தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் திருச்சி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் , திருச்சி கே கே நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை அலுவலகம் , கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் முதல்கட்டமாக தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன . இதற்கான தொடக்க விழா திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது . இதில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி, ரிப்பன் வெட்டி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்களின் செயல்பாட்டை பெண் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார் . திருச்சி மாநகரில் மகளிர் காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் காவலர்கள் , மாநகர பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள் , மாநகர காவல் ஆணையகரத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் , ஆயுதப்படை வளாகத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் , மகளிர் காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பெண்கள் ஆகியோரின் நலன் கருதி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரம் பெண்கள் ஓய்வறையில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் , 5 ரூபாய் நாணயத்தை பயன்படுத்தி சானிடரி நாப்கின் பெற்றுக்கொள்ளலாம் என்றும் காவல் ஆணையர் காமினி தெரிவித்தார் . இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கையில் பணிபுரியும் மகளிருக்கு ஏற்படும் மாத சுழற்சியின் போது அவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரத்தை ஒவ்வொரு பிரிவாக பொருத்தி வருகிறோம் . ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் , மாவட்ட காவல் அலுவலகம் , ஆயுதப்படை வளாகம் , போக்குவரத்து ஒழுங்குபிரிவு அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் , சென்னை திருவல்லிக்கேணியில் அரசு மகளிர் பள்ளியிலும் இந்த இயந்திரங்களை பொருத்தியுள்ளோம் . தற்போது திருச்சியில் முதல்கட்டமாக நாகு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன , வரவேற்ப்பை பொருத்து அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த இயந்திரம் விரைவில் பொருத்தப்படும் என்றனர் . திருச்சி மாநகர ஆயுதப்படை கூடுதல் துணை ஆணையர் திருமலைக்குமார் , மாநகர ஆயுதப்படை ஆய்வாளர் எம்,ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர் . இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர் .
Category:
செய்திகள்
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையைச் சார்பாக 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தவும் உயிர் காக்கும் முதலுதவி பற்றியும் விழிப்புணர்வை. திடீர் குழு பிளாஸ் மாப் நடனமாடி விளக்கமளித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியை கிளீன் தஞ்சை இயக்கத்தின் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல் தொடங்கி வைத்தார். மாலையில் பொது மக்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் கருவிகள் காட்சிப்படுத்தி விளக்கமளித்தனர். இந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய மீனாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவசர ஊர்தி நிபுணர்களுக்கு பாராட்டும் விருதும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழுடன் மரக்கன்று பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மருத்துவ சேவை வாரத்தைக் கொண்டாடும் வகையில் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டு முதலுதவி உபகரணங்கள் மற்றும் கையேடு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு தஞ்சை மக்கள் நல்வாழ்வுத்துறை துணை இயக்குனர் டாக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கான பயிற்சி மற்றும் ஏற்பாடுகளை மீனாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சரவணவேல் செய்திருந்தார். மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் பிரவீன் மற்றும் மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினர். அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் டாக்டர் ஆசிக் மீரான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சரத்குமார் நடித்த மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் மறைவு! சரத்குமார் சார்பாக நிர்வாகிகள் மலரஞ்சலி..
by Askar
written by Askar
சரத்குமார் நடித்த மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் மறைவு! சரத்குமார் சார்பாக நிர்வாகிகள் மலரஞ்சலி..
நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி கவனம் ஈர்த்த ‘மாயி’ படத்தின் இயக்குநர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் காலமானார். 1996-ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘மாணிக்கம்’ படத்தை இயக்கி திரையுலகில் அறிமுகமான சூர்ய பிரகாஷ், பெண் ஒன்று கண்டேன், திவான், அதிபர், வருஷ நாடு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இவரது மரணத்திற்கு சரத்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அவரது உடல் அவர் பிறந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே எஸ். வாடிக்கு கொண்டு வரப்பட்டது.
இது குறித்து நடிகர் சரத்குமார் தனது X தளத்தில்; என்னுடைய நடிப்பில் மாயி , திவான் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய என் அன்பு நண்பர் சூர்யபிரகாஷ் இன்று 27/05/2024 அதிகாலை காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், அவரது திடீர் மறைவு என்னை நிலைகுலையச் செய்துள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சூர்ய குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சரத்குமார் உத்தரவின் பேரில் நிர்வாகிகள் சிலர் எஸ். வாடிக்கு வருகை தந்தனர்.
இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய உசிலை சிவமுருகன் கூறியதாவது;
சரத்குமார் வெளிநாடு பயணம் சென்றுள்ள சூழ்நிலையில் சூர்ய குமார் மறைவு செய்தி அறிந்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு செய்து தந்துள்ளார்.
மாயி, திவான் போன்ற பிரபலமான படங்களை கொடுத்தவர் சூர்ய குமார்.
