ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி நிறுவனர் வி.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. மதுரை யாதவா கல்லூரி முதல்வர் (ஓய்வு) கண்ணன், மதுரை ஆயிர வைஸ்யர் கல்லூரி முதல்வர் சிவாஜி கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் 2019-22, ஆண்டில் பயின்று பல்வேறு பாடப் பிரிவுகளில் அழகப்பா பல்கலை அளவில் பயின்ற சிறப்பிடம் பிடித்த 8 மாணவியர் & 2020-23 ஆண்டில் பயின்று பல்வேறு பாடப்பிரிவுகளில் பல்கலை அளவில் சிறப்பிடம் பிடித்த 7 மாணவியர் உள்பட 423 மாணவியருக்கு அழகப்பா பல்கலை துணை வேந்தர் ரவி பட்டம் வழங்கினார். துணை சேர்மன் பார்த்தசாரதி, அறக்கட்டளை உறுப்பினர்கள் முத்துக்குமார், தேவகி, பத்மாவதி, செயலர் சகுந்தலா, முதல்வர் காஞ்சனா உள்பட பலர் பங்கேற்றனர். இதில் கல்லூரி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Category:
மாவட்ட செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு முதல் நிலை சுழற்சி (Ist Randomization)
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முதல்நிலை சுழற்சி (Ist Randomization)
தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட 219 சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி, 220 வாசுதேவநல்லூர் சட்டமன்றத்தொகுதி, 221 கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி, 222 தென்காசி சட்டமன்றத் தொகுதி, 223 ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முதல்நிலை சுழற்சி (Ist Randomization) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட 219 சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி, 220 வாசுதேவநல்லூர் சட்டமன்றத்தொகுதி, 221 கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி, 222 தென்காசி சட்டமன்றத் தொகுதி, 223 ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முதல்நிலை சுழற்சி (Ist Randomization) 22.03.2024 அன்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோரால் நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமிர்தலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் கே.செல்வி), வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கண்காணிப்பு அலுவலர் செல்வி.மதிவதனா, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக தனி வட்டாட்சியர் (தேர்தல்) ஹென்றி பீட்டர், தென்காசி மாவட்டத்திற்கான 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல்நிலை சுழற்சி நடத்தி முடிக்கப்பட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணிணி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அறிக்கை சட்டமன்றத் தொகுதி வாரியாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் முதல்நிலை சோதனை முடிவுற்ற (Ist level checking) வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தென்காசி நகர வேளாண்மை ஒழுங்கு முறை கிட்டங்கியானது அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரால் திறக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்கள் ஆகியவை சட்டமன்றத் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி முதியோர் இல்லங்களில் விழிப்புணர்வு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி முதியோர் இல்லங்களில் விழிப்புணர்வு..
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக குற்றாலத்திலுள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் கலந்து கொண்ட அனைத்து முதியோர்களும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் தேர்தல் தொடர்பான துண்டு பிரதிகள் வழங்கப்பட்டன. ஜனநாயகம் கண்ணியத்துடன் வாக்களியுங்கள், 100% நேர்மையாக வாக்களிப்போம், இந்த மை நமது தேசத்தின் வலிமை, வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை,100% ஓட்டு இந்தியர்களின் பெருமை, நமது இலக்கு100% வாக்குப்பதிவு, வாக்களிப்பது நம் அனைவரின் ஜனநாயக கடமை போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அவர்களிடையே விளக்கிக் கூறப்பட்டன.
சாந்தோம் முதியோர் இல்லம் மற்றும் மிசன் இந்தியா முதியோர் இல்லம் போன்ற முதியோர் இல்லங்களிலும் முதியோர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன. முகாமிற்கான ஏற்பாடுகளை முதியோர் இல்லம் நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் M.கலைச்செல்வி, P. டேவிட் ஜெயசிங், சமுக நலத்துறை சார்ந்த கேப்ரியல் பொன் ஆசிர், பானுப்பிரியா மற்றும் ரோஜா வனம் முதியோர் இல்லம் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -23
(கி.பி 1299-1922)
உஸ்மானிய பேரரசர்
முகம்மது காண்ஸ்டாண்டி நோபிள் நகரை கைப்பற்றி முழு துருக்கியையும்
கைப்பற்றி காண்ஸ்டாண்டி
நோபிள் நகரை தலைநகராக ஆக்கவும் திட்டம் தீட்டினார்.
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் சுபச் செய்தி சொன்ன காண்ஸ்டாண்டி
நோபிள் நகரை வெற்றிகொண்ட
தளபதியாகவும்,
தன்னுடைய வீரர்கள் அதன் வெற்றி வீரர்களாகவும், ஆகவும் இறைவனின் அருள் பெற்றவர்களாக ஆகவும் ஆசை கொண்டார்.
தனது 2,65,000 வீரர்களை கொண்ட படைமுன்பு வீரத்துடன் உரையாற்றி காண்ஸ்டாண்டி
நோபிள் நகரை வெற்றி கொண்டு இறைவனின் அருளையும், புதிய வரலாற்றையும், படைக்க வேண்டும் என்றார்.
நகரை நோக்கி தரைப்படை வீரர்கள் முன்னேறினர்.
உஸ்மானிய கப்பல் படை துருக்கிய கப்பல்களின் அணிவகுப்பால் உள்ளே நுழைய முடியவில்லை.
கப்பல்களை ஒன்றிணைத்து, பெரும் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு,
கடல் பகுதிகளுக்குள்
நுழைய முடியாமல் பாதுகாப்பை பலமாக துருக்கிய கப்பல்படை செய்து இருந்தது.
முகம்மது தனது கப்பல்களை தனது தரைப்படை வரும் திசைக்கு நேர் பின்புறமாக மதில் சுவரை ஒட்டி கொண்டு வரச்செய்தார்.
துருக்கிய கப்பல்களின் பாதுகாப்பு கடற்கரையை சுற்றிய பகுதிகளில் மட்டுமே இருந்தது.
முகம்மது தனது கப்பல்படை
படையை பின்புறமாக கொண்டு சென்று நிறுத்திக் கொண்டார்.
அது கடல் பிறை போல வெளிப்புறமாக. வளைந்து இருந்ததால், அந்தப்பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை சட்டென யாரும் பார்க்க முடியாது.
ஆகவே உஸ்மானிய கடற்படை அந்த இடத்தை சரியாக தேர்ந்தெடுத்தது.
அந்தப்பகுதியில் அலைகளின் சீற்றங்கள் மிக அதிகமாகவும், கடல் மிக ஆழமாகவும் இருந்ததால், அந்தப்
பகுதியிலிருந்து
எதிரிகள் உள்நுழைய
முடியாது என்று துருக்கிய மன்னர் நினைத்ததால் அந்தப்பகுதியில் பாதுகாப்பே இல்லை.
இதனை ஒற்றர்கள் மூலம் அறிந்த மன்னர் முஹம்மது சரியாக அந்த இடத்தை தேர்ந்தெடுத்தார்.
கடல் ஆழமாக இருந்ததால் பெரிய கப்பல்களை முடிந்தளவு கரை அருகில் தளபதிகள் கொண்டுவந்தனர்.
கப்பலிலிருந்து கரைக்கு ஐம்பது வீரர்களும், படையுடன் வந்த மர தச்சர்களும்
படகுகளில் சென்று கரை இறங்கினர்.
அவர்கள் கடற்கரை ஓரம் பழுது பட்டு நின்ற துருக்கிய கப்பல்களையும்
படகுகளையும்
ஒன்றிணைத்து பெரியபாலமாக உருவாக்கினர்.
சில படகுகளை பலகைகளாக உடைத்து அதில் கொழுப்புகளை தடவினார்கள்.
முன்னேற்பாடுகள் முடிந்ததும், தொலைவில் நின்ற கப்பல்களுக்கு சமிஞ்சை செய்ததும்
அதிலிருந்த வீரர்களும், மற்றும் பொருள்களும், மளமளவென கரைக்கு வந்தன.
கொழுப்பு தடவப்பட்ட
பலகைகள் மேல் சிறிய படகுகளில் பொருட்களை ஏற்றி,
கரைக்கு எளிதாக இழுத்து வந்து சேர்த்தனர்.
மதிலின் கிழக்குப்பகுதியில் நடந்த எந்த நிகழ்வுகளையும் துருக்கிய வீரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அன்றைய இரவில்
விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததால், இந்த கடல் படை பெரும்பூதம் போல்
கடற்கரையில் இருந்தது.
பின்புற மதில் சுவரின் ஒரு வளைவான பகுதியை தேர்ந்தெடுத்து அதில் சில வீரர்கள் உள்நுழைய துவாரம் போடப்பட்டது.
