வருமான வரித்துறை சார்பில் சுமார் 1,823 கோடி ரூபாய் செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1,823 கோடி ரூபாய் கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இதற்கிடையே, இந்த நோட்டீஸ் வரி தீவிரவாதம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.139 ஆண்டுகால பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியை முடக்க சதி நடக்கிறது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், வருமான வரி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Category:
மாநில செய்திகள்
ED, IT மூலம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ஊழல் செய்த கட்சி பாஜக!-கனிமொழி எம்.பி. கடும் விமர்சனம்..
by Askar
written by Askar
இந்தியா கூட்டணி சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து, கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி நல்முனை சாலை சந்திப்பு பகுதியில் கழக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “இந்த தேர்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது மீண்டும் மேற்கொள்ள உள்ள சுதந்திரப் போராட்டம். அதிமுக, பாஜக வேட்பாளர்கள் உங்களை சந்தித்து வாக்குகள் கேட்கும் பொழுது அவர்களிடம் விவசாய மக்களுக்காக நீங்கள் செய்தது என்ன என்று கேளுங்கள்.வேளாண் மசோதாவை கொண்டு வந்து விவசாய மக்களை பாதிப்படையை சேர்ந்தது பாஜக. அதற்கு ஆதரவாக வாக்களித்தது அதிமுக.
தொழிலாளர்கள் மட்டுமல்ல அனைவருக்கும்மான ஆட்சியாக நம் முதலமைச்சரின் ஆட்சி உள்ளது. நீங்கள் கேட்டதை எல்லாம் செய்து கொடுக்கலாம் என்று போராடாமல் இருக்காதீர்கள். தொழிலாளர்கள் என்றால் போராட வேண்டும் என்று சொன்ன ஒரே முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அவர் வழியில் நம் தலைவர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி. ஆனால் ஒன்றியத்தில் உள்ள பாஜகவின் அரசு மக்களுக்கான அரசு அல்ல, அதானி அம்பானி அவர்களின், அவர்களுக்கான அரசு.நாம் ஒரு ரூபாய் நிதியாக வழங்கினால் ஒன்றிய அரசு நமக்கு 25 பைசாவாக திரும்பி அளிக்கிறது ஆனால் உத்திரபிரதேசத்திற்கு இரட்டிப்பாக 2.22 ரூபாய் வழங்குகிறது.
நாம் தேர்தல் வாக்குறுதியில் அளித்து போல, மகளிர் அனைவருக்கும் மாதம் ரூபாய் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று, சொன்னதை செய்து காட்டி 1.15 லட்சம் மகளிர்கள் திட்ட மூலம் பயன் பெற்று வருகின்றனர். நாம் நினைக்கும் நியாயமான ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால் மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்கள் அமைக்கப்படும். இந்தியா கூட்டணியின் ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
சமையல் எரிவாயுவிற்கு மானியம் வழங்குவதாக மோடி தெரிவித்தார். ஆனால் இதுவரை யாருக்கும் மானியம் வழங்கவில்லை. அவர் ஆட்சி பொறுப்பேற்ற பொழுது சமையல் எரிவாயுவின் விலை 410 ரூபாயாக இருந்தது, தற்பொழுது 1050 விற்கப்படுகிறது. நாம் ஆட்சிக்கு வந்தவுடன், சமையல் எரிவாயு 500 ஆகவும், பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.
தேர்தல் பத்திரங்களை கொண்டு வந்து சட்டப்படி ஊழல் செய்து கொண்டுள்ள கட்சி பாஜக, நடு இரவில் வீட்டிற்குள் புகுந்து கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு திருடுவது போல, நள்ளிரவில் அமலாக்க துறை அல்லது வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தி, அவர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியாக பெற்று கொள்கிறேன். அதே அவர்கள் பாஜகவில் சேர்ந்தால் அவர்கள் வைத்துள்ள பெரிய சலவை இயந்திரத்தில் போட்டு அவர்களை வெள்ளை ஆக மாற்றிவிடுகின்றனர். அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறைகளின் 90% வழக்குகள் எதிர்க்கட்சியினர் மீது பாஜக போட்டுள்ளது” என்று கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தம்பி அண்ணாமலை எனது வெற்றிக்காக பாடுபடுகிறார்; சீமான் பரப்புரையில் பேச்சு..
written by Abubakker Sithik
பாஜகவில் இருந்து கொண்டு எனது வெற்றிக்காக மறைமுகமாக பாடுபடுகிறார் அண்ணாமலை; கடையநல்லூரில் சீமான் பேச்சு..
