மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, ஐராவதநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, இராஜன் செல்லப்பா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், வக்கீல் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Category:
செய்திகள்
திண்டுக்கல் அருகே வனக்காவலர் மற்றும் அவருடைய மனைவி கொலை கும்பலால் தாக்கப்பட்ட சம்பவத்தில் வனக்காவலர் பலி…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் அவரது மனைவி சுந்தரவல்லி ராஜேந்திரன் தமிழக வனத்துறையில் வன காவலராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவரும் அவரது மனைவியும் பள்ளபட்டி சிப்காட் பகுதியில் உள்ள அவர்களது தோட்டத்திற்கு சென்று உள்ளனர். இந்நிலையில் 8 பேர் கொண்ட கும்பல் அவரது தோட்டத்தின் அருகே மது அருந்தியுள்ளனர். அதனை தட்டிகேட்ட வன காவலர் ராஜேந்திரன் அவரது மனைவியையும் பீர் பாட்டில் மற்றும் கற்கலால் குத்தியுள்ளனர். இதில் வனக்காவலர் ராஜேந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பலியானார். அவரது மனைவி பலத்த காயத்துடன் நிலக்கோட்டை அரசு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அம்மையநாயக்கனூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்-TARATDAC வடமதுரை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடமதுரை ஒன்றிய கிளை நிர்வாகிகள் கூட்டம் 05.05.19 அன்று மாலை 05.00 மணியளவில் சித்துவார்பட்டியில் உள்ள காஜா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சங்கத்தின் வடமதுரை ஒன்றிய தலைவர் சிவா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பகத்சிங், வடமதுரை ஒன்றிய செயலாளர் கருப்பையா, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முப்பதுக்கும் மேற்பட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறது. இவ்வாறு தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை கிடைக்காமல் வடமதுரை ஒன்றியத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மனு செய்து ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
இவ்வாறு மனு செய்து காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தவுடன் போர்க்கால அடிப்படையில் உடனடியாக உதவித்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் – இயக்குநர்களுடன் கலந்துரையாடல்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக ஊடகத்துரை சார்பாக 2019 மே 4 ஆம் நாள் சென்னை கவிக்கோ மன்றத்தில் ‘தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள்’ நிகழ்வு நடந்து முடிந்தது.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஸலாஹுதீன் வரவேற்றுப் பேசினார். மாநிலத் தலைவர் ஷப்பீர் அஹமத் அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார்கள். இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், மீரா கதிரவன், லெனின் பாரதி, தாமிரா, கோபி நைனார், ராஜு முருகன், மாரி செல்வராஜ், அனீஸ் ஆகியோர் மனம்திறந்த விரிவான கருத்துரைகளை வழங்கினர். கவிஞர் மனுஷ்ய புத்திரன் தொகுப்புரை நிகழ்த்தினார். கவிஞர் யுகபாரதி நிறைவுரை வழங்கினார். இந்த நிகழ்வை மாநில ஊடகச் செயலாளர் வி.எஸ். முஹம்மத் அமீன் தொகுத்து வழங்கினார்.
இருபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி, வலைதள தொலைக்காட்சிகள் இந்த நிகழ்வைப் பதிவு செய்து பலதளங்களில் செய்திகளைக் கொண்டு சேர்த்தன. ஒரே நாளில் இலட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வைப் பார்த்ததுடன், பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முஸ்லிம்கள் வாழ்வியல் குறித்த வாத விவாதங்களை திரையுலகிலும், முஸ்லிம் சமூகத்திலும் இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரம் தங்கச்சிமடம் ஜான்சன் என்பவரது விசைப்படகில் விஜி, பரதன், சேவியர், ராஜா ஆகியோர் 1996 மே 4ல் கடலுக்குச் சென்றனர். மே 5ல் கரை திரும்ப வேண்டிய படகு கரை திரும்பவில்லை. விசாரணையில், படகு கடலில் மூழ்கியதில் பரதன் உள்பட 4 பேரை தேடி வருவதாக தகவல் தெரிவித்தனர்.
