தஞ்சாவூர் விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாஜகவில் இணைந்து விட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி குறித்து சம்மந்தப்பட்ட விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராசாத்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் :- கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சாவூர் மைய மாவட்ட மகளிர் அணி செயலாளரான ராசாத்தி , பாஜக பிரமுகர் ஒருவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல் வெளியானது அதனைத் தொடர்ந்து விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராசாத்தியிடம் இது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது, நான் எனது நண்பர் ஒருவரது வீட்டிற்கு அவரது குடும்ப பிரச்சினை குறித்து பேசுவதற்காக சென்றிருந்தேன். அப்போது அவருடைய நண்பரான பாஜக பிரமுகர் ஒருவரும் அந்த பிரச்சினை குறித்து பேசுவதற்காக அவரது வீட்டிற்கு வந்திருந்தார். அந்த குடும்ப பிரச்சினை குறித்து பேசி முடித்ததும் வந்திருந்த பாஜக பிரமுகர் எனக்கு மரியாதை நிமித்தமாக சால்வை அணிவிப்பதாக கூறி அணிவித்தார். அவர் அணிவித்த பின்னர் கவனித்தபோது அதில் பாஜக சின்னம் இருப்பதை கண்டவுடன் நான் அந்த சால்வனை அவரிடம் திரும்ப கொடுத்து விட்டு நான் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பில் இருக்கக் கூடியவர் எனக்கு உங்கள் கட்சியின் சின்னம் கொண்ட சால்வை அணிவித்தது வருத்தம் அளிக்கிறது என்று கூறினேன். அவரும் எனக்கு தெரியாது நீங்கள் விசிகவை சேர்ந்தவர் என்று கூறி வருத்தம் தெரிவித்து சென்று விட்டார் பின்னர் எனக்கு பாஜக பிரமுகர் சால்வை அணிவித்த புகைப்படத்தோடு நான் பாஜகவில் இணைந்து விட்டதாக வாட்ஸ் அப்பில் செய்திகள் வெளியானது. அந்த செய்தி வெளியிடப்பட்ட போது நான் எனது கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆணையின்படி கூட்டணி கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தேன் . பின்னர் அந்த செய்தி குறித்து பாஜக பிரமுகரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , தவறாக செய்தி வெளியிடப்பட்டது என்றும் உடனடியாக அந்த பதிவினை அழித்து விடுவதாக கூறி அழித்தும் விட்டார் . இது குறித்து வருத்தம் தெரிவித்து எனக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பி இருந்தார். இந்த ஊடகத்தின் மூலம் எனது சக கட்சி தொண்டர்களுக்கும் , கட்சியின் தலைமைக்கும் நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் இன்று வரை நான் விசிகவில் மட்டுமே இணைந்து செயலாற்றி வருகின்றேன் இனி என்றென்றும் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் கொள்கையின்படியும் இறுதி வரை விசிகவில் தொடர்ந்து பயணிப்பேன் என்றும் கூறிக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
Category:
மாநில செய்திகள்
தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் சிலம்ப கலைகளை வெளிக்காட்டி விழா !
by Baker BAker
written by Baker BAker
தஞ்சாவூர் வின்னர் மல்டி மியுரல் அகாடமி தற்காப்பு கலை பன்னாட்டு பயிற்சி பள்ளி மற்றும் ரெங்கநாயகி கல்வி மற்றும் கொண்டு அறக்கட்டளை, அருள்மொழி கலை இளையோர் மன்றம் நேரு யுவகேந்திரா இணைந்து நடத்தும் சிலம்பம் அரங்கேற்றம் மற்றும் மாராயப் பட்டைகள் வழங்கும் விழா தஞ்சை அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது, தஞ்சாவூர் சிலம்ப சங்க செயலாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சுப்ரீம் கிராண்ட் மாஸ்டர் அருணாச்சலம், ஸ்டார் லயன் கல்வி நிறுவன முதல்வர் மில்டன் ராஜ், ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் மாராயப் பட்டைகளை வழங்கினர், முன்னதாக இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாள்வீச்சு, ஒற்றைவாள், இரட்டைவாள், சுருள்வீச்சு, மான்கொம்பு,சக்கர பானம், ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, அலங்கார பாடம், குத்துவரிசை ஆகிய தற்காப்பு கலைகளை செய்து காட்டி தங்களது திறமைகளை வெளிக்காட்டினர், இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் சங்கீதா செய்திருந்தார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியா கூட்டணி நெல்லை தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு விழா..
இந்தியா கூட்டணியின் நெல்லை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு விழா இன்று காலை நெல்லை பைபாஸ் சாலையில் மத்திய மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் திறந்து வைத்தார்.
