இராமநாதபுரம் மாவட்டம் இராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து நடத்திய 6வது புத்தக திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் முன்னிலை வகித்தனர்.துவக்க நாள் நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் காணொளிக்காட்சி வாயிலாக பங்கேற்று விழாப்பேருரை வழங்கினார்அவர் கூறியதாவது :-இராமநாதபுரத்தில் 6வது புத்தக திருவிழா நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் பல்வேறு அலுவல் பணி காரணமாக வெளியூரில் உள்ள காரணத்தினால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த 6வது புத்தக திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் மக்கள் நல திட்டங்கள் தொடர்பான அரங்குகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பார்த்து படித்து பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான புத்தகங்கள், மூலுகை கண்காட்சி, ஒவிய கண்காட்சி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி பட்டறை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும். புத்தக படிப்பு என்பது இளைஞர்கள் மத்தியில் புத்தக வாசிப்பை ஊக்கு விப்பதற்காக நடத்தப்படுகிறது. புத்தக வாசிப்பு என்பது நம்முடைய வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து மாவட்டத்திலும் நடத்திட உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.இந்த அறிய வாய்பை பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு புத்தக வாசிப்பை தொடர்ந்து கடைப்பிடிப்பதுடன் ஒவ்வொருவரும் புத்தகங்களை நேசித்து வாழ்வில் வளம் பெற வேண்டுமென தெரிவித்தார்.தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில், இராமநாதபுரத்தில் இன்று 6ஆவது புத்தக திருவிழா நடைபெறுகிறது. இராமநாத புரத்திற்கு பல்வேறு வரலாற்று சிறப்புகள் உண்டு. அதிலும் குறிப்பாக இராமேஸ்வரம் இந்திய திருநாட்டின் நுழைவுப்பகுதியாக இருப்பது பெருமையான ஒன்றாகும். அதேபோல் உலகளவில் பேசப்பட்ட தலைவர் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த பூமி இது என்பது நமக்கு கிடைத்த பாக்கியமாகும். இத்தகைய சிறப்புமிக்க நம் மாவட்டத்தில் இளைஞர்களிடையே வாசிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளது. எல்லோருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்து வருகின்றன. அதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது இலட்சியம் நிறைவேறும். இன்றைய தொழில்நுட்ப காலத்தில் குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் மையமாக்கப்பட்ட தகவல்கள் நமக்கு கிடைக்கும். அது நமக்காக ஏற்படுத்தக்கூடிய நிரந்தர தீர்வு அல்ல. அதே வேலை ஒரு புத்தகத்தை நாம் முழுமையாக படிக்கும் பொழுது அதை அறிந்து கொள்வது மட்டுமின்றி தேவையான நேரங்கள் எல்லாம் பார்த்து சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில் புத்தகம் இருந்து வரும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசே ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்த உத்தரவிட்டு நடைபெற்று வருகிறது.இது வெறும் புத்தக கண்காட்சி அல்ல. மாணவ பருவத்தில் நாம் திட்டமிட்ட ஒரு சில புத்தகங்களை மட்டும் படிக்கும் நிலை ஏற்படும் ஆனால் இது போன்ற விழாக்களின் வாயிலாக பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் கிடைக்கப்பெறும் இது போன்ற நல்ல வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் தவறாமல் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும். சில புத்தகங்கள் அதிக விலை என்றால் மாணவர்கள் குழுவாக சேர்ந்து புத்தகம் வாங்கி ஒருவர் பின் ஒருவராக படித்து பயன்பெறலாம். நமது இலக்கு என்பது ஒவ்வொருவரும் புத்தகத்தை வாசிப்பது என்பதை விட ஒவ்வொருவரும் நேசிப்பு தன்மையை உருவாக்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா. விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் நடைபெற்ற சிறந்த வாசகமாக தேர்வு செய்யப்பட்டு வாசகத்தை எழுதிய கீழக்கரை அமிர்த வித்யாலயா பள்ளி மாணவி சுவாஸ்திகா ஹரிணியை பாராட்டி ரூ.2000/- மதிப்பீட்டில் புத்தகங்கள் பரிசாக வழங்கினார்.தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று முதல் 12.02.2024 வரை காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுவதுடன், தொடர்ந்து கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு , இளைய மன்னர் கே.பி.எம்.நாகேந்திர சேதுபதி, இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கே.டி.பிரபாகரன், இராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் பிரவின் தங்கம் , மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Category:
உலக செய்திகள்
கடையம் ஒன்றியத்தில் பகுதிநேர ரேஷன் கடைகள் வேண்டும்; மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தமிழக அமைச்சரிடம் கோரிக்கை..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை அமைத்திட வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் தமிழக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன், தமிழக உணவு (ம) உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியை நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ராஜாங்கபுரம், வாகைக்குளம், பாப்பான்குளம், பெரியத்தெரு, ரவணசமுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் அதிக அளவிலான குடும்ப அட்டைகள் உள்ளன. ஒரே கடையில் வாங்குவதாலும், நீண்டதூரம் சென்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருப்பதாலும், பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே பகுதி நேர ரேசன் கடைகளை சிறப்பு திட்டத்தின் கீழ் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் குறிப்பிட்டுள்ளார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே. ரமேஷ், கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்துபாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மக்களின் குறைகள் மீது விரைவில் நடவடிக்கை; தென்காசி மாவட்ட கலெக்டர் உறுதி..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார். பின்பு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பொதுமக்கள் குறைகளின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தை அறிவித்து அதில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் இனி ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டத்தில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சிவகிரி வட்டத்தில் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்து பல்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். மேலும் ஜன.31 இரவு சிவகிரியில் தங்கி (01-02-2024) அதிகாலை முதல் ஆய்வு பணிகள் மேற்கொண்டார்.
இது பற்றிய செய்திக்குறிப்பில், சிவகிரி வட்டம் உள்ளார் ஊராட்சியில் தெருவிளக்குகள் சரியாக எரிகிறதா எனவும், ரத்தினபுரி ஊராட்சி பகுதியில் ரூ.4.40 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பைப் லைன் மூலம் விரைந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கும், அப்பகுதியில் தார்சாலை விரைவாக அமைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பளியர் இன குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும், வாசுதேவநல்லூர் பேருந்து நிலையத்தில் பேரூராட்சியின் மூலம் பேருந்து அமைக்கப்பட்டுள்ள நவீன கட்டண கழிப்பிடத்தையும், அப்பகுதியில் உள்ள ஜவஹர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்தும், வாசுதேவநல்லூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மூலம் வீடுகளில் சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை சேகரிக்கும் பணிகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள அரசு சீர் மரபினர் பள்ளி மாணவர் விடுதியினையும், விடுதியில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து விரைவில் அனைத்து குறைகளும் நிறைவேற்றித் தரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார். இந்த ஆய்வுகளின் போது, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி. கவிதா, சிவகிரி வட்டாட்சியர் ஆனந்தன், சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் பரமசிவன், உதவி இயக்குநர் (நிர்வாகம்) கந்தசாமி, உதவி பொறியாளர் பாண்டியராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை! மன்னார் நீதிமன்றம் உத்தரவு!!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 16 ந்தேதி மீன்பிடிக்க சென்று மன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததால் மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து மன்னார நீதிமன்ற நீதிபதி தீர்பளித்தார். இதனையடுத்து பாம்பன் மீனவர்கள் 18 பேரும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துனை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 18 பேரும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு மீன் பிடி விசைப்படகுக்கான வழக்கு வரும் மார்ச் 20 ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தவறவிட்ட செல்போனை முப்பது நிமிடத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை..
written by Abubakker Sithik
கடையநல்லூர் பகுதியில் தவறவிட்ட செல்போனை 30 நிமிடத்தில் காவல்துறையினர் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் துரைராஜ். இவர் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் கடையநல்லூர் வந்த போது வழியில் அவரது செல்போன் தவறி கீழே விழுந்தது தொலைந்து விட்டதாகவும், தொலைந்த செல்போனை மீட்டுத் தருமாறும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜா அறிவுறுத்தலின் படி, சார்பு ஆய்வாளர் முருகேஸ்வரி மற்றும் காவலர் ராஜா ஆகியோர் இணைந்து தொலைந்த செல்போனை 30 நிமிடத்திற்குள் மீட்டு காவல் ஆய்வாளர் முன்னிலையில் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொலைபேசியை பெற்றுக் கொண்ட நபர் தென்காசி மாவட்ட காவல் துறைக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை மாவட்டம்
பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 135.65 அடி, கொள்ளளவு: 5049.00, மி.க.அடி, நீர் வரத்து : 273.241 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி.
சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 144.03 அடி, கொள்ளளவு: 1001.10 மி.க.அடி.
மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 116.48 அடி, கொள்ளளவு: 5360.04 மி.க.அடி, நீர் வரத்து : 132.00 கனஅடி, வெளியேற்றம் : 465.00 கனஅடி.
வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50.00 அடி, நீர் இருப்பு: 49.20 அடி, கொள்ளளவு: 442.00 மி.க.அடி, நீர் வரத்து: NIL, வெளியேற்றம்: NIL
நம்பியாறு: உச்சநீர்மட்டம்: 22.96 அடி, நீர் இருப்பு: 20.30 அடி, கொள்ளளவு: 55.71 மி.க.அடி, நீர்வரத்து: NIL, வெளியேற்றம்: 60.00 கனஅடி.
கொடுமுடியாறு: உச்சநீர்மட்டம்: 52.50 அடி, நீர் இருப்பு: 18.50 அடி, கொள்ளளவு: 24.42 மி.க.அடி, நீர்வரத்து: 5.00 கனஅடி, வெளியேற்றம்: 30.00 கனஅடி.
மழை அளவு: பாளையங்கோட்டை: 20.00 மி.மீ, திருநெல்வேலி: 7.40 மி.மீ. மேற்குத் தொடர்ச்சி மாஞ்சோலை எஸ்டேட் மலைப் பகுதி: மழை ஏதும் இல்லை.
தென்காசி மாவட்டம்
கடனா : உச்சநீர்மட்டம் : 85.00 அடி, நீர் இருப்பு : 78.70 அடி, கொள்ளளவு: 265.24 மி.க.அடி, நீர் வரத்து : 6.00 கன அடி, வெளியேற்றம் : 95.00 கன அடி.
ராம நதி : உச்ச நீர்மட்டம் : 84.00 அடி, நீர் இருப்பு : 79.25 அடி, கொள்ளளவு: 98.92 மி.க.அடி, நீர்வரத்து : 20.00 மி.க.அடி, வெளியேற்றம் : 30.00 மி.க.அடி.
கருப்பா நதி : உச்சநீர்மட்டம்: 72.00 அடி, நீர் இருப்பு : 65.95 அடி, கொள்ளளவு: 96.58 மி.க.அடி, நீர் வரத்து : 10.00 கன அடி, வெளியேற்றம் : 25.00 கன அடி.
குண்டாறு: உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 35.37 அடி, கொள்ளளவு: 17.01 மி.க.அடி, நீர் வரத்து: 4.00 கன அடி வெளியேற்றம்: 7.00 கன அடி.
அடவிநயினார்: உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 105.50 அடி, கொள்ளளவு: 109.35 மி.க.அடி, நீர் வரத்து : 3.00 கன அடி, வெளியேற்றம்: 15.00 கன அடி.
மழை அளவு நிலவரம்: கடையநல்லூர்: 27.00 மி.மீ, சங்கரன்கோவில்: 5.00 மி.மீ, சிவகிரி: 1.00 மி.மீ, தென்காசி: 4.20 மி.மீ, கருப்பாநதி: 24.50 மி.மீ, அடவிநயினார்: 1.00 மி.மீ.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை இராதாபுரம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்; பிப் 01 இன்று துவங்குகிறது..
written by Abubakker Sithik
நெல்லையில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் பிப். 01 இன்று துவங்கி பிப். 02 நாளை வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். கா.ப. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, மக்களைத் தேடி பல்வேறு அரசு திட்டங்கள் முறையாக சென்றடைவதை உறுதிசெய்ய அரசுத் துறை அலுவலர்கள் மக்களைத் தேடி வரும் “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் மாதம் ஒரு முறை முகாம் நடைபெறும். அதில் மாவட்ட ஆட்சித்தலைவருடன் மாவட்ட அளவிலான அதிகாரிகள் பங்குபெறுவர். கள ஆய்வுப்பணிகள் முதல் நாள் காலை 9.00 மணி முதல் மறுநாள் காலை 9.00 மணி வரை நடைபெறும். அந்த தாலுகாவில் நடைபெற்று வரும் அனைத்துதுறை பணிகளையும் ஆய்வு செய்வார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் முதற்கட்டமாக இராதாபுரம் தாலுகாவில் 01-02-2024, 02-02-2024 தேதிகளில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்), இணை இயக்குநர் (வேளாண்மை), இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத் துறை), இணை இயக்குநர் (சுகாதார துறை), துணை இயக்குநர் (பொது சுகாதாரம்), கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை), செயற் பொறியாளர் (குடிநீர் மற்றும் வடிகால்), மண்டல இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் இதர மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டப்பணிகளை கள ஆய்வு செய்ய உள்ளார்கள். மேலும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் இராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளார் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிவகிரி வட்டத்தில் தமிழக முதல்வரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்; தென்காசி மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, 31-01-2024 புதன்கிழமை நடைமுறைக்கு வந்தது. உங்களைத்தேடி, உங்கள் ஊரில் என்ற திட்ட முகாம் மாவட்டத்தில் ஒருகுறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.
அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்களும் சிவகிரி வட்டத்தில் தங்கி 31-01-2024 காலை 9.00 மணி முதல் 01-02-2024 காலை 9.00 மணி வரை பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல், தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும், இத்திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் வகையில் மனுக்களைப் பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள். அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துறை அலுவலர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து, எவ்வித தாமதமுமின்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, 31-01-2024 புதன்கிழமை தென்காசி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவகிரி வட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டார். அதன்படி சிவகிரி தேவர் மகாசபை திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து. சிவகிரி வட்டத்தில் சிவகிரியில் உள்ள நியாய விலை கடையினையும், வட்டாட்சியர் அலுவலகத்தினையும், ஊராட்சி ஒன்றிய பள்ளி, அரசு மருத்துவமனையினையும், அரசு இ சேவை மையத்தினையும், இராயகிரி பேரூராட்சி அலுவலத்தினையும் ஆய்வு செய்ததுடன், சிவகிரி வட்டம் ராயகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.32.75 லட்சம் கடன் உதவித்தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும், சிவகிரி வட்டம் இராயகிரி பேரூராட்சி பகுதியில் 4 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் தரத்தினை பார்வையிட்டும், சிவகிரி வட்டம் கீழகரிசல் குளம் ஊராட்சியில் ரூ.9.8 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஊரணியினை பார்வையிட்டும், சிவகிரி வட்டம் தலையணை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடியும், சிவகிரி வட்டம் கரிசல்குளம் ஊராட்சி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும், சிவகிரி வட்டம் தலையணை பகுதியில் உள்ள பளியர் இன மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து இன்று (ஜன.31) முழுவதும் சிவகிரி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அலுவலகங்கள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதோடு, பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.
முன்னதாக, ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் அனைத்துதுறை அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர். இந்த ஆய்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி. துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.கவிதா, சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி, சிவகிரி வட்டாட்சியர் ஆனந்தன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் மாநில பெண் மீட்பு; உதவிடும் பணியில் தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினர்..
written by Abubakker Sithik
தென்காசி பசியில்லா தமிழகம் அமைப்பினர் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு உரிய ஏற்பாடுகளை செய்து, அவர்களின் குடும்பத்தினருடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினர் மீட்டு அவருக்கு உரிய முதலுதவி செய்து பாதுகாப்பான தங்குமிடத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி பேருந்து நிலையம் எதிரே ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் இருப்பதாகவும், குடிகாரர்களால் அந்த பெண் துன்புறுத்தலுக்கு ஆளாகுவதாகவும் அந்த பகுதி தன்னார்வலர்கள் மூலம் பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பினருக்கு தகவல் வந்தது. உடனடியாக களத்துக்குச் சென்ற பசியில்லா தமிழகம் குழுவினர் மற்றும் புளியங்குடி சமாதானம் டிரஸ்ட்டை சேர்ந்த திருமலை ஆகியோர் இணைந்து அந்த பெண்ணை மீட்டு அவருக்கு உரிய முதலுதவி செய்து அவருக்கு உணவு வழங்கி புளியங்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இரவு நேரம் என்பதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து மனநல சிகிச்சை வழங்க முடியவில்லை. அதே நேரத்தில் அவருக்கு அன்று இரவு பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்காக புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் அனுமதியின் பேரில் தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட்ல் அன்று இரவு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டது.
தொடர்ந்து, தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் அனுமதியின் பேரில் புளியங்குடி காவல்துறையில் அனுமதி பெற்று, தென்காசி மாவட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான வடகரை அன்பு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்பு இல்லத்தில் தொடர்ந்து அவருக்கு மனநல சிகிச்சை வழங்கி அவரது இல்லம் கண்டுபிடித்து இல்லத்துடன் சேர்க்கும் பணியை பசியில்லா தமிழகம் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இன்னும் இது போன்று பல ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் சாலையில் ஆதரவின்றி சுற்றித்திரியும் நபர்களை மீட்டு மனநல சிகிச்சை வழங்கி அவர்களின் குடும்பத்துடன் சேர்க்கும் பணியை பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பு மேற்கொண்டுள்ளது. பசியில்லா தமிழகம் அமைப்பினரை 8883340888 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அவர்களோடு உதவும் பணியில் இணைந்து கொள்ளலாம்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மகாத்மா காந்தி பற்றிய ஆளுநரின் சர்ச்சை பேச்சு; காந்திய அமைப்புகள் கடும் கண்டனம்; ஆளுநர் உரையை திரும்ப பெற வலியுறுத்தல்..
written by Abubakker Sithik
ஆளுநர் ஆர்.என். ரவியின் மகாத்மா காந்தி குறித்த சர்ச்சை பேச்சுக்கு காந்தியவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ஆளுநர் தனது உரையை திரும்பப்பெற வேண்டும் என காந்திய அமைப்பு நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அகில இந்திய காந்திய இயக்கத் தலைவர் செங்கோட்டை வி. விவேகானந்தன், N.M பெருமாள் I.A.S தென்காசி, பூ. திருமாறன் சமூக நல ஆர்வலர், வெங்கடாம்பட்டி, Dr. G.S. விஜயலட்சுமி சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மின்நகர், Dr. தி. ஏகலைவன் பல் மருத்துவர், முக்கூடல், தி நன்னன், வெங்கடாம்பட்டி, பீமராஜா காந்தியவாதி, இராஜபாளையம் ஆகியோர் கூட்டாக நெல்லையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில், பொறுப்பான பதவியில் இருக்கும் மேதகு ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களிடையே உரையாற்றும் போது வரலாறு அறியாதவராக காந்தியடிகளை பற்றி விமர்சித்து உள்ளார். காந்திய இயக்கங்கள் அந்த செயலுக்காக கடுமையான கண்டத்தை பதிவு செய்வதாக தெரிவித்தனர்.
மேலும், ஜனவரி 24ஆம் தேதி நமது ஆளுநர் மாணவர்களிடம் பேசிய சொற்பொழிவு பத்திரிகையில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. மகாத்மா காந்தியின் பங்கு ஒன்றுமில்லை என்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் தான் நாடு சுதந்திரம் அடைந்தது என்றும் வரலாற்று தவறான ஒரு செய்தியை அண்ணா பல்கலையில் மாணவர்களிடையே உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். போராட்டத்திற்காக எண்ணற்ற தியாகிகள் தன் உயிரையும் துச்சமாக மதித்து பலவிதமான போராட்டம் காந்திஜி தலைமையில் நடத்தி, இறுதியில் ஐரோப்பியர்களால் இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தை தருவது தவிர வேறு வழியில்லை என்ற உந்துதல் காரணமாக 1947ல் லார்ட் மவுண்ட் பேட்டன் இந்திய சுதந்திரத்தை பிரகடனம் படுத்தினார்.
