Home செய்திகள்உலக செய்திகள் கடையம் ஒன்றியத்தில் பகுதிநேர ரேஷன் கடைகள் வேண்டும்; மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தமிழக அமைச்சரிடம் கோரிக்கை..

கடையம் ஒன்றியத்தில் பகுதிநேர ரேஷன் கடைகள் வேண்டும்; மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தமிழக அமைச்சரிடம் கோரிக்கை..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை அமைத்திட வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் தமிழக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன், தமிழக உணவு (ம) உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியை நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ராஜாங்கபுரம், வாகைக்குளம், பாப்பான்குளம், பெரியத்தெரு, ரவணசமுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் அதிக அளவிலான குடும்ப அட்டைகள் உள்ளன. ஒரே கடையில் வாங்குவதாலும், நீண்டதூரம் சென்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருப்பதாலும், பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே பகுதி நேர ரேசன் கடைகளை சிறப்பு திட்டத்தின் கீழ் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் குறிப்பிட்டுள்ளார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே. ரமேஷ், கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்துபாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!