மத்திய மாவட்ட செயலாளர் டிபிஎம் மைதீன் கான், தென்காசி மாவட்ட செயலாளர் ஜெயபாலன், வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ஞானதிரவியம் M.P. பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் MC மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட, பகுதி, நகர, நிர்வாகிகள் மற்றும் முன்னாள் MPக்கள் விஜிலா சத்தியானந் ஹெலன், இந்தியா கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம், சிபிஎம் மாவட்ட செயலாளர் ராம், சிபிஐ மாவட்ட செயலாளர் சடையப்பன், காசி விஸ்வநாதன், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எல்.கே.எஸ்.மீரான் மைதீன், பாட்டபத்து முகம்மது அலி, விசிக மாவட்ட செயலாளர்கள் எம்.சி.சேகர், முத்து வளவன், உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வத்தலக்குண்டு தனியார் மஹாலில் சமத்துவ நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பு..
by Askar
written by Askar
வத்தலக்குண்டு தனியார் மஹாலில் சமத்துவ நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பு..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் வத்தலக்குண்டுவில் நடத்திய சமத்துவ நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும்நிகழ்ச்சி நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்பின் போது மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் அனைத்து மதத்தினர் மற்றும் அனைத்து கட்சியினர் ஒன்றிணைந்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி , தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் உள்பட பல்வேறு கட்சியினர் மற்றும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பா.ஜ.க வேட்பாளர் நடிகை ராதிகாவின் வெற்றிக்காக துவா ஓதி, சர்ச்சையை கிளப்பிய விருதுநகர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்..
by Askar
written by Askar
பா.ஜ.க வேட்பாளர் நடிகை ராதிகாவின் வெற்றிக்காக துவா ஓதி, சர்ச்சையை கிளப்பிய விருதுநகர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
(உஸ்மானிய பேரரசு -30)
(கி.பி 1299-1922)
சுலைமான் அல்கானூனி அவர்கள் இஸ்தான்புல் நகரில் சுலைமானியா மஸ்ஜித் என்ற ஒரு அற்புதமான பள்ளிவாசலை கட்டினார்.
அந்த பள்ளிவாசலின் வளாகத்திற்குள்
ஒரு ஆரம்ப பள்ளிக்கூடம்,
ஒரு மேல்நிலைப்பள்ளி,
ஒருபல்கலைக்கழகம்,
ஒரு மருத்துவமனை
ஒரு
மருத்துவக்கல்லூரி,
வெளியூர்க்காரர்கள்
தங்க ஒரு இலவச தங்குமிடம்,
என்று ஒரு சிறந்த கட்டமைப்பை உருவாக்கினார்.
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் மஸ்ஜித் நபவி பள்ளிவாசலை
எப்படி கட்டமைத்தார்களோ
அதேபோல சுலைமான் அல்கானூனி அவர்கள் சுலைமானியா மஸ்ஜிதை கட்டமைத்தார்.
சுலைமானியா பள்ளிவாசலில் பணியாற்றும் இமாம்
குர்ஆன்,ஹதீஸ், ஒளியில் புதிய சட்டங்களை பிரித்து அறிந்து உருவாக்குவது,
மற்ற வேதங்களில் அறிவு,
அன்றைய சில உலக மொழிகளில் புலமை,
விஞ்ஞானம், கணிதம், மொழியியல்
இவற்றில் புலமை உடையவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
பேரரசு முழுவதும் இதுபோன்ற தகுதிகளில் ஒரு ஆலிமை கூட தேடிப்பிடிக்க முடியவில்லை.
சுலைமான் அல்கானூனி அவர்கள் இதுபோன்ற
தகுதிகளை உள்ளடக்கிய ஆலிம்களை சுலைமானியா மஸ்ஜிதின் பல்கலைக்கழகத்தில் உருவாக்க ஏற்பாடுகள் செய்தார்.
சட்டங்களை உருவாக்க பேரரசர் சுலைமான் எடுத்த முயற்சி இவருக்கு கானூனி என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்தது.
சுலைமான் அல் கானூனி அவர்கள் ஆறு மொழிகளில் புலமை பெற்று இருந்தார்.
சுலைமான் கானூனி அவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மிகச்சிறந்த முக்கிய மன்னராக கருதப்பட்டார்.
பேரரசர் சுலைமான் அல் கானூனி அவர்களின் தலைமையில் சென்ற படைகள் ஏராளமான கிறிஸ்தவ கோட்டைகளை கைப்பற்றின.
சுலைமான் அல் கானூனியின் கடற்படை மத்திய தரைக்கடல்,
செங்கடல்,பாரசீக வளைகுடா என எல்லா பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தியது.
சுலைமான் அல்கானூனி அவர்கள் நீதித்துறையில் மாற்றங்களை தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தினார்.
உஸ்மானிய பாரம்பரியத்தை மீறி சுலைமான் அவர்கள் ஹர்ரெம் சுல்தான்
என்ற கிறிஸ்தவ பெண்ணை மணந்தார்.