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில், போட்டியிடும் வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடையநல்லூரில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது சீமான் பேசியதாவது, ஒரு காலம் வரும், நேர்மை என்பது உள்ளங்கையில் நெருப்புத் துண்டை வைப்பதற்கு சமமாக இருக்கும் என்கிறார் நபிகள் நாயகம். அந்த காலம் இந்த காலம் தான் என் அன்பு மக்களே. பணம் இருப்பவர்கள் தான் அரசியலுக்கு வரமுடியும், அதிகாரத்திற்கு செல்ல முடியும் என்கிற நிலை இருக்கும் வரைக்கும் ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கான சேவை என்பது கனவாகத்தான் இருக்கும். கேடுகட்ட பணநாயகமாக மாறி இருக்கிற இந்த நாட்டில் ஒரு தூய ஜனநாயகத்தை மலரச் செய்வதற்கான ஒரு புரட்சியாகத்தான் உங்கள் பிள்ளைகள் இந்த அரசியலை முன்னெடுக்கிறோம்.
ஜாதி மதம் கடந்த சமுத்திரம் நாங்கள். மனிதம் என்ற உயர்ந்த கோட்பாட்டை கொண்ட பிள்ளைகள் நாங்கள். உங்கள் வாக்குகளை ஒலிவாங்கி (மைக்) சின்னத்திற்கு அளித்து வெற்றி பெற செய்யுங்கள். நான் வைத்திருந்த விவசாயி சின்னத்தை எடுத்துக் கொண்டு என்னை வீழ்த்தி விடலாம் என கனவு கண்ட இந்த ஆட்சியாளர்கள். குறிப்பாக பாஜகவை சேர்ந்த என் தம்பி அண்ணாமலை. பாஜகவில் இருந்து கொண்டு மறைமுகமாக என் வெற்றிக்காக பாடுபடும் அவரை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
என்ஐஏ ரெய்டு மூலம் என்னை உலக அளவிற்கு உயர்த்தி சென்றவர் அவர். நான் வைத்திருந்த விவசாயி சின்னத்தை எடுத்து ஒலிவாங்கி (மைக்) சின்னத்தை கொடுத்து பாஜகவின் பீ டீம் நான் இல்லை என்பதை நிரூபித்த பெருந்தகை. அவருக்கு எனது அன்பையும், நன்றியையும் உரித்தாக்க கடமைபட்டுள்ளேன். என்னை மிகப்பெரிய தலைவனாக்க பாஜகவிலிருந்து போராடி கொண்டிருக்கிறார். எங்களின் இலக்கு இனத்தின் விடுதலை ஒன்றுதான். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் என் அன்பு தம்பி மதிவாணன் அவர்களுக்கு ஒலி வாங்கி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என பரப்புரையில் சீமான் குறிப்பிட்டார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த கடுமையான வெயிலின் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் கொளுத்திய நிலையில், இன்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மழை முதலில் மிதமாக பெய்தது. பின்னர் சுமார் 2 மணி நேரம் கனமழையாக பொழிந்தது.தூத்துக்குடி நகர் பகுதியான முத்தையாபுரம், பழைய காயல், ஆறுமுகநேரி, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக இந்த பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. கடந்த 2 நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் அடித்த நிலையில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று காலை பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த கோடை மாதங்களில் தான் உப்பு உற்பத்தி தாராளமாக நடைபெறும். ஆனால் இந்த நேரத்தில் மழை பெய்துள்ளதால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பெய்துள்ள மழையின் காரணமாக அடுத்த 10 நாட்களுக்கு உப்பு உற்பத்தி பணியை மேற்கொள்ள முடியாது என உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.அதேநேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையாக அவதிக்குள்ளான மக்கள் இன்று பெய்த கனமழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேல தட்டப்பாறை, கீழ தட்டப்பாறை, தளவாய்புரம், வாகைகுளம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் 40 மில்லிமீட்டரும், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 28 மில்லிமீட்டரும் மழை பெய்தது.தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. கருப்பாநதியில் 13 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. அதே நேரத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன் கோவில், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல் வெயில் அடித்தது.நெல்லையில் நேற்று மதியம் திடீரென சாரல் மழை பெய்தது. வண்ணார்பேட்டை, சந்திப்பு, பாளை, சமாதானபுரம், மார்க்கெட் பகுதி, பாளை பஸ் நிலைய பகுதிகளில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் சிறிது நேரம் குளிர்ந்த காற்று வீசியது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பாடல்களை வெளியிட்டு, பேட்டி அளித்த செல்வப் பெருந்தகை..
by Askar
written by Askar
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பாடல்களை வெளியிட்டு, பேட்டி அளித்த செல்வப் பெருந்தகை..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு..
by Askar
written by Askar
பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்த தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் மகாகத்பந்தன் கூட்டணியும் முதன்மையான அணிகளாக உள்ளன.இந்தியா கூட்டணிக்கு முக்கிய காரணமான பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், சமீபத்தில் அந்தக் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.இதையடுத்து ராஷ்டிரீய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் அணியில் தற்போது காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்காக ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது.இந்நிலையில், பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம் 26-ல் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 9 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிபிஐ எம்.எல். கட்சிக்கு 3 தொகுதிகளும், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்..
by Askar
written by Askar
தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார்-யார் என்ற விவரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பட்டியலிடப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றுபவர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றுபவர்கள் என இருவகைப்படுத்தி அவர்களுக்கு அதற்கேற்ப பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீசை பெற்றுக்கொண்டுள்ள அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு விடுமுறை எடுத்ததாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.
தேர்தல் பணி பயிற்சிக்கு வராதோருக்கு நாளை மீண்டும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பேரிடர் காலங்களில் ஆடு, மாடு போன்றவற்றை இழந்து நிற்கும் நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது!- சீமான்..
by Askar
written by Askar
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-இந்த தேர்தலில் வெற்றி என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல. உங்கள் பிள்ளைகள் எங்களின் வெற்றி என்பது வரலாற்றிலே மாபெரும் புரட்சி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும்.ஒன்றிய அரசு மாநிலத்தின் மொத்த வருமானத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, மாநிலங்கள் மீது அதிகாரத்தை செலுத்த முயலுகின்றது. அதிகாரம் பரவலாக வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கம்.மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தின் தன்னாட்சி என்பதுதான் நம்முடைய இலக்கு. இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.அப்படியென்றால் இந்தியாவை யார் ஆள்வது என்ற கேள்வி எழுகிறது. வெற்றி பெறும் மாநிலக் கட்சிகள் சுழற்சி முறையில் இந்தியாவை ஆள வேண்டும். அதுதான் மிகச்சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.பேரிடர் காலங்களில் ஆடு, மாடு போன்றவற்றை இழந்து நிற்கும் நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது.இது மற்றவர்களுக்கு தேர்தல் களம், நமக்கு போர்க்களம். இந்த போர்க்களத்தில் அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன் என வேறுபாடு பார்க்க கூடாது. உடலோடு ஒட்டிப்பிறந்த அண்ணன், தம்பியாக இருந்தால் கூட லட்சியத்திற்காக வென்றால் வெட்டி வீசுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். பெற்ற தாய் தந்தையரே வந்தால் கூட எதிரிகள் தான்.காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
(உஸ்மானிய பேரரசு -29)
(கி.பி 1299-1922)
முஸ்லீம்களுக்குள்ளே
ஏற்பட்ட கொள்கை குழப்பங்களால் ஐரோப்பா மகிழ்ச்சி அடைந்தது.
குறிப்பாக ஈரான் சியா கொள்கையை
பின்பற்றியதால் சுன்னி கொள்கையுடைய
உஸ்மானிய பேரரசை எதிர்த்தது.
ஈரானிற்கு ஐரோப்பிய நாடுகள்
பலவகையான ஆயுதங்களை கொடுத்து உஸ்மானிய
பேரரசிற்கு
எதிராக போர்களை தூண்டியது.
இதுபோன்ற இடைவிடாத பிரச்சினைகளால் உஸ்மானிய பேரரசு அமைதியிழந்து இருந்தது.
இந்த சூழலில் சுல்தான் சலீம் தனது 56 ஆவது வயதில் மரணமடைந்தார்.
அவரைத் தொடர்ந்து
உலகத்தின் கவனத்தை ஈர்த்த சுலைமான் அல் கானூனி அவர்கள் பேரரசராக பதவி ஏற்றார்.
இவரின் ஆட்சியில் உஸ்மானிய அரசு பேரரசாக மட்டுமில்லாமல் வல்லரசாக மாறியது.
இவர் சிறந்த மார்க்க அறிஞராகவும்,
போர் கலையில் வல்லுநராகவும், இருந்தார்.
இவர் இஸ்லாமிய கல்வியையும்,
உலகம்சார்ந்த கல்வியையும்,
ஒருங்கிணைத்து
சிறந்த கல்விமுறையை ஏற்படுத்தினார்.
இதன் பலனாக ஒழுக்கம்,இறைநேசம்
மார்க்கபற்று, உலகின் அன்றைய அறிவுசார்ந்த விஷயங்கள் என கல்விகற்ற மாணவர்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திட்டனர்.
இதனால் கல்வி புரட்சி ஏற்பட்டது.
கல்வியில் பல ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்தனர்.
பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு
அடித்தளம் அமைக்கப்பட்டது.
அந்த நிலையில் ஐரோப்பா மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது.
முஸ்லீம்களின் முகவரியாக துருக்கி இருந்ததால் ஐரோப்பியர்கள் முஸ்லீம்களை துருக்கியர்கள் என்று அழைத்தனர்.
உஸ்மானிய பேரரசின் கடற்படை மிகவும் வலுவாக கட்டமைக்கப்பட்டது.
ஏராளமான போர்க்கப்பல்கள் இருந்தன.
முஸ்லீம்கள் சிறுபான்மையினராக
இருந்ததால், ஆட்சியிலிருந்த சுலைமான் அல் கானூனி அவர்கள் தூர நோக்கு சிந்தனையோடு அற்புதமான திட்டம் ஒன்றை செயல்படுத்தினார்.
பெரிய கிறிஸ்தவ குடும்பங்களிலிருந்து
குழந்தைகளை அரசாங்கமே தத்தெடுத்து, அவர்களுக்கு கல்வி, ஒழுக்கம், கலாச்சாரம் என்று பாடங்கள் போதிக்கப்பட்டது.
படித்து வெளிவந்த அவர்களையே அரசின் நிர்வாகங்களில் அதிகாரிகளாக நியமனம் செய்தனர்.
இதனால் பேரரசர் நினைத்தபடி அரசாங்கத்தை எளிதாகவும்,
விசுவாசமாகவும், செயல்படுத்த முடிந்தது.
கிறிஸ்தவ இளவரசிகளை தகுதிக்கேற்ப திருமணங்கள் செய்து கொண்டனர்.
இதனால் மிகப்பெரிய இரண்டு சமூகங்கள் ஒன்றிணைந்ததால் ஆட்சியை சிறப்பாக நடத்த முடிந்தது
அரசு நிர்வாகங்கள் மிகச்சிறந்த முறையில் இயங்கியது.
இதனால் பேரரசரின்
திட்டங்களை எளிதாக செயல்படுத்தினர்.
வரிகள் மிகக்குறைவாக வசூலிக்கப்பட்டன.
ஜகாத் போன்ற முஸ்லீம்களிடம் கட்டாயமாக வாங்கப்பட்ட
பொருளாதாரமும்,
மற்ற சமூக மக்களிடம்
மற்ற நாடுகளைவிட
ஜகாத்தை விட குறைவாக வசூலிக்கப்பட்ட பொருளாதாரமும்
இஸ்லாமிய பேரரசுகளை பொருளாதார வலிமை மிக்கதாக ஆக்கியது.
இது ஒரு புரட்சிகரமான
ஒன்றிணைந்த பொருளாதார திட்டமாக இஸ்லாமிய
ஆட்சியாளர்களால்
செயல்படுத்தப்பட்டது.
அப்பாஸிய ஆட்சியில்
பாக்தாத் நகரை தீக்கிரையாக்கிய
செங்கிஸ்கானின் வாரிசுகள் அற்புதமான அறிவுப் பொக்கிசங்களான
புத்தகங்ளையும்
தீயிட்டு கொளுத்தினர்.
பாக்தாதின் யூப்ரடீஸ் டைகிரிஸ் நதிகளில்
கொட்டப்பட்ட புத்தகங்களால் நதிகளே பல மாதங்கள்
கருப்படைந்து ஓடியதாக வரலாறு கூறுகிறது.
இதனால் இஸ்லாமிய சட்ட நூல்கள் எல்லாம் இல்லாமல் ஆயின.
புதிய புதிய பிரச்சினைகளுக்கு
இஸ்லாமிய சட்டப்படி விளக்கங்கள் கொடுக்க மிக சிரமமான சூழல் உருவானது.
சுலைமான் அல் கானூனி அவர்களின் மறுமலர்ச்சி சிந்தனைகள் ஆச்சரியமான
வைகளாக
இருந்தன.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜபாளையம் அருகே ஒரு கோடியே 32 லட்சத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை..
written by Abubakker Sithik
ராஜபாளையம் அருகே ஒரு கோடியே 32 லட்சத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை..
ராஜபாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வங்கியில் இருந்து கொண்டு வந்த வசூல் பணம் ரூபாய் ஒரு கோடியே 32 லட்சத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் முகவூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஆண்டாள் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்த தனியார் பணம் நிரப்பும் வாகனத்தை சோதனை செய்தனர். வாகனத்தில் ஒரு கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் பணம் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. விசாரணையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு பணத்தை கொண்டு செல்வதாக பாலமுருகன் கூறியுள்ளார். ஆனால் பணம் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் வட்டாட்சியர் ஜெயபாண்டியிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூபாய் பத்து லட்சத்திற்கும் அதிகம் என்பதால் இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் பேச்சு..
written by Abubakker Sithik
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியதாவது, வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும். நம்மைப் போன்ற சாதாரணமான ஆட்களும் பாராளுமன்றத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணத்தில் ராணி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இந்தியாவுடைய தலையெழுத்தை மாற்றி ஆக வேண்டும். மீண்டும் மோடி வந்தால் நமது தலையெழுத்தை அவர் மாற்றி விடுவார். அவர் திரும்பி வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஒருவேளை வந்து விட்டால் தேர்தல் இருக்காது. அவர் மட்டும் தான் இருப்பார். நாம் வாய் திறந்து கூட பேச முடியாது. அப்படி ஒரு சூழல் இந்தியாவுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்தியா கூட்டணி உருவாக்கி மோடியை எதிர்க்கிறோம். நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி அப்படியே உள்ளது. எம்எல்ஏ தேர்தல், ஊராட்சி தேர்தலிலும், எம்பி தேர்தலிலும் நமது கூட்டணி வலுவாக இருக்கிறது. அதற்கு காரணம் தளபதி ஸ்டாலின் அவர்கள். அனைவரையும் அனுசரித்து, மனம் கோணாமல், அனைவரும் தேவையை பூர்த்தி செய்து வருகிறார். மோடியை தோற்கடிக்க வேண்டுமே தவிர நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்று பாரபட்சம் இன்றி இந்த கூட்டணியில் உள்ள அனைவரும் சமம் என்று நினைத்து பணியாற்ற வேண்டும்.