தியாகிகள் வரிசையில் நாட்டிற்காக போராடிய வீரர்களில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பங்கு பெற்றார் என்பதில் யாரும் மறுக்க முடியாது. அகிம்சை மீது நம்பிக்கை இல்லாமல் வன்முறை மூலமாகவே வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை கொண்டு நாட்டிற்காகவே போராடி விமான விபத்தில் உயிர்பலி ஆனார். அந்த வன்முறை போராட்டத்தில் நாடு சுதந்திரம் பெற்றது என்று எவரும் இதுவரை கூறியது இல்லை. இந்த உண்மைகளை எல்லாம் அறியாத மேதகு ஆளுநர் தேவையில்லாத ஒரு விஷயத்தை கையில் எடுத்து நேதாஜியால் தான் சுதந்திரம் பெற முடிந்தது என்று கூறியது அபத்தமாகும். அதிலும் குறிப்பாக மகாத்மா காந்தி கையாண்ட ஒத்துழையாமை இயக்கத்தால் நாடு விடுதலை பெறவில்லை என்று கூறியது அவர்களுடைய அறியாமையை காட்டுகிறது. இந்திய தேச மக்கள் அனைவரும் விடுதலை போராட்ட காலத்தில் மகாத்மாவால் மட்டுமே கத்தியின்றி ரத்தமின்றி இந்த யுத்தத்தை செய்ய முடிந்தது என்பதை அனைவரும் உணர்ந்து ஒப்புக் கொண்ட ஒரு விஷயத்தை தேவையில்லாமல் ஆளுநர் மாணவர்களிடையே உரையாற்றி இருப்பது அனைத்து மக்கள் சார்பிலும், காந்திய இயக்கங்கள் சார்பிலும் கடுமையான கண்டத்தை தெரிவித்து கொள்கிறோம்.
ஒத்துழையாமை இயக்கத்தை பற்றி கூறும் ஆளுநர், காந்திஜி தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் ஏன் ஏற்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 1919 ல் பிரிட்டிஷாரால் ரவ்லட் சட்டம் இயற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விலக்கும் விதமாக ஏராளமான போராட்டங்கள் காந்திஜி தலைமையில் நடைபெற்றது. அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் காந்திஜி தலைமையிலான அகிம்சை முறையில் போராடும் இந்த போராட்டங்களை அடக்குவதற்கு வேறு வழியில்லாமல் கடுமையான ரவ்லட் சட்டத்தை நிறைவேற்றினார்கள். இந்த சட்டத்தின் மூலமாக இந்தியர்களை அடக்கி காலனி ஆதிக்கத்தை பலப்படுத்தி விடலாம் என்று நினைத்தார்கள். இந்த சட்டத்தை இந்தியர்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இந்த சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதற்காக மகாத்மா தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது.
செப்டம்பர் 1920 ல் அன்று தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் 1922 வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள வக்கீல்களும், நீதிபதிகளும், அரசு அதிகாரிகளும் தங்களுடைய பணிகளில் இருந்து விலகி அரசு கொண்டு வந்த ரவ்லட் சட்டத்தை எதிர்த்து சட்ட மறுப்பு கொள்கை கடைபிடிக்க தொடங்கினர். பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் முதல் சாதாரண ஊழியர்கள் வரை சட்ட மறுப்பில் ஈடுபட்டதால் நாடே ஸ்தம்பித்தது. அரசு எவ்வளவு அடக்குமுறை கையாண்டாலும் இந்த ஒத்துழையாமை இயக்கத்தை வெல்ல முடியவில்லை. இளைஞர்கள் அனைவரும் உத்வேகம் கொண்டு காந்திஜிக்கு ஆதரவாக ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டனர். செய்வது அறியாத பிரிட்டிஷார் மிகவும் குழம்பி போனார்கள்.
ஆனால் இந்த இயக்கம் மகாத்மாவால் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஒரு சமயம் ஏற்பட்டது. காரணம் இந்த இயக்கம் வன்முறையை கையாண்ட மக்களில் சிலர் பிரிட்டிஷாரின் துப்பாக்கி சூட்டிற்கு பதிலடியாக சௌரி சௌரா என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தை தீக்கிரையாக்கினார்கள். இந்த சம்பவத்தில் 22 பேர் காவல் துறையினர்கள் கொல்லப்பட்டார்கள். சத்தியமும், அகிம்சையும் உயிர் மூச்சாக கொண்ட காந்திஜி, நாம் ஒருபோதும் வன்முறையை கையாண்டு காரியத்தை சாதிக்கலாம் என்பது மிகவும் தவறு. எனவே இந்தியர்களுக்கு இன்னும் நான் சரியான பயிற்சி அளிக்கும் வரை இந்த இயக்கத்தை நிறுத்துவதாக அறிவித்தார். இந்திய தலைவர்கள் அனைவருமே இந்த இயக்கம் நின்றதால் அதிர்ச்சி அடைந்தார்கள். எனினும் காந்திஜி தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அந்த இயக்கத்தை நிறுத்தினார். இந்த இயக்கம் அகிம்சை வழியில் முழுமையாக வெற்றியடையும் என்று கூறிய காந்திஜி கடுமையான அகிம்சை போராட்டத்தில் மக்களை ஈடுபட வைத்தார். இது பிரிட்டிஷாரை அதிர வைத்தது.
ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி நிறுத்தியதின் விளைவு இந்தியா முழுவதிலும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நாங்கள் எல்லோரும் காந்திஜி தலைமையில் அகிம்சையை கடைபிடித்து விடுதலை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று உறுதிமொழி அளித்தனர். அகிம்சை தீ நாடு முழுவதும் பட்டி தொட்டி எல்லாம் பரவி நாடு விடுதலை கிடைக்கும் வரை தொடர்ந்து பரவியது. உலகமே அதிசயமாக நமது மக்களையும் காந்திஜியையும் திரும்பி பார்த்தார்கள். இதையெல்லாம் ஆளுநர் அறிவாரா?
