மாநில செய்திகள்
கொடைக்கானல் அருகே மன்னவனூர் கைக்காட்டியில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்…வீடியோ பதிவு..
திண்டுக்கல் மாவட்டம் மலையின் அரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இருந்து சுமார் 20 கி மி தொலைவில் உள்ள மன்னவனூர் கைகாட்டி என்ற இடத்தில் அழகிய ஏரி உள்ளது அதன் அருகே மத்திய அரசின் செம்மறியாடு பண்ணை மற்றும் முயல் பண்ணையும் உள்ளது இதைக்கான பல வெளி மாநிலங்களிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும் பக்கத்தில் கால்நடை பராமரிப்புத்துறை கால்நடை மருந்தகம் எதிர்புரம் அரசு மதுபான கடை உள்ளது அருகில் பயணியர் நிழற்குடை பராமரிப்பு இல்லாமல் இருக்கும் காரணத்தால் சேறும் சகதியுமாக இருப்பதால் குடிமகன்கள் சரக்கை வாங்கிகொண்டு இங்கு சாப்பிடுகின்றனர் பின்பு அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் இவர்களின் செயல்களை கண்டு முகம் சுழிக்கின்றனர் இதனால் காலையிலே வேலைக்கு செல்லாமல் பிளாக்கில் கிடைக்கும் போலி மது பானங்களை குடித்து விட்டு இங்கே இருந்து விடுகின்றனர் என்று கூறும் பெண்கள் கூடியவிரைவில் மதுக்கடையை அகற்ற போராட்டம் நடத்துவோம் இந்த கடையினால் பல குடும்பங்கள் சீரழிந்து போகும் நிலைமை உண்டாகிறது ஆகவே, மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் தலையிட்டு கடையை அப்புறப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முத்திரை தாள் விற்பனையாளராக விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ம் தேதி கடைசி நாள்..
இராமநாதபுரம் மாவட்டத்தில் 43 இடங்களுக்கு முத்திரைத்தாள் விற்பனையாளர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இராமநாதபுரம் இணை சார் பதிவகம் எண் 2, போகலூர் தலா 1, கீழக்கரை 6, ராமேஸ்வரம் 5, கமுதி 4, முதுகுளத்து£ர் 4, அபிராமம் , சாயல்குடி, கடலாடி , ஆர்.எஸ்.மங்கலம் தலா 3 என மொத்தம் 43 இடங்களில் முத்திரைத்தாள் விற்பனையாளர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
முத்திரை சட்ட விதி 25(1)(சி) படி முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களுக்கான தகுதிகள் கீழ்கண்டவாறு:-
-எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்,
-18 வயது முதல் உச்ச வயதில்லை. முத்திரைத்தாள் விற்பனையில் முன் அனுபவம், உரிமம் கோரும் பகுதிக்கான தாசில்தார் வழங்கிய இருப்பிடச் சான்று, உடல் தகுதி காண்(கண் பார்வை நிலை உட்பட)
-அரசு டாக்டர் வழங்கிய சான்று, சொத்து மீதான செல்வ நிலை சான்று(தாசில்தார் வழங்கியது).
-பிணையமாக காட்டப்படும் சொத்து மீது வில்லங்கம் இல்லை என உரிய பதிவு அலுவலர் வழங்கிய சான்று
ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவத்தினர், பொது பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் (உரிய சான்று வழங்கியது) ஆதி திராவிடர், பழங்குடியினர் (தாசில்தார் வழங்கியது) விதவைகள்(தாசில்தார் வழங்கியது) ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ராமநாதபுரம், வண்டிக்காரத்தெருவில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆக., 10 மாலை 5:45 மணிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலக அறிவிப்பு பலகைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காயத்துடன் ஊருக்குள் நுழைந்த காட்டெருமை மீட்பு..