நமது கூட்டணி ஆட்சி மத்தியில் வரவேண்டும் என்றால் இன்னும் அதிகம் பணியாற்ற வேண்டும். தென்காசி பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் ராஜபாளையம் தொகுதியில் தான் அதிக வாக்கு வாங்க வேண்டும். அது தான் மரியாதை. எம் எல் ஏ, நகராட்சி சேர்மன், ஊராட்சி சேர்மன் அனைவரும் திமுகவினராக இருப்பதால் இந்த தொகுதியில் அதிக வாக்குகள் திமுகவுக்கு பெற்றுத் தர வேண்டும். நமது சொந்த வேலைகளை 15 நாட்கள் ஒத்தி வைத்துவிட்டு கட்சி பணியாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தேர்தல் வாக்குறுதி குறித்து மிக எளிமையான முறையில் துண்டு பிரசுரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதை பொதுமக்களுக்கு எளிய முறையில் புரிய வைக்க திமுகவினர் முயற்சி எடுக்க வேண்டும்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அலங்காநல்லூர் பகுதியில் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா செய்ததால் பரபரப்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன் கிராமம் கிராமமாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரச்சாரம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அதிமுக நிர்வாகிகள் தலா நூறு ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளவர் நாராயணசாமி. இவர் தேனி நாடாளுமன்ற தொகுதி சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் கிராமம் கிராமமாக சென்று தனக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் குமாரம் எனும் இடத்திலிருந்து தனது பிரசாரத்தை துவக்கிய நாராயணசாமி கோட்டைமேடு, கல்லணை, அலங்காநல்லூர் என பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது கல்லணை கிராமத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பிரச்சாரம் முடிந்து கிளம்பியவுடன் அங்கிருந்த அதிமுக நிர்வாகி ஒருவர் பெண்களை வரிசையில் நிறுத்தி தலைக்கு ரூபாய் நூறு வீதம் பணப்பட்டுவாடா செய்தார். வீடியோ எடுப்பது கூட தெரியாமல் அவர் தீவிரமாக பண பட்டுவாடாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரச்சாரத்தில் 5 வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டிய நிலையில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நான் ஏன் சசிகலா காலில் விழுந்தேன்! பரபர விளக்கம் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..
by Askar
written by Askar
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன. அனைத்து கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடுகளை முடித்துவிட்டு, தற்போது தலைவர்கள், சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர்.
மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் சரவணனுக்கான தேர்தல் பணிமனை அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மருத்துவர் சரவணன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி; தமிழகம் – புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி அதிமுக. கூட்டணியில் இருந்தால் விமர்சிக்க மாட்டோம்.
கூட்டணியில் இருந்து விலகி வெளியே வந்தபிறகு மக்கள் நலத்திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் விமர்சிப்போம். எங்களை நம்பி யார் கூட்டணி வைத்தாலும் கடைசி வரை நாங்கள் விசுவாசமாக இருப்போம். தமிழகத்துக்கு எதிரான திட்டங்கள் இருந்தால் கண்டிப்பாக விமர்சிப்போம். செய்தியாளர் கேட்ட பல கேள்விகளுக்கு தன் மீது குற்றம் சுமத்தியர்வர்களிடம் தான் கேட்க வேண்டும் என பிரச்சாரத்தின்போது மோடி, ஒன்றிய அரசை விமர்சனம் செய்யாதது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதிலளித்தார். ஜனநாயக நாட்டில் எல்லோரும் சமம், யார் வேண்டுமானலும் தேர்தலில் நிற்கலாம்.
தகுதி இருப்பதால்தான் ராமநாதபுரத்தில் 5 பன்னீர்செல்வம் போட்டியிடுகின்றனர். எத்தனை பன்னீர்செல்வம் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது நான் எடுத்த முடிவு அல்ல, 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; யார் களமிறங்கினாலும் ஒட்டு மக்கள்தான் போட வேண்டும் என தமிழ்நாட்டில் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் தேர்தலில் நிற்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். “பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே. நான் என்ன 3வது மனுஷன் காலிலா விழுந்தேன்..? என சசிகலா காலில் விழுந்தது குறித்து விளக்கம் அளித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி..
