திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் திமுக சார்பில் விடியல் விடியலை நோக்கி என்ற நிகழ்ச்சி மூலம் விவசாயிகள் வியாபாரிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு தலைமை தாங்கினார் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொது செயலாளர் பொன்முடி கலந்துகொண்டு விவசாயிகளும் கலந்துரையாடினார். செங்கம் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த செயல் மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் கம்பன் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் அண்ணாமலை நாச்சிபட்டு கூட்டுறவு சங்க தலைவர் அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் செந்தில், நகர செயலாளர் சாதிக் பாஷா, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சென்னம்மாள் முருகன் , ஊராட்சி மன்றத் தலைவர்கள் உட்பட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
11
previous post
You must be logged in to post a comment.