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பிளாக்பிரிட்ஜ் ராணுவ பயிற்சி முகாம் ஜெயந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டெருமைகள் அதிக அளவில் நடமாடி வருகின்றன. இந்த நிலையில் ஒற்றை காட்டெருமை ஒன்று காட்டு பகுதியில் சண்டையிட்டு அல்லது வேறு ஏதேனும் விலங்கால் ஏற்பட்ட தாக்குதலில் காயமடைந்து நாக்கு தொங்கிய நிலையில் இன்று காலை ஜெயந்திநகர் பகுதியில் சோர்வுடன் காணபட்டது.
இத் தகவல் அறிந்ததன் பெயரில் மாவட்ட உதவி வன அலுவலர் மற்றும் குன்னூர் வன சரகர் தலைமையில் அந்த ஒற்றை காட்டெருமைக்கு மருத்துவ சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறை சார்பாக பள்ளிகளில் POCSO சட்ட விழிப்புணர்வு முகாம்..
இராமநாதபுரம் மாவட்டத்தில் பல பள்ளிகளில் மாணவிகள் மத்தியில் POSCO சட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது.
இம்முகாம் காவல் துறை அதிகாரி ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் Protection of Children from Sexual Offences Act – 2012 (POCSO) பற்றிய விளக்கமும், பாலியல் பலாத்காரத்திற்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றியும் மாணவிகள் மத்தியில் விவரிக்கப்பட்டது.
மேலும் இந்த விழிப்புணர்வு முகாம் மூலம் பெண் காவல்துறை ஆய்வாளர்கள் மூலம் இதுவரை 5512 மாணவிகள் வரை பயனடைந்துள்ளதாக அறியப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கை நெடுந்தீவு அருகே ஒரு சில படகுகள் நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது இலங்கை கடற்படை வீரர்கள் கப்பலில் ரோந்து வந்தனர். அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக 2 விசைப்படகு, அதிலிருந்த 7 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசன்துறை கடற்படை முகாம் அழைத்துச் சென்றனர்.
அங்கு விசாரணையில் புதுக்கோட்டை மீனவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. படகுகளை சிறை பிடித்தபோது இலங்கை கடற்படை ராட்சத ரோந்து படகு மோதியதில் முற்றிலும் சேதமான ஒரு படகு காரைநகர் கடற்படை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் மீன வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சுமார் 150 டன் நெல்மணிகள் சேதமடைந்து வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் சிறுவளையம், ரெட்டிவளம், தாமரைப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் நெற்பயிர்களை இங்கு கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், காலி கோணிப்பைகள் இல்லை என்று கூறி கடந்த சில நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கொண்டு வந்த 150 டன்கள் அளவுக்கான நெற்பயிர்கள் கொள்முதல் நிலையத்தின் வெளியே ஆங்காங்கே குவியலாக கொட்டிவைக்கப்பட்டுள்ளன. மழை பெய்து வருவதால், இந்த நெற்பயிர்களை சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே உரிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில், கொள்முதலை அரசு நிறுத்திவைத்திருப்பது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக அரசு அலுவலர்களுக்கான தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம் …
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (23.07.2018) தமிழ்வளர்;ச்சித்துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் இரண்டு நாட்கள் நடைபெறும் அரசு அலுவலகங்களுக்கான ஆட்சிமொழி பயிலரங்கினை துவக்கி வைத்தார்.
ஆட்சி மொழி பயிலரங்கினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது: மொழி என்பது சமுதாய மக்களின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. மனிதன் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த மொழியினை கருவியாக கையாளுகிறான். நமது தமிழ்மொழியானது மிகவும் தொன்மையான இலக்கியää இலக்கண வளம் நிறைந்த மொழியாகும். ஒரு மாநிலத்தில் உள்ள அலுவலக நடைமுறைகளை செயல்படுத்த சம்மந்தப்பட்ட மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழியே ஆட்சி மொழியாகும். அதனடிப்படையில் 1956-ஆம் ஆண்டு ‘தமிழ் ஆட்சிமொழி சட்டம்” நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பராமரிக்கப்படும் பதிவேடுகள், அலுவலக ஆணைகள், அரசுக்கடிதங்கள், கோப்புகள், நாட்குறிப்புகள், பெயர்பலகைகள் என அனைத்தும் தமிழிலேயே இருத்தல் வேண்டும். அதேவேலையில் மத்திய அரசு அலுவலகங்களுக்கோ அல்லது பிற மாநில அரசு அலுவலகங்களுக்கோ அனுப்பப்படும் கடிதங்கள் ஆங்கிலத்தில் இருக்கலாம்.
அதன்படி அனைத்துத் துறை அரசுப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் ஏற்படும் இடர்பாடுகளைக் களைவதற்காக தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் ஆட்சிமொழி பயிலரங்கம் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், 2018-ஆம் ஆண்டிற்கான ஆட்சிமொழி பயிரங்கம் இன்று (23.07.2018) மற்றும் நாளை(24.07.2018) என இரு நாட்கள் நடத்தப்படுகின்றன. இப்பயிலரங்கில் மொழிபெயர்ப்பும், கலைச் சொல்லாக்கமும்; ஆட்சிமொழி வரலாறு, சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும் ஆகிய தலைப்புகளிலும், மொழிப்பயிற்சி குறித்தும் அரசுத்துறை அலுவலர்களுக்கு பயிற்சியும், கருத்துரைகளும் வழங்கப்படுகின்றன. இப்பயிலரங்கில் கலந்துகொண்டுள்ள அரசு அலுவலர்கள் அனைவரும் தங்களது அலுவலக நடைமுறைகளில் 100 சதவீதம் தமிழ்மொழியில் பின்பற்றி நமது மொழியின் சிறப்பை பேணிக்காத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குநர்கள் (கோயம்புத்தூர்) முனைவர்.ப.அன்புச்செழியன். (மதுரை) முனைவர்.க.பசும்பொன், இராமநாதபுரம் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் மு.சம்சுதீன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உட்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மறியல் போராட்டம்..
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 23 ஆம் தேதி அன்று சென்னையில் கோட்டை நோக்கி மறியல் போராட்டம் பொதுச் செயலாளர் ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது இப்போராட்டத்தில் இராமநாதபுரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் இரா சிவபாலன் தலைமையில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர் மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் 350 பேர் உட்பட ஆயிரக்கணக்கானோர் இன்று கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இப்போராட்டம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இரா சிவபாலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எங்களது இயக்கத்தின் போராட்டத்திற்கு முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எங்கள் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ரெங்கராஜன் அவர்களை கல்வித் துறைச் செயலாளர் பிரதீப்யாதவ் அவர்கள் இன்று நேரில் அழைத்துப் பேசினார். அதில் தொடக்கக்கல்வித் துறைக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவுசெய்யும் முறை ரத்துசெய்யப்படும், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும், சத்துணவு SMS அனுப்பத்தேவையில்லை எனவும் கூறியுள்ளார்கள்.
அதே போல் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக ஒரு நபர் குழு அறிக்கை வந்தபின் முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். தொடக்கக்கல்வித் துறையை பள்ளி கல்வித்துறையோடு இணைத்ததில் சில மாற்றங்கள் செய்யப்படும் என கூறியுள்ளார்.
மாவட்ட மாறுதல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என கூறியுள்ளார். ஆகவே இது எங்கள் பேரியக்கத்தின் வெற்றி யாகவே நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குடியாத்தம் பஜார் பகுதியில் பட்ட பகலில் பட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளருக்கு கத்தி குத்து ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்.
இச்சம்பத்தால் அப்பகுதி பெரும் பரபரப்புக்கு ஆளாகியுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொள்ளிடம் ஒன்றிய அதிமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ் பாபு வெட்டிக்கொலை..
நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய அதிமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ் பாபு வெட்டிக்கொலை, சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பியோட்டம்.
போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..!
