Home செய்திகள் கையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..!

கையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..!

by ஆசிரியர்

சென்னை சேத்துப்பட்டுவை சேர்ந்தவர் முகமது ஆரூண் சேட். கல்லூரி மாணவனான இவர் கடந்த 19-ம் தேதி இரவு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஈகா திரையரங்கம் அருகே சென்றபோது சேத்துப்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா முகமது ஆரூண் சேட் சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கி ஆவணங்களை கேட்டுள்ளார். முகமது ஆரூணும் ஆவணங்களின் நகலை காட்டியதாக தெரிகிறது. ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் அசல் ஆவணத்தை கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் முகமது ஆரூணை லத்தியால் சரமாரியாக தாக்கிய சப்- இன்ஸ்பெக்டர் கையையும் உடைத்துள்ளார்.  இந்நிலையில் சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜாவை சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மேலும் காயமடைந்த முகமது ஆரூண் சேட்டின் வீட்டுக்கே சென்று அவருக்கு கமிஷனர் ஆறுதலும் கூறியுள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!