உஸ்மானிய கடற்படை வீரர்கள் சிலர் சத்தமில்லாமல் கோட்டைக்குள் புகுந்தனர்.
அப்போது திடீரென கோட்டைக்குள் விளக்குகள் எரிந்தன.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் இருப்பு பாதையில் ரயில் மோதி கொத்தனார் உயிரிழப்பு; போலீசார் விசாரணை..
written by Abubakker Sithik
திருப்பரங்குன்றம் இருப்பு பாதையில் ரயில் மோதி கொத்தனார் உயிரிழப்பு; ரயில்வே போலீசார் விசாரணை..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேட்டு தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் ராஜபாண்டி (வயது 28). இவர் வழக்கம் போல் இன்று அதிகாலையில் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற போது ரயில் மோதி சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த ரயில்வே எஸ் ஐ சையது குலாம் மற்றும் போலீசார் ராஜபாண்டி உடலை கைப்பற்றி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து ரயில்வே போலீஸார் விசாரணை வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வத்தலக்குண்டு அருகே ஆவணமின்றி பிடிபட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான,தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள்! கருவூலத்தில் ஒப்படைத்த வட்டாட்சியர் தனுஷ்கோடி…
by Askar
written by Askar
வத்தலக்குண்டு அருகே ஆவணமின்றி பிடிபட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான,தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள்! கருவூலத்தில் ஒப்படைத்த வட்டாட்சியர் தனுஷ்கோடி…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தேனி-மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வத்தலக்குண்டு சோதனை சாவடியில் பாராளுமன்ற தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் (SST) பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தேனியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி வந்த தனியார் நகை நிறுவன சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்ட போது, தங்க நகைகள் 9-பெட்டிகளிலும் வெள்ளி நகைகள் 3-பெட்டிகளிலும் இருந்ததை கைப்பற்றி சோதனை செய்தத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.
இதனை அடுத்து நிலக்கோட்டை தேர்தல் நடத்தும் துணை அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பூங்கொடி அவர்களின் உத்தரவின் பேரில், தேர்தல் பிரிவு மதுரை மண்டல வணிகவரித்துறையினர்,வருமானவரித்துறையினர் வரவழைக்கப்பட்டு நகைகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில் கோவையில் இருந்து தங்க நகைகளை நகைக்கடைகளுக்கு மொத்த வியாபாரத்திற்கு கொடுப்பதற்காக தேனி வந்ததாகவும், தேனியில் ஒப்படைத்து விட்டு வத்தலக்குண்டு நோக்கி வரும்பொழுது தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் (SST) சோதனையில் ஈடுபட்டு நகைகளை பறிமுதல் செய்தது தெரியவந்தது. பிடிபட்ட மொத்த நகைகளின் மதிப்பு ரூ 3,09,79,550 ஆகும். மேலும் முறையாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் நகைகளை விற்பனைக்கு எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாததாலும் உரிய ஆவணங்கள் இல்லாததாலும் நகைகளை துணை தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்னிலையில் நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி, நிலக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் கருவூல அதிகாரி ஜோதியிடம் ஒப்படைத்தார். பின்னர் முறையாக 9+3 நகைப் பெட்டிகளையும் இரண்டு மூட்டைகளாக பிரித்து மூடி முத்திரையிடப்பட்டு கருவூல காப்பக அறையில் வைத்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மூடி முத்திரையிடப்பட்டு (சீல்) வைக்கப்பட்டது.
3.10 கோடி மதிப்பிலான நகைகள் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரால் சரக்கு வாகனத்தில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டாக்டர் ராணிக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு..
written by Abubakker Sithik
தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கு நகர திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு..
தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமாருக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையில், நகர கழக செயலாளர் ஆர்.சாதிர் முன்னிலையில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு நகர திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மேலதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதேபோன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருத்துவர் ராணிக்கு கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே.ஜெயபாலன் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் மா.செல்லத்துரை முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுரண்டை முத்துக்குமார், தென்காசி தெற்கு மாவட்ட நிர்வாகிகள், திமுக முன்னோடிகள், உறுப்பினர்கள், கூட்டணி கட்சி அனைத்து பொறுப்பாளர்கள் உட்பட கலந்து கொண்டனர்.
