13
இன்று 24/4/2020 கீழக்கரை அம்மா உணவகத்திற்கு 3/5/2020வரை இலவச உணவு வழங்குவதற்காக இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை கீழக்கரை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தனலட்சுமியிடம் வழங்கினார்.
பின்பு கீழக்கரை அம்மா உணவகத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். அங்கு தயாரிக்கும் உணவை மற்ற உறுப்பினர்களினம் உண்டார். இந்நிகழ்வில் கீழக்கரை நகரச் செயலாளர் ஜகுபர் உசேன், சுரேஷ், செல்வ கணேசன் பிரபு மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.
கீழை நியூஸ் SKV சுஐபு
You must be logged in to post a comment.