இராமநாதபுரம்,அக்.10- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை ஆற்றுவாய் பகுதிக்கு இன்று காலை பைபர் படகு ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய இருவர் விரைவாக தப்பி ஓடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் மண்டபம் போலீசார், மரைன் போலீசார், பாதுகாப்பு பிரிவினர் அங்கு விரைந்து சென்றனர். விசாரணையில் OFRP – A – 3156 MNR என எழுதிய பைபர் படகு இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தது என தெரிந்தது. அப்படகில் பயணித்து தப்பியோடிய 2 பேம் இலங்கையைச் சேர்ந்தவர்களா அல்லது கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Category:
மாநில செய்திகள்
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணியில் முறைகேடு: பாமக கண்டன தீர்மானம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், அக் 10 – இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாமக மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலர் அக்கிம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்தனதாஸ் மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா முன்னிலை வகித்தனர். மண்டபம் ஒன்றிய செயலர் வெங்கடேசன் வரவேற்றார்.
தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் போராட்டம், கடலாடி தாலுகா சிக்கலை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலாடி ஒன்றிய பாமக சார்பில் உண்ணாவிரத போராட்டம், முல்லைப் பெரியாறிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் மதுரை வரை கொண்டு வந்துள்ள குடிநீரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நீட்டிப்பு செய்து ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை முழுமையாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ராமநாதபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை அழித்து வரும் ஓஎன்ஜிசி நிறுவனம், சீமை கருவேல் மரங்களை முற்றிலுமாக அகற்ற வலியுறுத்தி போராட்டம், ராமநாதபுரம் நகர் சாலைகளில் நிரம்பி வழியும் சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும், புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணியில் முறைகேடு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை அறை விபரம் குறித்து நுழைவாயிலில் வரைபடம் நிறுவ வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராமநாதபுரம் நகர் செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
பசுமை தாயக மாநில துணைச்செயலர் கர்ண மஹாராஜா, மாவட்ட துணை செயலாளர் ராசிக்,
ராமநாதபுரம், திருப்புல்லாணி, கடலாடி ஒன்றிய செயலர்கள் ஷரீப், மஹ்தும் கான், இருளாண்டி, திருப்புல்லாணி ஒன்றியத்தலைவர் ராஜேந்திரன்,
மாவட்ட தொழிற்சங்க செயலர் லட்சுமணன்,
இளைஞர் சங்க செயலர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் இப்ராஹிம், மாணவர் சங்கச் செயலர் சந்தோசம், உழவர் பேரியக்கத்தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜபாளையத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் ஐந்து தலைமுறையாக வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு பட்டா வழங்கிட கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்திய நாகர்கோயில் காவல்துறை கண்டித்தும் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் வாழும் அருந்ததியர் மக்களுக்கு உடனே பட்டா வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ் முருகன் தென்மண்டல ஊடகப் பிரிவு செயலாளர் தமிழரசு தென் மண்டல இளம்புலிகள் அணி துணைச் செயலாளர் திரு வளவன் மாநில செய்தி தொடர்பாளர் முத்துக்குமார் மாநிலத் தொண்டர் அணி செயலாளர் தமிழரசு ராசை ஒன்றிய செயலாளர் அம்பேத்கர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக அஞ்சல் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக பணி நிறைவு பெற்ற அஞ்சல் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு அஞ்சல் தினம் தோன்றிய விதம், அஞ்சலகத்தின் தேவை, அஞ்சலக பணியாளர்களின் உழைப்பு, அஞ்சலக பிரிவுகள், அஞ்சலகத்தின் வெற்றி முதலியன குறித்து சிறப்புரையாற்றினார். சமூக ஆர்வலர் அசோக்குமார் அவர்கள் பழங்காலத்தில் தபால்கள் சென்ற விதம், பல்வேறு வகையான தபால்கள், மாதிரிகள், மேலும் தபால் பெட்டி மாதிரி ஒன்றை செய்து காட்டி அதன் சேவைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். உலக தபால் தினம் குறித்து வினாடி வினா நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தபால் கார்டு வழங்கப்பட்டு தனது நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு தபால் எழுதும் முறை, பெறுநர் முகவரி முதலியன குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மாணவ மாணவிகள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். ஆசிரியை மனோன்மணி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சுகுமாறன் நன்றி கூறினார். விழாவில் பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம்தி ருப்பரங்குன்றம் அருகே சின்ன உடைப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் நிதிஷ்குமார்( வயது 18) இவர் சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த பாண்டியின் மகன் தமிழரசன்(வயது 24) கொத்தனார் ஆக பணியாற்றி வருகிறார் தமிழரசனும் நிதிஷ்குமாரும் இன்று அதிகாலை டூவீலரில் சென்ற பொழுது சின்ன உடைப்பு கால்வாயில் நிலை தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தனர்.
பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் தமிழரசன் நிதிஷ்குமார் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இது குறித்து பெருங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் கொம்பூதி கிராமத்தில் மக்களிடம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் குறைகள் கேட்டறிந்தார். அரசின் பல்வேறு துறை நலத்திட்ட உதவிகளை தகுதியுடையோர் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.
கிராமப் பகுதிகளில் பிள்ளைகள் +2 வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடாமல் பிள்ளைகளை பட்டமேற்படிப்பு வரை படிக்க பெற்றோர் வைக்க வேண்டும். அரசு தொழிற்பயிர்ச்சியுடன் வேலைவாய்ப்புகளையும் தனியார் துறைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பணி போட்டிதேர்வுகளுக்கு வழங்கும் பயிற்சி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரேஷன் பொருட்கள், குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்தார்.
ஊராட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறினார்,
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி போலீசார் – விவசாயிகள் தள்ளுமுள்ளு – பரபரப்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், போகலூர் வட்டாரத்தில் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த 2021-22, 2022-23 நிதி ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்கவில்லை. இத்தொகையை வழங்கக்கோரி பல்வேறு விவசாய சங்கங்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று கூடினர். தடுப்பு வேலிகளை தாண்டி கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர் அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு , வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயிகளை கூட்டத்தை சமாளிக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஏர்வாடியில் குடிநீர் தட்டுப்பாடு:ஊராட்சி அலுவலகம் முற்றுகை- காலிக்குடங்களுடன் வந்த பெண்கள்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் ஏர்வாடியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
தாலுகா குழு உறுப்பினர் நம்புராஜன், முருகேசன், குமார், ராமநாதன், முருகராஜ், ராக்கம்மாள், சிக்கந்தர் பாஷா, மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்டச் செயலாளர் காசிநாத துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமு, மயில்வாகனன் தாலுகா செயலர் அம்ஜத் கான், தாலுகா குழு உறுப்பினர்கள் பச்சம்மால், போஸ், சுப்ரமணியன், சக்தி குமார், ராமசாமி, ஜெயக்குமார் , ராமாயி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இடியும் தருவாயில் உள்ள ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டி தர வேண்டும், ஏர்வாடி தர்ஹா பகுதியில் சேதமான சாலையை செப்பனிட வேண்டும், சின்ன ஏர்வாடியில் பயனற்றுக்கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வேண்டும், ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும், ‘100 நாள் வேலை திட்டத்தை முறைப்படுத்தி தினக்கூலியை தாமதம் இன்றி வழங்க வேண்டும், இருள் சூழ்ந்த இடங்களில் தெருவிளக்கு அமைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கீழக்கரை தாசில்தார் பழனி குமார், துணை தாசில்தார் பரமசிவம் கடலாடி பிடிஒ ஜெய ஆனந்த், கீழக்கரை டிஎஸ்பி (பொ) விஜயகுமார், ஏர்வாடி ஆய்வாளர் லட்சுமி/ சிக்கல் ஆய்வாளர் முருகதாஸ், கீழக்கரை ஆய்வாளர் வேல்முருகன், ஏர்வாடி விஏஓ ஆகியோர் முற்றுகையிட முயன்றவர்களிடம் சமரசம் பேசினர். டேங்கர் லாரி மூலம் ஏர்வாடி ஊராட்சி பகுதியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கடலாடி ஒன்றிய அதிகாரிகள் உறுதியளித்ததால் முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்புல்லாணியில் தென்னை வளர்ச்சி வாரிய மாதிரி செயல் விளக்க திடல் விண்ணப்ப முகாம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் நயினாமரக்கான் கிராமத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் தென்னை மாதிரி செயல் விளக்கதிடல் மானிய விண்ணப்பங்கள் சேகரிப்பு முகாம் மற்றும் தொழில் நுட்ப முகாம் நடந்தது. இதில் திருப்புல்லாணி, களிமண்குண்டு, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரக்கான், பெரியபட்டினம், கொட்டியக்காரன்வலசை, தினைக்குளம், பருத்திக்காட்டுவலசை கிராம தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர். தென்னை வளர்ச்சி வாரிய திட்டங்கள் குறித்து தென்னை வளர்ச்சி வாரிய தொழில் நுட்ப அலுவலர்கள் முருகானந்தம், பாரதிபிரியன் ஆகியோர் எடுத்துரைத்தனர். தென்னை பயிர் தொழில் நுட்பங்கள் குறித்து ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வல்லிக்கண்ணன் எடுத்துரைத்தார்.