தென்காசி நிகழ்ச்சியில், நகர்மன்ற துணைத் தலைவர் கே.என்.எல் சுப்பையா, அவைத்தலைவர் கிட்டு, துணை செயலாளர்கள் ராம்துரை, பால்ராஜ், பொருளாளர் ஷேக்பரீத், மாவட்ட பிரதிநிதிகள் மைதீன் பிச்சை, பாலசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயலட்சுமி மகேஸ்வரி, கல்பனா, சுமதி, கார்த்திகா, மாவட்ட பொறியாளர் அணித்தலைவர் தங்கப்பாண்டியன், சாரதி, முருகன், மாணவரணி மைதீன், சன்ராஜா, சண்முகநாதன், ரகுமான், சாதாத், பாலாமணி, பாலசுப்பிரமணியன், கோபால் ஆகியோருடன்,
ராம், கங்காதரன், சாகுல் ஹமீது, ராமநாதன், அருணாச்சலம், பரமசிவன், முகமது ரபி, பழக்கடை குமார், செய்யது ஆபில், நாகூர் மீரான், சபரி சங்கர், பேக் அமீர், இசக்கி ரவி, கருதபாண்டி, முருகன், வேம்பு, சாகுல் ஹமீத், சேக்குலாசா, செய்யது பட்டாணி, சம்சுதீன், கூட்டணி கட்சி சார்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அபூபக்கர், விடுதலைச் சிறுத்தை கட்சி ஹக்கீம், சித்திக் சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஐயப்பன், காங்கிரஸ் மாடசாமி ஜோசியர், மதிமுக கார்த்திக் வெங்கடேஸ்வரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..
by Askar
written by Askar
தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சியான தி.மு.க. முழு வீச்சில் தயாராகி உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-9, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகின்றன. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறது.ஏணி சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஐ.யூ.எம்.எல். கட்சி சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் ஐ.யூ.எம்.எல். கட்சியின் கோரிக்கையை ஏற்று ஏணி சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.ஐ.யூ.எம்.எல். கட்சியின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி களம் காண்கிறார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஐ.பி.எல். தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி..
by Askar
written by Askar
17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, பெங்களூரு தொடக்க வீரர்களாக கேப்டன் டூ பிளசிஸ், விராட் கோலி களமிறங்கினர். டூ பிளசிஸ் 35 ரன்களிலும், கோலி 21 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அனுஜ் ராவத் உடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் முஸ்தாபிசூர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களக கேப்டன் கெய்குவாட், ரச்சின் ரவிந்திரா களமிறங்கினர். கெய்குவாட் 15 ரன்களிலும், ரவீந்திரா 37 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்துவந்த ரஹானே 27 ரன்களிலும், டேரெல் மிச்சேல் 22 ரன்களிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ச் 18.4 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது. ஷிவம் துபே 34 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தனர். பெங்களூரு தரப்பில் அந்த அணியின் கிரீன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐ.பி.எல். தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் கேனிக்கரை அருகே தனியார் மஹாலில் திமுக சார்பில் அனைத்து கட்சிகளையும் அழைத்து இந்தியா கூட்டணியில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அறிமுகம் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். இதில் சென்ற பாராளுமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனிக்கு அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தன்னுடைய ஆட்சி முடியபோகிறது என்பதால் பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை. அவரது முகத்திலும் கண்களிலும் தோல்வி பயம் தெரிகிறது!- திருச்சியில் தெறிக்க விட்ட முதலமைச்சர்..
by Askar
written by Askar
தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சியில் சிறுகனூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் அருண் நேருவுக்கும் வாக்கு சேகரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி என்றாலே திருப்பு முனைதான். இந்த தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்று இந்தியாவிற்கே நாம் திருப்பு முனையை ஏற்படுத்த போகிறோம். புதிய வரலாற்றை நாம் எழுத போகிறோம்.
பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்தி இந்தியா கூட்டணியை ஒன்றியத்தில் அமரவை வைப்பதற்காக நடக்கக்கூடிய தேர்தல்தான் இந்த நாடாளுமன்ற தேர்தல். தேர்தல் என்பதால் பிரதமர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். இல்லை என்றால் வெளிநாட்டில்தான் இருப்பார்
தன்னுடைய ஆட்சி முடியபோகிறது என்பதால் பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை. அவரது முகத்திலும் கண்களிலும் தோல்வி பயம் தெரிகிறது. நான் கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடியால் பதில் சொல்ல முடியவில்லை. முடியாது.
