சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்து நடிகர் விவேக் தயாரித்து நடித்திருந்த ‘‘மூன்றாவது கண்’’ என்ற காவல் விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடை இன்று (04.8.2018) காவல் ஆணையரகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன்,.கா.ப., அவர்கள் வெளியிட மற்றும் நடிகர் விவேக் பெற்று கொண்டார்.
Category:
மாநில செய்திகள்
உழைப்பவர்களின் உன்னதத்தை எடுத்துரைக்கும் வகையில் டிசைன் ஒவியப் பள்ளியின் ஏழாம் ஆண்டை முன்னிட்டு மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் 2018 நிகழ்வில் வியர்வையின் வண்ணங்கள் தலைப்பில் மூன்று நாள் ஓவியக் கண்காட்சி திருச்சியில் துவங்கியது. ஓவிய கண்காட்சி துவக்க விழாவில் சிறப்பு அஞ்சல் உறை சிறப்பு முதல் நாள் அஞ்சல் முத்திரையுடன் அஞ்சல் உறை வெளியீட்டு விழா நடைபெற்றது. மத்திய மண்டல தபால்துறைத் தலைவர் அம்பேஷ் உப்மன்யூ சிறப்பு அஞ்சல் உறையினை வெளியிட இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் செந்தில் குமார் பெற்றுக் கொண்டார்.
முதுநிலை அஞ்சலகங்கள் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், டிசைன் ஓவியப் பள்ளி இயக்குநர் நஸ்ரத்பேகம், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் மதன், ரகுபதி, யோகாசிரியர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர். பின் கண்காட்சியினை பார்வையிட்டனர். வியர்வையின் வண்ணங்கள் ஓவியக் கண்காட்சியில் வியர்வையின் வண்ணங்கள் எனும் கருப்பொருள் தலைப்பில் கடைநிலை உழைப்பாளியின் உன்னதத்தை வெளிக்கொணரும் விதமாக 40 மாணவர்கள் 4 ஓவியங்கள் வீதம் 160 ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.
அதில் 40 விதமான தொழில் புரியும் உழைப்பாளர்கள் ஓவியங்கள் காட்சிப்படுத்தப் படுத்தப்பட்டிருந்தன. யானைப்பாகன் , பூ வியாபாரி, காய்கறி விற்பவர், பட்டாணி விற்கும் பாட்டி, பொற்கொல்லர், தப்பாட்ட கலைஞர், ஆட்டோ ஓட்டுனர், மீனவர், ரிக் ஷா ஒட்டுனர், பலூன் விற்பவர், கட்டிட தொழிலாளர்கள், ஆடு மேய்ப்பவர், பால் விற்பனையாளர், பொம்மை தயாரிப்பவர், வெற்றிலை வியாபாரி, இடுகாட்டு பணியாளர், சுமை தூக்கும் தொழிலாளர், இளநீர் விற்பவர், மின்சார ஊழியர், தென்னை தொழிலாளர், குறி சொல்வோர், கூடை முடைவோர், பஞ்சு மிட்டாய் விற்பவர், மண்பாண்டம் செய்பவர், கைரேகை பார்ப்பவர், நெசவு தொழிலாளர், விவசாயி, செருப்பு தைப்பவர், மீன்பிடி தொழிலாளர், மின்சாரம் விநியோகம் பழுது பார்ப்பவர், பூ வியாபாரி, தேங்காய் மட்டை உரிப்பவர், பொம்மை மிட்டாய் விற்பவர், ஆட்டோ ஓட்டுநர், இரும்பு பட்டறை தொழிலாளர், பலகாரம் தயாரிப்பவர், எரிவாயு உருளை வழங்குபவர், குடம் விற்பவர், பீடித் தொழிலாளர், சலவைத் தொழிலாளர், பனை மரம் ஏறுபவர், சைக்கிள் பழுது பார்ப்பவர், என ஓவியங்கள் இடம் பெற்றன. ஓவியங்களுடன் அத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவரை கண்காட்சிக்கு அழைத்து வந்து சிறந்த உழைப்பாளர் என சிறப்பிக்கின்ற நிகழ்வினையும் தமிழகத்தில் முதன் முறையாக செய்துள்ளனர். கற்பனைத் திறனில் உருவாக்கப்பட்டுள்ள ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதில் கதக் கலைஞர், மலர்கள், மலையில் மல்லுக்கட்டும் மான்கள், கடல் கன்னிகள், மூதாட்டியும் முக மலர்ச்சியும், தம்புரா வாசிக்கும் பெண், ஆடுகளும் குட்டிகளும், பறவைகள், பாய்மரக் கப்பல்கள், கண்ணாடி குடுவைகள், கப்பற்படையின் சாகசங்கள், சிக்கு புக்கு ரயில், நங்கூரமிட்ட படகுகள், திருக்கோவில் திருப்பணிகள், தஞ்சாவூர் ஒவியத்தில் விநாயகர், முருகன், கெஜலெட்சுமி என 6 வயது முதல் 15 வயது கொண்ட சிறுவர்கள் சிருஷ்டி கர்த்தாவாகி உருவாக்கிய ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவியத்தில் உணர்வுகளை, உடல் மொழிகளை, முக அசைவுகளை தூரிகையில் வெளிக்கொண்டு வந்துள்ளனர் .எளிமையான வாழ்க்கையினை மேற்கொள்பவர்கள் தன் வாழ்க்கையில் சந்தித்த வலியையும், துயரங்களையும், வடித்த வியர்வைகளையும் வண்ண தூரிகையால் கண் முன்னே கொண்டு வந்துள்ளனர். சாமானியரின் உழைப்பு, சிரிப்பு, கருணை என வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையினை தத்ரூபமாக பென்சில் டிராயிங்கிலிருந்து பென் டிராயிங்கிலும், ஆயில் கலரிலிருந்து அக்ரலிக் கலர் வரை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை 31 மாணவிகளும், 11 மாணவர்களும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
கண்காட்சி நிறைவு விழாவில் காவல் துறை துணை ஆணையர் மயில்வாகணன், ஓவியச் சக்ரவர்த்தி ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். டிசைன் ஓவியப் பள்ளி இயக்குனர் நஸ்ரத் பேகம் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உழைப்பவர்களின் உன்னதத்தை எடுத்துரைக்கும் வகையில் உலகத் தரச்சான்று பெற்ற டிசைன் ஒவியப் பள்ளியின் ஏழாம் ஆண்டை முன்னிட்டு மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் 2018 வியர்வையின் வண்ணங்கள் ஓவியக் கண்காட்சியினை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உறை சிறப்பு முதல் நாள் அஞ்சல் முத்திரையுடன் அஞ்சல் உறை வெளியீட்டு விழா திருச்சியில் பெற்றது.
இந்நிகழ்வில் மத்திய மண்டல தபால்துறைத் தலைவர் அம்பேஷ் உப்மன்யூ சிறப்பு அஞ்சல் உறையினை வெளியிட இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் செந்தில் குமார் பெற்றுக் கொண்டார். முதுநிலை அஞ்சலகங்கள் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், டிசைன் ஓவியப் பள்ளி இயக்குநர் நஸ்ரத்பேகம், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் மதன், ரகுபதி, யோகாசிரியர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒளிந்திருக்கும் திறமைகளை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் “WILL MEDAL” – கராத்தேவில் உலக சாதனை படைத்த திருப்பூர் சிறுவன்..முழுமையான புகைப்பட தொகுப்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
உலக சாதனைகள் என்றால் வசதி படைத்தவர்கள் மட்டும் தான் செய்ய முடியும், அப்படியே ஒரு சாமானியன் சாதனை புரிந்தால், அவன் சாதனையை உலகுக்கு அறிமுகப்படுத்த பல சோதனைகளை சந்திக்க வேண்டும். அந்த வேதனைகளையும், சாதனைகளாக்கி சாமானியனையும் உலகுக்கு அறிய வைக்கும் பணியில் உள்ள அமைப்பு தான் “WILL MEDAL OF WORLD RECORDS” & “MUGAVAI RECORDS”. இந்த அமைப்பு உலகுக்கு வெளிய தெரியாமல் சாதாரண கிராமத்து மக்களின் சாதனைகளை கூட வெளி உலகுக்கு கொண்டு வந்து, அனைவராலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டி வருகிறார்கள் என்றால் மிகையாகாது.
இதன் தொடர்ச்சியாக நேற்று (03/08/2018) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள கணபதி பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வன்.ச.தருணிஷ் (9- வயது) உலக சாதனை உட்பட ஒரே நாளில் மூன்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளான். சிறுவயது முதலே கராத்தே கலையில் திறமை வாய்ந்த தருணிஷ் இந்தியாவிற்கு 47 தங்கப்பதக்கம் உட்பட மொத்தம் 72 பதக்கங்களை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் பெற்றுள்ளார். தற்போது இச்சிறுவன் இரண்டு மணி நேரத்தில் 52 கட்டாக்களை ( கட்டாக்கள் என்பது கற்பனை சண்டை முறைகள்) செய்து காண்பித்து வில் மெடல் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்-ல் (WILL MEDAL OF WORLD RECORDS) இடம்பிடித்து உலக சாதனை படைத்துள்ளான்.