சென்னை சேத்துப்பட்டுவை சேர்ந்தவர் முகமது ஆரூண் சேட். கல்லூரி மாணவனான இவர் கடந்த 19-ம் தேதி இரவு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஈகா திரையரங்கம் அருகே சென்றபோது சேத்துப்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா முகமது ஆரூண் சேட் சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கி ஆவணங்களை கேட்டுள்ளார். முகமது ஆரூணும் ஆவணங்களின் நகலை காட்டியதாக தெரிகிறது. ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் அசல் ஆவணத்தை கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் முகமது ஆரூணை லத்தியால் சரமாரியாக தாக்கிய சப்- இன்ஸ்பெக்டர் கையையும் உடைத்துள்ளார். இந்நிலையில் சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜாவை சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மேலும் காயமடைந்த முகமது ஆரூண் சேட்டின் வீட்டுக்கே சென்று அவருக்கு கமிஷனர் ஆறுதலும் கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பார்வர்டு பிளாக் மாநில முன்னாள் தலைவர் முத்துவேல் நினைவிடத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அஞ்சலி …
இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வும் ஃபீர்வார்டு பிளாக் கட்சியின் மாநில தலைவருமான முத்துவேல் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கமுதி அருகே உள்ள நீராவி கரிசல் குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சொத்து வரி மற்றும் குடிநீர் உயர்வுக்காண ஆணையை 20/07/2018 அன்று தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. வரி உயர்வு 50 முதல் 100 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசானை நகல் கீழே..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் அளிந்திக்கோட்டை ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் ஆடி வெள்ளி உற்சவ விழா..
இராமநாதபுரம் மாவட்டம் அளிந்திக்கோட்டை ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் ஆடி வெள்ளி உற்சவ விழா வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் பக்தர்கள் காவடி, அக்னிசட்டி ஏந்தியும், பூ குண்டம் இறங்கியும் நேர்த்திகடன் செலுத்தினர்!
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள அளிந்திக்கோட்டை கிராமத்தில் ஆனைமலையில் உள்ளது போல் ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கிராமத்தின் வயல்வெளியில் அமைந்துள்ள இந்த கோயிலின் மாசாணி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்கள் கண்ட உண்மையாக உள்ளது. குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் கேட்டு ஸ்ரீ மாசாணி அம்மனை வழிபட்டால் அடுத்த ஆண்டே குழந்தை வரம் கிடைக்கிறது என கோயிலுக்கு வந்த பல பக்தர்கள் நேரடியாக தெரிவிக்கின்றனர். குழந்தை வரம் கேட்டு குழந்தை கிடைத்தவுடன் மறுஆண்டில் கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திகடன் செலுத்துவதை இங்கு நேரிடையாக காணமுடிகிறது.
ஸ்ரீ மாசாணி அம்மன் கோயிலின் ஆடி வெள்ளித்திருவிழா கடந்த 19ம் தேதி துவங்கியது. திருவிழாவின் முதல்நாள் நிகழ்ச்சியில் நள்ளிரவு 12 மணிக்கு மயான பூஜையும், தொடர்ந்து ஆடி வெள்ளிக்கிழமையன்று ஆடி வெள்ளி திருவிழா நடந்தது. முக்கிய விழாவான இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமி்ன்றி, சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிர கணக்கான பக்தர்கள் பங்கேற்று கரகம் எடுத்தல், பால்குடம், பறவைக்காவடி, அக்னிச்சட்டி, ரதக்காவடி போன்றவை எடுத்தும் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவில் ஸ்ரீ மாசாணி அம்மன் வீதிஉலா நடந்தது. ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ மாசாணி அம்மனை வழிபட்டு சென்றனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் பூசாரி மதுபாலன் தலைமையில் விழாகமிட்டியினர் செய்திருந்தனர். ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இங்கு வாரந்தோறும் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் கோவில் பூசாரி மதுபாலன் அருள் வாக்கு சொல்கிறார். இந்த அருள் வாக்கில் பங்கு கொண்ட பக்தர்கள் நினைத்த காரியங்கள் கை கூடுவதாக தெரிவித்தனர். இந்த கோவிலுக்கு இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து வேண்டி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடி துப்பாக்கி சூடு- அறிக்கையை வழங்கி உறுதி ஏற்பு கூட்டம் ..
தூத்துக்குடி துப்பாக்கி சூடு மக்கள் விசாரணை குழு அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களிடம் அர்ப்பணித்து உறுதி ஏற்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு நற்செய்தி கூட்ட அரங்கில் நடைப்பெற்று வருகிறது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 56. இவர் வழுதூர் மின் உற்பத்தி நிலையத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி வேலைக்குச் சென்ற இவர் மதியம் வீடு திரும்பினார் . அப்போது வீட்டின் முன்புறக் கதவு உடைக்கப்பட்டு கிபந்த்து. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ஐந்தரை பவுன் நகை, வைரத்தோடு, 2.50 கிலோ வெள்ளி பொருட்கள், கடிகாரம் 3 , எல் இ டி டி.வி, உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது கண்டு திடுக்கிட்டார். இதன் மதிப்பு ரூ.1.88 லட்சமாகும்.
சம்பந்தப்பட்டவரின் புகார் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் தொகுதி அம்மா பட்டினம் புதுமடம் கிராமங்களை இணைக்க கூடிய ஓடை பாலம் பூமி பூஜை !
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி க்குட்பட்ட அம்மா பட்டினம் புதுமடம் கிராமங்களை இணைக்க்கூடிய ஓடை பாலம் சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பெரும் முயற்சி மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை செய்து பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த புதுமடம் ஊராட்சிக்குட்பட்டது அம்மா பட்டினம்ப, புதுமடம் மற்றும் அம்மாபட்டினம் இவ்விரு கிராமங்களை இணைக்கும் வகையில் மன்னர் ஆட்சி காலத்தில் பழமையான கற்களை கொண்டு மக்கள் நடந்து செல்லும் வகையில் ஓடைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் வழியே இருசக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியாது. சட்டசபை தேர்தல் வரும் போதெல்லாம் இப்பகுதி மக்கள் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளிடம் பாலத்தை கட்டித்தர கோரிக்கை வைப்பர். ஆனால் மன்னர் காலம் முதல் வெற்றி பெற்ற சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராமநாதபுரம் தொகுதி யில் வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் எவரும் இந்த பாலத்தை கட்டித்தர எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. ஆதலால் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இக்கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க ப்போவதாக அறிவித்தனர் . இதனை அறிந்த அதிமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதி மில் போட்டியிட்ட டாக்டர் மணிகண்டன் அப்பகுதி மக்களை சந்தித்து நீண்ட நெடு நாள் கோரிக்கையாக இருந்து வந்த இந்த ஓடைப்பாலத்தை நான் வெற்றி பெற்றால் நிச்சயமாக நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்தார்.
இந் நிலையில் கடந்த சட்டசபைத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மீண்டும்அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்து டாக்டர் மணிகண்டன் அமைச்சர் ஆனார். அதனை தொடர்ந்து இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை தொகுதி முழுவதும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். அது போல அம்மா பட்டினம் புதுமடம் கிராமங்களை இணைக்க கூடிய ஓடை பாலம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜா, புதுமடம் ஊராட்சி செயலர் நாகேந்திரன், ஒப்பந்ததாரர் திருமுருகன், புதுமடம் ஊராட்சி கழக செயலாளர் தர்வேஸ், கிராமத்தலைவர் தனிக்கோடி , இராமநாதபுரம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராமமூர்த்தி, மண்டபம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சந்திரன், பெருங்குளம் ஊராட்சி கழக செயலாளர் ஜானகிராமன், பட்டணம் காத்தான் ஊராட்சிக் கழகச் செயலாளர் மருதுபாண்டியன், தொழிலதிபர் டாக்டர் ஜெயகார்த்திகேயன், அரசு வழக்கறிஞர் மண்டபம் கருணாகரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, மாவட்ட ராம்கோ தொழிற்சங்க செயலாளர் மங்களநாதசேதுபதி, உச்சிப்புளி ஊராட்சி கழக செயலாளர் ராஜேந்திரன், மண்டபம் ஒன்றிய இலக்கிய அணிச் செயலாளர் பாலசுப்பிரமணியன், திருப்புல்லாணி ஒன்றிய அவைத் தலைவர் உடையத் தேவன், சுப்பு தேவன் சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த அம்மா பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஆனந்த கண்ணீர் வடித்தது அனைவரையும் நெகிழ வைத்தது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மானிய விலையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு..