மாயமான மீனவர்களை பல நாட்களாக தேடிய நிலையில் மாயமானவர்கள் பட்டியலில் பரதன் உள்பட 4 பேரும் சேர்க்கப்பட்டனர். அவர்களது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு மீன்வளத்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்.9 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யூடியூப் சானலில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக என தகவல் வெளியானது. அதில் தனது தந்தை பரதன் பிச்சை எடுக்கும் கும்பலுடன் பரிதாபமான நிலையில் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் என்பதை பரதன் குடும்பத்தினர் உறுதி செய்தனர்.
இந்நிலையில் பரதன் குடும்பத்தினரை சந்தித்து மீன்வளத்துறை அதிகாரிகள் பரதன் மாயமானது குறித்து எழுத்து பூர்வ மனு பெற்று கொண்டனர். 23 ஆண்டுகளுக்கு முன் மாயமான மீனவர் பரதனை இலங்கையில் இருந்து மீட்டு ஒப்படைக்க வேண்டும். பரதன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரதன் மகள் சரவண சுந்தரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் சோதனை முறையில் போக்குவரத்து ஆய்வாளர்களின் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில் சட்டை பையில் கேமரா..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாநகர போக்குவரத்து ஆய்வாளர்களுக்கு வாகன தணிக்கையின் போது அவர்களின் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில் அணிந்திருக்கும் சட்டை மேலே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
தற்சமயம் சோதனை முறையில் மதுரை திருப்பரங்குன்றம் துணை ஆய்வாளர்களுக்கு இந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் இடையில் என்ன நடக்கிறது என ஆணையாளர் நேரடியாக கண்காணிக்க முடியும. இதனால் வாகன தணிக்கையின் போது பொது மக்களுக்கும், போக்குவரத்து காவல் துறைக்கும் ஏற்படும் சச்சரவை கட்டுக்குள் கொண்டு வர்முடியும்.
தற்சமயம் சோதனை ஓட்டமாக இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது, வருங்காலங்களில் அனைத்து மாவட்டங்களில் செயல்படுத்தபடும் என அறியப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பிரதமர் மோடியா? ராகுலா? என்ற விவாதம் எழுவதற்கு காரணமே ஸ்டாலின்தான் – துரைமுருகன்!
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மோடியா ராகுலா என்ற விவாதம் எழுவதற்கு முழு காரணம் ஸ்டாலின் தான் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக் நகர் பகுதியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
அப்போது பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் கனிமொழி பிறந்த 7 வது நாள் அவரை நான் கையிலேந்தி செல்லகுழந்தையாக வளர்த்தவன். முதல் முறை தேர்தலில் போட்டியிடும் கனிமொழியின் பிரச்சரத்தை துவக்கி வைத்திருக்கவேண்டும். ஆனால் சூழல் மாறிவிட்டது. கண்டிப்பாக தூத்துக்குடி வெற்றி விழாவில் பங்கேற்பேன். எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் கருணாநிதிக்கு பின்னால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுகொண்ட இயக்கம் திமுக மட்டும் தான்.
முதல்வராக கூட ஆகாத ஒருவரின் பெயரை இந்திய நாட்டின் தலைவர்கள் முனுமுனுக்க காரணம் ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தது தான். மோடியா ராகுலா என்ற விவாதம் எழுவதற்கு முழு காரணம் ஸ்டாலின் தான். ஸ்டாலின் ராகுல் பெயரை அறிவிக்காமல் இருந்தால் மோடிக்கு எதிராக வேறு ஒருவர் இருந்திருப்பார். ஸ்டாலினுக்கு எதிராக தமிழகத்தில் வேறொருவர் கிடையாது. காங்கிரஸ் கம்யூ கட்சியினர் கூட திமுக தலைவர் ஸ்டாலினை வழிகாட்டியாக ஏற்றுகொண்டுள்ளனர்.
இந்த தேர்தல் பாஜக எனும் அடிமைதனத்தில் இருந்து விடுதலை பெற்று தரும் சுதந்திர போர் என பிரகடனம் செய்தவர் ஸ்டாலின். திமுக அரசியல் இயக்கமாக உருவானதல்ல அடிமைதனத்தை ஒழிக்க உருவான இயக்கம். தமிழகத்தில் நடக்கு ஆட்சியை காலி செய்வதற்கு நடைபெற்ற 18 இடங்களில் அவர்களுக்கு மெஜாரிட்டி கிடைக்காது. 5 இடங்கள் கூட அவர்களுக்கு கிடைக்காது. அதனால் தான் என்றைக்கோ செய்த தவறுக்காக 3எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். மூன்று இடங்கள் பெற்றால் போதும் என அவர்கள் இந்த 4 தேர்தலில் போட்டியிடுகிறார். அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிடுபவர் அவர்களோடு இருந்தவர் அவரோடு சம பலம் பொருந்தியவர் அரவக்குறிச்சி 100க்கு 120சதவீதம் வெற்றி பெறும்.
