25
இராஜபாளையம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.78,800 பறிமுதல்..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் புத்தூர் விளக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை (FST A ) தேர்தல் அதிகாரி ஆண்டாள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் தமிழ்செல்வி ஆகியோர் தலைமையில் வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 78800 பறிமுதல் செய்யப்பட்டது.
டாடா இண்டிகேஸ் ATM மிஷினில் பணம் வைக்கும் பணியில் ஈடுபட்ட செல்வக்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜெய்பாண்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.