ஆனால் அவர் முஸ்லீமாக மாறினார்.அவர் தனது சிவப்பு நிற கூந்தலால் மேற்கு ஐரோப்பாவில் ரோக்ஸெலானா
என்ற பெயரில் பிரபலமானார்.
சுலைமானின் மகனான முஹம்மது பெரியம்மை நோயால் இறந்தார்.
சுலைமானின் மற்றொரு மகனான
முஸ்தபா பேரரசில் குழப்பங்கள் ஏற்படுத்தியதால் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
பிறகு மற்றொரு மகனான பயாஸித் பேரரசில் குழப்பங்கள் ஏற்படுத்தவே அவரது நான்கு மகன்களுடன்
தூக்கிலிடப்பட்டார்.
பேரரசின் ஆட்சியில் குழப்பங்களை ஏற்படுத்துபவர்களை
மன்னர்கள் ஒருபோதும் மன்னிப்பதில்லை.
ஆட்சியை சிறப்பாக நிர்வாகம் செய்ய இதுபோன்ற தண்டனைகளை
மன்னர்களும், அவர்களின் சட்டங்களும், ராஜதந்திரங்களாக
நியாயப்படுத்திவிட்டு
கடந்து செல்கின்றன.
மிகச்சிறந்த பேரரசராக வரலாற்றில் அறியப்பட்ட சுலைமான் அல்கானூனி அவர்கள் ஹங்கேரிக்கு படையெடுத்து சென்றபோது அந்த விபரீதம் நிகழ்ந்தது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேர்தல் பத்திரங்கள் சட்டம் ரத்து செய்வதற்கு 3 நாடகளுக்கு முன், சுமார் ரூ.10,000 கோடிக்கு பத்திரங்களை அச்சடிக்க அனுமதி வழங்கிய ஒன்றிய அரசு..
by Askar
written by Askar
தேர்தல் பத்திரங்கள் சட்டம் ரத்து செய்வதற்கு 3 நாள்களுக்கு முன், சுமார் ரூ.10,000 கோடிக்கு பத்திரங்களை அச்சடிக்க அனுமதி வழங்கிய ஒன்றிய அரசு..
தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்வதற்கு 3 நாட்களுக்கு முன்பு, தலா 1 கோடி ரூபாய் மதிப்பிலான 10,000 தேர்தல் பத்திரங்களை அச்சிட நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 15 அன்று தேர்தல் பத்திர சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த 15 நாள்களுக்குப் பிறகே, பத்திரங்களை அச்சிடுவதை நிறுத்தும்படி SBI வங்கியிடம் நிதி அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.
இருப்பினும் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகம், ஏற்கனவே 8,350 பத்திரங்களை அச்சடித்து SBI-க்கு அனுப்பியிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தான் மீதமுள்ள 1650 பத்திரங்களை அச்சிடுவதை உடனடியாக நிறுத்துமாறு நிதி அமைச்சகம் உத்தரவு வழங்கியிருக்கிறது.
RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இந்த விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், வாக்காளர்களின் அச்சத்தை போக்கும் விதமாக, காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதில் மேலதாளங்கள் முழங்க காவல் துறையினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக செல்வது வழக்கம். அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி வாசுதேவநல்லூர் பகுதியில் நடந்தது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களை எச்சரிக்கும் விதமாகவும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P..சுரேஷ்குமார் நேரடி கண்காணிப்பில், 29.03.2024 அன்று வாசுதேவநல்லூர் பகுதிகளில் RPF வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இதில் காவலர்கள் மற்றும் RPF வீரர்கள் முக்கிய வீதிகளில் மேலதாளங்கள் முழங்கிட ஊர்வலமாக சென்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை மாநில தேர்தல் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து முழுவீச்சில் கண்காணித்து வருகின்றனர்..
