விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் ஐந்து தலைமுறையாக வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு பட்டா வழங்கிட கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்திய நாகர்கோயில் காவல்துறை கண்டித்தும் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் வாழும் அருந்ததியர் மக்களுக்கு உடனே பட்டா வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ் முருகன் தென்மண்டல ஊடகப் பிரிவு செயலாளர் தமிழரசு தென் மண்டல இளம்புலிகள் அணி துணைச் செயலாளர் திரு வளவன் மாநில செய்தி தொடர்பாளர் முத்துக்குமார் மாநிலத் தொண்டர் அணி செயலாளர் தமிழரசு ராசை ஒன்றிய செயலாளர் அம்பேத்கர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.