அதே போல் ஒரு நிமிடத்தில் 180ற்கும் மேற்பட்ட முறைகள் சீக்கோ டாட்சி பஞ்ச் செய்து வில் மெடல்ஸ் நேஷனல் ரெக்கார்ட்ஸ் (WILL MEDALS NATIONAL RECORDS )ல் இடம்பெற்று தேசிய சாதனை படைத்துள்ளான். கராத்தே கலையில் 504 வித்தியாசமான அசைவுகளை வெளிப்படுத்தி வில் மெடல்ஸ் கிட்ஸ் ரெக்கார்ட்ஸ் (WILL MEDALS KIDS RECORDS)ல் இடம்பெற்று சாதனை படைத்துள்ளான்.
இச்சிறுவனின் இச்சாதனைகளை நேரில் ஆய்வு செய்த வில் மெடல் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், வில் மெடல்ஸ் நேஷனல் ரெக்கார்ட்ஸ், வில் மெடஸ் கிட்ஸ் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிறுவனர் – தலைவர் கவிஞர்.ஆ.கலைவாணி மற்றும் முதன்மைச்செயலர் சீ.தஹ்மிதா பானு ஆகியோர் உலக சாதனை உட்பட ஒரே நாளில் மூன்று விதமான சாதனைகள் படைத்த சிறுவன்.ச.தருணிஷிற்கு சாதனை படைத்தமைக்கான சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினர்.
இந்த விழாவில் பேசிய வில் மெடல் நிறுவன தலைவர் கவிஞர்.கலைவாணி’ “அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் அவர்களின் சாதனைகளுக்கும் எங்கள் நிறுவனம் எப்போதும் ஆதரவு நல்கும்” என சிறப்புரையாற்றினார். இவ்விழாவிற்கு அப்பள்ளி மாணவ, மாணவியர் அளித்த உற்சாகமும் கரகோஷமும் சாதனை மாணவனை உலக சாதனையை வெற்றிகரமாக நிறைவு செய்ய பேருதவியாக அமைந்தது.
புகைப்பட தொகுப்பு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விழுப்புரம் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவசாமி 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
விழுப்புரம் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவசாமி 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது.
விழுப்புரம் மாவட்டம் சாரம் டாஸ்மாக் கடையிலிருந்து தழுதாளி டாஸ்மாக் கடைக்கு பணியிடமாற்றம் கேட்டு விற்பனையாளர் ராமமூர்த்தி யிடம் மாவட்ட மேலாளர் சிவசாமி 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.வி.ஏ.ஓ நகரில் உள்ள தனது வீட்டில் 10 ஆயிரம் லஞ்ச பணம் வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான போலிசார் கைது செய்தனர்.தொடர்ந்து அவருடைய மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அழகர் கோவில் அருகே நூற்றுக்கணக்கான தேசிய பறவை மர்மமான முறையில் சாவு – வீடியோ பதிவு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை அழகர் கோயில் சாலையில் சூர்யா நகர் கோல்டன் சிட்டி அருகே இன்று (04/08/2018) நமது நாட்டின் தேசிய பறவையான சுமார் 80 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. அதை வனத்துறையினர் இறந்த மயில்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்,
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது,
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவை நீலாம்பூர் புறவழிச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 3 மாணவர்கள் பலி. 2 கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
படுகாயமடைந்த மேலும் 6 பேர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“கேள்வி கேட்கும் சமுதாயமே, சிறந்த சமுதாயம்”.. வாருங்கள் கேள்வி கேட்போம்.. கிராம சபையில்…
நாம் கீழே விவாதித்திருக்கும் விசயங்களை நாம் நடைமுறை படுத்த தொடங்கினாலே ஊராட்சியில் பல பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்:-
கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன ??
நாம் என்ன செய்ய வேண்டும் ??
* நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம்
* கேள்விகளை கேட்போம் உரிமைகளை பெறுவோம்
* கிராமசபையின் தீர்மானமே அந்த கிராமத்தின் சட்டம்
* சட்டசபைக்கு இணையான வலிமை= கிராமசபையை பயண்படுத்த வாரீர்..
1.ஜனநாயக திருவிழாவை ஆகஸ்ட்-15 கிராமசபையில் கொண்டாட வாருங்கள் அனைவரும்.
2.பஞ்சாயத்து தலைவராக நினைப்போரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள்.
3.அரசியல் ஆசை உள்ளோரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள்.
4.Ex பஞ்சாயத்து உபதலைவரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள்.
5.Ex வார்டு மெம்பரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள்.
6. ஆகஸ்ட்-15 கிராமசபை கூட்டத்துக்கு வரும் தலைவருக்கு ஓட்டு போடுங்கள்.
7. ஆகஸ்ட்-15 நம் கிராமம் மீது அக்கறை இல்லாமல் கிராமசபை கூட்டத்துக்கு வராத தலைவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்.
8.ஊராட்சி செயலாளரின் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள்.
9.மண் வெட்டியதாக பணத்தை எடுப்பவர்களை ஆய்வு செய்ய சரியான தருணம் ஆகஸ்ட்-15.