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மக்களவை பொதுத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சியில் இருசக்கர வாகன பேரணியும், மனிதச்சங்கிலி பேரணியும், ஆய்க்குடி பேரூராட்சியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதி மொழி எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியும், தென்காசி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் வாக்காளர்கள் விழிப்புணர்வு கோலங்கள் வரைதல் நிகழ்ச்சியும், கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணியும், முந்தைய தேர்தலில் (2019) குறைவான வாக்குப்பதிவு உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவினை அதிகரிப்பதற்காக கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் பழங்குடியின வாக்காளர்கள் தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும், செங்கோட்டை வட்டார பொதுமக்கள் தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள் வரைந்து உறுதி மொழி எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியும், சங்கரன்கோவில் வட்டார பொதுமக்கள் தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள் வரைதல், தெருக்களில் விளக்கேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சியும், குருவிகுளம் வட்டார பொதுமக்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலங்கள் வரைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியும், கீழப்பாவூர், பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் தெருக்களில் விளக்கேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாநில அளவில் சராசரிக்கு குறைவாக வாக்குச்சாவடிகளில் தினந்தோறும் உள்ள 50 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவினை அதிகரிப்பதற்காக ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ரங்கோலி வரைதல், உறுதிமொழி ஏற்றுக்கொள்ளுல், மற்றும் கையெழுத்து இயக்க முகாம்கள் நடைபெற்று வருகிறது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 05 நபர்கள் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி. அதிரடி நடவடிக்கை..
written by Abubakker Sithik
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 05 நபர்கள் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி. அதிரடி நடவடிக்கை..
கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்தபாஞ்சான், தாழையூத்து மற்றும் ராம்நகர் பகுதிகளில் பேட்டரிகள், மின் வயர்கள், நீர்மூழ்கி மோட்டார்கள் மற்றும் ஆடுகள் என தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P. சுரேஷ்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் கடையம் காவல் துறையினர் மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை செய்து வந்தனர்.
மேற்படி குற்ற செயல்களை தொடர்ந்து செய்து வந்த சுடலைஒளிவு @சுடலை (36) மேலக்குத்தப்பாஞ்சான், பரமசிவன் (36) மலையான்குளம், முருகன் (44) அம்மன் கோவில் தெரு மேலக்குத்தப்பாஞ்சான், இசக்கிராஜ் (34) தெற்குத்தெரு மேலக்குத்தப்பாஞ்சான், மாடக்கண் செல்வம்(28) தெற்குத்தெரு மேலக்குத்தப்பாஞ்சான் ஆகிய ஐந்து நபர்களை கைது செய்து தென்காசி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை; 26 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு..
written by Abubakker Sithik
தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை; 26 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு..
தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா தலைமையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் முன்னிலையில் நடந்தது. இதில் 37 வேட்பு மனுக்களில் 26 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 11 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு 28.03.2024 அன்று வேட்பு மனு பரிசீலனை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி 37 (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா, தலைமையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் முன்னிலையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 20.03.2024 முதல் 27.03.2024 வரை நடைபெற்றது. வேட்புமனு தாக்கலின் போது 29 வேட்பாளர்கள் 37 வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை நேற்று நடைபெற்றது. பெறப்பட்ட 37 வேட்பு மனுக்களில் 26 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 11 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் 19 வேட்பாளர்கள் போட்டியிட தகுதியானவர்கள்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாஜகவின் தேர்தல் பத்திர முறைகேடு உலகிலேயே மிகப்பெரிய ஊழல்: பகீர் கிளப்பிய நிர்மலா சீதாராமனின் கணவர்..
by Askar
written by Askar
ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.
மேலும், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை SBI வங்கி வெளியிடவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முதலில் இதற்கு காலஅவகாசம் கேட்ட SBI உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து அந்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அந்த அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட்டது.
