10
இராமநாதபுரம், அக்.8- ராமேஸ்வரம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வார விழா பேரணி தங்கச்சிமடத்தில் இன்று காலை நடந்தது.
விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா தலைமை வகித்தார். மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் சண்முகம், மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத் தலைவர் அகஸ்டலா முன்னிலை வகித்தனர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல்காதர் ஜெயிலானி பேசினார். இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.