12
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பிளாக்பிரிட்ஜ் ராணுவ பயிற்சி முகாம் ஜெயந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டெருமைகள் அதிக அளவில் நடமாடி வருகின்றன. இந்த நிலையில் ஒற்றை காட்டெருமை ஒன்று காட்டு பகுதியில் சண்டையிட்டு அல்லது வேறு ஏதேனும் விலங்கால் ஏற்பட்ட தாக்குதலில் காயமடைந்து நாக்கு தொங்கிய நிலையில் இன்று காலை ஜெயந்திநகர் பகுதியில் சோர்வுடன் காணபட்டது.
இத் தகவல் அறிந்ததன் பெயரில் மாவட்ட உதவி வன அலுவலர் மற்றும் குன்னூர் வன சரகர் தலைமையில் அந்த ஒற்றை காட்டெருமைக்கு மருத்துவ சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment.