10
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கலந்துகொண்டு முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா போன்ற மொத்தம் 139 நபருக்கு 6லட்சத்து 48 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு முருகேசன், வட்டாட்சியர் செந்தாமரை, வருவாய் துறை அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர்கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.