10
உழைப்பவர்களின் உன்னதத்தை எடுத்துரைக்கும் வகையில் உலகத் தரச்சான்று பெற்ற டிசைன் ஒவியப் பள்ளியின் ஏழாம் ஆண்டை முன்னிட்டு மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் 2018 வியர்வையின் வண்ணங்கள் ஓவியக் கண்காட்சியினை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உறை சிறப்பு முதல் நாள் அஞ்சல் முத்திரையுடன் அஞ்சல் உறை வெளியீட்டு விழா திருச்சியில் பெற்றது.
இந்நிகழ்வில் மத்திய மண்டல தபால்துறைத் தலைவர் அம்பேஷ் உப்மன்யூ சிறப்பு அஞ்சல் உறையினை வெளியிட இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் செந்தில் குமார் பெற்றுக் கொண்டார். முதுநிலை அஞ்சலகங்கள் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், டிசைன் ஓவியப் பள்ளி இயக்குநர் நஸ்ரத்பேகம், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் மதன், ரகுபதி, யோகாசிரியர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.