வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இதன் தலைவராக அதிமுகவை சேர்ந்த ஆனந்தன் உள்ளார்.இவரது மகள் டாக்டர் சுஸ்மிதாக்கும் கதிரவனக்கும் சேவூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்தது.
இதில் முன்னாள் அதிமுக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே. அப்பு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.மாவட்ட பொருளாளர் மூர்த்தி உள்ளிட்ட அதிமுகவினர் வாழ்த்தினர்.
செய்திகள்
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நூறு தமிழ் கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. நெல்லை அருங்காட்சியகமும் பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய பாரதி நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சியில் நூறு தமிழ் கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.விருது பெற்ற கவிஞர்கள் எட்டையபுரம் சென்று பாரதி பிறந்த இல்லம் மற்றும் மணி மண்டபத்தில் நினைவஞ்சலி செலுத்தினர். நெல்லை அருங்காட்சியகம் மற்றும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா தலைமை தாங்கினார். செயலாளர் பாப்பாக்குடி அ.முருகன் வரவேற்புரை வழங்கினார். முதலில் “நூறாண்டு கடந்தும் பாவாண்டு நிற்கிறார் பாரதி” என்ற தலைப்பில் நடந்த கவியரங்கிற்கு ஊடகவியலாளர் கவிஞர் ஜான் தன்ராஜ் தலைமைக் கவிஞராய் இருந்து கவியரங்கினை நடத்தினார். இதில் கவிஞர் வத்திராயிருப்பு கவுதமன்,முனைவர் இராஜ.மதிவாணன், வழக்கறிஞர் பிரபாகர்,முனைவர் கவிதா,ஆசிரியை ரோஸ்லின் ஆகியோர் கவிதை வாசித்தனர். தொடர்ந்து திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி ஹரிசுவேதா எழுதிய பாரதியின் 10- பத்துக் கட்டளைகள் என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலை கவிஞர் பேரா வெளியிட மருத்துவர் பிரேமச் சந்திரன் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார். அடுத்து, பொதிகைத் தமிழ்ச் சங்கம் நடத்திய உலகளாவிய கவிதைப் போட்டியில் தேர்வான நூறு கவிஞர்களுக்கு “பாரதி பைந்தமிழ்ச் சுடர் “என்ற விருது வழங்கப்பட்டது. விருதினை அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி வழங்கினார். இதில் சென்னை,திருச்சி, கோவை,சேலம், புதுக்கோட்டை, இராமநாதபுரம்,மதுரை, தென்காசி,தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாக்குமரி உட்பட தமிழகத்திலுள்ள கவிஞர்கள் மற்றும் புதுச்சேரி,கொச்சி ஆகிய பகுதிகளிலிருந்தும் வந்திருந்த நூறு கவிஞர்களும் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டனர்.மேலும் ஞாயிறு பிற்பகலில் விருது பெற்ற கவிஞர்கள் சிறப்புப் பேருந்து மூலம் எட்டையபுரம் சென்று பாரதி பிறந்த இல்லம் மற்றும் மணி மண்டபத்தில் நினைவஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் சத்துவாச்சாரி வள்ளலார் சங்க அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட கவுரவத் தலைவர் தாண்டவ மூர்த்தி தலைமை தாங்கினார். பேருராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள், திடக்கழிவு பணியாளர்கள் மற்றும் அரசு தோட்டக்கலைப்பண்ணைகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஜிபிஎப்-ஐ பிடித்தம் செய்ய வேண்டும உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் பாலாஜிசிங், பொருளாளர் மணி, துணைத்தலைவர் ஜெயபால், பாலகிருஷ்ணன், அமுதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாட்டை மாநிலகவுரவத் தலைவர் சி.ராஜவேலு செய்து இருந்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை.பந்தடி எட்டாவது தெரு அருகே பால்மால் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் 52.இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. மன உலச்சலில் இருந்து வந்தார்.இந்நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
40 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் இலக்கு நிர்ணயித்தோம் ஆனால் மக்கள் தன் ஆர்வத்தால் இருபத்தி ஆறு லட்சத்து 11 ஆயிரம் மக்கள் பயனடைந்துள்ளனர்.
இந்தியாவிலேயே குழந்தை தடுப்பூசி முகாம் களில் முழுமையான 100 சதத்தை எட்டியது தமிழகத்தில் உள்ள முதலை மாவட்டம் இங்கு ஐந்து லட்சத்து 16 ஆயிரம் பேர் கோவிட் தடுப்பூசி போட்டு உள்ளனர்
தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்மதுரையில் இருந்து சென்னை செல்லும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்புபொதுமக்கள் சாரை சாரையாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது தமிழக முதல்வர் அவர்கள் வழிகாட்டுதலின்படி மிகச்சிறப்பாக வெற்றி இடையே எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த அனைத்து துறை அலுவலர்களும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கும்ஒருங்கிணைந்து பணியாற்றினர்.இந்த முகாம் வெற்றி அடைய எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தார்கள்.தூத்துக்குடி நெல்லை தென்காசி விருதுநகர் மதுரை என பல்வேறு மாவட்டங்களில் நாங்கள் நேரடியாக சென்று முகாம் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தோம் அதில் மக்கள் விறுவிறுப்பாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர் இதற்கு பொதுமக்கள் இடையே ஏற்பட்ட ஆர்வம்தான் காரணம்தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் 20 லட்சம் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்படும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கடந்த ஒரு வாரமாக ஆலோசனைகள் கூறிய வழிகாட்டுதலின்படி செயல்படும் ஆனால் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை இருபத்தி ஆறு லட்சத்து 11 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் இது ஒரு மிகப்பெரிய சாதனைஇதுவரை 3 லட்சத்து 74 ஆயிரம்தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் இன்று நடந்த சிறப்பு முகாம் மூலம் 26 ஆயிரத்து 11,000 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதில் மொத்தம் 4 இலட்சத்து 11 ஆயிரம் பேர் என்ற இலக்கை எட்டியுள்ளதுஇந்தியாமுழுவதும் உள்ள 754 மாவட்டங்களில்100% தடுப்பூசி போட்ட மாவட்டம் என்ற இலக்கை தமிழகத்தில் உள்ள உதகை முதலிடம் பிடித்துள்ளதுபல்வேறு ஊர்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது குறித்த கேள்விக்குமக்கள் தன்னார்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தனர் சில இடங்களில் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளை அந்தந்த முகாம்களுக்கு அனுப்பி வைத்தோம் கூடுதலாக வந்தவர்கள் நாளை தடுப்பூசி போட்டுக்கொள்ள பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளோம்மழை கிராமங்களான தர்மபுரி கிருஷ்ணகிரி பகுதிகளில் மக்கள் தன்னார்வம் இல்லை அப்பகுதிகளில் தன்னார்வமாக செயல்பட முகாம்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வுபடுத்த அறிவுறுத்தியுள்ளோம்நீட் தேர்வு குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது குறித்த கேள்விக்குநாங்கள் தேர்தல் அறிக்கையிலேயே வெளிப்படையாக முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்து கருத்துக்களை ஒன்றிய அரசிடம் தெரிவிக்க ஏ கே ராஜன் குழுவினரிடம் ஆலோசனை மற்றும் சட்ட வல்லுநர்கள் 84 ஆயிரம் பொதுமக்கள்அனைத்து தரப்பினரிடம் குறைகளை கேட்டு அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க உள்ளோம்மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்குமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கம்பிரசோர் கட்டப்பட்டு வரும் கட்டாந்தரையாக உள்ளது இதில் மாணவர் சேர்க்கை என்பது 150 பேருக்கு இடவசதி இல்லாத நாள் ஒன்றிய அரசு கூறிய சில கருத்துக்கள் ஏற்புடைய அதனால் அவர்கள் செயல்படுத்த இயலவில்லை எய்ம்ஸ் மருத்துவமனை என்பதுநவீன வசதிகள் மற்றும் புது அரங்கியல் கொண்டதாக இருக்க வேண்டும் ஆகையால் இங்கு பயில்பவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாத சூழ்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என்பது இயலாத ஒன்று ஆகையால் முதலில் கட்டிடம் கட்டுவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம் விரைவில் கட்டிட பணிகள் துவங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காஞ்சி ஸ்ரீ காமகோடி மடத்தின் சார்பில் காஞ்சி மகாசுவாமிகளின் அனுஷ வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