25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக கூட வரும் வாய்ப்பு உள்ளவர் ஸ்டாலின்.அவருக்கு அந்த அளவுக்கு அரசியல் தெரிந்தவர். கட்சியில் உள்ள பூசல்களை தேர்தல் முடியும் வரை மறக்க வேண்டும். தேர்தல் முடிந்தபின்னர் நானே வந்து குருப் பால்டிக்ஸை உருவாக்கி தருகிறேன். அப்போது தான் நல்ல பணி செய்வீர்கள். திமுகவினரை வெல்ல போகும் தந்திரம் எடப்பாடி ,ஓபி.எஸ்க்கு கிடையாது.அவர்கள் எமாந்த காலத்தில் ஏற்றுகொண்டவர் .திமுக தலைவரை தலைகுணிய வைக்கமாட்டோம் என தாய் மீது சத்தியம் செய்து களத்தில் வெற்றியோடு திரும்ப தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கூட்டத்தில் முன்னதாக பேசிய ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே என் நேரு எம்.ஜி.ஆர் காலத்தில் கூட எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு பதவி மரியாதை கிடைத்தது. கடந்த 10 ஆண்டுகளில் திமுகவினருக்கு எந்த பதவியும் மரியாதையும் கிடைக்கவிடாமல் ஜெயலலிதா பார்த்துகொண்டார். பதவி மரியாதை கிடைத்து திமுக சிறக்க கட்டாயம் ஆட்சி அமைக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் , பூங்கோதை ஆலடி அருணா மைதீன்கான் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக வரமுடியாது – பன்னீர்செல்வம் தாக்கு!..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
எந்த காலத்திலும் ஸ்டாலின் முதலமைச்சராக வரவே முடியாது என்று ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார். ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். மோகனுக்கு ஆதரவாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் குறுக்குச்சாலை, தருவைக்குளம்,தாளமுத்துநகர், தேவர்காலனி மற்றும் கோரம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட கழகம் யாராலும் அசைக்க முடியாத ஒரு இரும்புகோட்டையாகும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களுக்கு வழங்கி ஒருபொற்கால ஆட்சியை வழங்கினார். மக்களுக்கு தேவையான திட்டங்கள் மட்டுமல்லாது, அன்றாடம் தேவைப்படும் அனைத்து திட்டங்களையும் பார்த்துபார்த்து நாட்டு மக்களுக்கு செய்தார். 4கிராம் தங்கம், அத்துடன் ரூ.25,000திருமண நிதி உதவி, பட்டதாரி பெண்கள்என்றால் அவர்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் சேர்த்து ரூ.50000 நிதிஉதவியை புரட்சித்தலைவி அம்மாஅவர்கள் வழங்கினார்.
2016ம் ஆண்டு வரை இத்திட்டத்தினை வழங்கினார். அதனை தொடர்ந்து 2016 சட்டமன்றதேர்தலில் 4கிராம் தங்கத்தை 8கிராமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையாக அம்மா அவர்கள்அறிவித்தார். இன்றைக்கு அம்மாவின்அரசை தலைமை தாங்கி நடத்தி வரும்ம முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 8கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கிவருகிறார். பெண்களுக்கு பேறு கால நிதிஉதவியாக 2011-ம் ஆண்டு ரூ.12000 ஆகஉயர்த்தி அம்மா வழங்கினார்.