by Askar
written by Askar
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை செய்ய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார்.இதன்படி தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, வடசென்னை கூடுதல் கமிஷனர் அஷ்ராகார்க் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.சென்னையில் 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஓட்டு போடுவதற்கு 3,719 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 579 வாக்குச்சாவடிகள் பதட்டமான சாவடிகள் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சாவடிகள் அனைத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநிலம் முழுவதும் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 200 கம்பெனி துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களில் 16 கம்பெனியை சேர்ந்தவர்கள் சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் சென்னைக்கு இதுவரை 2 கம்பெனி துணை ராணுவ படையினர் மட்டுமே வந்து உள்ள நிலையில் மீதமுள்ள 14 கம்பெனி படையினரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வர உள்ளனர்.தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் படிப்படியாக சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படி 200 கம்பெனி துணை ராணுவ படையினர் அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் வந்து விடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளாக பிரிந்து பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.மோட்டார் சைக்கிள்கள், கார்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களிலும் கடந்த 16-ந்தேதி முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையில் இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.43 கோடியே 6 லட்சம் பணம் பிடிபட்டுள்ளது. 2 கோடிக்கும் அதிகமான மதுபான வகைகள் மற்றும் 60 லட்சத்துக்கும் அதிகமான போதை பொருட்கள் ஆகியவையும், 54 கோடிக்கும் அதிகமான பரிசு பொருட்களும் சிக்கியுள்ளன.தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில் அடுத்தடுத்த நாட்களில் பறக்கும் படை சோதனையை மேலும் தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதன்மூலம் தேர்தலுக்கு முன்னர் ரூ.200 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் பரிசு பொருட்கள் சிக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக பறக்கும் படை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.தேர்தலின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக அனைத்து போலீஸ் நிலையங்களில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 21 ஆயிரம் ரவுடிகளை கண்காணித்து வரும் போலீசார் அவர்களின் செல்போன்களையும் கண்காணித்து வருகிறார்கள்.இதன்மூலம் தலைமறைவாக உள்ள ரவுடிகள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள்? என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யவும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இப்படி தேர்தல் பாதுகாப்பு பணிகளை மாநில தேர்தல் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..
by Askar
written by Askar
சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..
தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட சீனிவாசன், சுகுமார், ஏழுமலை உள்ளிட்ட 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த 2008-ம் ஆண்டு ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட எங்களை, சீனியாரிட்டி அடிப்படையில் உதவி தாசில்தார்களை நியமிக்க வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்.
பின்னர் அந்த உத்தரவு மாற்றப்பட்டு மீண்டும் மாவட்ட அளவில் புதிய பட்டியல் தயாரித்து பணிநியமனம் வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட பட்டியலில் உரிய தகுதிகள் இல்லாதவர்களை 2019-20ல் துணை தாசில்தார்களாக நியமிக்க கிருஷ்ணகிரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் 2012-22-ல் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட தங்களை நிராகரித்துவிட்டு தகுதி இல்லாமல் நியமிக்கப்பட்டவர்களை தாசில்தார்களாக நியமிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். இது குறித்து வருவாய் ஆணையருக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தங்களை நிராகரித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, பணிநியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில், “பணிநியமனம் செய்தபோது அனைவரும் உதவியாளர்களாக இருந்ததால் துணை தாசில்தார்களாக நியமிக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், தேர்வு வாரியத்தால் பணியில் சேர்ந்தவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் புதிய பட்டியலை தயார் செய்து 4 வாரங்களில் பணி நியமனம் நடைபெற வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எல்ஐசி உள்ளிட்ட இன்சூரன்ஸ் அலுவலகங்கள் சனி, ஞாயிறு செயல்பட உத்தரவு; வங்கி, வருமான வரித்துறையும் திறந்திருக்கும்..
by Askar
written by Askar
எல்ஐசி உள்ளிட்ட இன்சூரன்ஸ் அலுவலகங்கள் சனி, ஞாயிறு செயல்பட உத்தரவு; வங்கி, வருமான வரித்துறையும் திறந்திருக்கும்..
எல்ஐசி மற்றும் இதர காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் மண்டல மற்றும் கிளை அலுவலகங்களை மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் திறந்து வைக்க வேண்டும் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இவற்றுக்கு அப்பால் தங்களுக்கான அலுவல் தேவைக்காக, வங்கி மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்களும் இந்த வார இறுதியில் திறந்திருக்கும்.
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம், அதன் மண்டலங்கள் மற்றும் கிளை அலுவலகங்களை மார்ச் 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் சாதாரண வேலை நேரத்தின்படி வழக்கமான செயல்பாடுகளுக்காக திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிவை முன்னிட்டு பாலிசிதாரர்களுக்கான தேவையின்பொருட்டு, மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களைத் திறந்து வைக்குமாறு இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Irdai) அறிவுறுத்தியுள்ளது.