விநாயகப்பெருமான் பற்றி பெரியவர் குறிப்பிடும்போது அணுகுவதற்கு எளியவர் விநாயகர் என்றார். இவரை ஆகமப்படி ஆலயங்களில் எந்திரப் பிரதிஷ்டை செய்தும் வழிபடலாம். மிக எளிமையாக களிமண்ணில் இவர் உருவைப் பிடித்து அறுகம்புல்லாலும் வழிபடலாம். இவருக்கு அஷ்டோத்ர நாமங்கள் உண்டு. இருந்தபோதிலும் இவருக்கு 16 பெயர்கள் மிக உசிதமானது. இந்த 16 பேர்களை மனதார நினைத்து பக்தி செலுத்தினாலே போதும். இவரது அருளுக்கு நாம் பாத்திரமாகிவிடுவோம். இவரின் அந்த 16 பேர்கள் விசேஷ சக்தி கொண்டது. சுமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணகர், லம்போதரர், விகடர், விக்நராஜர், விநாயகர், தூமகேது, கணாத்யஷர், பாலசந்த்ரர், கஜானனர், வக்ரதுண்டர், சூர்ப்பகர்ணர், ஹேரம்பர், ஸ்கந்தபூர்வஜர் – என்பதே அந்த 16 பேர்களாகும். இந்த பேரை பக்தியுடன் சொல்லி வழிபடுவோருக்கு கல்வி, வீரம், விவேகம், பிள்ளைப்பேறு, துணிவு, தனம், நிம்மதி. தான்யம், செளபாக்யம்,போகம், அறிவு, அழகு,பெருமை, அறம், குலம், நோயற்ற உடல் என்கிற பதினாறு பேறுகள் வாய்த்திடும்.இவ்வாறு மகாபெரியவர் கூறியுள்ளதை தன் உரையில் இந்திரா சௌந்தர்ராஜன் குறிப்பிட்டார். நிகழ்வு முகநூல் இணையவழிநடைபெற்றது.ஏற்பாடுகளை ஶ்ரீமடத்தின் தலைவர் டாக்டர் டி ராமசுப்பிரமணியன் பொருளாளர் கே ஶ்ரீ குமார் துணைத்தலைவர் பா சுப்பிரமணியன் சந்திரசேகரன் வெங்கடரமணி நாராயணி ஶ்ரீனிவாசன் ராதாகிருஷ்ணன் ஜோதிவேல் சங்கர ராம் ஶ்ரீராம் அஸ்விந் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இரத்ததானம் அளித்த மருத்துவர்கள்; கண்காணிப்பாளர் பாராட்டு..
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த இரத்ததான முகாமில் மருத்துவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர். இரத்த தானம் வழங்கிய மருத்துவர்களை கண்காணிப்பாளர் மரு. ஜெஸ்லின் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இந்திய பல் மருத்துவ சங்கத்தின் சார்பில் இரத்ததான முகாம் 12.09.21 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இரத்ததான முகாமை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், மூத்த பல் மருத்துவர் மருத்துவர் லதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தென்காசி மாவட்ட நிறுவனரும், தலைவருமான மருத்துவர் மணிமாறன் இரத்ததானம் பற்றியும், அதன் அவசியம் குறித்தும் சிறப்புரையாற்றினார். இதில் தென்காசி மாவட்ட பல் மருத்துவர்கள் மரு.கதிரேசன், மரு.வரதராஜன், மரு.காளிதாசன், மருத்துவர் லதா, மருத்துவர் ஷெரின் மரு.சுடலைமணி, மரு. அல்போன்ஸ்,மரு. முருகேசன், மரு.மதன் குமார் ஆகியோர் கலந்து இரத்த தானம் வழங்கினார்கள். இரத்த தானம் வழங்கிய அனைத்து பல் மருத்துவர்களுக்கும், தென்காசி மாவட்ட இந்திய பல் மருத்துவ சங்கத்தினருக்கும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இரத்த தானம் வழங்கிய பல் மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக பழங்களும்,பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இரத்த தான முகாமை இரத்த வங்கி மருத்துவர் பாபு மற்றும் மருத்துவர் ரஜினிகாந்த் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் காளிதாசன், ரத்த தானம் வழங்கிய