ராமநாதபுரம் சிவஞானபுரம் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சிவபாலா, 35. கடந்த 2006ல் காதல் திருமணம் நடந்த இவர்களுக்கு 2 பெண் குழந்தை, வயது ஆண் குழந்தை உள்ளனர். ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக சிவபாலா வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவி இடையே கடந்த ஓராண்டுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்த இருவரும் விசாரணை முடித்து வீடு திரும்பினர். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே சிவபாலா நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்த சரவணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவபாலாவை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே சிவபாலா உயிரிழந்தார். காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரித்தனர். கேணிக்கரை போலீசில் சரணடைந்த சரவணனை போலீசார் கைது தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Category:
மாவட்ட செய்திகள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டி பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் ஈச்சம்பட்டியில் உள்ள தங்கராஜ் மனைவி ரஞ்சிதம் (50) என்பவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போது கம்பளி போர்வையில் சுற்றி 100பாக்கெட்டுக்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 200கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ20லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிந்துபட்டி போலீசார் ரஞ்சிதத்தை கைது செய்து விசாரனை செய்ததில் இவரது மகன் ஜெயக்குமார் மதுரை செல்லூர் பகுதியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருவதாகவும், இன்று அதிகாலையில் ஜெயக்குமார் மற்றும் அடையாளம் தெரியாத இருவர் ஆட்டோவில் வந்து கம்பளி போர்வை வியாபாரம் செய்ய இருப்பதாகவும், அதனை வீட்டில் வைத்துள்ளதாகவும் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு சென்றதாக தெரிவித்தார். இது தொடர்பாக தலைமறைவான ஜெயக்குமார் மற்றும் அடையாளம் தெரியாத இருவர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குன்னூத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜகோபால் மகள் ரித்யா(12). இவர் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள தோட்டத்தில் சக சிறுவர்களுடன் சிறுமி குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கிணற்றின் அருகே நின்று கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். தோட்டத்திற்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாதது குறித்து பெற்றோர்கள் தேடியபோது கிணற்றில் விழுந்தது தெரியவந்தது. உடனே உசிலம்பட்டி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணப்புதுறை நிலைய அதிகாரி தங்கம் தலைமையிலான தீயணைப்புவீரர்கள் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியியை சடலமாக மீட்டனர். அதனைதொடர்ந்து உசிலம்பட்டி போலீசார் பிரேத பரிசோதணைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாமலை மெட்ரிக் பள்ளியில் திரிசாரணன் திரிசாரணி படை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் தலைமையில் தொடங்கப்பட்டது. அண்ணாமலை பள்ளி அறக்கட்டளை உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். பள்ளி திரிசாரண ஆசிரியர் பிரேம் குமார் அனைவரையும் வரவேற்றார் . மாவட்ட கல்வி வேத பிரகாசம் வருகை தந்து திரிசாரணன் திரிசாரணிகளை உங்கள் சேவை நாட்டுக்கு தேவை கடமையை சிறப்பாக செய்யுங்கள் இந்த கோவிட் காலத்தில் சாரண இயக்கம் செய்த தொண்டு பாராட்டுக்கு உரியது .தொடர்ந்து பணிகள் சிறப்பாக சேவையாற்ற வேண்டும்
மாவட்ட பள்ளி கல்வி துணை ஆய்வாளர் மற்றம் மாவட்ட ரோவர் ஆணையர் குமார் திரிசாரணிகளை வாழ்த்தி பேசினார்.
மாவட்ட செயலாளர் பியூலா கரோலின் திரிசாரணன் திரிசாரணி நடந்த நிகழ்வுகளை சொல்லி இனிமேல் செய்யபோகும் செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டார்.
மாவட்ட அமைப்பு ஆணையர் திரிசாரணன் படை ஆரம்பிது நடத்துவது என பகிர்ந்து கொண்டார்.
மாவட்ட பயிற்சி ஆணையர் சாரணியம் கலைவாணி திரிசாரணி படை ஆரம்பிது நடத்துவது என பகிர்ந்து கொண்டார்.
மாவட்ட துணை ரோவர் ஆணையர் ரோவர் சுதாகர் சமுதாய தொண்டு எப்படி ஆற்ற வேண்டும் என திரிசாரணன் திரிசாரணிகளுக்கு எடுத்துரைத்தார். இடை இடையே. உற்சாகம் ஊட்டும் வகையில் பாடல்கள் மற்றம் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டது . பள்ளி திரரிசாரணி ஆசிரியை சுதா நன்றி கூறினார்.