தென்னை பயிருக்கு விவசாய கடன் அட்டை பெறுதல் குறித்து திருப்புல்லாணி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அமர்லால் எடுத்துரைத்தார். தென்னை வளர்ச்சி வாரிய மாதிரி செயல் விளக்க திடல் மானியங்களை பெறுவதற்காக திருப்புல்லாணி தென்னை விவசாயிகள் நலக்குழ அமைக்கப்பட்டது தலைவராக தினைக்குளம் ஜாகிர் உசைன், செயலராக நயினாமரக்கான் கணேசன், பொருளாளராக பத்ராதரவை த முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த குழுவினர் மூலம் விண்ணப்பங்களை அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க செயலாளர் மணிமாதவன் விவசாயிகளை ஒருங்கிணைத்தார்.
மாதிரி செயல் விளக்க திடல் அமைக்க நுற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்பித்தனர்.
முகாமில் விண்ணப்பம் அளிக்க இயலாதோர் உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் அக்.11ல் நடைபெறும் தென்னை மாதிரி செயல் விளக்க திடல் மற்றும் தொழில் நுட்ப முகாமில் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன் பெற வேளாண் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வீட்டில் பதுக்கிய வலி நிவாரணி மாத்திரை, பூச்சி கொல்லி மருந்து பறிமுதல்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடல் வழியாக இலங்கைக்கு இரவில் கடத்திச் செல்வதற்காக பெருங்குளம் பகுதியில் ஒரு வீட்டில் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மண்டபம் மெரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, பெருங்குளம் தீன்யா தெருவில் உள்ள ஒரு வீட்டை மண்டபம் மெரைன் போலீசார், உச்சிப்புளி போலீசாரின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். அங்கு 23 பெட்டிகளில் இருந்த வலி நிவாரணி 60 ஆயிரம் மாத்திரை (PRAGAB) 2 பெட்டிகளில் இருந்த 200 பாட்டில் பூச்சி கொல்லி மருந்து (TAFGOR) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மண்டபம் அருகே வேதாளை பகுதியைச் சேர்ந்த நூருல் பைசின் என்பவரை கைது செய்து விசாரணைக்கு பின் விடுவித்தனர். தலைமறைவான மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: ரூ.1.40 லட்சம் மதிப்பில் 26 பேருக்கு அரசு நலத்திட்ட உதவி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், அக்.9-
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 640 பேர் மனு அளித்தனர்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 20 பேருக்கு தையல் இயந்திரம், 3 பேருக்கு சலவை பெட்டி, தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் 5 பேருக்கு தாட்கோ சார்பில் கல்வி உதவித்தொகை காசோலை என 26 பேருக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்ரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் கல்யாணசுந்தரம், தாட்கோ மேலாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், அக்.8- முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளையொட்டி, இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாமக சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. மாவட்ட செயலர் தேனி.சை.அக்கிம் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா முன்னிலை வகித்தனர். கிரசன்ட் ரத்த வங்கி, ஆராய்ச்சி நிலைய உரிமையாளர் பயாஸ் அஹமது வரவேற்றார். மாவட்ட செயலர் அக்கீம் உட்பட 20க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். பசுமை தாயக மாநில துணைச்செயலர் கர்ண மஹாராஜா, ராமநாதபுரம் நகர் செயலர் பாலமுருகன், ஒன்றிய செயலர்கள் வெங்கடேசன் (
மண்டபம்), ஷரீப் (ராமநாதபுரம்), மக்தும் கான் (திருப்புல்லாணி), இருளாண்டி (கடலாடி), மாவட்ட தொழிற்சங்க செயலர் லட்சுமணன், இளைஞர் சங்க செயலர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், , மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் இப்ராஹிம், மாணவர் சங்கச் செயலர் சந்தோசம், உழவர் பேரியக்கத்தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் ரேஷன் அரிசியை கடத்திய நபர் வாகன தணிக்கையில் போலீசார் கைது..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் செயல்ப்பட்டு வரும் வானமாமலை நகர் ரேஷன் கடையில் நேற்று நண்பகலின் போது மர்ம நபர்களால் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்கள் வேகமாக பரவியதை அடுத்து அரிசி மூடைகளை கடத்தப்படுவதாக உணவு வழங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து ஜீவாநகர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஜெய்ஹிந்து புறத்தை சேர்ந்த கார்த்திகேயன்(வயது 28) என்பவர் இருசக்கர வாகனத்தில் அரிசி மூடைகளுடம் போலீசாரிடம் பிடிபட்டார். தொடர்ந்து அவரிடம் இருந்து சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 150 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் தற்பொழுது மாட்டியுள்ள கூலிக்கு வேலை பார்ப்பவர் மட்டுமே முக்கியமான நபரை கைது செய்ய வேண்டும் எனவும் மேலும் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் பொருட்களை கடத்துவதற்கு உதவிய பணியாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் உடைய கோரிக்கையாக உள்ளது மேலும் இது போன்ற செயல்கள் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்களை கடுமையான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு முறையாக ரேஷன் பொருள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆர் எஸ் மங்கலத்தில் 270 கிலோ புகையிலை பொருட்களுடன் இருவர் சிக்கினர்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ராமநாதபுரம், அக்.8- ஆர்.எஸ் மங்கலம் அருகே வாகன சோதனையின்போது 270 புகையிலை பொருட்களுடன் 2 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் இரவு ரோந்து மேற்கொண்ட னர். ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை ரோட்டில் சர்ச் முன் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அது வழி வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். வாகனத்தின் பின்புறம் கூலிப் 20 கிலோ, ஹன்ஸ் புகையிலை 10 கிலோ, கணேஷ் புகையிலை 194 கிலோ, உள்பட 270 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாகனத்தில் ஏற்றிவந்த ஆர்.எஸ்.மங்கலம் அருகே
கோழியார்கோட்டை மாரிகிருஷ்ணன் மகன் சித்திரவேல் 23, புல்லமடை மேற்கு தெரு ராஜகுமார் 44 ஆகியோர் மீது வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், அக்.8- ராமேஸ்வரம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வார விழா பேரணி தங்கச்சிமடத்தில் இன்று காலை நடந்தது.
விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா தலைமை வகித்தார். மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் சண்முகம், மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத் தலைவர் அகஸ்டலா முன்னிலை வகித்தனர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல்காதர் ஜெயிலானி பேசினார். இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் ஒரே நாளிலில் இரு வீடுகளில் பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை.,.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பி.எம்.டி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் திருமங்கலம் தனியார் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு நேற்று குடும்பத்துடன் சொந்த ஊரான அய்யம்பட்டிக்கு சென்று விட்டு காலையில் வீடு திரும்பியுள்ளார்.வீட்டை பார்க்கும் போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டினுள் சென்று பார்த்த போது வீட்டினுள் பீரோவில் இருந்த 48 பவுன் நகை ரூ.1லட்சம் பணம்; திருடு போனது தெரியவந்தது.இது குறித்து ரவி உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதே போல் அண்ணாநகர் முதல் தெருவில் செல்வராஜ் என்பவர் வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து மூன்று கிராம் தங்க த்தோடு திருடு போனது.இதுகுறித்து செல்வராஜீம் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.போலிசார் வழக்குப்பதிவு செய்து இரு வீடுகளின் தெருக்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.உசிலம்பட்டியில் தொடர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்று வருவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் உசிலம்பட்டி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிப்பது தொடர்கதையாகியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், அக்.7- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஒரு முருக்கு கம்பெனியில் ரேஷன் பாமாயில் பாக்கெட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சார்பு ஆய்வாளர் சிவஞானபாண்டியன் தலைமையில் தலைமை காவலர்கள் குமாரசாமி, முத்துகிருஷ்ணன், தெய்வேந்திரன் உள்ளிட்டோர் முருக்கு கம்பெனியை சோதனையிட்டனர்.