பல் மருத்துவர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தென்றல் இக்ராம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் பள்ளிக் கூடத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், தமிழ்நாடு அனைத்து அரசுப் பணி மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்க மாநிலத்தலைவர் அல்லாபிச்சை, தமிழ்நாடு அனைத்து அரசுப் பணி மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் நலசங்க கௌரவத் தலைவர் காதர் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தென்றல் இக்ராம் மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் சேக் உதுமான் தலைமை தாங்கினார். செய்யது முகைதீன், மக்தூம், ஹபீப் ரஹ்மான், ஜபருல்லாகான் , செய்யது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியினை நல்லாசிரியர் ரசூல் அஹமத் இப்ரஹிம் தொகுத்து வழங்கினார். காஜா மைதீன் அனைவரையும் வரவேற்றார். செய்யது மசூதுஅறிமுக உரையாற்றினார். வரலாற்று நூல் ஆசிரியர் இப்ராஹிம், அரஃபா வஹாப் , செய்யது இப்ராஹிம், மைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாற்றுத்திறனாளிகள் நல சங்க நிர்வாகிகள் முகம்மதுஷா, இலியாஸ், பெனாசிர், சாகுல்ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் பொருளாளர் செய்யது சுலைமான் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து நலத்திட்ட உதவிகளை பெற்று சென்றனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாணியம்பாடி. செப்.13 – திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே திம்மாம்பேட்டை அடுத்த புல்லூர் ஊராட்சி பள்ளத்தூர் ஆரம்ப பள்ளி சுற்றுசுவரில் வரையப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கார் புகைப்படத்தை கருப்புமை பூசி யாரே அவமரியாதை செய்து இருந்தனர். விரைந்து சென்ற காவல்துறையினர் கருப்பு மையை நீக்கி தற்போது புதுவண்ணம் பூசப்பட்டது. இதுகுறித்து புகாரின்பேரில் மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பல நட்சத்திர (Delta Orionis) நிறமாலையை ஆராய்ந்த போது விண்மீன்களிடை ஊடகம் இருப்பதை கண்டறிந்த யோகான்னசு பிரான்சு ஹார்ட்மேன் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 13,1936).
யோகான்னசு பிரான்சு ஹார்ட்மேன் ஜனவரி 11, 1865ல் ஜெர்மனியில் பிறந்தார். ஹார்ட்மேன் ஒரு ஜெர்மானிய இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். 1904ல் பல நட்சத்திர டெல்ட்டா ஓரியானிசின் (Delta Orionis) நிறமாலையை ஆராய்ந்த போது கால்சியம் வரிகளைத் தவிர மற்ற அனைத்து வரிகளும் இடம்பெயர்வதைக் கண்டார். இது விண்மீன்களிடை ஊடகம் ஒன்று நிலவுவதைக் குறிக்கிறது எனக் கூறினார்.
அர்ஜென்டினாவின் லா பிளாட்டா வானியல் ஆய்வகத்தின் இயக்குநராக நவம்பர் 1922 முதல் மே 1934வரை இருந்தார். அப்போது இவர் வானியற்பியலில் வான்காணகப் பணிகளை வழிநடத்தினார். இவர் மூன்று சிறுகோள்களைக் கண்டுபிடித்தார். சிறுகோள்கள் 965 ஆஞ்செலிகா (நவம்பர் 4, 1921), 1029 லா பிலாத்தா (ஏப்ரல் 28, 1924), 1254 எர்ஃபோர்டியா (மே 10, 1932) ஆகிய மூன்று சிறுகோள்களைக் கண்டுபிடித்தார். இலீப்சிக் பல்கலைக்கழகத்தில் நிலா மறைப்புகளைப் (சந்திர கிரகணம்) பற்றி ஆய்வு செய்து லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் 1891ல் முனைவர் பட்டம் பெற்றார்.
ஓரியனின் பெல்ட்டின் மூன்று நட்சத்திரங்களில் மேற்கு திசையில் மிண்டகா உள்ளது. இது வானத்தில் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒன்றான கண்ணுக்கு எளிதில் தெரியும், இது பழங்காலத்திலிருந்தே அறியப்படுகிறது.1900 ஆம் ஆண்டில் பாரிஸ் ஆய்வகத்தில் ஹென்றி-அலெக்ஸாண்ட்ரே டெஸ்லாண்ட்ரெஸ் எடுத்த ரேடியல் திசைவேக அளவீடுகள், மின்தாக்கா ஒரு மாறுபட்ட ரேடியல் திசைவேகத்தைக் கொண்டிருப்பதைக் காட்டியது. எனவே இது ஒரு ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் பைனரி ஆகும்.
1904 ஆம் ஆண்டில் போட்ஸ்டாம் ஆய்வகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத் தகடுகளைப் பயன்படுத்தி ஜோகன்னஸ் ஃபிரான்ஸ் ஹார்ட்மேன் சுற்றுப்பாதை காலம் 5.7 நாட்கள் என்பதைக் காட்டியபோது, அவரது ஆரம்ப சுற்றுப்பாதை கால மதிப்பீடு 1.92 நாட்கள் எனக் காட்டப்பட்டது. நட்சத்திர நிறமாலையில் 393.4 நானோமீட்டரில் உள்ள கால்சியம் K வரி நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை இயக்கம் காரணமாக கோடுகளின் குறிப்பிட்ட இடப்பெயர்வுகளில் பங்கெடுக்கவில்லை என்பதையும் ஹார்ட்மேன் கவனித்தார். மேலும் மிண்டகாவுக்கு பார்வை வரிசையில் ஒரு மேகம் கால்சியம் இருப்பதைக் கண்டறிந்தது. இது விண்மீன் ஊடகத்தின் முதல் கண்டறிதல் ஆகும்.
விண்மீன்களிடை ஊடகம் இருப்பதை கண்டறிந்த யோகான்னசு பிரான்சு ஹார்ட்மேன் செப்டம்பர் 13,1936ல் தனது 71வது அகவையில் கோட்டிங்கன் ஜெர்மனியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். சந்திரனின் வெகு தொலைவில் உள்ள சந்திர பள்ளம் ஹார்ட்மேன் குழிப்பள்ளம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தொலைநோக்கியைக் குவியவிக்கும் கருவி ஒன்று ஆர்ட்மேன் மறை என்று பெயரிடப்பட்டுள்ளது
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கத்தில் மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் .
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தாலுக்கா செயலாளர் இலட்சுமணன் தலைமை நடைபெற்றதுதிரிபுரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தியும் முன்னணி கட்சி தலைவர்களை கடுமையாக தாக்கியுள்ளனரஇதில் தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர்…இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் வீரபத்திரன் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.புரட்சி நடராஜன்,விவசாய சங்கம் தாலுக்கா செயலாளர் காமராஜ்,டைஃபி தாலுக்கா செயலாளர் சி.எம்.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி பகுதியில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்ப்பட்டதால் பொதுமக்கள் திருப்பி அனுப்பபட்டனர்.
குறைந்திருந்த கொரோனா பரவலின் தாக்கம் தமிழகத்தில் மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அரசு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றது.இதன்படி இன்று தமிழகத்தில் இன்று சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியிலுள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.ஆனால் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி குறைந்த அளவே வந்துள்ளதால் தடுப்பூசி விரைவில் தீர்ந்து விட்டன.உசிலம்பட்டி மேலப்புதூர் முத்துப்பாண்டிபட்டி மாதரை ஆகிய கிராமங்களி;ல தடுப்பூசி போடவந்தவர்கள் திருப்பி அனுப்பபட்டனர்.இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.ஒவ்வொரு சிற்ப்பு முகாமிலும் 60 முதல் 70 நபர்கள் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் மற்றவர்கள் திருப்பி அனுப்பபட்டதாகவும் கூறப்படுகிறது.ஒரு சில முகாம்களில் தடுப்பூசி மீண்டும் கொண்டு வரப்படும் எனக் கூறியதால் பொதுமக்கள் காத்துக்கிடந்தனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலம்மாள் பொறியியல் கல்லூரி மற்றும் வேலம்மாள் பள்ளியில் நீட் தேர்விற்காக பெற்றோருடன் வந்த மாணவர்கள்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருகே உள்ள விரகனூர் வேலம்மாள் பொறியியல் கல்லூரி மற்றும்வேலம்மாள் வித்யாலயா பள்ளியில்நீட் தேர்வுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது .பல்வேறு ஊர்களில் இருந்து வந்த மாணவர்கள், மாணவிகள் காலை 8 மணி முதல் பள்ளி மற்றும் பொறியியல் கல்லூரிக்கு வந்தனர்.ஆனால் காலை 11.30 மணி முதல் தேர்வு எழுதும் மையத்திற்குள் அனுமதி என்பதால் அவர்கள் வெளியிலேயே காத்து இருக்க வைக்கப்பட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஏர்குடி அச்சம்பத்து ஊராட்சியில் கொரான இல்லாத மதுரை உருவாக்குவோம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதில் திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் சிவக்குமார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் அச்சம்பத்து ஊராட்சிமன்ற தலைவர் முத்துலட்சுமி இருளப்பன், துணைத்தலைவர் வனிதா சுரேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர் இதில் 200க்கும் மேற்பட்டோர் களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.முன்னதாக தடுப்பூசி போட வந்தவர்களுக்கு சாமியானா பந்தல் அமைத்து சமூக இடைவெளியுடன் தடுப்பூசி போடப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று ஒரே நாளில் இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு அமைச்சர் பேட்டி.