தேர்தலுக்கு தேர்தல் பா.ஜ.க நடத்தும் கபட நாடகத்தை தமிழ்நாடு மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களும் இனி நம்ப மாட்டார்கள். உங்களை மன்னிக்கவும் மாட்டார்கள்
இப்போது நடைபெறும் தேர்தல் யுத்தம் இந்தியா கூட்டணிக்கும் பா.ஜ.க-வுக்குமானது அல்ல. பாசிச பா.ஜ.கவுக்கும் மக்களுக்கும் நடைபெறும் யுத்தம். இந்த தேர்தல் யுத்தத்தில் வெற்றிப் பெறப் போகிறவர்கள் மக்கள்தான். பாசிச பா.ஜ.க மண்ணோடு மண்ணாகும்.
10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் நடந்த ஊழல்கள் ஒன்றா இரண்டா?. அதற்கு இமாலய எடுத்துக்காட்டுதான் தேர்தல் பத்திரங்கள் ஊழல். இந்த ஊழல்கள் குறித்து நாம் மட்டுமல்ல இந்திய மக்களே கேள்வி கேட்டாளும் அவர்களிடம் பதில் இல்லை.
PM Cares என்ற பெயரில் பா.ஜ.க மிகப் பெரிய ஊழல் செய்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஊழல் ஊழலை முறையாக விசாரித்து அம்பலபடுத்தப்படும்.
தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு அமைச்சர் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துவிட்டுதான் இங்கு வந்து இருக்கிறேன். நம்முடைய பிரச்சாரத்தை ராஜ்பவனில் இருந்து தொடங்கி இருக்கிறோம். இது நிச்சயம் குடியரசு தலைவர் மாளிகையை அடையும்
பெங்களூருவில் வெடித்த குண்டு தமிழர்கள் வைத்த குண்டு என்று ஒன்றிய அமைச்சர் ஒருவர் பேசும் அளவிற்கு பா.ஜ.க வெறுப்பு தீயை வளர்த்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் என்ன வன்முறையாளர்களா?. பயங்கர வாதிகளா?
ஒரு ரூபாய் கொடுக்கும் எங்களுக்கு ஏன் 29 பைசா கொடுக்கிறீர்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். இதை கேட்டால் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பிச்சை என்று ஆணவமாக கூறுகிறார். இந்த ஆணவம் தான் பா.ஜ.கவை அழிக்கபோகிறது. மக்களுக்கு கொடுப்பது பிச்சை அல்ல. அது அவர்களது உரிமை.
மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு உதவுவது கடமை. அதைத்தான் தி.மு.க அரசு சரியாக செய்து வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி தள்ளுபடி செய்யும் அந்த கூட்டத்தில் போய் பிச்சை என்று நீங்க பேசுவீங்களா?. ஏழைகள் என்றால் அவ்வளவு இளக்காரமா?. மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் எதற்கு நிதியமைச்சர் பதவி? என தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் 11 வயது சிறுமி சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்த நிலையில்; பாலியல் பலாத்காரம் செய்து கொலை என அதிர்ச்சி தகவல்..
by Askar
written by Askar
மதுரை கூடல் புதூர் பொதிகை நகர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தான் குடியிருந்து வரும் வீட்டில் கழிவறையில் மயங்கிய நிலையில் சிறுமியின் உறவினர்களால் நேற்று மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்க கூடும் என்கின்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று சிறுமியின் வீட்டில் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே சிறுமியின் பிரேத பரிசோதனை சற்று நேரத்துக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்த பிரேத பரிசோதனையில் முதற்கட்டமாக சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கூறியதாவது;
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை போக்சோ மற்றும்
கொலை வழக்காகவும் மாற்றப்படும். குற்றவாளியை நெருங்கி விட்டதாகவும் விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதை அடுத்து பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாம் தமிழர் கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கீடு!-தேர்தல் ஆணையம் அறிவிப்பு..
by Askar
written by Askar
நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இம்முறை எந்தக் கூட்டணியிலும் பங்கேற்காமல் தனித்துப் போட்டியிடுகிறது அக்கட்சி.