10.கிராமசபை கூட்டத்தில் அரசு அலுவலர் தரையில்தான் உட்கார வேண்டும்.
11. 50 நபருக்கு குறைவாக இருந்தால் கிராமசபை கூட்டத்தை நிறுத்துங்கள்.
12.கிராமசபை கூட்டத்துக்கு செல்லும் முன் ஆன்லைனில் வரவு செலவு விபரங்களை டவுன்லோடு செய்யுங்கள்.
13.ஓட்டுப்போடுவதைப் போல முக்கியத்துவம் வாய்ந்தது-ஆகஸ்ட்-15.
14.கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிராமத்தின் வளர்ச்சியை அழிக்க துணை போகாதிருங்கள்.
15.பேருந்துவசதி குறித்து ஆகஸ்ட்-15 கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் ஏற்றுங்கள்.
16.இலவச வீடு வேண்டுவோர் ஆகஸ்ட்-15 கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள்.
17. ஆகஸ்ட்-15 உங்கள் கிராமத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவுக்கான நாள்.
18.ஆகஸ்ட்-15 கிராமசபையில் சாக்கடை கால்வாய் அமைப்பது குறித்து தீர்மானம் ஏற்றுங்கள்.
19. ஆகஸ்ட்-15 கிராமசபையில் குளம்,ஏரி தூர்வார்வது குறித்து தீர்மானம் ஏற்றுங்கள்.
20. ஆகஸ்ட்-15 கிராமசபையில் குடிநீர் பிரச்சனைகள் குறித்து தீர்மானம் ஏற்றுங்கள்.
21.மே-1 க்கு பின்பு உள்ள செலவு விபரங்களை ஆகஸ்ட்-15 கிராமசபையில் உங்கள் ஒப்புதல் பெற்றதாக கையெழுத்து வாங்க போவது எத்தனை பேருக்கு தெரியும்.
22. !! ஆகஸ்ட்-15 !! கிராமசபையின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் தெரிந்துகொண்டு கிராமத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டும்.
23.உங்களின் வரிப்பணத்தை உன் கிராமத்தில் வீணடிப்பதை தவிர்க்க ஆகஸ்ட்-15 கிராமசபைக்கு வாருங்கள்.
24.கிராமசபை கூட்டத்தை தகுந்த காரணத்தோட நிறுத்தினால் மாவட்ட ஆட்சியரை உங்கள் கிராமத்திற்கு வரவைக்கலாம்.
25.!!நேரலை!!
கிராமசபை கூட்டத்தை முடிந்தவரை முகநூலில் நேரலையாக பரப்புவோம்.
26. 501 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவியுங்கள்.
27. அரசு இ-சேவை மையம் தொடங்க தீர்மானம் ஏற்ற வாருங்கள்.
28. மரத்த நடுறோம், மரத்த நடுறோம்னு ஆயிரகணக்கான மரத்தை நட்டு இலட்சம் ரூ வீண்டித்த மரங்களெல்லாம் எங்கே? விவாதிக்கலாம் வாருங்கள் ?
29.கிராமசபை கூட்டத்தில் போய் உட்காருவது நமது கடமை.
30. நல்ல பணி பொருப்பாளரை கிராமசபை கூட்டத்தில் விவாதித்து தேர்ந்தெடுப்போம்.
31. உங்கள் கிராமத்தின் தேவைகளை மட்டும் தெரிந்தெடுக்க சரியான தருணம் ஆகஸ்ட்-15 கிராமசபை.
32. புதிய வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு தீர்மானம் ஏற்ற கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள்.
33. நம் கிராமத்தில் கிராமசபை அரசாணை படி 100க்கு குறைவான நபர்கள் இருந்தால் கூட்டத்தை நிறுத்தி மறு தேதிக்கு மாற்றலாம்.
34.கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமத்தின் வளர்ச்சியை பன்மடங்கு ஆக்க வாருங்கள்.
35.இலவச வீடு வேண்டுவோர் ஆகஸ்ட்-15 கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள்.
36. கேள்வி கேட்டல்தான் அரசுக்கு அச்சம் வரும் என்றால் அதற்கான சரியான தருணம் ஆகஸ்ட்-15 கிராமசபை கூட்டம்.
37. வண்ணகற்கள் சாலை அமைப்பது குறித்து தீர்மானம் ஏற்றுங்கள்.
38. உங்களின் வரிப்பணத்தை உன் கிராமத்தில் வீணடிப்பதை தவிர்க்க.
39.வீண் செலவுகளுக்கு ஒப்புதல் கையெழுத்து எக்காரணம் கொண்டு போடாமல் தடுப்போம்.
39. ரேசன் கார்டு, பட்டா மாறுதல், வருவாய் துறை சார்ந்த வருமான, இருப்பிட, சாதி சான்றுகளை, பல்வேறு இணைய வழி சேவைகள் அனைத்தும் நமது கிராமத்திலும் வழங்கும் கிராம சேவை மையங்கள் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள். ஏற்கனவே கிராம சேவை மையம் கட்டப்பட்டு இருந்தால் திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு விட தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
இதன் மூலம் நாம் இணையம் மூலம் செய்ய வேண்டிய அனைத்து வசதிகளையும் நமது கிராமத்தில் லஞ்சமில்லாமல் பெற முடியும்.
ஒரு கிராமத்திற்கு ஐந்து ஆண்டுக்கு 4 1/2 கோடி ருபாய் வழங்கப்படுகிறது
கிராமங்கள் முன்னேறாமல் இருக்க MP,MLA மட்டும் காரணமில்லை.
கிராமங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களும் இளைஞர்களும் தான் காரணம்.
உங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக பயண்படுத்தபடுகிறதா ?
என்னென்ன பணிகள் நடைபெற்றது ?
தரமான பொருட்கள் உபயோகப்படுத்த பட்டுள்ளதா ?
என்ற கேள்விகளை எழுப்புங்கள்..
கிராமசபையில் அதிகாரம் மக்களுக்கே…
உள்ளாட்சி அதிகாரங்களில், கிராம சபைகள் என்பது ஒரு சட்ட பிரிவு மட்டும்தான். அது வலிமையானது. ஆனால் சமீப காலங்களாக கிராம சபைகள் அரசியலாக்க பட்டு வருவது வருத்தப்பட வேண்டிய விஷயம் !!!!
அ.சா.அலாவுதீன்
மூத்த செய்தியாளர்
கீழை நியூஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாயல்குடி கூராங் கோட்டை ஸ்ரீ தர்மமுனீஸ்வரர் கோவில் மண்டல அபிஷேக விழா…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கூராங் கோட்டை ஸ்ரீ தர்மமுனீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் கடந்த ஜீன் 18 ந்தேதி வெகு சிறப்பாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல அபிஷேக விழா ஆடி பெருக்கு 18 ந் தேதி ( ஆக 03 ) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 12.15 மணிக்குள் தர்மமுனீஸ்வரர் கோவில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள் நடந்தது தர்மமுனிஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இவ்விழாவில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், கடலாடி தாசில்தார் முத்துலெட்சுமி, சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன், தினக் காவலன் பத்திரிகை ஆசிரியர் முருகநாதன் மற்றும் விழா கமிட்டியினர், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இவ்விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை சாயல்குடி காவல் ஆய்வாளர் ஜோக்கின் ஜெர்ரி தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை எ.உசிலங்குளம் பஞ்சாயத்து ஊராட்சி செயலர் செந்தாமரை செய்திருந்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த ரயில் நிலையத்தில் சுகாதாரம் மற்றும் உணவகங்களில் விற்கப்படும் உணவு பண்டங்களின தரம் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷிரேஸ்தா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளிடம் பாம்பன் ரயில் பாலம் மற்றும் ரயில் நிலைய பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவை அவிநாசி சாலையில் உரிய அனுமதியின்றி செயல்படும் கேளிக்கை விடுதிகள் செயல்படுகிறதா?? ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தமிழகம் முழுவதும் நவநாகரீகம் என்ற பெயரில் இளைஞர்களிடையே மேற்கத்திய கலாச்சாரம் நுழைந்து, ஆட்டிப்படைத்து வருகிறது. உணவுகள், உடைகள் என எல்லாவற்றிலும் மேற்கத்திய கலாச்சாரம் புகுந்துவிட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் பெருநகரங்களில் வசிக்கும் இளம்பெண்கள் போதை பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளனர் என்பது வேதனை.
கோவை அவினாசி சாலை goldwins பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் பெண்களுக்கான கேளிக்கை நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் ஐடி நிறுவன பெண் ஊழியர்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது. Ladies wednesday என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இது போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் நெருப்பை பற்றவைத்து நடனமாடும் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விடுதியில் நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சியில் ஒவ்வொரு முறையும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் இளம்பெண்களை பங்கேற்க தூண்டும் வகையில், மாடல் மங்கைகள் மற்றும் மேற்கத்திய இசைக் கலைஞர்களைக் கொண்டு வரவேற்பு வீடியோக்களும் இணையதளங்களில் வெளியிடப்பட்டு, முன்பதிவுகள் நடத்தப்படுகின்றன.