கிராமங்களில் விழிப்புணர்வு இல்லாததால், இலக்கு எட்டப்படும் என கேள்வி.கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்த சிறப்பு முகாமில் ,2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இன்று காலை, மதுரை மாவட்டம் கடச்சநேந்தல் பகுதியில் உள்ள சிறப்பு முகாமில், வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார் .பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மூன்றாவது அலை வருவதற்கு முன்னதாகவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது .இன்று ஒரு நாள் மட்டும் இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு செய்கிறார். தடுப்பூசி போடுவது குறித்து ஊடகங்கள் வாயிலாகவும் விளம்பரங்கள் அதிகாரிகள் மூலமாக செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது அலை வரும் பொழுது மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுவது போல சித்தரிக்கப்பட்டது. அதனை உடனடியாக பத்து நாட்களுக்குள் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. அதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததன் விளைவாக பாதிப்புகள் குறைந்தது. அதைப்போல, தற்போது 3-வது மூன்றாவது அலை வருவதாக கூறப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.அது முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும்.மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இதுவரையில் பதினோரு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இன்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி முகாம் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்றார் கிராமப்புறங்களில், பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை பூசி போடு மையங்களில் வெறிச்சோடிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த போது, கிராமப்புறங்களில் முழுவதுமாக விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது ஆனாலும், பொதுமக்களில் வராது என்ற அச்சம் குறைந்துள்ளதால், மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்துகள் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.கிராமங்களில், முழுநேரமாக அதிகாரிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் மூலமாக தடுப்பூசி போடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கொரோனா தடுப்பூசி தடுப்பு ஊசி போடாதவர்களை வீடு தேடி சென்று தடுப்பூசி போடப்படும் என்றார். கிராமப்புறங்களில் மூன்றாவது அலை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் இல்லாத நிலைதான் உள்ளது. எனவே மதுரை மாவட்ட நிர்வாகத்தின் இலக்கு நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுஎன்றார் மூர்த்தி.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் “தடுப்பூசி” தட்டுபாடு! பொது மக்கள் அவதி.!
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த மையங்கள் மூலமாக 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் வித்தியாசமான பரிசுகளும் கொடுக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடுவதற்காக மக்கள் அலை மோதினர்.ஆனால் ஒவ்வொரு முகாம்களிலிலும் அதிகபட்சமாக 55 ஊசிகள் மட்டுமே கையிருப்பு வைத்திருந்தனர்.ஆகையால் தடுப்பூசி விரைவில் தீர்ந்து விட்ட நிலையில் ஆர்வமுடன் வருகை தந்த பொதுமக்கள் மத்தியில் மாபெரும் அதிருப்தியை உருவாக்கியது.இது சம்பந்தமாக பொதுமக்கள் கூறியதாவது;மிகுந்த ஆர்வமுடன் குடும்பம் குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று முகாமுக்கு வந்திருந்தோம் ஆனால் சிறிது நேரத்திலேயே தடுப்பூசி தீர்ந்து விட்டது கொஞ்ச நேரம் காத்திருங்கள் வந்து விடும் என கூறினார்கள். ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது இன்னும் சரியான முறையில் பதில் கிடைக்கவில்லை ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தட்டுபாடு ஏற்பட்டுள்ள முகாம்களுக்கு தடுப்பூசி கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாரதியின் திருமண நாள் அரசு விழாவாக அறிவிக்கப்படும்; நம்பிக்கை தெரிவித்த தென்காசி எம்எல்ஏ.