ஏப்ரல் 6, 1930ல் மாபெரும் உப்பு சத்தியாக்கிரகத்தைப் பற்றி ஆளுநர் அறிவாரா? கேவலம் ஒருபிடி உப்பு அள்ளுவதால் என்ன ஆகிவிட போகிறது என்று ஏளனம் செய்த பிரிட்டிஷாருக்கு சரியான அதிரடி காத்திருந்தது என்பதை ஆளுநர் அறிவாரா? ஏழை மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் உப்புக்கு வரி விதித்து பிரிட்டிஷ் ஆட்சி அடிமட்ட ஏழை மக்களின் வாழ்வையே கேள்விக் குறியாக்கினார்கள், இதைக் கண்டு மனம் வருந்திய காந்திஜி அவருடைய சபர்மதி ஆசிரமத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். நாளை இந்திய மக்கள் அனைவரும் சபர்மதி ஆசிரமத்தை உற்று கவனிப்பார்கள் என்று கூறினார். அதற்கு முன்னதாக பிரிட்டிஷ் அரசிடம் தான் உப்பு சத்தியாக்கிரகம் செய்ய போவதாகவும், எனவே உப்பு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
சாதாரண உப்பை வைத்து மகாத்மா என்ன காரியம் சாதித்து விட போகிறார் என்று ஏளனமாக பிரிட்டிஷார் எடை போட்டார்கள். மறுநாள் காந்திஜி என்ன செய்ய போகிறார் என்று உலகமே உற்று நோக்கியது. ஆனால் மகாத்மா எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தண்டி கடற்கரை நோக்கிய ஆசிரமவாசி 18 பேருடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நடக்க தொடங்கி விட்டார். வழி நடையிலும் புழுதி மண் ரோடு வழியாக கடுமையான சிரமத்துடன் நடந்து சென்றார்கள். மக்கள் சற்றும் எதிர்பாராத இந்த நடைபயணம் காட்டு தீ போல உலகமெங்கும் பரவியது. வழி நெடுகிலும் மக்கள் தானாக முன்வந்து தெரு நெடுகிலும் தண்ணீர் தெளித்து மலர் தூவி நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கு சிரமம் இல்லாமல் செய்தார்கள். 320 கி.மீ. தொலைவில் உள்ள தண்டி கடற்கரை நடை யாத்திரையாகவே குழு சென்றது. தண்டி கடற்கரை அடையும் போது ஆயிரக்கணக்கான மக்கள் தானாகவே முன்வந்து யாத்திரையில் கலந்து கொண்டார்கள். இதை பதிவு செய்த வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மூக்கின் மேல் விரல் வைத்து எந்தவித ஏற்பாடு இல்லாமல் காந்திஜி நடை யாத்திரைக்கு மக்கள் பேராதரவு தந்தது எங்களை வியக்க வைக்கிறது என்று கூறினார்கள். இந்த செய்தி உலகமெங்கும் பரவியது.
அப்போது தான் பிரிட்டிஷார் கடற்கரையில் என்ன செய் போகிறார்கள் என்று கூர்ந்து கவனிக்க தொடங்கினார்கள். கடற்கரை வந்தடைந்த காந்திஜி குழு கடலிலேயே நீராடி விட்டு ஒரு கை உப்பு கையில் எடுத்து இந்த இயக்கம் வெற்றியடைந்தது விட்டது என்று கூறினார். இதன் விளைவாக காந்திஜி வழியை பின்பற்றி ஏராளமான தலைவர்கள் ஆங்காங்கே உள்ள கடற்கரையில் உப்பு எடுக்க தொடங்கி விட்டார்கள். அதிர்ந்து போன பிரிட்டிஷார் அடக்கு முறையை கையாண்டார்கள். இருப்பினும் எந்த பயனும் இல்லை. மக்கள் வெறி கொண்டு சட்டத்தை மீறி உப்பு எடுக்க தொடங்கி விட்டார்கள். தாராசனா சால்ட் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் உப்பெடுக்க காந்திஜி குழு திட்டமிட்டது. அதை அறிந்த ஆங்கிலேயர் உப்பெடுப்பதை நாம் சாதாரணமாக எடைபோடுவது தவறு என்று உணர்ந்த பிரிட்டிஷார் அவரை சிறையில் தள்ளியது. ஒரு வருடமாக சிறையில் இருந்த காந்திஜி பிரிட்டிஷாரின் வட்ட மேசை மாநாட்டிற்காக அழைத்த போது அதை ஏற்ற காந்திஜி விடுதலை செய்யப்பட்டார். சாதாரண உப்பு சத்தியாக்கிரகத்தின் விளைவாக காந்திஜியை லண்டனுக்கு அழைத்து பேசுவதற்கு பிரிட்டிஷார் ஏற்பாடு செய்தததை ஆளுநர் அறிவாரா? இதன்பின் சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொள்ள கோடானுகோடி மக்கள் கைகோர்த்தததை ஆளுநர் அறிவாரா?
இதன்பின் 1942ல் வெள்ளையனே வெளியேறு என்ற கோஷம் முழங்க இந்திய மக்கள் அனைவருமே போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிட்டிஷ் அரசு இந்த போராட்டம் தொடர்ந்தால் காலனி ஆதிக்கம் ஸ்தம்பித்து விடும் என்று அஞ்சினார்கள். இதற்கிடையில் காந்திஜி மாணவர்களிடையே ஒரு அறை கூவல் விட்டார். “செய் அல்லது செத்து மடி”என்ற கோஷத்தை முன்வைத்து இந்திய மக்கள் அனைவரையும் அழைத்து போராட்டத்தில் ஈடுபட வைத்தார். இதை அடக்குவதற்காக பிரிட்டிஷார் ஏராளமானவர்களை ஈவு இரக்கம் இன்றி சிறை பிடித்தனர். இதனால் வெகுண்டு எழுந்த இந்திய மக்கள் ஒவ்வொரு பகுதியிலும் அகிம்சை போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். இது போன்ற போராட்டங்கள் 1946 வரை நீடித்தது. கணக்கில் அடங்காதார் வேதனை அனுபவித்து சிறை சென்றனர். நாளுக்கு நாள் இந்திய மக்கள் தேச பக்தி கூடியதே யொழிய குறைந்த பாடில்லை. இதன்பின் பிரிட்டிஷார் இந்திய மக்களுக்கு விடுதலை அளிப்பதை தவிர வேறு வழி எதுவும் இல்லை என்று உணர்ந்தார்கள். பின் பிரிட்டிஷ் அரசு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் இந்திய மக்களுக்கு விடுதலை கொடுத்து பிரிட்டிஷார் வெளியேற தொடங்கினார்கள். இதனை ஆளுநர் அறிவாரா?
பிரிட்டிஷாரின் போர்க்கால பிரதமராக இருந்த சர் வின்ஸ்டன் சர்ச்சில் கடுமையான அடக்குமுறை கையாள்வதில் வல்லவர் அப்படிப்பட்ட சர்ச்சில் காந்திஜி பற்றி விமர்சித்தது என்ன என்று ஆளுநர் அறிவாரா? சர்ச்சில் காந்திஜியைப் பற்றி கூறும் போது இந்தியா பீரங்கி கொண்டு எங்களைத் தாக்கினால் நான் இந்தியரை தவிடுபொடி ஆக்கி விடுவேன். ஆனால் காந்திஜி என்ற கோவணாண்டி எந்தவித ஆயுதமின்றி நெஞ்சைத் திறந்து வைத்துக் கொண்டு சற்றும் பயப்படாமல் அகிம்சை என்ற வழியில் மக்களை திரட்டி போராடுவது என்னை கோழையாக்கி விட்டதே என்று கூறினாராம். இதனை ஆளுநர் அறிவாரா?
எண்ணற்ற தியாகிகள் காந்தியின் தலைமையில் அரும்பாடுப்பட்டு விடுதலை வேள்வியில் வெற்றி பெற்ற காந்திஜியை பற்றி ஆளுநர் கூறுவது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது. அதுவும் மாணவர் மத்தியில் கூறியிருக்கிறார். இதுபோல வரலாறு தெரியாத பெரும் பதவியில் வகிப்பவர்கள் வரலாறு அறிந்து உரையாற்ற வேண்டும். இல்லையெனில் இளைய சமுதாயத்தினரை திசை திருப்பி அவர்களுக்கு தவறான கருத்தை கற்பிக்க கூடும். ஆளுநர் தன் உரையை வாபஸ் வாங்கி வரலாறு அறிந்து உரையாற்ற வேண்டும் என காந்திய இயக்க நிர்வாகிகள், சமூக நல ஆர்வலர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசியில் ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாக வலம் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், கால வரையறை இன்றி சரண் விடுப்பு ஒப்படைக்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒப்பனையின்றி யதார்த்தங்களையே பேசுகின்றன ஹைக்கூ கவிதைகள்; பொருநை இலக்கிய வட்டத்தில் கவிஞர் பேரா பேச்சு..
written by Abubakker Sithik
திருநெல்வேலியில் நடந்த பொருநை இலக்கிய வட்ட நிகழ்வில் பேசிய கவிஞர் பேரா ஒப்பனையின்றி யதார்த்தங்களையே பேசுகின்றன ஹைக்கூ கவிதைகள் எனக் குறிப்பிட்டார். நெல்லையில் பொருநை இலக்கிய வட்டத்தின் 2049-வது வார நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வுக்கு புரவலர் அருணாசல காந்தி தலைமை வகித்தார். மீனாட்சி நாதன் இறைவணக்கம் பாடினார். பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநரும், தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்க அமைப்பாளருமான கவிஞர் பேரா “ஹைக்கூ பூக்கள்” என்ற தலைப்பில் தொடர்ந்து பேசி வரும் நிலையில், இந்நிகழ்வில், கோவில்பட்டியில் நடந்த ஒரு நிகழ்வில் வெளியிடப்பட்ட முண்டாசுக்கவிஞர் பாரதி என்ற தலைப்பிலான இரா. சிவானந்தம் என்பவர் எழுதிய ஹைக்கூ கவிதை நூலிலிருந்தும், நெல்லை கவிஞர் ந.ஜெயபாலனின் “தூறல் நனைத்த சுவடுகள்” என்ற கவிதை நூலிலிருந்தும் சில ஹைக்கூ கவிதைகளைச் சொல்லி பேசினார். அவர் பேசுகையில், “நவீன இலக்கியத்தின் வரவே ஹைக்கூ கவிதைகளாகும். ஒரு செய்தியை அல்லது ஒரு காட்சியைப் போகிற போக்கில் பதிவு செய்திடும் தன்மை ஹைக்கூ கவிதைகளுக்கு உண்டு. நீண்ட கவிதைகளை வாசிக்கையில் உண்டாகும் சலிப்பு இந்த வகையான கவிதைகளை வாசிக்கையில் ஏற்படுவதில்லை. புதியவர்களை கவரும் ஆற்றலும் இக்கவிதைகளுக்கு உள்ளது. கற்பனைகளைக் கடந்து, ஒப்பனையின்றி யதார்த்தங்களையே பேசுகின்றன ஹைக்கூ கவிதைகள்” எனக் குறிப்பிட்டார். நிகழ்வில் முனைவர் கணபதி சுப்பிரமணியன், சு. முத்துசாமி உட்பட பல தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிவகிரி வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்; தென்காசி கலெக்டர் தகவல்..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் தமிழ்நாடு அரசின் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்ட முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்ற திட்ட முகாம் தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் 31-01-2024 காலை 9.00 மணி முதல் 01.02.2024 காலை 9.00 மணி வரை ஆகிய இரண்டு தினங்கள் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள உங்களைத்தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஏதாவது ஒரு வட்டத்தினை தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்), இணை இயக்குநர் (வேளாண்மை), இணை இயக்குநர் (கால்நடை பாரமரிப்பு), இணை இயக்குநர் (நலப்பணிகள்), துணை இயக்குநர் (பொது சுகாதாரம்), கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலைகள்), நிர்வாக பொறியாளர் (நீர்வள ஆதார துறை), மண்டல இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்), உதவி இயக்குநர் (கிராம பஞ்சாயத்து), முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் இதர உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேற்காணும் அலுவலர்கள் 31.01.2024 அன்று முற்பகலில் சிவகிரி வட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று அரசால் நிறைவேற்றப்பட்டு வரும் முக்கியமான திட்டங்கள், பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்திடவும், சிவகிரி வட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையங்கள், பள்ளிகள், மதிய உணவு மையங்கள், அனாதை இல்லங்கள், பெண்கள் விடுதிகள் மற்றும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர்.
பின்னர் பிற்பகல் 2.30 மணிமுதல் 4.30 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவரால் நடத்தப்படும் ஆய்வு கூட்டத்தில் அனைத்து அலுவலர்களும், தங்களது களப்பணி தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்கப்பட உள்ளனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிற்பகல் 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவகிரி தேவர் மகாசபை திருமண மண்டபத்தில் வைத்து பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தும், கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அதனை கேட்டு நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும்.
அதனை தொடர்ந்து மாலை 6.00 மணி முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்டத்தில் உள்ள முதுநிலை அலுவலர்களுடன் நகர்ப்புறம் மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கு சென்று தெருவிளக்குகள், முறையாக எரிவதை கண்டறிந்தும், அரசு விடுதிகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், அறிவுசார் மையங்கள், அனாதை விடுதிகள், சமூக நலத்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதியோர் இல்லங்கள், பேருந்து நிலையங்கள், சமுதாயம் மற்றும் பொது கழிப்பிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து மேற்படி வசதிகள் முறையாக செயல்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்த பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட அனைத்து அலுவலர்களும் சிவகிரி வட்டத்திலேயே இரவு தங்க உள்ளனர்.
பின்னர் மறுநாள் (01-02-2024) காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை சிவகிரி வட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கு சென்று குடிநீர் விநியோகம், பராமரிப்பு பணி, சுத்தம் மற்றும் சுகாதார பணி, பொது மற்றும் சமுதாய கழிப்பிடங்கள், பால் விநியோகம், பொது போக்குவரத்து, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் பல திட்டப்பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளனர்.