எனினும் எதிர்பார்த்த சின்னம் கிடைக்கவில்லை. நாம் தமிழர் கட்சி தங்களுக்கு ஒதுக்கக் கோரிய கரும்பு விவசாயி சின்னம் வேறொரு மாநிலக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நாம் தமிழர் கட்சி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அந்த மனுவை அவசரமானதாகக் கருதி விசாரிக்கவும் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி அனுப்பிய சின்னங்ளை ஆராய்ந்து அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -22
( கி.பி 1299-1922)
சுல்தான் இரண்டாம் முராத் அவர்கள் தனது மகனுக்கு முகம்மது என்று பெயரிட்டார்.
தனது மகனை வளர்த்து பராமரிக்கும் பொறுப்பை “சேக் அல் சம்சுதீன்”என்ற அறிஞர் இடம் ஒப்படைத்தார்.
இவர் முகம்மதுவுக்கு
அல்குர்ஆன்,
அல் ஹதீஸ்,
இஸ்லாமிய சட்டக்கலை, விளையாட்டு, கணிதவியல்,
விண்ணியல்,
போர் தந்திரங்கள்,
வரலாறு என அனைத்து துறைகளையும் போதித்தார்.
அரபு,பாரசீகம், துருக்கி, லத்தீன், மற்றும் கிரேக்க மொழிகளையும் முகம்மது கற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.
முகம்மது அவர்கள் இயற்கையிலேயே
அன்பு,பணிவு,
மார்க்கப் பற்று போன்ற நல்ல குணங்களை உடையவராக இருந்தார்.
கவித்துவ புலமையும் பெற்றிருந்தார்.
வாள் பயிற்சி, குதிரையேற்றம்,
போர்நுணுக்கங்கள் போன்ற
போருக்கான
பயிற்சிகளையும்
கற்றிருந்தார்.
சிறுவயது முதலே தனது தந்தையுடன் போர்களிலும் பங்கு பெற்றார்.
முன்னர் இரண்டாம் முராத் 12 வயதே நிரம்பிய தனது மகன் முகம்மதை உஸ்மானிய பேரரசின் மன்னராக அறிவித்துவிட்டு அவர் ஓய்வெடுக்க சென்று விட்டார்.
இந்த சூழலில் மன்னர் சிறுவராக இருந்ததை அறிந்த ரோம பேரரசு உஸ்மானியர்களோடு
போருக்கு படை எடுத்து வந்தது.
சிறுவயது மற்றும் போதிய அனுபவம் இல்லாத முகம்மது, தனது தந்தையை
மீண்டும் வந்து பொறுப்பேற்று போரை நடத்த செய்தி அனுப்பினார்.
இரண்டாம் முராத் அவர்கள் இப்போது நீதான் மன்னர் நீயே போரை நடத்து நான் வரமுடியாது என பதில் கடிதம் அனுப்பினார்.
ஆனால் புத்திசாலித்தனமாக
மன்னர் முகம்மது அவர்கள் தனது தந்தைக்கு மீண்டும்
மன்னர் முகம்மது கட்டளையிடுகிறேன்
வந்து போரை நடத்துங்கள் என கடிதம் எழுதினார்.
மறுக்க முடியாமல் மீண்டும் பொறுப்பேற்று ரோமப்படைகளை
இரண்டாம் முராத் அவர்கள் தோற்கடித்தார்.
போர் வெற்றிக்குப் பிறகு தனது தந்தை இரண்டாம் முராத் அவர்களை மன்னராக மீண்டும் பொறுப்பேற்க வைத்தார் முகம்மது அவர்கள்.
சிறிது காலத்தில் இரண்டாம் முராத் அவர்கள் மரணமடைந்தார்.
பிறகு உஸ்மானிய பேரரசின் மன்னராக தனது 18 வயதில் மீண்டும் முகம்மது பொறுப்பேற்றார்.
உலகின் சிறந்த பத்து மன்னர்களில் ஒருவராக பேரரசர் முகம்மது போற்றப்படுகிறார்.
இந்த முறை காண்ஸ்டாண்டி
நோபிள் நகரை வென்று முழு துருக்கியையும் கையகப்படுத்தி
உஸ்மானிய பேரரசை
உலகின் முதல் நிலை பேரரசராக கட்டமைக்க திட்டமிட்டார்.
போருக்கான ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன.
போருக்கு பெரும் படை திரட்டப்பட்டது.
கடலில் போர் கப்பல்களை
ஓடவிட்டு ரோமானிய கப்பல்களை சுற்றி வளைத்தார்.
