. எனவே, மனநோய்களால் அவதிப்படும் குழந்தைகளை விளையாட்டிலும் இசையிலும் ஈடுபடுத்த வேண்டும்.
கணினி, மொபைல் உள்ளிட்ட சாதனங்களால் ஏற்படக்கூடிய எந்திரத்தனமான வாழ்கையில் இருந்து விடுபட்டு இயற்கையுடன் தொடர்பில் இருக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக நீர், ஒளி, மண் ஆகியவற்றுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் உங்களுடைய மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை சுலபமாக மேம்படுத்த முடியும்.
நீங்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப உங்கள் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். மன ஆற்றலையும் சமநிலையையும் மேம்படுத்தும் உணவை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, காபி குடிப்பதை குறைத்துக் கொண்டு வெள்ளை பூசணி ஜூஸ், தேன் போன்ற நேர்மறை பிராண சக்தி கொண்ட உணவை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். பெருங்குடலை சுத்தமாக வைத்திருக்கும் வழிமுறையை பின்பற்றுங்கள்” என சத்குரு கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக “X” தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “நீங்கள் உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வுரீதியாக மற்றும் ஆற்றல் ரீதியாக சமநிலையுடன் இருந்தால் உங்கள் உட்சபட்ச திறனுடன் உங்கள் வாழ்கையை நடத்துவீர்கள்.
சமநிலை தான் மிக முக்கிய அம்சம். சமநிலையற்ற தன்மை என்பது மோசமான ஆரோக்கியத்தை குறிக்கும். சமநிலை என்பது தான் ஆரோக்கியம். உடல்ரீதியாக, மன ரீதியாக மற்றும் உணர்வு ரீதியாக நீங்கள் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும் என்றால், சமநிலை அவசியம்.” என கூறியுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான தென்னை கருத்தரங்கு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், அக்.10- இராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய கூட்ட அரங்கில் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் மாவட்ட அளவிலான தென்னை கருத்தரங்கு இன்று நடந்தது. இராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம் வட்டாரங்களைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தென்னை பயிருக்கான தென்னை வளர்ச்சி வாரிய திட்டங்களை குறித்து தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர், அறவாழி தென்னையில் வேளாண்மைத்துறை திட்டங்கள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் பாஸ்கரமணியன், தென்னையில் உர மேலாண்மை குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணண் பேசினர். தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் ராம்குமார், தென்னையில் மதிப்பு கூட்டுதல் தொழில் நுட்பங்களை குறித்து பேராசிரியர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.
தென்னையில் கொப்பரை கொள்முதல் மூலம் அதிக விலை பெறுவது குறித்து, ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா பேசினார். தென்னை பயிரில் மண்வளம், மேலாண்மை குறித்து வேளாண்மை உதவி இயக்குநர், தரக்கட்டுப்பாடு நாகராஜன் பேசினார். தென்னை வளர்ச்சி வாரிய திட்டங்கள் பெறுவதற்கான வழிமுறைகளை தென்னை வளர்ச்சி வாரிய கள அலுவலர் முருகாளந்தம் எடுத்துரைத்தார். தென்னையில் சிவப்புக்கூன் வண்டு, வாடல் நோய் குறித்து ஆலோசகர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
தென்னையில் நீர் மேலாண்மை, இயற்கை வேளாண்மை குறித்து ராமநாதபுரம் வேளாண்மை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ண்ண் பேசினார். தென்னை மரக்காப்பீட்டு திட்டம் குறித்து திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநர், அமர்லால் தெரிவித்தார். தொழில் நுட்ப அலுவலர் பாரதி பிரியன் நன்றி கூறினார். கருத்தரங்கில் தென்னை விவசாயிகளுக்கு மாதிரி செயல் விளக்க திடல் மானிய விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
58 கிராம கால்வாய்க்கு பாதிப்பை ஏற்;ப்படுத்தும் கல் குவாரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உசிலம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி கிராம மக்களின் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் ஆதாரமாக இருக்கும் 58 கிராம கால்வாயில் நிரந்தர தண்ணீர் திறக்க அரசு அரசாணை வழங்க வலியுறுத்தியும் உசிலம்படடி அருகே உ.வாடிப்பட்டி அருகிலுள்ள 58 கிராம தொட்டிப்பாலத்தின் அருகில் செயல்படும் கல்குவாரியின் அனுமதியை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் 58 கிராம கால்வாயின் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் மதுரை மாவட்டத்தில் பெரியாறு வைகை பாசனப்பகுதி நிலங்களை புதிய சர்வே எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் உசிலம்பட்டி தேனி ரோட்;டில் தற்காலிக பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்திற்கு ஆதராவாக கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம்,அக்.10- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை ஆற்றுவாய் பகுதிக்கு இன்று காலை பைபர் படகு ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய இருவர் விரைவாக தப்பி ஓடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் மண்டபம் போலீசார், மரைன் போலீசார், பாதுகாப்பு பிரிவினர் அங்கு விரைந்து சென்றனர். விசாரணையில் OFRP – A – 3156 MNR என எழுதிய பைபர் படகு இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தது என தெரிந்தது. அப்படகில் பயணித்து தப்பியோடிய 2 பேம் இலங்கையைச் சேர்ந்தவர்களா அல்லது கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணியில் முறைகேடு: பாமக கண்டன தீர்மானம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், அக் 10 – இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாமக மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலர் அக்கிம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்தனதாஸ் மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா முன்னிலை வகித்தனர். மண்டபம் ஒன்றிய செயலர் வெங்கடேசன் வரவேற்றார்.
தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் போராட்டம், கடலாடி தாலுகா சிக்கலை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலாடி ஒன்றிய பாமக சார்பில் உண்ணாவிரத போராட்டம், முல்லைப் பெரியாறிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் மதுரை வரை கொண்டு வந்துள்ள குடிநீரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நீட்டிப்பு செய்து ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை முழுமையாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ராமநாதபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை அழித்து வரும் ஓஎன்ஜிசி நிறுவனம், சீமை கருவேல் மரங்களை முற்றிலுமாக அகற்ற வலியுறுத்தி போராட்டம், ராமநாதபுரம் நகர் சாலைகளில் நிரம்பி வழியும் சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும், புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணியில் முறைகேடு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை அறை விபரம் குறித்து நுழைவாயிலில் வரைபடம் நிறுவ வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராமநாதபுரம் நகர் செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
பசுமை தாயக மாநில துணைச்செயலர் கர்ண மஹாராஜா, மாவட்ட துணை செயலாளர் ராசிக்,
ராமநாதபுரம், திருப்புல்லாணி, கடலாடி ஒன்றிய செயலர்கள் ஷரீப், மஹ்தும் கான், இருளாண்டி, திருப்புல்லாணி ஒன்றியத்தலைவர் ராஜேந்திரன்,
மாவட்ட தொழிற்சங்க செயலர் லட்சுமணன்,
இளைஞர் சங்க செயலர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் இப்ராஹிம், மாணவர் சங்கச் செயலர் சந்தோசம், உழவர் பேரியக்கத்தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜபாளையத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் ஐந்து தலைமுறையாக வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு பட்டா வழங்கிட கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்திய நாகர்கோயில் காவல்துறை கண்டித்தும் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் வாழும் அருந்ததியர் மக்களுக்கு உடனே பட்டா வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ் முருகன் தென்மண்டல ஊடகப் பிரிவு செயலாளர் தமிழரசு தென் மண்டல இளம்புலிகள் அணி துணைச் செயலாளர் திரு வளவன் மாநில செய்தி தொடர்பாளர் முத்துக்குமார் மாநிலத் தொண்டர் அணி செயலாளர் தமிழரசு ராசை ஒன்றிய செயலாளர் அம்பேத்கர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக அஞ்சல் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக பணி நிறைவு பெற்ற அஞ்சல் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு அஞ்சல் தினம் தோன்றிய விதம், அஞ்சலகத்தின் தேவை, அஞ்சலக பணியாளர்களின் உழைப்பு, அஞ்சலக பிரிவுகள், அஞ்சலகத்தின் வெற்றி முதலியன குறித்து சிறப்புரையாற்றினார். சமூக ஆர்வலர் அசோக்குமார் அவர்கள் பழங்காலத்தில் தபால்கள் சென்ற விதம், பல்வேறு வகையான தபால்கள், மாதிரிகள், மேலும் தபால் பெட்டி மாதிரி ஒன்றை செய்து காட்டி அதன் சேவைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். உலக தபால் தினம் குறித்து வினாடி வினா நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தபால் கார்டு வழங்கப்பட்டு தனது நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு தபால் எழுதும் முறை, பெறுநர் முகவரி முதலியன குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மாணவ மாணவிகள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். ஆசிரியை மனோன்மணி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சுகுமாறன் நன்றி கூறினார். விழாவில் பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.