சுரண்டை காங்கிரஸ் அலுவலகத்தில் பாரதியார் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் பாரதியார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர் பேசுகையில், பாரதியார் செல்லம்மாள் திருமண நாள் அரசு விழாவாக அறிவிக்கப்படும்.தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொள்வார் என நம்பிக்கை தெரிவித்தார். தென்காசி எம்எல்ஏ தென்காசி மாவட்டம் சுரண்டை நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பாரதியார் நினைவு தின விழா நடந்தது. விழாவிற்கு சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால் தலைமை வகித்தார். விழாவில் தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமாகிய எஸ். பழனி நாடார் அலங்கரிப்பட்ட பாரதியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பேசிய எம்எல்ஏ தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய தலைவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார். பாட்டு கவிஞர் பாரதியார் செல்லம்மாள் திருமண நாளை அரசு விழாவாக அறிவித்து செல்லம்மாள் வீடு அமைந்துள்ள கடையத்தில் அதனை கொண்டாட வேண்டும். கடையத்தில் பாரதியார் சிலை அமைக்க தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அமைப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். பாரதியார் சிலையை கடையத்தில் விரைவில் அமைக்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்துவேன். முதல்வர் அதனை ஏற்பாடு செய்வார் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த விழாவில் மாநில பேச்சாளர் ஆலடி சங்கரையா பழனி நாடார், பால் (எ) சண்முகவேல், மேலநீலீதநல்லூர் வட்டார தலைவர் முருகையா, சமுத்திரம், ஊடக பிரிவு சிங்கராஜ், இளைஞர் காங்கிரஸ் அமுதா சந்திரன், தபேந்திரன், சிறுபான்மை காங்கிரஸ் சாலமோன், கந்தையா மகளிர் காங்கிரஸ் சேர்மகனி, தேவி, சமுத்திர பாண்டி, டுவின்ஸ் கோபால், தாயார் தோப்பு ராமர், கேடிஆர் மகாராஜா, பிரபாகரன், தெய்வேந்திரன், செல்வம், அரவிந்த், ஆட்டோ செல்வராஜ், கோயில் பிச்சை, மகேந்திரன், அருணாசலம், விஜயன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று (12/09/2021) நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரையில் 18 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இம்முகாமெ சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் சிறப்பு முகாமை துணை ஆட்சியாளர் அன்னம்மாள் தொடங்கி வைத்தார். இதில் கீழக்கரை தாலுகா தாசில்தார் முருகேசன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கோகுல்நாத், வருவாய் ஆய்வாளர் பார்கவி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல தொண்டு நிறுவன உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட, நரியம்பட்டி கிராமத்தில் பேச்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, இரண்டு நாள் யாக வேள்வி நடைபெற்று, இதைத் தொடர்ந்து, நேற்று காலை பெரிய சம்பாதி பிள்ளை பழி கொடுத்த நல்ல பிள்ளை தேவரின் ஏழு வீட்டு வகையறாக்கள் முன்னிலையில், சோழவந்தான் பிரசாத் சர்மா தலைமையில் புனித நீர் குடங்கள் மேளதாளத்துடன் கோவிலை வலம் வந்தனர்.கோவில் கோபுர விமானத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது . பேச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா அபிஷேகம் நடந்தது. எட்டூர கிராம கமிட்டி தலைவர் ஜெயபால், ஊராட்சி மன்றத் தலைவர் கலியுகநாதன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் விக்டோரியா பூர்வலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.விக்கிரமங்கலம் ஊராட்சி சுகாதாரப் பணிகள் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏழு வீட்டு வகையறாக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இம்மானுவேல் சேகர் நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் உருவப்படத்திற்கு அஞ்சலி.
மதுரை மாவட்டம் திருமங்கலம் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் மற்றும் நகர செயலாளர் மூ.சி. சோ. முருகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் கப்பலூர் சந்திரன் திருப்பரங்குன்றம் செல்வம் செயற்குழு உறுப்பினர் சிவமுருகன் நகர இளைஞரணி முத்துக்குமார் தொழில் நுட்ப அணி பாச பிரபு ஆகியோர் கலந்து இன்று இம்மானுவேல் சேகர் நினைவு தினத்தையொட்டி உருவப்படத்திற்கு அஞ்சலி செய்து மேலும் பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு மாலை மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.