இதற்காக பெருந்தொகையை கட்டணமாக வசூலிக்கும் விடுதி நிர்வாகம், இளம்பெண்களை போதையில் மிதக்கவிடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் நள்ளிரவில் மது போதையில் தள்ளாடியபடி வாகனம் ஓட்டும் இளம்பெண்கள், அவ்வப்போது விபத்துகளில் சிக்குவதும் வாடிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அந்த விடுதியில் நடைபெறும் கேலிக்கூத்துகள் தெரிந்தும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. நள்ளிரவு வேளையில் குடிபோதையில் அரைகுறை ஆடையில் தள்ளாடியபடி வாகனத்தை ஓட்டும் இளம்பெண்களை தண்டிக்காமல் இருப்பதும் சாதாரண நிகழ்வாகவே உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் நாளை (04/08/2018) காலை 9:45 மணி முதல் 5 மணி வரை மின் தடை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் , ரெகுநாதபுரம், ராஜ சூர்யமடை, தேவிபட்டினம், ஆர். காவனூர் ஆகிய உப மின் நிலையங்களில் நாளை (04.08.2018) காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பணி நடைபெற உள்ளது. இதனால் கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் இருக்காது என ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் நகராட்சி, சக்கரக்கோட்டை , பாரதி நகர் . மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதி, பட்டணம் காத்தான், அச்சுந்தன் வயல், செய்யது அம்மாள் இன்ஜினியங் கல்லூரி பகுதி, திருப்புல்லாணி, தெற்கு தரவை, எம்.எஸ்.கே நகர், பசும்பொன் நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வன்னிக்குடி, ரெகுநாதபுரம், பெரிய பட்டினம், முத்துப்பேட்டை , காரான், வண்ணான்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்கு காட்டூர், நைனா மரைக்கான், தேவிபட்டினம், காட்டூரணி, அண்ணா பல்கலைக் கழக பகுதி, பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தார் கோட்டை , ஆர்.காவனூர், தொருவளூர், முதலூர், கிளியூர், தேர்தங்கல், குளத்தூர் பகுதிகளில் மின் வெட்டு இருக்கும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேட்டுப்பாளையம் விவசாயிகள் நீர்த்தேக்க பகுதியில் தங்கள் வாழைகள் நீரில் மூழ்கிவிட்டதால் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் காரமடை நால்ரோடு பிரிவில் இயங்கவிரும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு அதிக அளவில் வரும் வாழைத்தார்களும் குறைந்துள்ளன.
இதனால் மார்க்கெட் பரபரப்பின்றியும் கூட்டமின்றியும் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இருக்கும் வாழைத்தார்களுக்கும் குறைந்த விலைக்கே விற்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கூட்டு பாலியல் பலாத்காரம், தலித் மாணவி கொலை…! அதிர்ச்சியில் விழுப்புரம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
விழுப்புரம் மாவட்டத்தில் நர்சிங் மாணவியை காதலிப்பதாக கூறி வீட்டில் இருந்து அழைத்துச்சென்ற இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரி செல்லும் சாலையில் உள்ள தோட்டத்து கிணற்றில் இளம் பெண் ஒருவர் சடலமாக கிடந்தார். அவர் கழுத்தை நெரித்தும் , கல்லால் தாக்கியும் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
சம்பவ இடத்தில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். காவல்துறையினரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த தலித் மாணவி என்பதும் அவர் வீட்டில் இருந்து 20ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறிய நிலையில் கொலைசெய்யப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து துப்பு துலக்கியதில் அவர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் குணசேகரன் என்பவருடன் நீண்ட நேரம் பேசி வந்ததும் , சம்பவத்தன்று கடைசியாக் அவருடன் பேசி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து குணசேகரனை பிடித்து விசாரித்த போது நர்சிங் மாணவி கொலைக்காண பின்னணி வெளிச்சத்துக்கு வந்தது.
அந்தபகுதியில் ஜீன்ஸ் பேண்டு கூலிங்கிளாஸ் சகிதம் ரோமியோ போல வலம் வந்த குணசேகரன், சில மாதங்களாக நர்சிங் மாணவியை விரட்டி விரட்டி காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் மாணவியை தனது காதல் வலையில் வீழ்த்திய குணசேகரன் கடந்த 3 மாதங்களாக காதலிப்பதையே முழு நேரத்தொழிலாக செய்துவந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் எந்த ஒரு தவறுக்கும் இடம் கொடுக்காத அந்த மாணவியை திருமண ஆசைக்காட்டி வீட்டில் இருந்து வெளியே வருமாறு அழைத்துள்ளார் குண்சேகரன்.
குணசேகரனின் காதல் வார்த்தையை உண்மை என்று நம்பிய அந்த நர்சிங் மாணவியும் வீட்டில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு காதலனுடன் தொடங்க உள்ள புதுவாழ்க்கையை எண்ணி வீட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.
இருவரும் நடந்தே நெடுந்தூரம் சென்ற நிலையில் மாதவச்சேரி செல்லும் சாலையில் வைத்து , தான் வீட்டில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்துள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக மாணவியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள காட்டு பகுதியில் ஒதுங்கி உள்ளான் குணசேகரன். அங்கிருந்தபடியே தனது நண்பர்களை செல்போனில் அழைத்து வரவழைத்துள்ளான்.
