41
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது., இந்த பொதுத்தேர்வில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற சுஸ்யா என்ற மாணவி 500 க்கு 497 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.,அவருக்கு பள்ளி தலைமையாசிரியர் வேளாண்கன்னி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உறவினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.,கூலி தொழிலாளியான தந்தை மற்றும் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றும் தாய் உள்ளிட்டோரும், ஆசிரியர்களும் கொடுத்த ஊத்தின் மூலமே இந்த சாதனை படைத்தாகவும்., குடும்பத்தினரின் ஆசைப்படி மருத்துவர் ஆவதே கனவு என சுஸ்யா தெரிவித்தார்.,
உசிலை மோகன்