அங்கு பதுக்கியருந்த தலா 1 லிட்டர் வீதம் 400 லிட்டர் ரேஷன் பாமாயில் பாக்கெட்களை கைப்பற்றினர். இது தொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம் அருகே மதன்குடியைச் சேர்ந்த முருக்கு மாஸ்டர் மகேஸ்வரன்.(38) கைது செய்து, முருக்கு கம்பெனி உரிமையாளர் பாலமுருகனை தேடி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், அக்.7- இராமநாதபுரம் மாவட்டம் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடந்தது. தமுமுக மாநில துணை பொது செயலர் எஸ்.சலீமுல்லா கான் தலைமை வகித்தார். சங்பரிவார அமைப்புகளில் அதிகாரம் அநீதியை கண்டித்து அக்.28 ல் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கருப்பு சட்டை அணிந்து ஆயிரம் பேர் பங்கேற்றல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட தலைவர்கள் இப்ராஹிம் (மத்தி), ஷேக் அப்துல்லாஹ் (மேற்கு) வாவா ராவுத்தர் (தெற்கு), தமுமுக மாவட்ட செயலாளர்கள் சிந்தா ஷேக் மதரர் (மேற்கு), அப்துல் ரஹீம் (மத்தி), சம்சுகனி (தெற்கு),மமக மாவட்ட செயலாளர்கள் முஹமது இலியாஸ் (மேற்கு), ஆஷிக் அஹமத் (மத்தி), மாவட்ட பொருளாளர்கள் சையது அபுதாஹிர் (மேற்கு), சபீக் ரஹ்மான் (மத்தி), சாகுல் ஹமீது (தெற்கு) உட்பட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் தெற்கு மாவட்ட தமுமுக, மமக நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் தலைமை வாகித்தார். மாநில தலைமை பிரதிநிதி சம்சுதீன் சேட், மாநில செயற்குழு உறுப்பினர் முஹமது முஹிதுல்லா பேசினர். கோவை சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி அக்.28ல் சென்னையில் நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் ,இலவச பல் சிகிச்சை முகாம் பள்ளித் தாளாளர் கல்வியாளர் முனைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது விழாவிற்க்கு வந்திருந்தவர்களை பள்ளி முதல்வர் லயன் அமுதப்பிரியா வரவேற்றார்கள். டாக்டர் .ஆனந்த் பல் மருத்துவமனை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பல் மருத்துவர்கள் டாக்டர் .ஆனந்த் மற்றும் டாக்டர்.பிரியா தலைமையில் இலவசமாக பல்சிகிச்சை முகாம் நடைபெற்றது. பெற்றோர்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு பல் பாதுகாப்பு சம்பந்தமான சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள்.இதில் அதிக அளவில் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.விழா நிறைவாக ஆசிரியர் செல்லராணி நன்றி கூறினார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜெயபாரதி,சுபா,திவ்யா, செல்வராணி மற்றும் சங்கீதா,அனிதா ஆகியோர் செய்து இருந்தார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம் முதல் 10 இடம் பிடித்தோருக்கு பரிசு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், அக்.7- அஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு நெடுந்தூர ஓட்டப்போட்டியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நெடுந்துார ஓட்டப்போட்டியை பட்டணம்காத்தான் இசிஆர். பகுதியில் கலெக்ர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார். 17 வயது முதல் 25 வயது ஆடவர் ஓட்டத்தில் சேதுபதி அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஏ.முகேஷ் ஷர்மா, கே.ராமர் முதல் 2 இடம், செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி மாணவர் வசந்த் மூன்றாம் இடம் இடம் பிடித்தனர். 25 வயதுக்கு மேற்பட்டோர் ஆடவர், ஓட்டத்தில் பிரசாந்த் முதலிடம், ஜெயபிரகாஷ் இரண்டாம் இடம், ராம்குமார் மூன்றாம் இடம் பிடித்தனர்.
17 வயது முதல் 25 வயது மகளிர் ஓட்டத்தில் சேதுபதி அரசு கலை கல்லூரி மாணவியர் ஜெ.மனோன்மணி, ஆர்.ஹரிணி ஆகியோர் முதல்
2 இடம், ஐ. மவுனிகா மூன்றாம் இடம் பிடித்தனர்.
25 வயதுக்கு மேற்பட்டோர் மகளிர் ஓட்டத்தில் எஸ். மரிய அக்னஸ் முதலிடம், ஐ. மயில் இரண்டாம் இடம் பிடித்தனர். இவர்களுக்கு முறையே ₹.5000, ₹.3000, ₹.2000, நான்கு முதல் 10 ஆம் இடம் வரை பிடித்தோருக்கு தலா ₹.1000 வீதம் பரிசுத்தொகை காசோலையை உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம் வழங்கினார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் மூ.தினேஷ் குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.