ரோமானிய கடல்படையை ஊடுறுவ இவர் வகுத்த திட்டம் இன்றளவும் ஆச்சரியமானது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொன்முடி மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார்..
by Askar
written by Askar
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொன்முடி மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு தமிழக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியதை அடுத்து பொன்முடி அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை இழந்தார். எனினும், அவருக்கான தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்கக் கேட்டு ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் அவ்வாறு செய்த இயலாது என ஆளுநர் மாளிகை தெரிவித்தது. இது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநரின் செயல்பாட்டை கடுமையாகக் கண்டித்தது.
ஆளுநரின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது என்றும் ஜனநாயக முறைப்படி மனுதாரருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி முதல்வர் செய்த பரிந்துரையை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்தில் ஆளுநர் எவ்வாறு தலையிட முடியும் என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ஆளுநர் தனது முடிவை 24 மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும் என்று கெடு விதித்தது.
இதையடுத்து பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அதிகாரபூர்வ அறவிப்பையும் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தானில் தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்..
சோழவந்தானில் உள்ள தனியார் மகாலில் அதிமுக தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் ஜக்கையன், மாணிக்கம், கருப்பையா, மகேந்திரன், தவசி, ஏ.கே.டி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், அதிமுக தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தி பேசினார். தொடர்ந்து அதிமுக தேனி நாடாளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி ஏற்புரை நிகழ்த்தினார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிலேயே தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் முதலாவதாக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற இலக்கை நாம் அடைய வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன் காளிதாஸ்,, அரியூர் ராதாகிருஷ்ணன், எம் வி பி ராஜா, பேரூர் செயலாளர்கள் முருகேசன், டாக்டர் அசோக் குமார், அழகுராஜா, குமார் மற்றும் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிளைக்கழக நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா நன்றி தெரிவித்தார் மேலும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் உட்பட மாநில, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.78,800 பறிமுதல்..
written by Abubakker Sithik
இராஜபாளையம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.78,800 பறிமுதல்..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் புத்தூர் விளக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை (FST A ) தேர்தல் அதிகாரி ஆண்டாள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் தமிழ்செல்வி ஆகியோர் தலைமையில் வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 78800 பறிமுதல் செய்யப்பட்டது.
டாடா இண்டிகேஸ் ATM மிஷினில் பணம் வைக்கும் பணியில் ஈடுபட்ட செல்வக்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜெய்பாண்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு..
written by Abubakker Sithik
சேலம் மாணவ மாணவிகளுக்கு சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வழங்கிய மதுரை இயற்கை ஆர்வலர்..
மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அங்குள்ள ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். சுற்றுலா நிறைவில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டபடி மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கி பேசினார். நம் வாழ்நாளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மரங்களை நாம் நட வேண்டும். குறைந்த பட்சம் மாணவ மாணவிகள் தங்கள் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு மரம் நடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும் மரங்கள் வளர்ப்பதால் இயற்கைக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு பாதாகைகள் வழங்கி சுற்றுச்சூழல் உறுதிமொழி வாசிக்க மாணவ மாணவிகள் பின் தொடர்ந்து வாசித்தனர். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் ரமேஷ்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் வரும் மார்ச் 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் வரும் மார்ச் 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு..
தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு வருகின்ற 20 ஆம் தேதி பொதுத் தேர்வு மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாள் (பங்குனி 12) 25.03.2024 திங்கள்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பார்வை 1ல் கண்டுள்ள அரசாணையின் படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குட்பட்டு 25.03.2024 திங்கள் கிழமை அன்று பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது எனவும், மேற்படி 25.03.2024 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மக்களவை தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. மேலும் அன்று வழக்கம் போல் வேட்பு மனுத் தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act -1881) ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது, இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்டுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (06.04.2024) சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அச்சமயம் கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ மாணவியருக்கு இவ்வேலை நாள் பொருந்தாது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்;மகளிர் உரிமைத் தொகை மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும்!-அதிரடியாக வெளியான அதிமுக தேர்தல் அறிக்கை..
by Askar
written by Askar
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
- ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்.
- மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ. 3,000 வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.
- நீட் தேர்வுக்கு மாற்றாக 12ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை.
- உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
- குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.
- தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை.
- தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
- சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம்.
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
You must be logged in to post a comment.