Home செய்திகள் உசிலம்பட்டியில் ஒரே நாளிலில் இரு வீடுகளில் பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை.,.

உசிலம்பட்டியில் ஒரே நாளிலில் இரு வீடுகளில் பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை.,.

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பி.எம்.டி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் திருமங்கலம் தனியார் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு நேற்று குடும்பத்துடன் சொந்த ஊரான அய்யம்பட்டிக்கு சென்று விட்டு காலையில் வீடு திரும்பியுள்ளார்.வீட்டை பார்க்கும் போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டினுள் சென்று பார்த்த போது வீட்டினுள் பீரோவில் இருந்த 48 பவுன் நகை ரூ.1லட்சம் பணம்; திருடு போனது தெரியவந்தது.இது குறித்து ரவி உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதே போல் அண்ணாநகர் முதல் தெருவில் செல்வராஜ் என்பவர் வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து மூன்று கிராம் தங்க த்தோடு திருடு போனது.இதுகுறித்து செல்வராஜீம் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.போலிசார் வழக்குப்பதிவு செய்து இரு வீடுகளின் தெருக்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.உசிலம்பட்டியில் தொடர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்று வருவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் உசிலம்பட்டி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிப்பது தொடர்கதையாகியுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!