பாலிசிதாரர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், இந்த இரு தினங்களில் வழக்கமான வேலை நேரத்தின்படி காப்பீட்டு நிறுவனங்களின் கிளைகள் திறந்திருக்கும். மார்ச் 30, 31 என நிதியாண்டின் நிறைவு தினங்கள், சனி – ஞாயிறு என விடுமுறையில் வருவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் அறியும் வகையில் போதுமான அறிவிப்பு மற்றும் விளம்பரம் வழங்குமாறும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி, அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்காக மார்ச் 31 ஞாயிறு அன்று, சாதாரண வேலைநேரப்படி வங்கி கிளைகள் பணி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது. “மார்ச் 31, 2024 ஞாயிற்றுக் கிழமை அன்று பரிவர்த்தனைகளுக்கு அரசாங்க ரசீதுகள் மற்றும் கொடுப்பனவுகளைக் கையாளும் வங்கிகளின் அனைத்து கிளைகளையும் திறக்குமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் அனைத்து வங்கிகளின் கிளைகளையும் திறந்து வைக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது” என்று ரிசர்வ் வங்கி முன்னதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இதனுடன் ரிசர்வ் வங்கி அலுவலகங்களும் மார்ச் 31 அன்று திறந்திருக்கும். ஆனால் வருடாந்திர கணக்குகளை மூடுவது தொடர்பான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக, ஏப்ரல் 1, திங்கள் கிழமை அன்று ரிசர்வ் வங்கிக் கிளைகளில் வழக்கமான 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் அல்லது டெபாசிட் செய்யும் வசதி செயல்படாது. அந்த சேவை ஏப்ரல் 2 முதல் வழக்கம்போல தொடங்கும். இதற்கான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வார இறுதியில் திறந்திருக்கும் வங்கிகள் மற்றும் காப்பீட்டு அலுவலகங்கள் வரிசையில், நிலுவையில் உள்ள துறை சார்ந்த பணிகளை முடிக்கும் நோக்கில் வருமான வரித் துறையும் வார இறுதியில் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
என்னம்மா” ‘தங்கம்’ இப்படி பறக்குறீங்களேமா! தலையிடுமா ஒன்றிய அரசு! தவித்து கிடக்கும் ஏழை எளிய மக்கள்..
by Askar
written by Askar
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1120 உயர்ந்தது. இதன் மூலம் தங்கம் விலை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அதாவது, சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,390க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,120க்கும் விற்பனையானது. தங்கம் விலை கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை சவரனுக்கு ரூ.4,400 உயர்ந்துள்ளது. இந்த ஜெட் வேகம் விலையேற்றம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே தங்கம் விலை உயர்ந்து சவரன் 55 ஆயிரத்தை தொட்டு விடுமோ என்ற ஏக்கமும் நகை வாங்குவோர் இடையே நிலவி வருகிறது.
இது குறித்து சென்னை தங்கம் வைரம் வியாபாரிகள் சங்கம் தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், ‘‘பொருளாதார துறை சார்ந்த பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்திக்கும் என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. இதனால், பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதுவே தங்கம் விலை உயர்வுக்கு காரணம். அடுத்த ஓரிரு வாரங்களுக்கு தங்கம் விலை புதிய உச்சத்தை நோக்கியே பயணிக்கும். வெள்ளியின் விலையும் அதிகரிக்கும். அடுத்த வாரம் இதன் புதிய உச்சம் என்ன என்பது தெரியவரும்’’ என்றார். தங்கம் விலை உயர்வுக்கு பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதும், சர்வதேச கச்சா எண்ணெய்க்கு ஏற்பவும் விலை உயருவதாக கூறப்படுகிறது.
இதனால் ஒன்றிய அரசு தங்கம் விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். தங்கத்தின் இருப்பை அதிகப்படுத்த வேண்டும். இறக்குமதி மீதான வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றிய நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் தற்போது பறிபோய் உள்ளன. பெரும் நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது. விமானநிலையங்கள், துறைமுகங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து ஜிஎஸ்டி என்ற பெயரில் அதிக வரிபோடுவதால் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. இப்போது தங்கம் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு தங்கத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏழைகளுக்கு தங்கம் என்பது எட்டாக்கனியாகிவிடும் என்கின்றனர் பொதுமக்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வெட்கம் மானம் சூடு சொரணை உங்களுக்கு இருக்குதா.? எகிறிய எடப்பாடி பழனிச்சாமி..
by Askar
written by Askar
வெட்கம் மானம் சூடு சொரணை உங்களுக்கு இருக்குதா.? எகிறிய எடப்பாடி பழனிச்சாமி..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது..
by Askar
written by Askar
தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம், புதுச்சேரி இடம்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கடந்த 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 27-ம் தேதியுடன் முடிந்தது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிஇடைத்தேர்தலுக்கு 18 வேட்பாளர்கள் 22 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி காலை 11 மணி முதல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. வடசென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட சில தொகுதிகளில் சிறு சிறு பிரச்சினைகள் எழுந்தன.
இறுதியாக, அனைத்து மக்களவை தொகுதிகள், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்கள் அனைவரது வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.
இறுதி நிலவரப்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1,085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
புதுச்சேரியில் 36 மனுக்கள் ஏற்பு: புதுச்சேரியில் 34 வேட்பாளர்கள் 45 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் பாஜக நமச்சிவாயம், காங்கிரஸ் வைத்திலிங்கம், அதிமுக தமிழ்வேந்தன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 27 வேட்பாளர்கள் சமர்ப்பித்த 36 மனுக்கள் ஏற்கப்பட்டன.
நேற்று (மார்ச் 29) புனித வெள்ளி, பொது விடுமுறை என்பதால் மனுக்கள் வாபஸ் தொடர்பான பணிகள் நடைபெறவில்லை. தேர்தல் ஆணைய அறிவிக்கையின்படி, வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
அத்துடன், சின்னம் ஒதுக்கப்படாத அரசியல் கட்சிகளான விசிக, மதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்படும்.