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ரூ18000ஆக வழங்கப்படும் என்றுதெரிவித்தார். தற்போது அம்மாவின் அரசு ரூ.18000 ஆக உயர்த்தி வழங்கி வருகிறது. இப்படி அம்மா அவர்கள் பார்த்து பார்த்து செய்திட்ட அனைத்து திட்டங்களையும் இன்றைக்கு நல்லாட்சி நடத்தி வரும் அம்மாவின் அரசு மக்கள் நலன் சார்ந்ததிட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள்,தொலை நோக்கு திட்டங்கள், இப்படி எந்தவொரு திட்டத்தையும்க குறைக்கவில்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, முந்திரிபருப்பு உள்ளிட்டபொருட்களை வழங்கினார். தற்போது அந்த பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் பரிசாக மக்களுக்குஅதிமுக அரசு வழங்கி வருகின்றது.
மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 2000ரூபாய் வழங்கப்படும் திட்டத்தினை அறிவித்து வழங்கினோம். ஆனால், திமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர்.
நிச்சயம் இந்த தேர்தல் முடிந்த பின் அதிமுக அரசு வழங்கும். எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகவரமுடியாது தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. சிறுபான்மைமக்களுக்கு பாதுகாப்புமிக்க மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. ஆனால் இன்றைக்கு அரசியல் காழ்புணர்ச்சிகாரணமாக திமுகவும், இன்னொரு பக்கம் நம்மிடமிருந்து ய பிரிந்து சென்ற துரோகிகளும் பல்வேறு பொய்பிரச்சாரங்களை செய்கின்றனர். இந்த இயக்கத்தை அழித்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் தனியாக ஒரு இயக்கத்தை உருவாக்கியுள்ளனர்.
கழகத்திற்கு எதிராக தனிக்கட்சியோ, ஜாதிக்கட்சியோ தொடங்கியவர்கள் யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. ஏனென்றால் புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தை தொண்டர்களால் உருவாக்கினார். இது தொண்டர்கள் கட்சி. இன்றைக்கும் தொண்டர்களால் இயக்கப்படும் ஒருமாபெரும் இயக்கமாக இந்த இயக்கம் உள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த இயக்கத்திற்கு வந்தசோதனைகளையும் வேதனைகளையும் தனதாக்கி கொண்டு, இந்த இயக்கத்தை அழிக்க நினைத்த கருணாநிதி சதிகளைஎல்லாம் முறியடித்து ஒரு அசைக்கமுடியாத எக்கு கோட்டையாக கழகத்தை உருவாக்கியுள்ளார்.
திமுகஆட்சிக்காலத்தில் பல்வேறு அராஜக செயல் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக நில அபகரிப்பை திமுகவே செய்தனர். தற்போது ஸ்டாலின் அதிமுக காணாமல்போய்விடும் என்று கூறி வருகிறார். இந்த இயக்கத்தில் ஒன்றரை கோடிதொண்டர்கள் உள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் ஆலமர விழுது போல் படர்ந்துள்ளனர். எப்படி காணாமல்போகும். அதிமுக அரசு ஒவ்வொறு திட்டங்களையும் குறையில்லாமல் பார்த்து பார்த்து மக்களுக்கு சேவை செய்து வருகின்றது.” என்றார்.
தேர்தல் பிரச்சாரத்தில்அமைச்சர்கள் காமராஜ்,கே.டி.ராஜேந்திரபாலாஜி,கடம்பூா்ராஜூ,ராஜலட்சுமி,, விஜயபாஸ்கர்,சேவூர்ராமச்சந்திரன்,, மணிகண்டன்மற்றும் அதிமுக நிர்வாகிகள், கூட்டணிகட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பள்ளிகொண்டா அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதல் 6 பேர் பலி . வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த மாதனூர் அருகே முன்னாடி சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 4 ஆண்கள் உள்ளிட்ட 6 பேர் பலி ஆனார்கள்.
இறந்தவர்களின் விவரம் பற்றி தற்போது போலீசார் சேகரித்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிங்கப்பூரின் 200வது ஆண்டு கொண்டாட்டத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, அதிநவீன மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் தஞ்சாவூர் வந்தனர்.
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பன்னீர்செல்வம் (53), பாலச்சந்திரன் (56), அருணகிரி (52) ஆகிய மூவரும் சிங்கப்பூரில் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள், சிங்கப்பூர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை மற்ற நாட்டு மக்களுக்கு தெரியபடுத்தும் வகையில், ஒவ்வொரு நாட்டுக்கும் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர்.
இதையடுத்து, அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் மூலம் சாலை மற்றும் கடல் மார்க்கமாக தஞ்சாவூர் வந்தனர். பின்னர் இவர்கள் மூவரும், தஞ்சை பெரிய கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, வெளியில் நிறுத்தப்பட்டிருந்த அவர்களின் நவீன மோட்டார் சைக்கிளை ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள், அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த பாலசந்திரன், பன்னீர்செல்வம், அருணகிரி ஆகியோர் கூறியதாவது; “நாங்கள் சிங்கப்பூரில் தொழில் செய்து வருகிறோம். சிங்கப்பூர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிறது. இதை, மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு தெரியப்படுத்தவே நாங்கள் மோட்டார் சைக்கிள் மூலம் வலம் வருகிறோம்.
இந்த மோட்டார் சைக்கிள் விலை 28 லட்சம் ரூபாய். இதில், ஜி.பி.ஆர்.எஸ். கருவி, கூகுள்மேப், டி.வி., ரேடியோ, ஏர் கூலர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த மோட்டார் சைக்கிள்கள் 1,800 சி.சி. திறன் கொண்டவை. பெட்ரோல் மூலம் இயங்கும் இந்த மோட்டார் சைக்கிள், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 15 கி.மீ தூரம் செல்லும்.
நாங்கள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி சிங்கப்பூரில் பயணத்தை தொடங்கினோம். அங்கிருந்து மலேசியா, தாய்லாந்து, மியான்மர், வங்கதேசம், திபெத், நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்தோம். பெரும்பாலும் சாலை வழியாகவே வந்தோம். ஒரு சில இடங்களில் படகில் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பயணம் செய்தோம்.
நாளொன்றுக்கு சுமார் 400 கி.மீ. தூரம் பயணம் செய்து வருகிறோம். இதன் மூலம், 13 ஆயிரம் கி.மீ. தூரம் செல்ல திட்டமிட்டுள்ளோம். தஞ்சை பெரிய கோயிலில் இருந்து வேளாங்கண்ணி உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு, வரும் 8ம் தேதி சென்னையில் பயணத்தை நிறைவு செய்து விட்டு விமானம் மூலம் மீண்டும் சிங்கப்பூர் செல்ல உள்ளோம்” என்று தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காட்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த 4 பேர் தீயணைப்பு படையினரால் மீட்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதிவில் உள்ள கிணற்றில் வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் தவறி விழுந்து உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி தீயணைப்பு துறையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸில் வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். லத்தேரிபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“ஆட்சியைத் தக்கவைக்க தி.மு.க-வுடன்கூட கூட்டணி வைப்பார் எடப்பாடி!” – தினகரன் சாடல்
by ஆசிரியர்
written by ஆசிரியர்
எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்தே தனது முதலமைச்சர் பதவியையும் ஆட்சியையையும் தக்கவைத்துக்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி. இன்னும் சொல்லப்போனால், பதவிக்காக தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கக்கூட அவர் தயங்க மாட்டார் என அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சுந்தரராஜனை ஆதரித்து, வல்லநாட்டில் தினகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”இரட்டை இலைச் சின்னம் இருந்தால் ஜெயித்துவிடலாம் என அ.தி.மு.க-வினர் நினைக்கிறார்கள். அந்தச் சின்னம் எம்.ஜி.ஆர் கையில் இருந்தபோதும், ஜெயலலிதா கையில் இருந்தபோதும் நிச்சயம் வெற்றிதான். ஆனால், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என்ற இரண்டு துரோகிகள் கையில் இருக்கும்போது எப்படி வெற்றி கிடைக்கும்? ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை வைத்திருந்த அவர்களை சுயேட்சையாக நின்ற நான், தோற்கடித்தேன். அதே நிலைதான் தற்போதும் ஏற்படும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை சட்டமன்றத்தில் வைக்கக் கூடாது என்ற தே.மு.தி.க, அவருக்கு நினைவு மண்டபம் கட்டக் கூடாது என்று கூறிய பா.ம.க, கடைசிவரை ஜெயலலிதாவைப் பார்க்க வராத மோடியின் பா.ஜ.க இவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சியைக் காப்பாற்ற திட்டமிடுகிறார் எடப்பாடி பழனிசாமி. ‘மோடியா இந்த லேடியா’ என ஜெயலலிதா எதிர்த்து நின்று ஜெயித்தார். இன்று, ‘மோடி எங்கள் டாடி’ என அவர்களிடம் சராணகதி அடைந்துள்ளார்கள் பழனிசாமியும், பன்னீர் செல்வமும்.
அம்மாவின் மறைவுக்குப் பிறகு உள்ள ஆட்சிக் காலத்தை மோடியின் தயவால் ஓட்டிவிட்டார்கள். மீதமுள்ள ஆட்சியை எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்தே தக்கவைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார் எடப்பாடி. இப்போது இடைத்தேர்தலில் தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஓட்டுக்கு 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரை கொடுக்கத் தயாராக உள்ளார்கள்.
அ.ம.மு.க தி.மு.க-வுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ளது… ஸ்டாலினும் தினகரனும் ரகசியமாகத் திட்டம் தீட்டுகிறார்கள் என அ.தி.மு.க-வினர் குற்றம் சாட்டுகின்றனர். தி.மு.க-வில் இருந்துதான் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வை தொடங்கினார். ஆனால், ஆட்சியையும் தன் முதல்வர் பதவியையும் தக்கவைத்துக்கொள்ள தி.மு.க-வின் காலைப் பிடித்து கூட்டணி வைத்துக்கொள்ளக்கூட எடப்பாடியார் தயங்க மாட்டார். மறைமுகமாக தி.மு.க-வுடன் கூட்டணி வைத்திருப்பது அ.தி.முக-தான்” என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“திமுகவை ஒழித்துவிட்டால் அதிமுக ஒழிந்து விடும்..!” – சீமான் பேச்சு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
“தமிழகத்தின் தற்போதைய நிலைக்கு திமுகதான் முழு முதற்காரணம்; திமுகவை ஒழித்து விட்டால், அதிமுக தானாகவே ஒழிந்து விடும்” என்று, தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் கூறினார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மு.அகல்யா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கேட்டு, தூத்துக்குடி ஸ்பிக்நகரில் நேற்று (5ம் தேதி) மாலை பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது;
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பெயருக்குத்தான் தமிழகத்தை ஆண்டுகொண்டு இருக்கின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், பாஜக-வுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார். தற்போது, அதிமுகவை மிரட்டி பாஜக கூட்டணி அமைத்து, தமிழகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, ‘ஊழல் ஒழியும், லஞ்சம் ஒழியும், கறுப்பு பணம் வெளியே வரும்’ என்று சொன்னார்கள். ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. ‘தீவிரவாதம் ஒழியும்’ என்றார்கள். ஆனால், தற்போதுவரை தீவிரவாத தாக்குதல் நடந்து வருகிறது. ஜிஎஸ்டி-யில் தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீத வரியும், மக்கள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம்..?
மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை கொள்முதலில் பல கோடி ஊழல் நடந்துள்ளது. அதிமுக மீண்டும் வெற்றி பெற்றால், இது போன்ற ஊழல் தொடரும். தமிழகத்தின் தற்போதைய நிலைக்கு திமுகதான் முழு முதற்காரணம். திமுகவை ஒழித்துவிட்டால், அதிமுக தனாகவே ஒழிந்து விடும். தமிழகம் கறை படுவதற்கு முழு முதல் காரணம் திமுகதான். அவர்களிடம் படித்து வந்தவர்கள்தான் அதிமுகவினர்.
தமிழகத்தில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. அனைவரும், தான் இருக்கும்போதே தனது வாரிசுகளுக்கு இடம் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பணம் கொடுக்கத்தான் தெரியும். மக்களின் கஷ்டத்தை புரிந்துகொள்ள மாட்டார்கள். இந்த நிலை மாற வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு தரமான மருத்துவம் வழங்குவோம். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்படும். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள பில்டர் சாலையில் அரசு பஸ் மோதியதில் இருவர் பலி ஆகியுள்ளனர்.
