14
இராமநாதபுரம், அக்.10- பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்செல்வகுமார் சிறப்புரை ஆற்றினார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சீனி முஹமது, சிவக்குமார், கோவிந்தன், குமரன், முருகன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக அறிவித்த வாக்குறுதியின் படி பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கோஷமிட்டனர்.
You must be logged in to post a comment.