நிலக்கோட்டை அருகே நான்கு வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்! போக்சோ சட்டத்தில் கைது..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நான்கு வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்தனர் இதில் விருவீடு பகுதியைச் சேர்ந்த சீனித்தேவர் மகன் பிச்சை முத்து வயது 35 என்பவர் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனை அடுத்து பிச்சை முத்துவை வளைத்து கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.