12
இலங்கை நெடுந்தீவு அருகே ஒரு சில படகுகள் நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது இலங்கை கடற்படை வீரர்கள் கப்பலில் ரோந்து வந்தனர். அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக 2 விசைப்படகு, அதிலிருந்த 7 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசன்துறை கடற்படை முகாம் அழைத்துச் சென்றனர்.
அங்கு விசாரணையில் புதுக்கோட்டை மீனவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. படகுகளை சிறை பிடித்தபோது இலங்கை கடற்படை ராட்சத ரோந்து படகு மோதியதில் முற்றிலும் சேதமான ஒரு படகு காரைநகர் கடற்படை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் மீன வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment.