14
மதுரை நேதாஜி ரோடு பகுதியில் சேர்ந்த திருமதி சோலையம்மாள் அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் போது தவறி விழுந்து அதில் காயம் அடைந்து வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்பு தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி உடல் உறுப்புதானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
அன்னாரது உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா மரியாதை செலுத்தினார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை மாநகராட்சி ஆணையர் அவர்கள்,காவல் துறை துணை ஆணையர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.