பிரச்சாரம் தீவிரம்: வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ளன. பிரச்சாரத்துக்கு 18 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பிரதானமாக திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக, திமுக கூட்டணி சார்பில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைக் கழக பேச்சாளர்கள் தொகுதி வாரியாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக மற்றும் கூட்டணிகட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோர் வாக்கு சேகரித்து வருகின்றனர். பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் வாசன் உள்ளிட்டோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் தமிழகத்தில் விரைவில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற வைக்க வேண்டுமென பேசினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொடர்ச்சியாக 9 போட்டிகளில் HOME அணியே வெற்றி என்ற STREAKக்கு முடிவுரை எழுதிய பெங்களூரு vs கொல்கத்தா போட்டி..
by Askar
written by Askar
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 10ஆவது போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. இதில், கேமரூன் க்ரீன் 33 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 28 ரன்களும் எடுத்தனர். விராட் கோலி மட்டுமே கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 83 ரன்கள் எடுக்க ஆர்சிபில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.
பின்னர், 183 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கேகேஆர் களமிறங்கியது. இதில் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஆர்சிபி வீரர்களின் பவுலர்களை சும்மாவே விடவில்லை. சரமாரியாக வெளுத்து வாங்கினர். மீண்டும் ஒரு முறை பெங்களூரு கொல்கத்தாவின் கோட்டை என்று நிரூபித்துக் காட்டினர்.
பில்ப் சால் 30 ரன்னிலும், சுனில் நரைன் 22 பந்துகளில் 5 சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஷ்ரேயார் ஐயர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில், வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசில ஷ்ரேயாஸ் ஐயர் சிக்ஸர் அடித்து கொடுத்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.
இறுதியாக கேகேஆர் 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ஹோம் மைதான அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதுவரையில் நடந்த 9 லீக் போட்டியிலும் ஹோம் மைதான அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த டிரெண்டை மாற்றி முதல் முறையாக கேகேஆர் பெங்களூருவில் வெற்றி கண்டுள்ளது.
அதோடு, ஆர்சிபி அணிக்கு எதிராக கடைசி 5 போட்டிகளிலும் கேகேஆர் வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது 6ஆவது போட்டியிலும் கேகேஆர் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இதுவரையில் இரு அணிகளும் மோதிய 33 போட்டிகளில் இந்த போட்டி உள்பட 19 போட்டிகளில் கேகேஆர் வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பொய்யான வாக்குறுதி கொடுப்பவர்களிடம் ஏமாற வேண்டாம் காது கொடுத்து கேட்க வேண்டாம்,கை நீட்ட வேண்டாம்!- ராதிகா சரத்குமார் பேச்சு..
by Askar
written by Askar
பொய்யான வாக்குறுதி கொடுப்பவர்களிடம் ஏமாற வேண்டாம் காது கொடுத்து கேட்க வேண்டாம்,கை நீட்ட வேண்டாம்!- ராதிகா சரத்குமார்..
விருதுநகர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஒ. ஆலங்குளம் பகுதியில் 2வது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
மக்களுக்காக உங்களுக்காக அவ்வளவு பேசுறாருங்க எவ்வளவு பெருமையா இருக்கு அந்த மாதிரி இவரும் எவ்வளவு சிறப்பா செயல்படுகிறார் நீங்கள் ஒன்னே ஒன்னு புரிந்துக் கொள்ளுங்கள்.
பணத்தை கொடுத்து விலைக்கு வாங்க பார்கிறார்கள். மக்கள் ஏமாறப்போவதில்லை அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
நான் உங்களிடம் ஒரு சகோதரியாக கேட்டுக்கொள்கிறேன் தயவு செஞ்சு அவங்க சொல்லுகின்ற பொய் வாக்குகளுக்கு நீங்கள் யாரும் காது கொடுக்க வேண்டாம் கை நீட்ட வேண்டாம் தலை நிமிர்ந்து வாழுங்க நாங்க எல்லாரும் சுயமா சம்பாரிச்சு முன்னுக்கு வந்தவங்க நீங்களும் அப்படித்தான் நாளைக்கு உங்க பிள்ளைங்க நல்லா இருக்கணும் குடும்ப நல்லா இருக்கணும் எல்லாரும் நல்லா இருக்கணும்ங்கறதுக்காக தானே எல்லாரும் பாடு படுறீங்க.
நாளைக்கு உங்க பிள்ளைங்க ஒரு டாக்டர் ஆகணும்னு உங்களுக்கு ஆசை இல்லையா ஒரு ஐபிஎஸ் ஆபிசர் ஆகனும்னு ஆசை இல்லையா எந்த லஞ்சமும் கொடுக்காமல் வாழ்வதற்கு முதல்ல நம்ம வழி நடத்துவோம்.
