இராமநாதபுரம், ஜன.7 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்தார். இதை,ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (டிச.7) கலெக்டர் விஷ்ணு சந்திரன், தொழில் முனைவோர் காணொலிக்காட்சி மூலம் பார்வையிட்டனர். இதுபோல் ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் செய்தித்துறை வாகனத்தின் பிரமாண்ட திரையில் ஒளிப்பரப்பிய நிகழ்வை பொது மக்கள் பார்த்தனர்.
Category:
செய்திகள்
சோழவந்தான் நகரத் தந்தை முன்னாள் பேரூராட்சி தலைவர் S.S.சோனைபிள்ளை 37 ஆம் ஆண்டு நினைவு தினம்!
by Askar
written by Askar
சோழவந்தான் நகரத் தந்தை முன்னாள் பேரூராட்சி தலைவர் S.S.சோனைபிள்ளை 37 ஆம் ஆண்டு நினைவு தினம்!
மதுரை மாவட்டம் சோழவந்தானின் நகரத் தந்தையும் பேரூராட்சி முன்னாள் தலைவரும் முன்னாள் அதிமுக தொகுதி செயலாளருமான சோனைப்பிள்ளையின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ தலைமையில் சோழவந்தான்தெற்கு ரத வீதில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்துஅவரது பெருமைகள் குறித்து பேசினர். இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கொரியர் கணேசன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ M.மாணிக்கம் பேரூர் செயலாளர் V.முருகேசன் வரவேற்றனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்.வி.பி ராஜா. மாநில அம்மா பேரவை துரை தன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் தென்கரை ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர் சண்முக பாண்டிய ராஜா, கேபிள் மணி ,பேரூர் துணைச் செயலாளர் தியாகு, தகவல் தொழில் நுட்ப அணி பிரேம் எஸ் எம் டி நாகராஜ், வார்டு செயலாளர் மணி மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர் முடிவில் மாணவரணி மாவட்ட துணை செயலாளர் சோழவந்தான் SSM.சிவா நன்றி கூறினார்.
செய்தியாளர், வி.காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறவனங்களுக்கு “பசுமை சாம்பியன் விருது” சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் 03.09.2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த நிதியிலிருந்து வழங்கப்படும். 2021- 2022 முதல் ரூ.1/- கோடி செலவில் விருது பெறுபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தனிநபர்கள் /அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000/- வீதம் பரிசு வழங்கப்படும்.தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) இந்த அறிவிப்பின்படி, 2023-24 ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுகளை வழங்க முன்மொழிந்துள்ள கீழ்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள் / கல்வி நிறுவனங்கள் / குடியிருப்போர் நல சங்கங்கள் / தனி நபர்கள் /உள்ளாட்சி அமைப்புகள் / தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.1.சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, 2.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, 3.சுற்றுச்சூழல் பாதுகாப்பு, 4.பசுமை தயாரிப்புகள் / பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், 5.நிலைத்தகு வளர்ச்சி, 6.திடக்கழிவு மேலாண்மை, 7.நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, 8.காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, 9.காற்று மாசு குறைத்தல், 10.பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, 11.சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, 12.கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, 13.பிற பிளாஸ்டிக் கழிவு தொடர்பான திட்டங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் / நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்பபடிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் நாள் கடைசி நாள் ஆகும். கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், இராமநாதபுரம் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு ! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு கடைகல் இயந்திரம் இயக்கும் (CNC) Operator-Turning Vertical Centre) NTTF நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்கவேண்டும். பத்தாம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் இப் பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் 15 நாட்கள் ஆகும். மேலும் தங்கி படிக்கும் வசதியும் இப் பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் (SSC) and NSDC Approval Certificate) அங்கீகரிக்கப்பட்டு தரச்சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.15000/- முதல் ரூ.20000/- வரை பெறலாம். மேலும் புகழ்பெற்ற தனியார் தொழில்சாலைகளில் வேலை வாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப் பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை ! தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை ! !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, வன்முறை மற்றும் காயம் சம்பந்தப்பட்ட வழக்குகள் கடந்த 2022-ம் ஆண்டு 840 வழக்குகளும், 2023-ம் ஆண்டு 784 வழக்குகளும் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 7 சதவிகிதம் குறைவாகும். கொலை வழக்குகள் கடந்த 2022-ம் வருடம் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2023-ம் வருடம் 37 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 4 கொலை வழக்குகள் அதிகரிக்கப்பட்டிருந்தாலும், இந்த 4 வழக்குகளும் குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட வழக்குகள் ஆகும். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் பழிக்கு பழி கொலை சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.