அங்கு வந்த நண்பர்களிடம் மதுவாங்கி வரச்சொல்லி, மாணவி எடுத்து வந்த பணத்தில் கொஞ்சத்தை கொடுத்து அனுப்பி உள்ளான் காதலன் குணசேகரன். விபரீதம் நிகழ்போவதை உணராமல் அந்த மாணவியும் குணசேகரனை நம்பி அங்கேயே இருந்துள்ளார். நண்பர்களுடன் மது அருந்திய குணசேகரன், போதையில் அந்த மாணவியுடன் தனிமையை கழித்துள்ளார். அவரை தொடர்ந்து அங்கிருந்த அவரது நண்பர்களான கோமுகி தாசன், ரட்சகன் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோரும் மது போதையில் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதையடுத்து அந்த மாணவி குணசேகரனிடம் கதறி அழுததால் அவரது கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளான் காதலன் குணசேகரன். உயிர் தப்பி விடகூடாது என்பதற்காக அவனது கூட்டாளிகள் மாணவியின் சடலத்தின் மீது அங்கிருந்த கற்களை தூக்கி போட்டுள்ளனர்.
பின்னர் மாணவியின் சடலத்தை 300 மீட்டர் தொலைவில் உள்ள தண்ணீர் வற்றிபோன கிணற்றில் வீசிவிட்டு தப்பி உள்ளனர் என்று காவல் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியும், கைது செய்யப்பட்ட காதலன் குணசேகரனும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டி உள்ளனர்.கூடா நட்பு மட்டுமல்ல, நம்பிக்கையற்றவர்களுடன் ஏற்படுகின்ற கூடா காதலும் கேடாய் முடியும் என்பதற்கு சான்றாய் மாறி இருக்கிறது இந்த கொடூர சம்பவம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கை கடற்படையால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் – வீடியோ பதிவு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இலங்கை கடற்படை சிறைபிடித்து சேதமடைந்த படகுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கக் கோரி காங்கிரஸ் சார்பில் இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக விசைப்படகுகள் சேதமடைந்த நிலையில் அந்நாட்டு கடற்கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி கேரள மாநில காங்கிரஸ் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பிரதாபன் தலைமையில் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு, பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மீனவ மக்கள், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் ராணுவ உளவுத்துறை அதிகாரி மாயமானது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ராணுவ உளவுப்பிரிவு அதிகாரி ஞானப்பிரகாசம் 2010ல் சென்னையில் காணாமல் போனார்.
இந்நிலையில் சென்னை போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையிலும் ஞானப்பிரகாசம் பற்றி தெரியாததால் சிபிஐக்கு மாற்றக் ராணுவ அதிகாரியின் மனைவி கோரினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த சில மாதங்களாகவே உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை சம்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சியாளர்களே தவறான வகையில் சட்டத்தை கையாள்வதால், சாமானிய மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.
இந்நிலையில் எந்த திசையில் நோக்கினாலும் “காவி மயம்” என்று சொல்லும் வகையில் அனைத்திலும் காவி சித்தாந்தம் திணிக்கப்பட்டு, காவி நிறம் பூசப்பட்டு வருகிறது. அரசு கட்டிடங்கள் தொடங்கி ,போக்குவரத்து வாகனங்கள், மின் கம்பங்கள் என அனைத்திலும் காவிநிறம், ஆனால் நிறம் மாறினாலும் மனம் மாறாது என்பதை ஆட்சியாளர்கள் மறந்து விட்டார்கள்.
முப்பது கோடி முகமைடையாள் என்ற பாடலுக்கு சொந்தமான இந்திய திருநாட்டில், பன்முக தன்மை சமுதாயத்தை கொண்ட நம் நாட்டில், சகோதரத்துவத்துடன் வாழும் மக்கள் மத்தியில் இந்துத்துவா கொள்கையை புகுத்துவதன் மூலம் பிரிவினைவாதத்திற்கு இது ஒரு தூண்டுகோளாக அமையுமோ? என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இது போன்ற அசாதாரண சூழலுக்கு தீணி போடும் வகையில் அரசியல் மற்றும் ஜாதி தலைவர்கள் சிலைகளும் அவ்வப்போது உடைக்கப்பட்டுவதும், பின்னர் சிலையை பாதுகாக்க இரும்பு கூண்டில் வைப்பதும் வக்கிரத்தின் உச்சத்தை காட்டுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு உத்திர பிரதேச மாநிலம் பாதாவுன் கிராமத்தில் அம்பேத்கர் சிலை சமூக விரோதிகளால் உடைப்பப்பட்டது. உடனே அதே இடத்தில் காவி வண்ணம் பூசிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.
