நெல்லையில் மமக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..
நெல்லையில் ரயில்வே மேம்பாலத்தை திறக்கக்கோரி மமக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மஹாராஜா நகர் உழவர் சந்தைப் பகுதி சாலையில், தினந்தோறும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனை குறைப்பதற்காக நெடுஞ்சாலைத் துறையும் ரயில்வே துறையும் இணைந்து சுமார் 26 கோடியே 30 லட்சத்தில் நெல்லை திருச்செந்தூர் ரயில்வே மார்க்கத்தில் கடந்த 2016 ல் பாலம் வேலை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது பாலம் வேலை முழுவதுமாக வேலை முடிந்து போக்குவரத்திற்கு தயார் நிலையிலுள்ளது.
ஆனால், பாலத்தின் பணிகள் 100% முடிந்தாலும் ரயில்வே துறை பாலத்தை திறக்க காலம் தாழ்ததி வரும் நிலையில், பாலத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி தமுமுக, மமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், தன்னார்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பாலத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக திறக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய அரசையும், ரயில்வே நிர்வாகத்தையும் கண்டித்து வால்போஸ்டர்கள் நெல்லை, பாளை போன்ற மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.