இந்த அறிக்கையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம் வெளியானது. அதில் பாஜகவுக்கே அதிக நன்கொடை சென்றதும் உறுதியானது. அதனைத் தொடர்ந்து யார் யார் எந்த அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது குறித்த விவரத்தையும் SBI வெளியிட்டது
இந்த நிலையில், தேர்தல் பத்திர முறைகேடு உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் கூறியுள்ளார். பொருளாதார நிபுணராக பரகலா பிரபாகர், தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக அரசு ஊழல் செய்துள்ளது. இது இந்தியாவில் மட்டும் அல்ல, உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர்
வரும் காலத்தில் தேர்தல் பத்திர விவகாரம் இன்று இருப்பதை விட அதிக வேகம் பெறும். இது ஒரு முக்கிய பிரச்னையாக மக்கள் புரிந்துகொள்வார்கள். நடக்கவிருக்கும் தேர்தல் இந்தியா கூட்டணி – பாஜக இடையேயானது அல்ல. நடக்கும் தேர்தல் பாஜக – இந்திய மக்களுக்கு இடையேயானது. பாஜக அரசை இந்தியி மக்கள் தண்டிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பானை சின்னம் கேட்டு டெல்லி ஐகோர்ட் கதவை தட்டிய விசிக! ஏப்ரல் 1-ந்தேதி விசாரணை..
by Askar
written by Askar
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரத்தில் போட்டியிடுகிறது. தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி அந்த கட்சி தேர்தல் கமிஷனை நாடியது. இந்த விண்ணப்பம் கடந்த 20.2.2024 அன்று அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தேர்தல் கமிஷனுக்கு இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி சச்சின் தத்தா விசாரித்து, இதுகுறித்து உடனடியாக முடிவு எடுத்து அறிவிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. ஆனால் பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மீண்டும் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி சச்சின் தத்தா ஏப்ரல் 1-ந்தேதி விசாரிக்கிறார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஐ.பி.எல். 2024: வார்னர், ஸ்டப்ஸ் போராட்டம் வீண்!- 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி..
by Askar
written by Askar
17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , பட்லர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சாம்சன் 15 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து பட்லர் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் ரியான் பராக் , அஸ்வின் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். அதிரடியாக ஆடிய அஸ்வின் 29 ரன்களுக்கு வெளியேறினார் . மறுபுறம் அதிரடி காட்டிய ரியான் பராக் அரைசதமடித்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி185 ரன்கள் எடுத்தது. ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியில் களமிறங்கினர். இதில் மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில் 23 ரன்கள் அடித்த நிலையில் பர்கர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ரிக்கி புய் சந்தித்த 2-வது பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் வார்னருடன் கேப்டன் பண்ட் கை கோர்த்தார். இருவரும் இணைந்து அணியை மீட்க போராடினர். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். வார்னர் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே ரிஷம் பண்டும் அவுட்டானார். அதோடு டெல்லி அணியின் நம்பிக்கையும் தகர்ந்தது.
இறுதி கட்டத்தில் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் அந்த ஓவரை வீசிய ஆவேஷ் கான் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் டெல்லி அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் திரில் வெற்றியை பதிவு செய்தது.
டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக வார்னர் 49 ரன்களும், ஸ்டப்ஸ் 44 ரன்களும் அடித்தனர். ராஜஸ்தான் தரப்பில் பர்கர் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினர். நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; தவறான சிகிச்சை அளித்ததாக தனியார் மருத்துவமனை கண்ணாடிளை அடித்து நொறுக்கிய மாணவர்கள்..
by Askar
written by Askar
விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; தவறான சிகிச்சை அளித்ததாக மருத்துவமனை கண்ணாடிளை அடித்து நொறுக்கிய மாணவர்கள்..
மதுரை சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் வயது 17 இவர் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரும் சக மாணவர் ஒருவரும் காலை கல்லூரிக்கு செல்வதற்காக அச்சம்பத்து வழியாக சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்கள் .விபத்தில் சிக்கிய இரண்டு மாணவர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சையில் இருந்த மாணவன் ஹரிஹரன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.இந்த தகவல் அறிந்த சக மாணவர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் குவிந்தனர். மாணவர்கள் மற்றும் மருத்துவ நிர்வாகம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் தள்ளுமுள்ளு ஏற்படவே அதில் முகப்பு கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் விரைந்து வந்து சக மாணவர்களை சமாதானப்படுத்தி இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தனியார் மருத்துவமனை தவறான சிகிச்சை அளித்ததாலேயே உயிரிழந்ததாக உறவினர்களும் சக மாணவர்களும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். உரிய முறையில் விசாரணை நடத்தி தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த சம்பவத்தால் சுமார் 2 மணி நேரம் பைபாஸ் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.