18
இராமநாதபுரம், அக்.7- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஒரு முருக்கு கம்பெனியில் ரேஷன் பாமாயில் பாக்கெட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சார்பு ஆய்வாளர் சிவஞானபாண்டியன் தலைமையில் தலைமை காவலர்கள் குமாரசாமி, முத்துகிருஷ்ணன், தெய்வேந்திரன் உள்ளிட்டோர் முருக்கு கம்பெனியை சோதனையிட்டனர்.
அங்கு பதுக்கியருந்த தலா 1 லிட்டர் வீதம் 400 லிட்டர் ரேஷன் பாமாயில் பாக்கெட்களை கைப்பற்றினர். இது தொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம் அருகே மதன்குடியைச் சேர்ந்த முருக்கு மாஸ்டர் மகேஸ்வரன்.(38) கைது செய்து, முருக்கு கம்பெனி உரிமையாளர் பாலமுருகனை தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment.