ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 105 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 99 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாத் முன்னாள் துணைத் தலைவரும் சமூக ஆர்வலருமான முகம்மது அஜிஹர் கூறுகையில் :- கீழக்கரை கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாத்துக்கு கீழ் இயங்கி வரும் ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளியில் 13 மாணவ மாணவிகள் 500/600 ம் நான்கு மாணவ மாணவிகள் 550/600 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர் மேலும் பள்ளியில் 575/600 முதல் மதிப்பெண் பெற்று 94.28% சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்து உள்ளனர் முதலில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு , வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர் , மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
70