Home செய்திகள் மதுரையில் சோதனை முறையில் போக்குவரத்து ஆய்வாளர்களின் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில் சட்டை பையில் கேமரா..

மதுரையில் சோதனை முறையில் போக்குவரத்து ஆய்வாளர்களின் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில் சட்டை பையில் கேமரா..

by ஆசிரியர்

மதுரை மாநகர போக்குவரத்து ஆய்வாளர்களுக்கு வாகன தணிக்கையின் போது அவர்களின் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில்  அணிந்திருக்கும் சட்டை மேலே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

தற்சமயம் சோதனை முறையில் மதுரை திருப்பரங்குன்றம் துணை ஆய்வாளர்களுக்கு இந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  இதனால் காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் இடையில்  என்ன நடக்கிறது என ஆணையாளர் நேரடியாக கண்காணிக்க முடியும. இதனால் வாகன தணிக்கையின் போது பொது மக்களுக்கும்,  போக்குவரத்து காவல் துறைக்கும்  ஏற்படும் சச்சரவை கட்டுக்குள் கொண்டு வர்முடியும்.  

தற்சமயம் சோதனை ஓட்டமாக இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது, வருங்காலங்களில் அனைத்து மாவட்டங்களில் செயல்படுத்தபடும் என அறியப்படுகிறது.

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!