ஒரு எடுத்துக்காட்டாக இருப்போம் அதற்கு நீங்கள் தாமரைக்கு வாக்களித்து ஒரு பெரிய வெற்றியை இந்தியாவே தலை நிமிர்ந்து நடக்கிற மாதிரி மூன்றாவது முறையாக நரேந்திர மோடிஜி அவர்கள் பிரதமராக ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கட்சி ஒருங்கிணைப்பாளர்பதவி, துணை முதலமைச்சர் பதவி வழங்கிய எடப்பாடியாருக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ். ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு..
by Askar
written by Askar
கட்சி ஒருங்கிணைப்பாளர்பதவி, துணை முதலமைச்சர் பதவி வழங்கிய எடப்பாடியாருக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ். ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு..
தேனி நாடாளுமன்ற வேட்பாளர் வி.டி. நாராயணசாமியை ஆதரித்து செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள தி.விலக்கு, செம்பட்டி, கட்டதேவன்பட்டி, நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, கருமாத்தூர், முதலைக்குளம், விக்ரமங்கலம், வாலாந்தூர்,சொக்கதேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீவிர வாக்குகளை சேகரித்தார்.
இந்த பிரச்சாரத்தில் கழக அமைப்புச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்.பி.பார்த்திபன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி, மாணிக்கம், செல்லம்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் ராஜா, மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், நகர செயலாளர் பூமா ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;
அண்ணா திமுகவில் 40 ஆண்டுகாலம் உழைத்து இன்றைக்கு எடப்பாடியார் ஆசியுடன் வேட்பாளராக நாராயணசாமி களம் காண்கிறார். அதிமுகவை எதிர்த்து நிற்பவர்கள் யார்?இரட்டை இலை சின்னத்தால் வளர்ந்து, இன்றைக்கு அதற்கு எதிராக போட்டியிடுகிறார்கள் இதுதான் தர்மமா, நியாயமா? பதவிக்காக எதிர்த்து நிற்கிறார்கள் என உசிலம்பட்டி மக்கள் இன்றைக்கு கேள்வி எழுப்புகிறார்கள்.
பிஜேபி கூட்டணியில் டிடிவி தினகரன் இங்கு போட்டியிட்டு இரட்டை இலையை தோற்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார் தனக்கு வாழ்வு கொடுத்த, அடையாளம் கொடுத்த கட்சியை எதிர்த்து தோல்வி பெறும் என்று கூறுகிறார் நிச்சயம் இரட்டை இலை வெற்றி பெறும்.
இன்றைக்கு அதிமுகவை எதிர்த்து குக்கரை தூக்கிக்கொண்டு செல்கிறார் அங்குள்ள மக்கள் இரட்டை இலைக்கு ஓட்டு போட குக்கரை இலவசமாக தருகிறார் என மக்கள் கூறுகிறார்கள்.
இன்றைக்கு திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது, சென்ற இடமெல்லாம் அதிமுக வேட்பாளருக்கு மிக மகத்தான வரவேற்பு அளித்து வருகிறார்கள். திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வேட்பு மனு தாக்கலின் போது நாமினேஷன் பேப்பரை கூட வீட்டில் வைத்து விட்டார் ஏனென்றால், ஏற்கனவே இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர், அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் ஆனார் என்ற ஞாபகத்தில் வீட்டில் வைத்து விட்டார்.
இன்றைக்கு அதிமுகவிற்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து உள்ளது, விரலை நீங்கள் வெட்டினால் கூட நாங்கள் அதிமுகவிற்கு தான்
வாக்களிப்போம் என்று மக்கள் கூறுகிறார்கள்.
ஓபிஎஸ் அம்மா உயிரைக் கொடுத்து உருவாக்கிய அம்மா அரசை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். இரட்டை இலையை எதிர்த்து ஓட்டு போட்டார், இது சட்டமன்ற வரலாற்று பதிவில் உள்ளது. அம்மா அரசை கலைக்க முயற்சி செய்தார் கடைசியில் தோல்வி தான் பெற்றார்.
அதனை தொடர்ந்து கழகத்தில் ஓபிஎஸ் இணைந்த பொழுது கழகத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், துணை முதலமைச்சர் பதவியும் அதோடு வீட்டு வசதி வாரிய அமைச்சர் பதவியை எடப்பாடியார் வழங்கினார்,மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அம்மா ஆட்சி அமைய வேண்டும் அதற்கு எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் என்று முன்மொழிந்தார். ஆனால் துரோகம் செய்துவிட்டார் அதனால் தான் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றி கட்சியில் உள்ள 2 கோடி உறுப்பினர்களும் அவரை நீக்கினார்கள். இன்றைக்கு அவர் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடுகிறார் இன்றைக்கு தோல்வி பயம் ஒபிஎஸ்க்கு வந்து விட்டது.எடப்பாடியார் வழங்கிய அரசு பதவி, கட்சி பதவியை கூட உணராமல் துரோகம் செய்துவிட்டு நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்.