காவி நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலையின் புகைப்படங்கள் ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தீயாக பரவியது. ஆனால் பதட்டத்தை தடுக்கும் வகையில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியை சார்ந்த ஒருவர் காவி நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு காவல் துறை முன்னிலையில் நீல நிறம் மாற்றப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
அந்த சர்ச்சைக்கு பிறகு சர்ச்சைக்கு தற்போது சஹஜான்பூர் மாவட்டத்திலுள்ள பந்தா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு காவி நிறம் பூசப்பட்டு பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில் போன வருடம் வரை அந்த காந்தி சிலையில் உடை வெள்ளை நிறத்திலும் கண்ணாடி கருப்பு நிறத்திலும் இருக்க தற்போது இரவோடு இரவாக காந்தி சிலையின் உடலில் உடுத்தியிருக்கும் உடைக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தரப்பு இது கண்டிப்பாக பாஜகவின் வேலையாகத்தான் இருக்கும் என அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று (02-08-2018)சென்னை அண்ணா நகர் இரண்டாவது அவென்யூவில் உள்ள மிகவும் பழமையான கிறிஸ்தவ சர்ச் ஓன்று மாநகராட்சியினரால் இடிக்கப்பட்டது. இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவாலய மக்களை காவல்துறையினர் அடித்து துரத்தியதால் அப்பகுதியில் பதட்டம் உண்டானது.
இந்நிலையில் அங்கு வந்த வைகோ அனுமதி இன்றி இடிக்கப்பட்ட நூற்றாண்டு கால தேவலாயத்தை பார்வையிட்டு அவர் கூறியதாவது, “இந்த தேவாலயத்தை முன் அனுமதி இல்லாமல் இடிக்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவையும் மீறி இடிக்கப்பட்டது கண்டனத்துக்குரியதி எனவும், புதிய தேவாலயம் தமிழக அரசு கட்டித்தர வேண்டும்” என மதிமுக வைகோ அவர்கள் கோரிக்கை வைத்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள பாண்டியன் ஊரணி 26 ஏக்கர் கொள்ளளவு கொண்ட பொததுமக்களின் அன்றாட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த வரலாற்று சிறப்புமிக்கதாகும். இராமநாதபுரம் மாவட்டத்தின் மூன்றாவது பெரிய பாசன கண்மாய் சிக்கல் பாசன கண்மாய், இதன் பாசனப் பகுதி பொட்டல் பச்சேரி தொட்டியபட்டி என 3500 ஏக்கர் பாசன பரப்புகளாகும். இதில் விவசாய கண்மாய் சுமார் 9 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதற்கு நீர் வரும் வழித்தடங்கள் இரண்டு உள்ளன. அது முதலாவதாக பார்த்திபனூர், பரமக்குடி, கடம், போடை வழியாக இரகுநாத காவேரியிலிருந்து ‘தண்ணீர் வரும். அடுத்தது இரண்டாவது கருமல், பெரிய இலை, ஆதங்கொத்தங்குடி, வல்லகுளம் வழியாக தண்ணீர் கண்மாயை வந்தடையும்.
பருவ காலங்களில் பெய்கின்ற மழை நீரை சேமித்து பத்திரமாக பயன்படுத்தி இரண்டு போகம் விவசாயம் செய்த பகுதி தற்போது ஒரு போகம் விவசாயம் செய்யக் கூட வழியில்லாமல் சீரழிந்து போய் உள்ளது. இந்த கண்மாய் முழுமைக்கும் சிறிய, பெரிய கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. கண்மாய் முழுவதும் மணல் மேடு போல் காட்சியளிக்கின்றன, கண்மாயின் நீர்நிலைப் பகுதிகளில் பல கிராம மக்கள் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர்.
பொதுமக்களிடையே கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி முதலாவது பணியாக கண்மாய் முழுமைக்கும் உள்ள சீமைக் கருவேல செடிகளை சுத்தம் செய்து அகற்றும் பணி நடந்து, பாதிக்குமேல் முடிவுற்று ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை காட்டு கருவேல செடிகளை முழுமையாக அகற்றி விட்டனர். ஆனால் மீதம் உள்ள பகுதிகளில் 36 ஏக்கர் பரப்பில் உள்ள சீமைக் கருவேல செடிகளை சுத்தம் செய்ய வனத்துறை தடுக்கின்றனர். அதற்கு காரணம் இந்த மரங்களுக்கு இடையில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர் மற்றும் சமூக விரோதச் செயலை செய்ய வனத் துறை துணை போகின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசாங்கம் நல்ல தீர்வு காணுமா??
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பிரியாணி கடை ஊழியர்கள் தாக்குதல் வழக்கில் 15 நாட்கள் நீதிமன்ற காவல்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சென்னை விருகம்பாக்கத்தில் திமுக பெயரில் பிரியாணி கடை ஊழியர்கள் மீதான தாக்குதல் வழக்கில் கைதான 6 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
அதே சமயம் இன்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.