28
இராமநாதபுரம், அக்.11- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆற்றாங்கரை ஊராட்சியில் பட்டா திருத்த சிறப்பு முகாம் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு துவங்கி வைத்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. ஊராட்சி தலைவர் முஹமது அலி ஜின்னா, விஏஓ கார்த்தீஸ்வரி, துணைத் தலைவர் நூருல் அஃபான் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் கோபு குடிமை பொருள் வட்டாட்சியர் தமீம் ராசா, துணை வட்டாட்சியர்கள் காளீஸ்வரன், சாமிநாதன் பங்கேற்றனர். ஆற்றங்கரை முஸ்லிம் ஜமாத் தலைவர் சவுகார், செயலாளர் நாகூர் கனி, வார்டு உறுப்பினர் நாகராஜ், இந்து சமூக நிர்வாகி தேவேந்திரன்,பாஸ்கரன் முஸ்லிம் ஜமாத் பொருளாளர் ரியாஸ், ராஜா பிரியா, பூமிநாதன், கனகு உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் கண்ணன் ஏற்பாடு செய்தார்.
You must be logged in to post a comment.