சொத்து குற்ற வழக்குகள் கடந்த ஆண்டு 507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 323 வழக்குகளில் சொத்துக்கள் மீட்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 342 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 222 வழக்குகளில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 10 சதவிகிதம் அதிகமாகும். மேலும், கடந்த வருடத்தை விட இந்த வருடம் பதிவான வழக்குகள் 48 சதவிகிதம் குறைவாகும். கொடுங்குற்ற வழக்கு (Grave Crime) கடந்த 2022-ம் ஆண்டு 56 வழக்குகளும், 2023-ம் ஆண்டு 36 வழக்குகளும் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 35 விழுக்காடுகள் குறைவாகும்.2023-ம் ஆண்டு 84 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக மாவட்ட காவல்துறை கல்வித்துறையுடன் இணைந்து, பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.நடப்பு வருடம் பதிவு செய்யப்பட்ட 1294 வாகன விபத்து வழக்குகளில் 410 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 1231 நபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், விதிமீறிலில் ஈடுபட்ட 2,27,685 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன விபத்து வழக்குகள் கடந்த ஆண்டை விட இந்த வருடம் கூடுதலாக உள்ளதால், இவற்றை தடுக்கும் பொருட்டு மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யப்படவும், வாகன விபத்துகள் குறித்து அதிகளவில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தவும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக தீவிர சோதனை மேற்கொண்டதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாகவும், சில்லரையாகவும்விற்பனை செய்த 359 நபர்கள் மீது 348 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.13,16,588/- மதிப்புள்ள 1617 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4290 நபர்கள் மீது 4290 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9595 லிட்டர் மதுபானம் மற்றும் பனங்கள் 2829 லிட்டர் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 123 நபர்கள் மீது 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 39,25,630/- மதிப்புள்ள 391 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 119 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 197 நபர்கள் மீது 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை சம்பந்தமாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் தொடர்புடைய 51 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சூதாட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக இவ்வாண்டில் மொத்தம் 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் தொடர்புடைய 426 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தவருடம் 01.01.2023-ம் தேதி முதல் இந்நாள் வரை சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபட்ட 13 நபர்களும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 1 நபர்கள், பாலியல் குற்ற செயல்களில் ஈடுபட்ட 1 நபர்கள், சொத்து குற்றசெயல்களில் ஈடுபட்ட 1 நபர்கள் என மொத்தம் 16 நபர்கள் மீதுகுண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. இந்த வருடம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நடப்பாண்டில் 33 சைபர் குற்றவழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, அவற்றில் தொடர்புடைய 4 வழக்குகளில் 5 எதிரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2023-ல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இது வரை ரூ.2,30,55,514/- பணம் இழக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.4,63,80,141.88/- முடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், மட்டுமின்றி இந்த மேற்கண்ட 3 வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.20,47,115/- திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், 870 புகார் மனுக்கள் National Cyber Crime Portal (NCRP) மூலமாகவும் பெறப்பட்டு இதில் 545 மனு ரசீதுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.45,45,159/- முடக்கம் செய்யபட்டு ரூ. 12,19,833/- பணம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அலைபேசி காணாமல் போனதாக பெறப்பட்ட 891 புகார்களில் 578 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டு புகார்தாரர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கிவைப்பவர்கள், சில்லறை மதுபானம் விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், பொதுமக்கள் 8300031100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும், அவ்வாறு தகவல் தெரிவிக்கப்படுபவர்கள் பற்றிய இரகசியம் பாதுகாக்கப்படுமெனவும், மேற்படி தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.தங்கதுரை எச்சரித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை சையது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா போட்டி பரிசளிப்பு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், ஜன.7 – இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சையது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலாடி பொதுமக்கள் சார்பில் தமிழர் திருநாள் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையொட்டி மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம், ஊராட்சி தலைவர் ராஜமாணிக்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி கணினியியல் துறை தலைவர் காசிக்குமார் ஏற்பாடு செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டையில் மறைந்த விஜயகாந்தின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அனைத்து கட்சியினர்..
by Askar
written by Askar
நிலக்கோட்டையில் மறைந்த விஜயகாந்தின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அனைத்து கட்சியினர்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நாடகமேடை அருகே தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தேமுதிகவின் நிலக்கோட்டை (தெற்கு) ஒன்றிய செயலாளர் எம். வெள்ளைச்சாமி தலைமையில் விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்,அதன் பிறகு நினைவேந்தல் கூட்டமும் நடைப்பெற்றது.
இந்த மலரஞ்சலி நினைவேந்தல் கூட்டத்திற்கு தேமுதிகவின் மாவட்ட, ஒன்றிய, மற்றும் கேப்டன் மன்ற நிர்வாகிகள். திமுக, அதிமுக, காங்கிரஸ்,விசிக,பாமக, மதிமுக,பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், அமமுக,திக, புதிய தமிழகம்,நாதக,தமுமுக,மமக, எஸ்டிபிஐ, மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பொருப்பாளர்களும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விஜயகாந்த் எப்பேர்பட்ட வள்ளல் என்பதை அனைத்து கட்சியினரும் நினைவு கூர்ந்தனர்.
மேலும் நிலக்கோட்டை வணிகர் சங்கத்தினர்,பூ வியாபாரிகள் மற்றும் கேப்டனின் அபிமானிகள் என ஏராளமானோர் திரண்டு வந்து விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி..
by syed abdulla
written by syed abdulla
நெல்லையில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி..
திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் வழிகாட்டுதலின்படி, மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் N. ஆறுமுகம் மேற்பார்வையில் 06.01.2024 அன்று மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ரமா, உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் மற்றும் காவலர்கள் வடக்கன்குளம், இந்தியன் பாலிடெக்னிக் கல்லூரியில் இணைய வழியில் நடைபெறும் குற்றங்கள் பற்றியும், Loan App மோசடிகள் குறித்தும், சமூக வலைதள பயன்பாடு குறித்தும், Online Shopping Websites வழியாக நடைபெறும் மோசடி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி குற்றம் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இணைய வழி குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக இலவச தொலைபேசி எண் “1930” வழியாகவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தள வழியாகவும் பொதுமக்கள் புகார் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆதியோகி ரத யாத்திரை கோவையில் கோலாகல தொடக்கம்.!பேரூர் ஆதீனம் தொடங்கி வைத்தார்..
by syed abdulla
written by syed abdulla
ஆதியோகி ரத யாத்திரை கோவையில் கோலாகல தொடக்கம்.!பேரூர் ஆதீனம் தொடங்கி வைத்தார்.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் ஆதியோகி ரத யாத்திரை கோவை ஈஷா யோக மையத்தில் நேற்று (ஜன 5) கோலாகலமாக தொடங்கியது. பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார்.
கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவரத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இதையொட்டி தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான யாத்திரை கோவையில் நேற்று தொடங்கியது.
ரத யாத்திரையை தொடங்கி வைத்த பின்னர் பேரூர் ஆதீனம் அவர்கள் பேசியதாவது “இறைவனை வழிபடுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று நாம் இறைவனை தேடி சென்று வணங்குவது, மற்றொன்று இறைவன் நமக்காக வீதிகள் தோறும் வந்து அருள் பாலிப்பது. அந்த வகையில் இந்த ஆதியோகி ரத யாத்திரை அடியார்களுக்கு அருள் புரியும் தன்மையோடு தமிழகமெங்கும் வலம் வர இருக்கிறது.” என்றார்.
மேலும் அவர் “சிவபெருமானுக்கு உரிய மஹாசிவராத்திரியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த ரத யாத்திரை அமைய உள்ளது. சிவகண வாத்தியம், திருமுறை பன்னிசை, போற்றி வழிபாடு உள்ளிட்டவைகளோடு வலம் வர இருக்கிற ரத யாத்திரையை அடியார்கள் பயன்படுத்தி சிவனருள் பெற வேண்டும்” என கூறினார். முன்னதாக இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் தேவாரம் பாடினர் மற்றும் இந்த நிகழ்ச்சியில் கைலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது.
ஆதியோகி திருமேனியுடன் கூடிய 4 ரதங்கள் தமிழகம் முழுவதும் வலம் வர உள்ளன. இந்த ரதங்கள் தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் கி.மீ தூரம் வரை பயணிக்க உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகிக்கு பூ, பழம் மற்றும் ஆரத்தி உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து சிறப்பாக வரவேற்பு அளிக்க உள்ளனர். ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு திசையில் பயணித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலம் வந்த பின்னர் மஹா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளது.
ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்களுக்கு தங்கள் ஊர்களிலேயே தரிசிப்பதற்கான வாய்ப்பாக இந்த ரத யாத்திரை அமைய உள்ளது..செய்தியாளர் வி காளமேகம்
மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் ஆதியோகி ரத யாத்திரை கோவை ஈஷா யோக மையத்தில் நேற்று (ஜன 5) கோலாகலமாக தொடங்கியது. பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார்.
கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவரத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இதையொட்டி தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான யாத்திரை கோவையில் நேற்று தொடங்கியது.
ரத யாத்திரையை தொடங்கி வைத்த பின்னர் பேரூர் ஆதீனம் அவர்கள் பேசியதாவது இறைவனை வழிபடுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று நாம் இறைவனை தேடி சென்று வணங்குவது, மற்றொன்று இறைவன் நமக்காக வீதிகள் தோறும் வந்து அருள் பாலிப்பது. அந்த வகையில் இந்த ஆதியோகி ரத யாத்திரை அடியார்களுக்கு அருள் புரியும் தன்மையோடு தமிழகமெங்கும் வலம் வர இருக்கிறது என்றார்.
மேலும் அவர் “சிவபெருமானுக்கு உரிய மஹாசிவராத்திரியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த ரத யாத்திரை அமைய உள்ளது. சிவகண வாத்தியம், திருமுறை பன்னிசை, போற்றி வழிபாடு உள்ளிட்டவைகளோடு வலம் வர இருக்கிற ரத யாத்திரையை அடியார்கள் பயன்படுத்தி சிவனருள் பெற வேண்டும்” என கூறினார். முன்னதாக இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் தேவாரம் பாடினர் மற்றும் இந்த நிகழ்ச்சியில் கைலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது.
ஆதியோகி திருமேனியுடன் கூடிய 4 ரதங்கள் தமிழகம் முழுவதும் வலம் வர உள்ளன. இந்த ரதங்கள் தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் கி.மீ தூரம் வரை பயணிக்க உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகிக்கு பூ, பழம் மற்றும் ஆரத்தி உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து சிறப்பாக வரவேற்பு அளிக்க உள்ளனர். ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு திசையில் பயணித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலம் வந்த பின்னர் மஹா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளது.
ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்களுக்கு தங்கள் ஊர்களிலேயே தரிசிப்பதற்கான வாய்ப்பாக இந்த ரத யாத்திரை அமைய உள்ளது..
செய்தியாளர், வி.காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காவலர் குடும்பத்தினருக்கான பொங்கல் பண்டிகை விளையட்டுப் போட்டிகள் துவக்கம்..!
by Askar
written by Askar
காவலர் குடும்பத்தினருக்கான பொங்கல் பண்டிகை விளையட்டுப் போட்டிகள் துவக்கம்..!
.
2024-ம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாநகர காவல்துறை சார்பில் இன்று (௦6.01.2024) மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர் குடும்பத்தினருக்கான பொங்கல் பண்டிகை விளையட்டுப் போட்டிகளை மதுரை மாநகர காவல் ஆணையர் Dr.லோகநாதன்,IPS., துவக்கி வைத்தார்கள். மேற்படி துவக்க விழாவின் போது காவல் துணை ஆணையர் (தலைமையிடம்)
.மங்களேஸ்வரன் மற்றும் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து). .குமார், காவல் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோரும் உடனிருந்தார். மேற்படி விளையாட்டு போட்டிகளில் மதுரை மாநகர காவல்துறையினர் தங்களது குடும்பத்தினருடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டிகளின் தொடர்ச்சியாக, நாளையும் (07.01.2024) விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதாகவும், 13.012024ம் தேதியன்று காலை பொங்கல் சார்ந்த போட்டிகளும் மற்றும் மாலை கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறும் என காவல் ஆணையர் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
செய்தியாளர்,வி.காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமங்கலம் அருகே வங்கி ஏடிஎம் உடைப்பு! பணம் இருக்கும் பெட்டியை திறக்க முடியாததால் பணம் தப்பியது..
by syed abdulla
written by syed abdulla
திருமங்கலம் அருகே வங்கி ஏடிஎம் உடைப்பு! பணம் இருக்கும் பெட்டியை திறக்க முடியாததால் பணம் தப்பியது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி என்ற இடத்தில் , இந்தியா ஒன் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில்,
நேற்று மர்ம நபர்கள், ஏடிஎம் மையத்தில் இருந்த இரண்டு சிசிடிவி கேமராக்களை உடைத்து , பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் . ஏடிஎம் இயந்திரத்தின் டிஸ்ப்ளே உடைத்து உள்ளே பணத்தை எடுப்பதற்கு முயன்றுள்ளனர். பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியை திறக்க முடியாதால் ,அப்படியே விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வைத்து சோதனை நடத்தி, கொள்ளையர்களை வலைபேசி தேடி வருகின்றனர்..
செய்தியாளர், வி.காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமங்கலத்தில் திருவையாறு – மார்கழி மாத உற்சவ விழா – திருப்பாவை, தசாவதார நாட்டியாஞ்சலி – பார்வையாளர்கள் வியப்பு.
by syed abdulla
written by syed abdulla
திருமங்கலத்தில் திருவையாறு – மார்கழி மாத உற்சவ விழா – திருப்பாவை, தசாவதார நாட்டியாஞ்சலி – பார்வையாளர்கள் வியப்பு.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி நடத்திய மார்கழி உற்சவ விழாவில், திருமங்கலத்தில் திருவையாறு என்ற தலைப்பில் , திருப்பாவை, தசாவதாரம் நாட்டியா அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
மார்கழி மாதம் என்றாலே, தேவர்களுடைய மாதமாக கருதப்படுவதாகவும் , இம்மாதத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டியா அஞ்சலி நிகழ்ச்சிகள் திருக்கோவில்களிலும், கிராமப்புறங்களிலும் நடைபெறுவது வழக்கம்.
இந் நிலையில் திருமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி நடத்திய மார்கழி உற்சவ விழாவில், திருப்பாவை நிகழ்ச்சியும் , தசாவதார நாட்டியா அஞ்சலி நிகழ்ச்சியும் பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்தன. பரதநாட்டியத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவியர் தசாவதார நிகழ்ச்சிகளை கண்கள் மற்றும் உடல் உறுப்புகளின் மூலமே செய்து காண்பித்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.
திருவையாற்றில் நடைபெறுவது போன்றே திருமங்கலத்திலும் தற்போது முதல் முறையாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது..
செய்தியாளர், வி.காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிவகாசியில் இருந்து, ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை…
by syed abdulla
written by syed abdulla
சிவகாசியில் இருந்து, ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான முருக பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர்.
சிவகாசி நகரின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் குழு என்ற அமைப்பில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், மார்கழி மாத கடைசியில் சிவகாசியில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள். இன்று காலை, திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் குழுவைச் சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் செண்டை மேளம் முழங்க, மயில் காவடிகள் சுமந்து ஆடிப்பாடியபடி முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா என்று கோஷங்கள் முழங்கியபடி சிவகாசியின் முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை தொடங்கினார்கள். பாதயாத்திரை செல்லும் பக்தர்களை அவர்களது குடும்பத்தினர் மாலையணிவித்து வழியனுப்பி வைத்தனர்.
செய்தியாளர், வி.காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்ட பூங்காக்கள்; நகர்மன்ற தலைவர் சாதிர் திறந்து வைத்தார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்ட பூங்காக்களை நகர்மன்ற தலைவர் ஆர். சாதிர் திறந்து வைத்தார். தென்காசி நகராட்சியில் வீட்டு வசதி வாரிய காலனி எல். பிளாக் பகுதியில் பூங்கா மற்றும் உழவர் சந்தை அருகேயுள்ள பூங்கா ஆகியவை கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரன் தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத் தலைவர் கே.என்.எல். சுப்பையா முன்னிலை வகித்தார். தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர். சாதிர் பூங்காக்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகராட்சி பொறியாளர் ஹசீனா, உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரியா, நகரப் பொருளாளர் ஷேக்பரித், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரகுமான் சாதத், அரசு வழக்கறிஞர் முருகன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்க பாண்டியன், மாணவரணி மைதீன், சாமுவேல், கனகராஜ், குடியிருப்போர் நல சங்கத்தைச் சார்ந்த சுப்புராஜ், டாக்டர் பிஸ்வாஸ், தாசையா, கோவிந்தன், மற்றும் அரசு ஒப்பந்தக்காரர் நவாஸ்கான், திமுக உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று (6 ம் தேதி) 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னையில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக மாநில சுகாதார துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம்; அனைத்து இரத்ததான கூட்டமைப்பினர் பங்கேற்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தென்காசி மாவட்ட அனைத்து இரத்ததான கூட்டமைப்பு இணைந்து தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாபெரும் இரத்ததான முகாம் 06.01.2024 சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட இணை இயக்குநர் டாக்டர். பிரேமலதா தலைமையில் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். ஜெஸ்லின் முன்னிலை வகிக்க அனைத்து இரத்ததான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சீரிய முயற்சியில் குருதி கொடையாளர்கள் இரத்ததானம் வழங்கினர்.
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்த நிலைய மருத்துவர் பாபு மற்றும் மருத்துவ குழுவினர் இரத்தம் சேகரித்தனர். இதில் உறைவிட மருத்துவர் செல்வபாலா மற்றும் மருத்துவர்கள் கலந்து சிறப்பித்தனர். 25-க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் சாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூக கொடையாளர்களும் தங்கள் குருதியை தானமாக வழங்கியது இந்த முகாமின் சிறப்பு அம்சமாக அமைந்தது. முகாமில் குருதி கொடையாளர்கள் மற்றும் குருதி தான ஒருங்கிணைப்பாளர்கள் சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு: கலெக்டர் அறிவிப்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், ஜன.6 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் தெரிவித்ததாவது: 2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு 1, ரூ.1000 ரொக்கம் நியாய விலைக்கடை மூலம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ..1,000 ரொக்கம வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற ஜன 7, 8, 9 ல் டோக்கன் வழங்கப்படும். கூட்ட நெரிசலை தவிர்க்க நியாய விலைக் கடைகளில் டோக்கன் வழங்கப்படும்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜன 10, 11, 12, 13, 14ல் சுழற்சிமுறையில் விநியோகிக்கப்படும். இப்பணியையொட்டி ஜன 12ல் நியாய விலைக்கடைகள் செயல்படும். அனைத்து நியாய விலைக்கடைகளிலும் டோக்கனால் குறிப்பிட்ட நாள், நேரப்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்கள், மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077-ல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கச்சத்தீவு திருவிழா பயணம்: உயர் நீதிமன்ற ஆணையை செயல்படுத்த ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், ஜன.7 – வரும் பிப்ரவரி 23, 24 ல் நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழா பயணத்திற்கு மீன்பிடி விசைப்படகில் அழைத்து செல்லக் கூடாது என்ற உயர் நீதிமன்ற ஆணையை செயல்படுத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பிப்.23 ,24ல் நடைபெற உள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவின் படி திருப்பயண திட்டத்தை மாவட்ட நிர்வாகம், மத்திய, மாநில அரசுகள் நடப்பாண்டு செயல்படுத்த வேண்டுமென, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி கோரிக்கை விடுத்தார். ஹஜ் திருப்பயணம், ஜெருசலேம் திருப்பயணம் போன்றவற்றிற்கு அரசு மானிய நிதி வழங்கி ஊக்கப்படுத்துகிறது. அதுபோல, கச்சத்தீவு ஒப்பந்தம் அடிப்படையில் இந்திய-இலங்கை மக்களின் நல்லெண்ண அடையாளமாக கச்சத்தீவு திருவிழா நடைபெறுகிறது. கச்சத்தீவு பாரம்பரிய திருப்பயணம் செல்லும் படகுகளுக்கு தமிழக அரசு பங்களிப்பாக 100 லிட்டர் டீசல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். கச்சத்தீவு திருப்பயண ஒருங்கிணைப்பு கூட்டத்தை கடந்த காலங்களைப் போல் காலம் தாழ்த்தாமல் முன் கூட்டியே நடத்தி பாரம்பரிய மீனவர்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