தலைவர் வெளிநாடு பயணம் சென்றுள்ள சூழ்நிலையில் சூர்ய குமாரின் உடலுக்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்துமாறு அறிவுறுத்தினார் அதன் பேரில்,மதுரை ஈஸ்வரன்
முனைவர்.காமராஜ்,
தனராஜ்,
பாண்டியராஜன்,
லட்சுமன ராஜன்,
முகேஷ்,திண்டுக்கல் நாதன்,பிரகாஷ்
பொன்னுசாமி, ஆகியோர் நேரிடையாக வந்து அன்னாரின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினோம். சரத்குமார் வெளிநாடு பயணம் முடித்து வரும் சூழ்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை சம்பந்தமாக கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் என உசிலை சிவமுருகன் கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆந்திர மாநிலத்தில் இரு வேறு கொடூர விபத்து: தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் பலி..
by Askar
written by Askar
ஆந்திராவில் நடந்த இருவேறு விபத்துகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் திண்டுக்கல் திரும்பிய போது கிருஷ்ணா மாவட்டம் பாபுலபாடு மண்டலம் கொடுருபாடு என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த சுவாமிநாதன்(40), ராஜேஷ் (12), ராதாபிரியா (14), கோபி (23), ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.சுவாமிநாதன் மனைவி சத்யா படுகாயம் அடைந்துள்ளார்.
இதேபோல நெல்லூர் மாவட்டத்தில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சென்று திரும்பிய கார் விபத்துக்குள்ளானது. திருப்பதியில் இருந்து வரும் வழியில் காணிப்பாக்கம் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியது. சித்தூர்-நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்துகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நடிகர் சரத்குமார் நடித்த மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் காலமானார்: இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான நிலக்கோட்டை அருகே நடைபெற உள்ளது!-சரத்குமார் வேதனை..
by Askar
written by Askar
நடிகர் சரத்குமார் நடித்த மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் காலமானார்: இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான நிலக்கோட்டை அருகே நடைபெற உள்ளது!-சரத்குமார் வேதனை..
நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி கவனம் ஈர்த்த ‘மாயி’ படத்தின் இயக்குநர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் காலமானார். 1996-ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘மாணிக்கம்’ படத்தை இயக்கி திரையுலகில் அறிமுகமான சூர்ய பிரகாஷ், பெண் ஒன்று கண்டேன், திவான், அதிபர், வருஷ நாடு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இவரது மரணத்திற்கு சரத்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்கு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே எஸ் வாடியில் இன்று மாலை நடைபெற உள்ளது. சூர்ய பிரகாஷ் மறைவுக்கு நடிகர் சரத்குமார் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சரத்குமார், “என்னுடைய நடிப்பில் மாயி , திவான் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய என் அன்பு நண்பர் சூர்யபிரகாஷ் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், அவரது திடீர் மறைவு என்னை நிலைகுலையச் செய்துள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேலகரம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி; சங்கரன்கோவில் எம்எல்ஏ பங்கேற்பு..
written by Abubakker Sithik
மேலகரம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி: சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா பங்கேற்பு..
தென்காசி மாவட்டம் மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மயிலேரி தலைமையில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய சங்கரன்கோவில் சட்ட மன்ற உறுப்பினருமான ராஜா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜகோபால், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வள்ளியம்மாள் முன்னாள் தலைமை ஆசிரியர் ஸ்ரீநிவாசன் மற்றும் முன்னாள் பள்ளி மாணவர்கள் கலந்து கொன்டனர். இதில் மாணவர்கள் ஒவ்வொரும் சந்தித்து தற்போதைய பணிகள் மற்றும் குடும்ப விவரங்களை கேட்டறிந்து கொண்டதுடன், பழைய நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/20240527_095021-large.jpg?resize=647%2C332&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/FB_IMG_1716780771935-large.jpg?resize=720%2C333&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/Untitled-design_20240527_094756_0000-large.jpg?resize=1024%2C576&ssl=1)
மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தி நினைவு பரிசுகளை வழங்கினர். முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட ஆண்டுகளுக்கு சந்தித்தது அவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் குழுவை சேர்ந்த மகாராஜன், உலகநாதன், செந்தில், உடற்பயிற்சி ஆசிரியர் துரைராஜ், ரகுமான், ராஜா, பள்ளி தலைமை ஆசிரியை கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை-கடையம் பேருந்துகள் சரியாக இயக்கப்பட வேண்டும்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்..
written by Abubakker Sithik
நெல்லை – கடையம் பேருந்துகள் சரியாக இயக்கப்பட வேண்டும்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்..
நெல்லை-கடையம் பேருந்துகள் சரியாக இயக்கப்பட வேண்டும் என சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் பேருந்து மற்றும் பயணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார் பட்டியில், சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், பேருந்துகள் மற்றும் பயணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை முதல் கடையம் வரையிலான பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை என்று தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், இதனை சரி செய்யும் நோக்கில், அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, உறுப்பினர்கள் ரவணசமுத்திரம் சேவாலயா பொறுப்பாளர் சங்கிலி பூதத்தான், பொட்டல் புதூர் தமுமுக நிர்வாகி மதார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளர் யஹ்யா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க பொருளாளர் பாக்யராஜ் வரவேற்றார். முதலியார்பட்டி தமுமுக தலைவர் காலித் நன்றி கூறினார். மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் செயலாளர் சிராஜ், முஸ்லிம் லீக் கடையம் ஒன்றிய செயலாளர் காதர் மைதீன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நெல்லை முதல் கடையம் வரையிலான, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சரியான நேரங்களில் இயக்கப்படுவதில்லை. பேருந்து நிறுத்தங்களில் முறையான கால அட்டவணை இல்லை. எனவே தற்போதைய கால அட்டவணையை அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் அமைக்க வேண்டும். கடையம் முதல் முக்கூடல் வரை புதிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். நெல்லை முதல் கடையம் வரை அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்யும் நபர்களுக்காக, 1 to 1 அல்லது குளிர்சாதன பேருந்து இயக்க வேண்டும். கடையம் நகருக்கு பேருந்துகள் சரியான நேரத்தில் வந்து செல்வதை அறியவும் பேருந்துகளை பயணிகள் அறிந்து கொள்ளவும் நேரக் காப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். தென்காசி முதல் நெல்லைக்கு பேருந்துகள் கடையம், முக்கூடல் வழியாக இயக்க வேண்டும். பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒதுக்கப்ட்டுள்ள இடத்தை நடத்துனர்கள் ஒதுக்கி தரவேண்டும்.
பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடம் என்பதை தெளிவாக பேருந்தில் எழுத வேண்டும். இரவணசமுத்திரம் வழி பேருந்துகளை (129 M) குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க வேண்டும். இரவணசமுத்திரம் வழி என்று பேருந்தில் அறிவிப்பு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதியம் 3 மணி மற்றும் இரவு 9 மணிக்கு செல்ல வேண்டிய தனியார் பேருந்து, மதியம் 1.30 இரவு 7.30 மணிக்கு சம்பந்தமில்லாத நேரத்தில் சமீப காலமாக செல்வது தவிர்க்கப்பட வேண்டும். இரவு 10 மணிக்கு செல்ல வேண்டிய, தனியார் பேருந்து தற்போது அந்த நேரத்திற்கு செல்வதே இல்லை. இதனால் இரவு நேர ரயில் பயணங்கள், கல்லூரிகளுக்கு செல்லும் நபர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதனையும் சரியாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்கண்ட தீர்மானங்கள் மீது நெல்லை போக்குவரத்து பணிமனை விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பார்ட் கல்வி மையத்தில் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு; சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கல்..
written by Abubakker Sithik
புளியங்குடி பார்ட் கல்வி மையத்தில் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு; சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கல்..
தென்காசி மாவட்டம் புளியங்குடி பார்ட் பயிற்சி மையத்தின் சார்பாக நடத்தப்பட்ட கோடைகால சிறப்பாக பயிற்சி நிறைவடைந்து மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசு அத்துடன் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. 6 பள்ளிகளில் படித்து கொண்டிருக்கும் 70 மாணவ மாணவியர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு ஒருமாத காலம் ஆங்கிலம் பேசுதல், ஆங்கில இலக்கணம் மற்றும் அடிப்படை உரிமையியல் (இந்திய சட்டம்) ஆகியவைகளை கற்றறிந்தார்கள்.
நிகழ்ச்சியில், காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காதர் முஹைதீன், நியு கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சபீனா, வெல்டன் ஆங்கில பள்ளி ஆசிரியர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். மேலும், இந்நிகழ்வில் பெற்றோர்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, இதுபோல் சிறப்பு வகுப்புகளை அதிக விடுமுறை நாட்களிலும், வாரம் ஒருமுறை ஞாயிற்றுக் கிழமைகளிலும் நடத்துமாறு வேண்டுகோள் வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஆங்கிலம் பேசுதல் மற்றும் ஆங்கில இலக்கணம் கற்று தர சிறந்த ஆசிரியரை தந்த வெல்டன் ஆங்கிலப் பள்ளி தாளாளர் சகோதரர் முஹம்மது ரபீக், அடிப்படை உரிமையியல் (இந்திய சட்டம்) கற்பித்து தர அஜிதா பேகம் வழக்கறிஞரை அறிமுகம் செயத அப்துல் காதர் ஆகியோருக்கு பார்ட் அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குழந்தைகள் சேர்க்கை; மாவட்ட கலெக்டர் தகவல்..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை; மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு..
தென்காசி மாவட்டத்தில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் (LKG/1Std) சேர்க்கை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் வரும் 28.05.2024 அன்று முற்பகல் 09.00 மணிமுதல் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009 பிரிவு 12(1) (சி) ன் படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் (LKG/1Std) குறைந்த பட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கும் வகைக்கு தென்காசி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 185 பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட மொத்த இடங்கள் (IN TAKE CAPACITY) 1728 ஆகும். இதில் 19 பள்ளிகளுக்கு மிகுதியான மாணவர்கள் விண்ணப்பம் செய்யவில்லை. 166 பள்ளிகளுக்கு மட்டும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மேற்படி மிகுதியாக விண்ணப்பம் செய்துள்ள 166 பள்ளிகளுக்கான (IN TAKE CAPACITY) 1603 ஆகும். இதற்கான சேர்க்கை குலுக்கல் முறையில் நடைபெறவுள்ளது. சேர்க்கை நடைபெறவுள்ள பள்ளிகளுக்கு துறை பிரதிநிதியாக அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் முதன்மை கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009 பிரிவு -12(1) (சி) ன் படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் (LKG/1Std) விண்ணப்பம் செய்துள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோதின.
இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் ஸ்டார்க் பந்து வீச்சில் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா போல்ட் முறையில் அவுட் ஆனார். அடுத்த ஓவரை வைபவ் அரோரா வீசிய நிலையில் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் அவர் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் (0 ரன்) கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்துவந்த ராகுல் திரிபாதி 13 பந்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்து வீச்சில் அவுட் ஆனார். மற்றொரு வீரரான நிதிஷ் ராணா 13 ரன்னில் அவுட் ஆனார். கொல்கத்தா வீரர்களின் அபார பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் தடுமாறியது. சற்று நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் 23 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஷபாஸ் அகமது 8 ரன்னிலும், அப்துல் சமத் 12 ரன்னிலும், கிளாசன் 16 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில், ஐதராபாத் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய கொல்கத்தா வீரர்களில் ரசல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், வைபவ், நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் சுனில் நரைன் 6 ரன்களில் வெளியேற , மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 39 (32) ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் அய்யர் 52 (26) ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 10.3 ஓவரகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 114 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் சார்பில் பேட் கம்மின்ஸ் மற்றும் சபாஸ் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. முன்னதாக கடந்த 2012, 2014 -ல் ஐ.பி.எல். சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பருத்தியில் விதை நேர்த்தி குறித்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்குளம் கிராமத்தில் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பருத்தியில் விதை நேர்த்தி குறித்து அதன் செயல்முறை விளக்கத்தை மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி சு.ஆர்த்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். மேலும் பருத்தி விதைகளின் முளைக்கும் திறனை அதிகரிக்கவும், விதைகளை பிரிக்கவும் விதை நேர்த்தி செய்யப்படுவது பற்றியும் செயல்முறை விளக்கம் அளித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் வேளாண் அறிவியல் மையத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான கண்காட்சி ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆறுமுகம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் வள்ளல் கண்ணன் ஆகியோர் தலைமையில் துவங்கி வைக்கப்பட்டு கண்காட்சி நடைபெற்றது . இதில் திருப்புல்லாணி வட்டாரத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை வேளாண்மைக் கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகளான சூரியலட்சுமி. சுவாதி. தாமரைச்செல்வி. சிந்து பிரியா.சுகந்தி. சுமதி , வைஷ்ணவி. தமிழ்செல்வி. ஆகியோர் கலந்து கொண்டு தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றியும் , மாவட்டத்திற்கு ஏற்ற பயிர் ரகங்களின் விதைகள் பற்றியும் அதன் செய்முறைகளையும் கண்காட்சியை கண்டுகளிக்க வந்தவர்களிடம் விளக்கினர். இதில் தென்னையைத் தாக்கும் பூச்சிகளான காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, எரியோபைட் சிலந்தி, வெள்ளை சுருள் ஈ ஆகிய பூச்சிகளின் சேதங்களை கட்டுப்படுத்தும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் மகசூலை அதிகரிக்கும் செயல்முறை விளக்கத்தையும் விவசாயிகளுக்கு வழங்கினர் . அதனை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் கலந்து கொண்டு கலந்துரையாடல் நடத்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஜூன் முதல் வாரம் தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுமா..?
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதியே முடிந்து விட்டாலும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெற்று வருகிறது.இதில் தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என தெரிகிறது. ஆனால் பிரமாண்ட்ட வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தும் சில தொகுதிகளில் முக்கிய தி.மு.க. நிர்வாகிகளே சரியாக வேலை செய்யாமல் உள்ளடி வேலை செய்ததாக கட்சி மேலிடத்துக்கு புகார்கள் சென்றுள்ளது.இதனால் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட தொகுதியில் என்னென்ன பிரச்சனை நடந்தது என்பது பற்றி விசாரித்து வைத்துள்ளார். சம்பந்தப்பட்ட தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சிலர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.இதனால் தேர்தல் முடிவு வந்ததும் கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை செய்ய அவர் முடிவெடுத்துள்ளார் என்று தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை முன் வைத்து இந்த மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால் மத்தியில் ஆட்சியில் பங்கெடுப்பது குறித்த வேலைகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனம் செலுத்துவார். இந்த பணிகள் ஜூன் 10-ந்தேதி வரை இருக்க வாய்ப்புள்ளது. அப்படி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் டி.ஆர்.பாலுவுக்கு ரெயில்வே இலாகாவும், கனிமொழி, ஆ.ராசா போன்றோருக்கு முக்கிய இலாகா கிடைக்கும் என்றும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.ஒருவேளை பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் ஜூன் முதல் வாரமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவையை அதிரடியாக மாற்றி அமைத்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே உளவுத்துறை அளித்துள்ள ரிப்போர்ட் மற்றும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில் கிடைத்துள்ள விசயங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் உள்ளது. அதன்படி அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. 4 பேர் நீக்கப்பட்டு 4 பேர் புதிதாக சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது.2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.அது மட்டுமின்றி உட்கட்சி பிரச்சனைகளை சரி செய்யும் வகையில் தி.மு.க.வில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் ஜூன் 2-வது வாரம் இருக்கும் என்று தி.மு.க.வினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.கட்சி நிர்வாகிகள் பலர் பொறுப்புகளை எதிர் பார்ப்பதால் கட்சி ரீதியில் மாவட்டங்களை அதிகப்படுத்தி, தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இதன் மூலம் 2026 சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற முடியும் என கருதுகின்றனர்.எனவே அடுத்த மாதம் ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று அறிவாலய வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு என்னும் மத நல்லிணக்க திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் யாத்திரைகள் வருகை புரிவதால் அங்கு விற்பனை செய்யக்கூடிய உணவுக் கடைகள் தின்பண்டம் கடைகள் டீக்கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில் ராஜ்குமார், ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் ,கீழக்கரை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் இணைந்து ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து விற்பனையாளர்களிடம் தினமும் கடைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் , கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்றும் , அதிகமாக கலர் வண்ணம் ஏதும் பயன்படுத்தக்கூடாது என்றும் , வடை பஜ்ஜி போண்டா உட்பட ஆயிலில் தயார் செய்யப்படும் தின்பண்ட பொருட்களை நியூஸ் பேப்பரில் கொடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்திய ஐந்து கடைகளுக்கு அபதாரம் விதிக்கப்பட்டு விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்கப்பட்டது . மேலும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001013270-large.jpg?resize=1024%2C462&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001013271-large.jpg?resize=462%2C1024&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001013269-large.jpg?resize=1024%2C462&ssl=1)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலக சாதனை விருது பெற்ற 4 வயது சிறுமி; யூனியன் சேர்மன் பரிசுகள் வழங்கி பாராட்டு..