மதுரை மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த வினோத் வயது 21 மற்றும் பாண்டி செல்வம் வயது 26 இருவரும் கட்டிட தொழிலாளர்கள். நாகமலை புதுக்கோட்டை பில்லர் சாலை அருகே வரும் போது மதுரையில் இருந்து மூணார் செல்லும் அரசு பேருந்து மோதியதில் அருகில் உள்ள தடுப்பு சுவற்றில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
உடல்களை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
2017ம் ஆண்டு 1176 மதிப்பெண்கள் பெற்றுப் “நீட்” எனும் கோரப்பிடியினால் தன் கனவுகளை உடைத்து உயிரை நீத்து கொண்ட மானவி அனிதா.
இந்த 2019ம் வருடம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சந்தியாவை பலி வாங்கியுள்ளது நீட் தேர்வு. மதுரையில் நீட் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி வீட்டுக்கு செல்லும்போது திருப்புவனம் அருகே மயங்கிவிட்டார். இதற்கு காரணம் நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சல் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.
பின் உடனடியாக 108 வாகனம் மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் மாணவி, ஆனால் வழியிலேயே மாணவி இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். நீட் தேர்வு எழுதி வீடு திரும்பிய மாணவி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழைய குற்றாலம் மலைப்பகுதிகளில் கொளுந்து விட்டு எரியும் காட்டு தீ – வன விலங்குகள் உயிரிழப்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
நெல்லை மாவட்டம் குற்றாலம் மலைப் பகுதியில் பல்வேறு அரியவகை மூலிகைகள் உள்ளன. குற்றால அருவிகளில் குளிப்பது பல நோய்களுக்கு நிவாரணம் என கூறப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மலையில் மூலிகைகள் நிறைந்த பகுதி வழியே தண்ணீர் ஓடுவதே ஆகும்.
அரிய பல மூலிகைகள் கலந்து தண்ணீர் அருவிகளில் விழுவதால் அது மருந்தாகவும்,நோய் நிவாரணியாகவும் திகழ்கிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கத்தினால் அருவிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. மேலும் அக்னி நட்சத்திரம் வெயில் துவங்கி விட்டது. தென்மேற்கு பருவ காற்று வீசத் துவங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இப்பகுதியில் தெரிவதில்லை.
குற்றாலம் மலைப்பகுதியில் வெயிலின் தாக்கத்தினால் மரம், செடி, கொடிகள், மூலிகை செடிகள் தண்ணீர் இன்றி காய்ந்து வருகின்றன. இந்நிலையில் இன்று பழையகுற்றாலம் மலைப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீயால் அரியவகை பல மூலிகைகள் எரிந்து சாம்பலானது. மேலும் வன விலங்குகள் பல உயிரிழந்தன.
தென்மேற்கு பருவக்காற்று தற்போது வீசி வருவதால் காட்டுத் தீ மலையின் உச்சி பகுதி வரை வேகமாக பரவியது. இந்த காட்டு தீ காரணமாக அரியவகை மூலிகைகள், பல்வேறு வகையான காட்டு மரங்கள், வனவிலங்குகள் எரிந்து சாம்பலாகி வருகிறது.
மேலும் காட்டுத் தீயில் சிக்கிய மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பல தப்பிக்க முடியாமல் உயிரிழந்தன. இரவு நேரத்தில் மலைப்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிவதை காண முடிந்தது.
குற்றாலம் மலைப்பகுதியில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மற்றும் சுற்றுபுறங்களில் அக்னி நட்சத்திர வெயிலை தொடர்ந்து வெளுத்து கட்டிய ஆலங்கட்டி மழை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 112 டிகிரி வெய்யில் வாட்டியது. இன்று 5ம் தேதி 111 டிகிரி வெய்யில் கொளுத்தியது. ஆனால் இரவு வேலூர் காட்பாடி, சத்துவாச்சாரி மற்றும் சுற்று பகுதியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் கடும் வெயிலிக்கு பிறகு பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை ரயில் நிலையம் கிழக்கு பகுதியில் முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்ட இரு சக்கர வாகன நிறுத்த நிலையம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை ரயில் நிலையத்தில் கிழக்கு நுழைவாயிலில் செயல்பட்டு வந்த இரு வாகன காப்பகங்கள் கடந்த சில நாட்களாக எந்த அறிவிப்பும் இன்றி மூடப்பட்டுள்ளது. அந்நிலையத்மில் உள்ள வாகனங்களும் எந்தவித பாதுகாப்பு இல்லாத சூழலில் உள்ளது.
மேலும் வண்டி திருடு போகும் அபாயமும் உள்ளது என வாகன உரிமையாளர்கள் கூறுகிறார்கள். மேலும் டோக்கன் கொடுத்து விட்டு இப்படி வாகனத்தை பாதுகாப்பின்றி போட்டு சென்றதாகவும், இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் வாகனங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். மேலும் திடீரென “இங்கே நிறுத்தும் வாகனங்களுக்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பு இல்லை” என அறிவிப்பு பலகையும் வைத்து வாகன உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இது குறித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் “குடிமகன்களுக்கு” வசதியாக அமைக்கப்பட்ட குடி நீர் தொட்டி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் பெருமாள் கோவில் அருகே டி பி கே ரோடு பிரதான சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடைக்கு வாயிலில் மாநகராட்சி குடிநீர் தொட்டி அமைக்கபட்டுள்ளது. இந்த குடிநீர் மதுபான கடைக்கு வருபவர்களுக்காக அல்லது பொதுமக்களுக்கா என தெரியவில்லை.
இந்த குடிநீர் தொட்டியை அங்கிருந்து அகற்றி வேறு இடத்துக்கு கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். மேலும் பேருந்து நிறுத்தம் அருகில் இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஆனால் குடிகாரர்களை கண்டு அப்பக்கம் செல்லவே தயங்குகிறார்கள். மாநகராட்சி இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் இன்று 05-05-2019
இராமநாதபுரத்தில் நடைபெற்றது. நயினார்கோயில் ஒன்றிய பொறுப்பாளர் சிலம்பரசன் வரவேற்புரை ஆற்றினார். சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாமிற்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் தலைமை தாங்கி தகவல் அறியும் உரிமை சட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பதை பற்றி எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் முன்னிலை வகித்து அனைத்து ஒன்றியங்களிலும் சட்ட விழிப்புணர்வு பயிற்சியை கொண்டு செல்வதற்கான வழிமுறையை எடுத்துக் கூறினார். இராமநாதபுரம் மாவட்ட நீரின்றி அமையாது உலகு திட்ட பொறுப்பாளர் வீரக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்பின் அடிப்படை சட்டங்கள், இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக நாம் எவ்வாறு சட்டங்களை உபயோகிப்பது , பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சட்ட உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பதை பற்றி சிறப்பாக எடுத்துக்கூறி சிறப்புரை ஆற்றினார். மேலும் இளைஞர்களின் சட்டம் சம்பந்தமான கேள்விகளுக்கும் சிறப்பான விடைகளுடன் நிறைவு செய்தார்.
இந்த நிகழ்வில் வில் உலக சாதனை ஆய்வு மையத்தின் நிறுவனர் கலைவானி கலந்து கொண்டு சட்டங்களை சந்திப்போம் எனும் தலைப்பில் சர்வதேச அளவில் நிகழக்கூடிய குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை பற்றியும் குழந்தைகளுக்கான அடிப்படை சட்டங்கள் என்ன என்பதை பற்றியும் மிகச்சிறப்பாக எடுத்துக் கூறினார். மேலும் பெண்களுக்கான சொத்துரிமை பற்றியும் எடுத்துரைத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் கண்டிப்பாக அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி நம்பிக்கை உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மத்திய மேற்கு சென்னை துணை ஒருங்கிணைப்பாளர் காசிநாததுரை மற்றும் வில் உலக சாதனை ஆய்வு மையத்தின் செயலர் தஹ்மிதா பானு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
மேலும் இந்த பயிற்சி முகாமில் மாவட்ட மானுடம் திட்ட பொறுப்பாளர் சசி , மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் ராஜ்கபூர், திருப்புல்லாணி ஒன்றிய பொறுப்பாளர்கள் மாதவன்,கிளாட்வின் , இராமேஸ்வரம் நகர பொறுப்பாளர் அருளானந்தபிச்சை , இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் ராமு , தேவிபட்டிணம் ஊராட்சி பொறுப்பாளர் உலகுராஜ் மற்றும் மக்கள் பாதை தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு பயணடைந்தனர்.
சட்டம் சார்ந்த விழிப்புணர்வுகளை இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கொண்டு சேர்க்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ் நன்றியுரை கூறினார்.
You must be logged in to post a comment.