எனவே சிவகிரி வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு வரும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்களிடம் தங்களது பகுதிக்கு தேவைப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் ஆகியவற்றையும், தங்களது பகுதியில் உள்ள குறைகளையும் நேரில் தெரிவித்து அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சங்கரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனை அருகே சார்பு ஆய்வாளர் சுரேஷ் கண்ணன் தலைமையிலான காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த K. ரெட்டியார்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த சண்முகையா என்பவரின் மகன் மணிகண்டன் (41) மற்றும் கீழக்கலங்கல் பேட்டை தெருவை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் மாரிமுத்து (33) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 17,440 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும்; சாம்பவர் வடகரை பேரூராட்சி தலைவர் அமைச்சரிடம் வலியுறுத்தல்..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பகுதியில், புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட மாஞ்சோலைதெரு அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிவாசல் தெரு அங்கன்வாடி மைய கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் இருந்தது. ஆகையால் அந்த கட்டிடங்கள் குழந்தைகளின் நலன் கருதி இடிக்கப்பட்டது. அதில், தற்போது வரை புதிய கட்டிடங்கள் கட்டப்படவில்லை.
எனவே குழந்தைகளின் நலன்கருதி விரைவில் இரண்டு அங்கன்வாடி மையத்திற்கும் புதிய கட்டிடம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் புதிய 3வது வார்டு சன்னையன்பட்டி தெருவில் இருக்கும் கிணறு அருகில் பொது இடம் உள்ளது. அப்பகுதி மக்கள் நலன்கருதி அந்த இடத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கும் சமூக நலத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை மாவட்டம்
பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 136.45 அடி, கொள்ளளவு: 5097.00 மி.க.அடி, நீர் வரத்து : 225.93 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி.
சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 144.98 அடி, கொள்ளளவு: 1015.31 மி.க.அடி.
மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 116.99 அடி, கொள்ளளவு: 5410.02 மி.க.அடி, நீர் வரத்து : 196.00 கனஅடி, வெளியேற்றம் : 440.00 கனஅடி.
வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50.00 அடி, நீர் இருப்பு: 49.20 அடி, கொள்ளளவு: 442.00 மி.க.அடி, நீர் வரத்து: NIL, வெளியேற்றம்: NIL.
நம்பியாறு: உச்சநீர்மட்டம்: 22.96 அடி, நீர் இருப்பு: 21.38 அடி, கொள்ளளவு: 65.78 மி.க.அடி, நீர்வரத்து: 23.00 கனஅடி, வெளியேற்றம்: 60.00 கனஅடி.
கொடுமுடியாறு: உச்சநீர்மட்டம்: 52.50 அடி, நீர் இருப்பு: 21.25 அடி, கொள்ளளவு: 28.44 மி.க.அடி, நீர்வரத்து: 14.00 கனஅடி, வெளியேற்றம்: 30.00 கனஅடி.
மழை அளவு நிலவரம்: ஏதும் இல்லை. மாஞ்சோலை எஸ்டேட் மலைப் பகுதி: மழை அளவு ஏதும் இல்லை.
தென்காசி மாவட்டம்
கடனா : உச்சநீர்மட்டம் : 85.00 அடி, நீர் இருப்பு : 80.10 அடி, கொள்ளளவு: 280.52 மி.க.அடி, நீர் வரத்து : 6.00 கன அடி, வெளியேற்றம் : 80.00 கன அடி.
ராம நதி : உச்ச நீர்மட்டம் : 84.00 அடி, நீர் இருப்பு : 79.75 அடி, கொள்ளளவு: 100.60 மி.க.அடி, நீர்வரத்து : 19.00 மி.க.அடி, வெளியேற்றம் : 30.00 மி.க.அடி.
கருப்பா நதி : உச்சநீர்மட்டம்: 72.00 அடி, நீர் இருப்பு : 66.60 அடி, கொள்ளளவு: 99.02 மி.க.அடி, நீர் வரத்து : 10.00 கன அடி, வெளியேற்றம் : 25.00 கன அடி.
குண்டாறு: உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 35.12 அடி, கொள்ளளவு: 17.20 மி.க.அடி, நீர் வரத்து: 5.00 கன அடி, வெளியேற்றம்: 7.00 கன அடி.
அடவிநயினார்: உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 106.50 அடி, கொள்ளளவு: 111.59 மி.க.அடி, நீர் வரத்து : 3.00 கன அடி, வெளியேற்றம்: 15.00 கன அடி.
மழை அளவு நிலவரம்: ஏதும் இல்லை.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாற்றுத் திறனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கல்..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.01.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன், தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 467 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு. முருகானந்தம், துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி. கவிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்திமக்கள் தொடர்பு அலுவலர்.இரா.இளவரசி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வைத்து 30.01.2024 இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களை முன்னிட்டு இக்கூட்டம் 31.01.2024 புதன் கிழமையன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட விவசாய பெருமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை 31.01.2024 அன்று நடைபெறும் விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டத்தில் அளித்து அதற்கான தீர்வினை அடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு அரசு மாற்றுதிறனாளிகள் நல இயக்குனராக பணியாற்றிய ஏ.கே. கமல் கிஷோர் தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றார். தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக ஏ. கே.கமல் கிஷோர் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஜன.27 அன்று பிறப்பித்திருந்தார். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக ஏ.கே. கமல் கிஷோர் ஜன.29 திங்கள் கிழமை மாலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமித்ததற்கு தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தென்காசி விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர்கள் செயல்படுத்திய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மேலும் பொதுமக்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை சந்தித்து கோரிக்கைகளை கூறலாம். அதற்கு எந்தவித தடையும் இல்லை எனவும், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதறகு முழு முயற்சி எடுப்பேன் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு கொண்டு வரப்படும் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மக்களை சென்றடையும் வகையில், அதற்கு தேவையான முழு நடவடிக்கைகளும் எடுப்பேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் செய்தியாளர்களுடன் பயணம் செய்து வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மாவட்ட கலெக்டர்..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் செய்தியாளர்களுடன் பயணம் செய்து தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கத்தின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு, ஒரே தொழில் செய்யக்கூடிய மகளிர் குழு உறுப்பினர்களை ஒருங்கிணைத்து குறுந்தொழில் தொகுப்புகளாக உருவாக்கி மேம்படுத்தப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஆலங்குளம் வட்டாரம் வாடியூர் ஊராட்சியில் தையல் தொழிலில் ஆர்வமுள்ள பெண்களை ஒருங்கிணைத்து “அக்னிசிறகுகள்” ஆயத்த ஆடைகள் தொழில் தொகுப்பு உருவாக்கப்பட்டது. இதில் தற்போது 30 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களது பிரதான தொழிலாக மஞ்சள் பை தைத்து விற்பனை செய்து வருகின்றனர். அனைத்து உறுப்பினர்களுக்கும் கூட்டமைப்பு மூலம் இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு தலா ரூ.40,000 கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் தொகுப்பை வலுப்படுத்த நபார்டு வங்கி உதவியுடன் சணல்பை தைப்பதற்கான பிரத்யேகப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வீடுகளில் பீடி சுற்றி வந்த பெண்களுக்கு மாற்று தொழிலாக தையல் தொழிலை கற்று கொண்டு மாதம் ரூ.6,000 வரை சம்பாதித்து வருகின்றனர்.