குறைந்த நீரில் விவசாயிகளின் அதிக வருவாய் ஈட்டக்கூடிய காய்கறிகள், பழப்பயிர்கள், மலர் பயிர்கள், சுவை தாளித பயிர்கள் மற்றும் மலை தோட்டப்பயிர்கள் ஆகியவற்றை சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 40மூ அல்லது 50மூ மானியத்தில் அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 4 எக்டருக்கு மானிய உதவிகள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் காய்கறி பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக விதைகள் அல்லது குழித்தட்டு நாற்றுகள் மற்றும் இதர இடுபொருட்கள் எக்டருக்கு ரூ.20,000/-மதிப்பில் வழங்கப்படுகிறது. மா மற்றும் கொய்யா பயிர்களில் அடர் நடவு முறைகளில் சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு மாவிற்கு ரூ9,840/-மதிப்பீட்டிலும, கொய்யாவிற்கு ரூ.17,599/- மதிப்பீட்டிலும், பப்பாளி சாகுபடி மேற்கொள்ள எக்டருக்கு ரூ.23,100/- மதிப்பீட்டிலும் நடவுச்செடிகள் வழங்கப்படுகிறது.
மஞ்சள், இஞ்சி, பூண்டு மிளகாய் போன்ற சுவை தாளித பயிர்கள் சாகுபடி மேற்கொள்ள எக்டருக்கு ரூ.12,000/-வீதம் நடவுச் செடிகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. ரோஜாää மல்லி மற்றும் சாமந்தி போன்ற உதிரி மலர்கள் சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ.16,000/-வீதம் நடவுச்செடிகள் வழங்கப்படுகிறது.
விவசாய பெருமக்கள் தங்களுக்குத் தேவையான விதைகள்ää நடவு செடிகளின் விவரங்களை ‘உழவன் செயலி” மூலம் அறிந்து இச்செயலி மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்ட பயன்கள் வழங்கப்படுகிறது. இதுதவிரää விவசாயிகள் திட்டங்கள் தொடர்பாக தேவைப்படுமு; விபரங்களை தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்களை இராமநாதபுரம் 9003631332, மண்டபம் 9443405365, திருப்புல்லாணி 9786751340, போகலூர் 9942673964ää நயினார்கோவில் 9842569664, பரமக்குடி 9789541143, கமுதி 9659246637, முதுகுளத்தூர் 9659584931, கடலாடி 9944080594ää ஆர்.எஸ்.மங்கலம் 7299462970, திருவாடானை 9442675926 அணுகி பெற்றுக்கொள்ளவும். கூடுதல் தகவலுக்கு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் 04567 230832, 230328
மேற்கண்ட தகவலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன்தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரத்த புற்று நோயை குணமாக்குவது இனி எளிது தான் – சென்னை அரசு மருத்துவமனையின் புது முயற்சி.
இரத்தப் புற்று நோயை குணமாக்கும் வகையில் சென்னை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
உயிர்க்கொல்லி நோயான ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவர் சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த சீனிவாசன்த,னியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத சூழ்நிலையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் திறக்கப்பட்டதை அறிந்ததும் அங்கு வந்து சீனிவாசன் சேர்ந்துள்ளார் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்தி உள்ளனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் செயல்படும் இந்த எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் ரத்த புற்று நோயாளிகளுக்கு தீர்வு தரும் மையமாக செயல்படும் என்கிறார் சீனிவாசனுக்கு மருத்துவம் அளித்த டாக்டர் மார்கரெட்..தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவில் செய்யக் கூடிய இந்த சிகிச்சையை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யலாம். தென்இந்தியாவில் முதல் முறையாக இங்கு தான் இந்த சிகிச்சை முறைகள் வழங்கப்படுவதாகவும், தொடர்ந்து மற்ற அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
ஏழை நோயாளிகளிக்கு வாழ்வளிக்கும் அரசு மருத்துவமனையின் முயற்சிக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
You must be logged in to post a comment.