written by Abubakker Sithik
உலக சாதனை விருது பெற்ற 4 வயது சிறுமி; ஆலங்குளம் யூனியன் சேர்மன் பரிசுகள் வழங்கி பாராட்டு..
தென்காசி மாவட்டத்தில் உலக சாதனை விருதுகள் பெற்று தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்த 4 வயது சிறுமியை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தை கிராமத்தை சேர்ந்த மகாராஜா சுபா தம்பதியினர் மகள் அபர்ணா. 4 வயதான இந்த சிறுமிக்கு, பெற்றோர் சிறு வயது முதல் செல்போன் பயன்பாட்டை தவிர்த்து வந்துள்ளனர். இதனால் அச்சிறுமி 2 வயதாக இருக்கும் போதே 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 பூச்சிகள், 40 பறவைகளின் பெயர்களை கூறியும், அதே ஆண்டில் மே மாதம் 1 நிமிடத்தில் அதிகபட்ச உலக எதிர்சொற்களை கூறி விருதுகளை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் சான்றிதழ்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/20240526_101732-large.jpg?resize=1024%2C593&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/20240526_101409-large.jpg?resize=1024%2C581&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/20240526_101811-large.jpg?resize=1024%2C595&ssl=1)
அதைத்தொடர்ந்து சூரிய குடும்பத்தின் கிரகங்கள், விலங்குகள், எதிர் வார்த்தைகள், இந்திய நதிகள், காட்டு விலங்குகள் உள்ளிட்ட 40 விதமான தலைப்புகளில் பேசி, கடந்த மார்ச் 2023ஆம் ஆண்டு கலாம் உலக வார்த்தைகளுடன் கூடிய எழுத்துக்களை 41 நொடிகளில் கூறியும், ஜூன் 2022ஆம் ஆண்டு மிக எண்ணிக்கையிலான நினைவாற்றல் செயல்பாடுகளை படிக்கும் முதல் இளைய குழந்தை என்ற டிரைம்ப் உலக சாதனை விருதும் இச்சிறுமிக்கு கிடைத்துள்ளது. இதேபோல் அபர்ணா கடந்த மார்ச் 7ஆம் தேதி 7 நிடத்தில் 500 எதிர் வார்த்தைகளுக்கு விரைவாக பதிலளித்து இண்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு சான்றிதழ் பெற்று சாதனை படைத்தார்.
இது தவிர மாநில அளவிலான பேச்சு போட்டியில் இளம் தமிழ் பேச்சாளர் 2024ஆம் ஆண்டு விருதையும் இளம் வயதில் பெற்று அசத்தியுள்ளார் அபர்ணா. இச்சிறுமியின் திறமையை அறிந்த ஆலங்குளம் யூனியன் சேர்மனும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளருமான எம். திவ்யா மணிகண்டன் சிறுமி அபர்ணாவை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து சைக்கிள் பரிசாக அளித்து பாராட்டினார். இந்நிகழ்வில் தொழிலதிபர் மணிகண்டன், சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விசாரணைக்கு வந்தவரிடம் 95 பவுன் நகையை பெற்று அடகு வைத்த விவகாரம்:திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!டி.ஐ.ஜி.ரம்யாபாரதி அதிரடி..
by Askar
written by Askar
விசாரணைக்கு வந்தவரிடம் 95 பவுன் நகையை பெற்று அடகு வைத்த விவகாரம்:திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!டி.ஐ.ஜி.ரம்யாபாரதி அதிரடி..
திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கீதா (வயது 50). திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) இவரது மனைவி அபினயா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வழக்கு விசாரணை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
இன்ஸ்பெக்டர் கீதா, ராஜேஷ்-அபினயா தம்பதியிடம் விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் அபினயா தனது பெற்றோர் திருமணத்திற்கு போட்ட 95 பவுன் நகையை கணவர் ராஜேசிடம் திருப்பி தரும்படி கேட்டார். ராஜேஷ் 95 பவுன் நகையை இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கொடுத்து தனது மனைவியிடம் கொடுக்கும் படி கூறி உள்ளார். நகையை பெற்ற இன்ஸ்பெக்டர் அதை வங்கியில் ரூ.42 லட்சத்திற்கு
அடமானம் வைத்தார். தொடர்ந்து அபினயா தரப்பினர் ராஜேஷ் தரப்பினரிடம் நகையை கேட்கவே தான் அதனை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து ராஜேஷ் இன்ஸ்பெக்டர் கீதாவிடம் நகையை கேட்க அவர் மழுப்பி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் புகார் செய்தார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கீதா 10 பவுன் நகையை திருப்பி தந்தார். மீதி நகையை தரவில்லை.
பின்னர் ராஜேஷ் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குறித்து புகார் செய்தார். இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. ரம்யாபாரதி திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பட்டா மாறுதலா! மற்ற சான்றிதழ்களா 16 நாட்கள் தான் கெடு! வருவாய் அதிகாரகளை அலற விட்ட தமிழக அரசு..
by Askar
written by Askar
பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சாதி சான்றிதழ், இருப்பிடம், வருமானம், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட 26 சான்றிதழ்கள் மற்றும் பட்டாக்களை வருவாய்த்துறை வழங்கி வருகிறது. இவை எளிதாக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காகவும் இந்த சேவைகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டு உள்ளது.இருப்பினும் இந்த சான்றிதழ்கள் மற்றும் பட்டாக்கள் பெறுவதில் மக்கள் அலையாய் அலைய வேண்டி உள்ளது. லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கிறது என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக தற்போது பட்டா மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் பணிகளின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான எஸ்.கே.பிரபாகர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
வருவாய்த்துறை வழங்கும் 26 சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரிக்கைகள் ஆகியவை குறித்த நேரத்தில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வாரந்தோறும் நில அளவை ஆணையரகம் ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறது. அதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை கலெக்டர் அந்தஸ்தில் ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். அவருக்கு உதவியாக ஒரு துணை தாசில்தார் மற்றும் பிற தாலுகாவை சேர்ந்த ஒரு அலுவலர் பணியமர்த்த வேண்டும்.
இந்த சிறப்பு அதிகாரி, சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்கள் குறித்த மனுக்கள் மீது தொடர்ச்சியாக ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். அவர், பட்டா மனுக்கள் மற்றும் சான்றிதழ்கள் கோரும் விண்ணப்பங்கள் மீது அதிகபட்சமாக 16 நாட்களுக்குள் தீர்வு காண்பதை உறுதி செய்யவேண்டும். மேலும் சிறிய காரணங்களை கூறி மனுக்கள் தள்ளுபடி செய்வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
அதேபோல் தேதி வாரியாக வரிசைப்படி மனுக்களுக்கு ஒப்புதல் தரவேண்டும். அதாவது பின்னே விண்ணப்பம் செய்பவர்களுக்கு முன்னதாகவும், முன்னே விண்ணப்பம் செய்தவர்களுக்கு பின்னதாகவும் தரக்கூடாது. வரிசைப்படி முறையாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆவின் பால் திருட்டு! அதிகாரிகளை பழி வாங்க திமுக பிரமுகர் போட்ட திட்டமா..?-சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை.
by Askar
written by Askar
ஆவின் பால் திருட்டு! அதிகாரிகளை பழி வாங்க திமுக பிரமுகர் போட்ட திட்டமா..?-சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை.
இது சம்பந்தமாக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கீழ்கண்டவாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பால் பண்ணையில் தினசரி சுமார் 83ஆயிரம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் மாவட்டங்களில் சுமார் 31ஆயிரம் லிட்டர் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு 10ஒப்பந்த வாகனங்கள் மூலமும், சுமார் 52ஆயிரம் லிட்டர் 22மொத்த விநியோகஸ்தர் வாகனங்கள் மூலம் பால் முகவர்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காக்களூர் பால் பண்ணையில் இருந்து மாதாந்திர அட்டை மூலம் நுகர்வோருக்கு விநியோகம் செய்ய ஆவின் பால் பாக்கெட்டுகளை ஏற்றிச் செல்லும் ஒப்பந்த வாகனங்களில் தினசரி விநியோக அளவிற்கு அதிகமாக பால் பாக்கெட்டுகள் திருடிச் செல்லப்படுவதாக ஊழல் தடுப்பு விழிப்பு குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை (23.05.2024) இரவு துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியசீலன் அவர்களின் தலைமையிலான குழுவினர் காஞ்சிபுரம் பகுதிக்கு விநியோகத்திற்கு சென்ற மூன்று வாகனங்களை மட்டும் திருவள்ளூர் பகுதியில் மடக்கி சோதனையிட்டதில் மூன்று வாகனங்களிலும் சேர்த்து சுமார் 135டப்புகளில் 1620லிட்டர் ஆவின் நிறைகொழுப்பு பால் பாக்கெட்டுகள் கூடுதலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த பால் திருட்டை தடுக்க தவறியதாகவும் கூறி பால் பண்ணை மேலாளர் கனிஷ்கா, மேற்பார்வையாளர் ராஜா, SFA முரளி உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியளிப்பதோடு, இந்த நடவடிக்கை காக்களூர் பால் பண்ணையில் பணிபுரியும் சில அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதோ..?, இதன் பின்னணியில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு காக்களூர் பால் பண்ணையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் பெற்றுள்ள ஆளுங்கட்சி பிரமுகரான திமுக ஒன்றியச் செயலாளரின் பங்கும் இருக்கிறதோ..? என்கிற பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.
ஏனெனில் காக்களூர் பால் பண்ணையில் இருந்து காஞ்சிபுரம் பகுதிக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய செல்லும் மேற்கண்ட மூன்று ஒப்பந்த வாகனங்களும் வியாழக்கிழமை (23.05.2024) இரவு சுமார் 10.00மணியளவில் வெளியேறிய நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவள்ளூர் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த வாகனங்களை காக்களூர் பால் பண்ணை வளாகத்திற்குள்ளேயோ அல்லது பால் பண்ணை நுழைவாயிலுக்கு வெளியிலோ மடக்கி சோதனை செய்யாமல் சம்பந்தப்பட்ட விநியோக வாகனங்கள் பால் பண்ணை வளாகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஒரு மணி நேரம் கழித்து அதுவும் 15நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தை ஒரு மணி நேரம் கழித்து கடந்த நிலையில் காக்களூர் பால் பண்ணையில் இருந்து சுமார் 5கிலோமீட்டர் தள்ளியிருக்க கூடிய இடத்தில் வைத்து மடக்கி பிடித்து அந்த விநியோக வாகனங்களை மீண்டும் பால் பண்ணைக்கு கொண்டு வந்து சோதனையிட்டுள்ளதை வைத்து பார்க்கும் போது சம்பந்தப்பட்ட விநியோக வாகன ஓட்டுநர்களின் ஒத்துழைப்போடு வேறு வாகனங்கள் மூலம் இடைப்பட்ட ஓரிடத்திற்கு கொண்டு வரப்பட்ட பால் பாக்கெட்டுகளை அந்த விநியோக வாகனங்களில் ஏற்றி காக்களூர் பால் பண்ணையில் இருந்து திருடி வரப்பட்டது போலவும், பால் பாக்கெட்டுகள் திருட்டு சம்பவத்தை அதிகாரிகள் தடுக்க தவறியது போலவும் சித்தரித்து பால் பண்ணை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வைத்தது போல் தெரிகிறது.
காரணம், காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள திமுக ஒன்றியச் செயலாளருக்கும், பால் பண்ணை மேலாளரான ஒரு பெண்மணி உள்ளிட்ட அதிகாரிகளுக்குமிடையே கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நடைபெற்று வந்ததாக தெரிகிறது.
ஏனெனில் திமுக பிரமுகரான அந்த ஒன்றியச் செயலாளரின் கீழ் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த ஏப்ரல் மாதம் பால் பாக்கெட்டுகள் மற்றும் பால் பொருட்களை திருடி ஆவின் நிர்வாகத்திற்கு கடும் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் செய்த பல்வேறு தகிடுதத்தனங்களை பால் பண்ணை அதிகாரிகள் கண்டு பிடித்து அதனை கடுமையாக கண்டித்ததோடு, அதனை ஆவின் நிர்வாகத்திற்கு முறையாக தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பொறுப்பாளரான திமுக ஒன்றியச் செயலாளருக்கு சுமார் 39ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளதாக தெரிகிறது. இதனால் தன்னை 39ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வைத்த காக்களூர் பால் பண்ணை அதிகாரிகள் மீது கடும் கோபம் கொண்ட திமுக ஒன்றியச் செயலாளருக்கு ஈகோ கிளம்ப ஆளுங்கட்சி பிரமுகரான தன் மீதே நடவடிக்கை எடுக்கும் தைரியம் இந்த ஆவின் அதிகாரிகளுக்கு எப்படி.., எங்கிருந்து வந்தது..? என கடும் கோபத்தில் இருந்ததாகவும், அது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தன் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பழிவாங்கியே ஆக வேண்டும் என்கிற ரீதியில் பொங்கியெழுந்ததாகவும் ஆனால் அவர் அமைச்சரிடம் முறையிட்டும் அவரது கோரிக்கை ஏதும் நிறைவேறவில்லை என சொல்லப்படும் நிலையில் காக்களூர் ஆவின் பால் பண்ணை அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கத்துடனேயே தற்போதைய நிகழ்வு கூட்டு சதியாக திட்டமிட்டு அறங்கேற்றப்பட்டுள்ளதாகவே ஆவினில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
எனவே காக்களூர் பால் பண்ணையில் இருந்து சுமார் 135டப்புகளில் 1620லிட்டர் நிறைகொழுப்பு பால் பாக்கெட்டுகள் திருடிச் செல்லப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பால் பண்ணை வளாகத்திலேயே சம்பந்தப்பட்ட விநியோக வாகனங்களை தடுக்க தவறியது ஏன்..? சம்பந்தப்பட்ட விநியோக வாகனங்கள் பால் பண்ணையில் இருந்து புறப்பட்டு 5கிலோமீட்டர் தூரத்தை கடக்க 15நிமிடங்களே ஆகும் நிலையில் 1மணி நேரமாக எங்கே சென்றது..? அந்த வாகனங்கள் இடைப்பட்ட அந்த 5கிலோமீட்டர் தூரத்தில் எங்கெங்கெல்லாம் நின்று சென்றது…? அந்த விநியோக வாகனங்களின் ஓட்டுநர்களோடு கடந்த சில தினங்களாக தொலைபேசியில் தொடர்பில் இருந்தவர்கள் யார்..? யார்…? அவர்களுக்கும், பால் பண்ணை தொழிலாளர்கள் ஒப்பந்ததாரருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உண்டா..? என்பது தொடர்பாக உண்மை நிலவரத்தை கண்டறியும் வகையில் அந்த வாகனங்கள் சென்ற சாலையில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளையும், ஓட்டுநர்களின் தொலைபேசி உரையாடலையும் முழுமையாக ஆய்வு செய்வதோடு, சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திருவள்ளூரில் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது..? ஒருவேளை இந்த சம்பவத்தில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா..? என்பது குறித்தும் உரிய விசாரணை நடத்திட சிபிசிஐடி விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் நாசர் அவர்கள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த போது அம்பத்தூர் பால் பொருட்கள் பண்ணையில் தொழிலாளர்கள் ஒப்பந்தம் பெற்றிருந்தவருக்கு நாசர் அவர்களின் ஆசி இருந்ததால் அதனை பயன்படுத்தி