மேலும், ஆலங்குளம் வட்டாரம் அய்யனார்குளம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சமுதாய திறன் பள்ளி பயிற்சி திட்டத்தின் கீழ் 20 நபர்களுக்கு 4 சக்கர வாகனம் ஓட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை பார்வையிடப்பட்டது. இதில் 8 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சி முடிவில் அனைவருக்கும் ஓட்டுநர் உரிமம் பெற்று வழங்குவதுடன் பல்வேறு அரசு திட்டங்களின் மூலம் கடனுதவி வழங்கி சுய தொழில் புரிவதற்கான வழிவகை செய்யப்படும். தொடர்ந்து, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சுரண்டை சித்தி விநாயகர் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடந்த 7 வருடங்களாக 13 பெண்கள் இணைந்து பெட்டிக்கடையை நடத்தி வருகிறார்கள். அந்த கடைக்கு தற்போது வரை 4 முறை வங்கி கடன் பெறப்பட்டு முறையாக கடன் தொகைகளை திருப்பி செலுத்தி உள்ளனர். குழு உறுப்பினர்களில் 7 நபர்கள் சிறு தொழில் செய்து வருகிறார்கள். 2 உறுப்பினர்களின் தொழில்கள் பார்வையிடப்பட்டது. ஈஸ்வரி என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். ஆண்கள் மட்டுமே செய்து வரும் வடிவமைத்தல் மற்றும் நெகிழ்வு அச்சிடுதல் (Desinging and Flex Printing ) தொழிலினை சசிகலா என்பவர் செய்து வருகிறார். குழுவின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது.
தென்காசி வட்டாரம், குத்துக்கல்வலசை ஊராட்சியில், அழகுக் கலை பயிற்சி வழங்கும் சமுதாய திறன் வளர்ப்புப் பள்ளி பார்வையிடப்பட்டு பயனாளிகளுடன் கலந்துரையாடப்பட்டது. குத்துக்கல்வலசை மையத்தில் ஆண்டு செயல் திட்டம் (AAP) வட்டாரங்களான சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம், மேலநீலிதநல்லூர் மற்றும் கடையநல்லூர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட்கள் பார்வையிடப்பட்டது. வட்டார வணிகவள மையத்தில் தொழில் கடன் பெற்று தொழில் வளர்ச்சி பெற்ற தொழில் முனைவோருடன் கலந்துரையாடப்பட்டது. தென்காசி வட்டார வணிக வள மைய பதிவேடுகள் பார்வையிட்டு செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு, குத்துக்கல்வலசை ஊராட்சி இமயம் மகளிர் குழுவை சார்ந்த 14 தொழில் முனைவோருக்கும் 1 நபருக்கு ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.7.00 இலட்சம் தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சியில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மதி மகள் சிறிய அளவிலான தொழில் தொகுப்பு 1. பாத்திரம் வாடகைக்கு விடுதல். 2. மதி மகள் ஆயத்த ஆடையகம் ஆகிய வளர்ச்சி பணிகளை செய்தியாளர்களுடன் இணைந்து பார்வையிட்டு சுயஉதவி குழுவினர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதி இந்திரா பிரியதர்ஷினி, உதவி திட்ட இயக்குநர் சிவக்குமார், மாரிஸ்வரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா. ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை மாவட்டம்
பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 136.95 அடி, கொள்ளளவு: 5127.00 மி.க.அடி, நீர் வரத்து : 248.831 கன அடி வெளியேற்றம் : 804.75 கன அடி.
சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.34 அடி, கொள்ளளவு: 1053.70 மி.க.அடி.
மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.19 அடி, கொள்ளளவு: 5430.00 மி.க.அடி, நீர் வரத்து : 194.00 கனஅடி, வெளியேற்றம் : 380.00 கனஅடி.
வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50.00 அடி, நீர் இருப்பு: 49.20 அடி, கொள்ளளவு: 442.00 மி.க.அடி, நீர் வரத்து: NIL, வெளியேற்றம்: NIL
நம்பியாறு: உச்சநீர்மட்டம்: 22.96 அடி, நீர் இருப்பு: 21.71 அடி, கொள்ளளவு: 68.99 மி.க.அடி, நீர்வரத்து: 37.00 கனஅடி வெளியேற்றம்: 60.00 கனஅடி.
கொடுமுடியாறு: உச்சநீர்மட்டம்: 52.50 அடி, நீர் இருப்பு: 22.25 அடி, கொள்ளளவு: 29.86 மி.க.அடி, நீர்வரத்து: 17.00 கனஅடி, வெளியேற்றம்: 30.00 கனஅடி.
மழை அளவு நிலவரம்: ஏதும் இல்லை.
மேற்குத் தொடர்ச்சி மாஞ்சோலை எஸ்டேட் மலைப் பகுதி: மழை ஏதும் இல்லை.
தென்காசி மாவட்டம்
கடனா : உச்சநீர்மட்டம் : 85.00 அடி, நீர் இருப்பு : 80.60 அடி, கொள்ளளவு: 286.06 மி.க.அடி, நீர் வரத்து : 6.00 கன அடி, வெளியேற்றம் : 80.00 கன அடி.
ராம நதி : உச்ச நீர்மட்டம் : 84.00 அடி, நீர் இருப்பு : 80.00 அடி, கொள்ளளவு: 101.50 மி.க.அடி, நீர்வரத்து : 17.00 மி.க.அடி, வெளியேற்றம் : 30.00 மி.க.அடி.
கருப்பா நதி : உச்சநீர்மட்டம்: 72.00 அடி, நீர் இருப்பு : 66.93 அடி, கொள்ளளவு: 100.24 மி.க.அடி, நீர் வரத்து : 10.00 கன அடி, வெளியேற்றம் : 25.00 கன அடி.
குண்டாறு: உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 35.25 அடி, கொள்ளளவு: 17.35 மி.க.அடி, நீர் வரத்து: 5.00 கன அடி, வெளியேற்றம்: 7.00 கன அடி.
அடவிநயினார்: உச்ச நீர்மட்டம்: 132.22 அடி,
நீர் இருப்பு: 107.00 அடி, கொள்ளளவு: 112.75 மி.க.அடி, நீர் வரத்து : 3.00 கன அடி, வெளியேற்றம்: 15.00 கன அடி.
மழை அளவு நிலவரம்: ஏதும் இல்லை.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.