கச்சத்தீவு திருவிழா தொடர்பாக உயர்நீதிமன்ற ஆணைப்படி பாரம்பரிய மீனவர்கள் தங்கள் நாட்டுப்படகில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களை அழைத்து செல்ல உரிய ஏற்பாடு செய்து தரவேண்டும். கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் பயணிகளை மீன்பிடி விசைப்படகில் அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். கச்சத்தீவு திருவிழா பயணிகளை, அரசு ஏற்பாடு செயயும் பயணிகள் கப்பல்களில் அழைத்து செல்லவேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மத்திய, மாநில அரசுகள் நடப்பாண்டில் முற்றிலும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் பாரம்பரிய மீனவ சங்க தலைவர்கள் ராயப்பன், கெம்பீஸ், ஜெரோமியாஸ், ஜான்பிரிட்டோ, காளிதாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், ஜன.7 – இராமநாதபுரத்தில் டிஎன்பிஎஸ்சி எழுத்துத்தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. ராமநாதபுரம் டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி, ஏ.வி.எம்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முஹமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் நடந்தது. காலை, மாலை என இரு பிரிவுகளாக நடந்த தேர்விற்கு 2,211 பேர் விண்ணப்பித்ததில் 1,468 பேர் எழுதினர். தேர்வு மையத்தில் உட்கடமைப்பு, அடிப்படை வசதிகள், காவல்துறை பாதுகாப்பு, கண்காணிப்புக்குழு மூலம் ஒளிப்பதிவு குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு ஓராண்டு வேளாண் விரிவாக்கசேவை பட்டயப்படிப்பு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், ஜன.6-
தேசிய வேளாண் மேலாண் விரிவாக்கப் பயிற்சி நிலையம், ஹைதராபாத் 2003-ம் ஆண்டிலிருந்து வேளாண் இடுபொருட்கள் பற்றிய அடிப்படை அறிவை இடுபொருள் விற்பனையாளர்களுக்கு அளிக்கும் வகையில் வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டப்படிப்பை நடத்திவருகிறது.
வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் இடுபொருள் வழங்குவதுடன் மட்டுமல்லாமல் வேளாண் களம் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதில் முதன்மையாக விளங்குகின்றனர். பெரும்பாலான வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் வேளாண் சார்ந்த முறையான கல்வியை பெற்றிருப்பதில்லை. தற்போது மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலைகளால் புதுவிதமான பூச்சி மற்றும் நோய்கள் பயிர்களை தாக்குகின்றன. வேளாண்மையில் அவர்களது தொழில்நுட்ப அளவை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளுக்கு நல்லமுறையில் பயன்பெறும் வகையிலும், தேவையை அறிந்து தேவையான இடுபொருட்களை சரியான தருணங்களில் விவசாயிகளுக்கு வழங்கி வேளாண் விரிவாக்கப் பணியாளர்களுக்கு துணையாக விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர்களாக செயல்புரியவும் ஓராண்டு பட்டயப்படிப்பை தேசிய வேளாண் மேலாண் விரிவாக்கப் பயிற்சி நிலையம் நடத்திவருகிறது.
இந்த படிப்பு, மாநில வேளாண் மேலாண் விரிவாக்கப்பயிற்சி நிலையம் (சமிதி) மூலம் வேளாண் ஆணையர், சென்னை தேர்வு செய்த இணைப்பு பயிற்சி நிலையங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பு சுயநிதி மூலம், மத்திய அரசின் 50 சதவீத மானிய நிதியுடன் நடத்தப்பட்டு வருகிறது. குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். சுயநிதி முறையில் படிப்பதாக இருந்தால் ரூ.20,000, மத்திய அரசின் 50சதவீத மானிய நிதி மூலம் பயில்வதாக இருப்பின் ரூ.10,000 வேளாண் விற்பனை நிறுவனங்கள் மூலம் படிப்பதாக இருந்தால் அந்நிறுவனம் ரூ.10,000, எஞ்சியுள்ள ரூ.10,000 மத்திய அரசு மற்றும் இடுபொருள் விற்பனையாளரும் தலா ரூ.5000 வீதம் படிப்புத் தொகை செலுத்த வேண்டும்.
இப்படிப்பு, வாராந்திர வகுப்புகளாக வாரந்தோறும் சனி (அ) ஞாயிறு (அ) விற்பனை விடுமுறை நாளன்று நடத்தப்படும். இப்படிப்பில் ஆர்வமுள்ளவர் விண்ணப்பிக்க வேளாண் இணை இயக்குநர், ராமநாதபுரம் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.