12
மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் பெருமாள் கோவில் அருகே டி பி கே ரோடு பிரதான சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடைக்கு வாயிலில் மாநகராட்சி குடிநீர் தொட்டி அமைக்கபட்டுள்ளது. இந்த குடிநீர் மதுபான கடைக்கு வருபவர்களுக்காக அல்லது பொதுமக்களுக்கா என தெரியவில்லை.
இந்த குடிநீர் தொட்டியை அங்கிருந்து அகற்றி வேறு இடத்துக்கு கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். மேலும் பேருந்து நிறுத்தம் அருகில் இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஆனால் குடிகாரர்களை கண்டு அப்பக்கம் செல்லவே தயங்குகிறார்கள். மாநகராட்சி இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.