ஆவின் நிர்வாகத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்த அப்போதைய பால் பண்ணை துணைப் பொது மேலாளரை அமைச்சராக இருந்த நாசர் முன்னிலையிலேயே ஒப்பந்ததாரரிடம் பணியாற்றும் மேலாளர் அடிக்கப் போக அதனை நாசர் அவர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததால் அந்த அதிகாரி பணியிட மாறுதல் பெற்று வேறு மாவட்ட ஒன்றியத்திற்கு சென்று விட்ட நிகழ்வும், இதை விட ஒடுபடி மேலாக மதுரை ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான உரிமம் பெற்றுள்ள ஆளுங்கட்சியான திமுக பிரமுகரின் நிறுவனம் பணியாளர்களை குறைவாக அனுப்பி விட்டு அதிகமான பணியாளர்கள் பணிக்கு வந்தது போல் கணக்கு காட்டியதை கண்டு பிடித்து நடவடிக்கை எடுத்த ஆவின் அதிகாரியை சக அதிகாரிகள் முன்னிலையிலேயே திமுக பிரமுகரின் மேலாளர் எட்டி உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததும் தற்போதைய நிகழ்வுகளோடு நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. எனவே ஆவினில் உள்ள நேர்மையான அதிகாரிகள் சிலரைக் கூட செயல்பட விடாமல் தடுப்பதோடு தங்களின் முறைகேடுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கும் அவ்வாறான நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு செயல்பட்டு வரும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீட்டை தடுக்கும் வகையில் ஆவினில் அரசியல் கட்சிகளின் குறிப்பாக ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, நேர்மையான அதிகாரிகளுக்கு இடையூறு அளிக்கும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காவல்துறை VS போக்குவரத்து துறை இடையேயான மோதல்! சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் காவலர் “டீ” குடித்து கட்டிப்பிடித்து முடித்துக்கொண்டனர்..
by Askar
written by Askar
காவல்துறைVSபோக்குவரத்து துறை இடையேயான மோதல் டீ குடித்து கட்டிப்பிடித்து முடித்துக்கொண்டனர்..
நாங்குநேரியில் அரசு பேருந்தில் காவலர் டிக்கெட் எடுப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
டிக்கெட் எடுப்பதில் தகராறு ஏற்பட்ட நடத்துனரும், காவலரும் நேரில் சந்தித்து சமாதானம் ஆகி
இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, சமாதானம் பேசி கை குலுக்கி கொண்டனர்.
அரசு பேருந்துகளுக்கு விதித்தஅபராதம் வாபஸ் என தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் விருது வழங்கும் விழா! இன்று மாலை கோலாகல துவக்கம்..
by Askar
written by Askar
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.இந்த விழாவில் நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு அம்பேத்கர் சுடர் விருது, வழக்கறிஞர் அருள் மொழிக்கு பெரியார் ஒளி விருது, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது, பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காமராஜர் கதிர் விருது, பேராசிரியர் ராஜ் கவுதமனுக்கு அயோத்தி தாசர் ஆதவன் விருது, முனைவர் எஸ்.என். சிக்கந்தருக்கு காயிதே மில்லத் பிறை விருது சுப்பராயலுக்கு செம்மொழி ஞாயிறு விருது வழங்கப்படுகிறது.விருது வழங்கும் விழா விற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.விருது வழங்கும் நிகழ்ச்சி குறித்து தொல்.திருமாவளவன் கூறியதாவது:-ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபட்டு வரும் தலித் அல்லாத சான்றோரை போற்றும் வகையில் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் அம்பேத்கர் சுடர் விருது முதன் முதலில் 2007-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது.2008-ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர் விருதுடன் பெரியார் ஒளி, அயோத்தி தாசர் ஆதவன், காமராஜர் கதிர், காயிதே மில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளும் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வரும் சான்றோர்களுக்கு பாராட்டு பட்டயம், நினைவு கேடயம், ஆகியவற்றுடன் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகின்றன.2022-ம் ஆண்டு முதல் கார்ல்மார்க்ஸ் பெயரில் மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்படுகிறது.விளிம்பு நிலை மக்களுக்காக பாடுபடும் தலித் இல்லாத ஜனநாயக சக்திகளை அடையாளப் படுத்துவதிலும், அவர்களை ஊக்கப்படுத்துவதும் பிற சமூகத்தினருக்கு இடையில் நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதும் சமூக நீதி, சமத்துவம், பண்மைத்துவம், மதசார்பின்மை, மொழி-இன உரிமைகள் போன்றவற்றை முன்னிறுத்தி பாடுபடும் சான்றோரை சிறப்பிப்பதும் விடுதலை சிறுத்தைகளின் கடமை என்கிற வகையில் இந்த விழா ஆண்டு தோறும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைக்கப்படுகிறது.கடந்த 15 ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயண சாமி, இரா.நல்லக்கண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திபங்கர் பட்டாச்சார்யா உள்பட 99 சான்றோருக்கு இதுவரை விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து விடுதலை சிறுத்தை நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.விருதுகளை பெரும் சான்றோர்கள் ஏற்புரை நிகழ்த்துகிறார்கள்.
You must be logged in to post a comment.