இது ஜனநாயக நாடு என் பெயர் உதயகுமார் என் பெயரில் உள்ளவர்கள் யாரும் கூட வேட்புமனுதாக்கல் செய்யலாம், அதேபோலத்தான் பன்னீர்செல்வம் பெயரில் உள்ளவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்கள் இதை கூட சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி யார் தகுதியானவர்கள் என்று முடிவு எடுத்து அதனை வெளியிட்டார் .
திமுக பாஜகதான் கள்ள உறவு வைத்துள்ளார்கள் அங்கு உதயநிதி பிரதமரிடம் பல்லைகாட்டுகிறார், இங்கு செங்கலை காட்டுகிறார் மக்கள் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பேசினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நான் வெற்றி பெற்றால் சட்ட பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பேன்! பழனியில் முகமது முபாரக் பேச்சு..
by Askar
written by Askar
நான் வெற்றி பெற்றால் சட்ட பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பேன்! பழனியில் முகமது முபாரக் பேச்சு..
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பழனி சட்டமன்ற தொகுதியில் இன்று அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் ,திண்டுக்கல் சீனிவாசன் , அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ மாநில தலைவர் முகமது முபாரக் கலந்து கொண்டனர். முன்னதாக அதிமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் :- எங்கு சென்றாலும் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் பொய்யையே மூலதனமாக வைத்துக் கொண்டு பேசி வருகிறார்கள் என்றும் திராவிட மாடல் ஆட்சி என்று கூறி திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தை கேவலப்படுத்தி வருகிறார்கள் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
அதனை தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன் பிரதமர் மோடி தேர்தல் நிதி என்று 6500 கோடி ரூபாய் மறைமுகமாக பெற்றுள்ளதாக திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
இதனை தொடர்ந்து எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பேச வந்த போது எம்ஜிஆரின் பாடலான ஆயிரம் கைகள் மறைந்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற பாடலை பாடினார். தொடர்ந்து பேசிய முபாரக் பழனி அடிவாரம் முருகன் கோவில் கிரிவலப் பாதைகளில் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதாகவும் இதனை நான் வெற்றி பெற்றால் சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வியாபாரிகளுக்கான உரிமைகளை மீட்டெடுப்பேன் எனவும் பேசினார். பின்னர் சின்ன பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை மேற்கொண்ட முபாரக் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் திண்டுக்கல் சீனிவாசன் உடன் இணைந்து தொழுகை மேற்கொண்டு வந்த இஸ்லாமியரிடம் இரட்டை இலைக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்பி குமாரசாமி ,முன்னாள் எம்எல்ஏக்கள் வேணுகோபாலு ,குப்புசாமி , நகரச் செயலாளர் முருகானந்தம் ,எம் ஜி ஆர் மன்ற மாநில இணை செயலாளர் ரவி மனோகரன்,ஒன்றிய செயலாளர்கள் நிர்வாகிகள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
by Askar
written by Askar
சின்னமனூரில் வீடு கட்டியதில் ஏற்பட்ட கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்தவர் செவ்வத்திவீரன் (60), பார் ஊழியர். இவரது மனைவி ஒச்சம்மாள் (55). இவர்களது மகன் ராஜேஷ் (33). இவர் திருமணமாகி பெற்றோருடன் வசித்து வந்தார். செவ்வத்திவீரன் கடன் வாங்கி புது வீடு கட்டியுள்ளார். ஆனால், கடனை அடைக்க முடியாமல், கட்டிய வீட்டை விற்று கடனை அடைத்துள்ளார். இருப்பினும் கடன் பிரச்னை தீர்ந்தபாடில்லை. மேலும், வீட்டில் செய்முறை வைத்து, உறவினர்களிடம் மொய் வாங்கி கொஞ்சம் கடனை அடைத்துள்ளார்.
இந்நிலையில், உறவினர்கள் விசேஷம் வைக்கும்போது, அவர்களுக்கு மொய் செய்ய முடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில், மகனும் அதிகமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால், மகனுடன் மருமகள் தகராறு செய்துவிட்டு, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஒருபுறம் கடன் பிரச்னை, மறுபுறம் மருமகள் பிரிந்து சென்ற பிரச்னை என பிரச்னைக்கு மேல் பிரச்னை ஏற்பட்டதால் செவ்வத்திவீரன், அவரது மனைவி, மகன் நேற்று இரவு தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
மூவரும் பாலில் விஷத்தை கலந்து குடித்துள்ளனர். இன்று காலை வீட்டின் கதவு 9 மணி வரை திறக்காததால், சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது மூவரும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தது தெரிய வந்தது. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.