இராமநாதபுரம், அக்.7- அஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு நெடுந்தூர ஓட்டப்போட்டியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நெடுந்துார ஓட்டப்போட்டியை பட்டணம்காத்தான் இசிஆர். பகுதியில் கலெக்ர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார். 17 வயது முதல் 25 வயது ஆடவர் ஓட்டத்தில் சேதுபதி அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஏ.முகேஷ் ஷர்மா, கே.ராமர் முதல் 2 இடம், செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி மாணவர் வசந்த் மூன்றாம் இடம் இடம் பிடித்தனர். 25 வயதுக்கு மேற்பட்டோர் ஆடவர், ஓட்டத்தில் பிரசாந்த் முதலிடம், ஜெயபிரகாஷ் இரண்டாம் இடம், ராம்குமார் மூன்றாம் இடம் பிடித்தனர்.
17 வயது முதல் 25 வயது மகளிர் ஓட்டத்தில் சேதுபதி அரசு கலை கல்லூரி மாணவியர் ஜெ.மனோன்மணி, ஆர்.ஹரிணி ஆகியோர் முதல் 2 இடம், ஐ. மவுனிகா மூன்றாம் இடம் பிடித்தனர். 25 வயதுக்கு மேற்பட்டோர் மகளிர் ஓட்டத்தில் எஸ். மரிய அக்னஸ் முதலிடம், ஐ. மயில் இரண்டாம் இடம் பிடித்தனர். இவர்களுக்கு முறையே ₹.5000, ₹.3000, ₹.2000, நான்கு முதல் 10 ஆம் இடம் வரை பிடித்தோருக்கு தலா ₹.1000 வீதம் பரிசுத்தொகை காசோலையை உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம் வழங்கினார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் மூ.தினேஷ் குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.