Home செய்திகள் வேலூர் அருகே ரவுடிகளால் 3 பேர் வெட்டி கொலை

வேலூர் அருகே ரவுடிகளால் 3 பேர் வெட்டி கொலை

by mohan

வேலூர் மாவட்டம் தொரப்பாடி அருகே உள்ள அரியூர் அடுத்த தனியார் செவிலியர் கல்லூரி அருகே 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அரியூர் போலீசார் அங்கு சென்று விசாரணை செய்த போது கொலையானவர்கள் அரியூரை சேர்ந்த காமேஷ் (2 5) திவாகர் (25) மற்றும் தணிகவேல் (26) என்று தெரிய வந்தது. இவர்களை இதே பகுதியை சேர்ந்த ராஜா தலைமையிலான 8 பேர் கொண்ட ரவுடி கும்பல் கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com