சரத்குமார் நடித்த மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் மறைவு! சரத்குமார் சார்பாக நிர்வாகிகள் மலரஞ்சலி..
நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி கவனம் ஈர்த்த ‘மாயி’ படத்தின் இயக்குநர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் காலமானார். 1996-ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘மாணிக்கம்’ படத்தை இயக்கி திரையுலகில் அறிமுகமான சூர்ய பிரகாஷ், பெண் ஒன்று கண்டேன், திவான், அதிபர், வருஷ நாடு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இவரது மரணத்திற்கு சரத்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அவரது உடல் அவர் பிறந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே எஸ். வாடிக்கு கொண்டு வரப்பட்டது.
இது குறித்து நடிகர் சரத்குமார் தனது X தளத்தில்; என்னுடைய நடிப்பில் மாயி , திவான் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய என் அன்பு நண்பர் சூர்யபிரகாஷ் இன்று 27/05/2024 அதிகாலை காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், அவரது திடீர் மறைவு என்னை நிலைகுலையச் செய்துள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சூர்ய குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சரத்குமார் உத்தரவின் பேரில் நிர்வாகிகள் சிலர் எஸ். வாடிக்கு வருகை தந்தனர்.
இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய உசிலை சிவமுருகன் கூறியதாவது;
சரத்குமார் வெளிநாடு பயணம் சென்றுள்ள சூழ்நிலையில் சூர்ய குமார் மறைவு செய்தி அறிந்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு செய்து தந்துள்ளார்.
மாயி, திவான் போன்ற பிரபலமான படங்களை கொடுத்தவர் சூர்ய குமார்.
தலைவர் வெளிநாடு பயணம் சென்றுள்ள சூழ்நிலையில் சூர்ய குமாரின் உடலுக்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்துமாறு அறிவுறுத்தினார் அதன் பேரில்,மதுரை ஈஸ்வரன் முனைவர்.காமராஜ், தனராஜ், பாண்டியராஜன், லட்சுமன ராஜன், முகேஷ்,திண்டுக்கல் நாதன்,பிரகாஷ் பொன்னுசாமி, ஆகியோர் நேரிடையாக வந்து அன்னாரின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினோம். சரத்குமார் வெளிநாடு பயணம் முடித்து வரும் சூழ்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை சம்பந்தமாக கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் என உசிலை சிவமுருகன் கூறியுள்ளார்.
You must be logged in to post a comment.