செய்தியாளர் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இல்லத்தரசிகளுக்கு ஊதியம், வீடுதோறும் இணையம்- 7 அம்ச தேர்தல் வாக்குறுதி;மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன்
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் தனியாா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:தமிழகத்தில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. ஏற்கெனவே ஆட்சியில் இருந்தவா்களைத் திருத்த வேண்டும்.தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சியில் மக்களுக்கான சேவையை செய்ய முடியாமல் வருந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மருத்துவா்கள் என பல துறையினரும் மக்கள் கடமையாற்ற என்னுடன் இணைந்திருக்கிறாா்கள். நோ்மைதான் அரசின் அச்சாணி என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.நான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நிறைய சம்பளம் வாங்குவதாக சொல்கிறாா்கள். மறுக்கவில்லை; அவா்கள் கொடுக்கிறாா்கள் நான் வாங்குகிறேன். வாங்கும் பணத்துக்கு வரி கட்டும் விவரங்களை பத்து நிமிடத்தில் என்னால் தர முடியும்.மக்கள் நீதி மய்யம் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் வழங்கப்படும். எங்கள் ஆட்சியில் ஊழல் இருக்காது. ஊழல் செய்தால் தண்டனை கடுமையாக இருக்கும்.நீா்நிலைகளை சீராக பராமரிப்போம். செய்யாறு வழியாக திண்டிவனம் – நகரி ரயில் பாதைத் திட்டத்தை விரைவுப்படுத்துவோம்.செய்யாறு சிப்காட்டில் மேலும் பல தொழில்சாலைகளை அமைப்போம். ஆற்று மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவோம். 4 ஆயிரம் மெகாவாட் மின் திட்டத்தை நிறைவேற்றுவோம். சாக்கடை, சாலை போன்ற அடிப்படை வசதிகள் தரமாக இருக்கும் என்றாா். கீழ்பென்னாத்தூரில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி கைகளை அசைத்தபடி கமல்ஹாசன் சென்றாா்.திருவண்ணாமலையில் அறிவொளிப் பூங்கா, அண்ணா சிலை, காமராஜா் சிலை பகுதிகளில் திரண்டிருந்த பொதுமக்களை நோக்கி கையசத்தபடி கமல்ஹாசன் சென்றாா்.தனியாா் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகா்களிடம் அவா் கலந்துரையாடினாா்.கட்சியின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் இரா.அருள், கீழ்பென்னாத்தூா் ஒன்றியச் செயலா்கள் சுகானந்தம், முருகன், ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக சார்பில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும்.மத்திய பாஜக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்.
by mohan
written by mohan
மதுரை அம்பிகா தியேட்டர் அருகே திமுக மகளிர் அணி சார்பாக கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் திமுக மகளிர் அணி துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் தமிழரசி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கேஸ் சிலிண்டருக்கு மோடி உருவ புகைப்படத்தை ஒட்டியும் மாலை அணிவித்தும்சாலையில் விறகு அடுப்பை பயன்படுத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன் முத்துராமலிங்கம் உட்பட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் பன்னியான், கொக்குளம், செக்கானூரணி, அம்மன் கோவில்பட்டி, கீழப்பட்டி, கண்ணனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் சின்னவெங்காயம் சுமார் 100 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக பெய்து வரும் பருவமழை காரணமாக வெங்காய செடிகளில் வேர்அழுகல்நோய் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் காய்பிடிக்கும் பருவத்தில் நோய் தாக்கியுள்ளதால் சின்ன வெங்காய செடிகள் மண்ணோடு மடிந்து வருகிறது. இந்தநிலையில் உழவு, நடவு, உரம், மருந்து என ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள், உரிய விளைச்சலை எடுக்கமுடியாமல் வேதனையில் தவித்து வருகின்றனர்.மேலும் விலை இல்லாததால் வெங்காய விளைநிலங்களில் மாடுகளை மேய்க்க விடும் அவல நிலையும் உள்ளதுஇதுகுறித்து இந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-ஆடி மாதம் முதல் பல்வேறு வகையான மானாவாரி பயிர்களை விவசாயிகள்பயிர் செய்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த ஆடிமாதம் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் வெங்காயச் செடிகள் அனைத்தும் அழுகிவிட்டது. நடவு முதல் அறுவடை செய்யும் வரை ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். இந்த நிலையில் தற்பொழுது சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் சில்லரை விலை ரூ. 100 முதல் ரூ.120 வரை விற்று வருகிறது. இந்த நேரத்தில் மழை காரணமாக வெங்காய செடிகள் அழுகி வீணாகி விட்டது. அதனால் ஒரு ஏக்கர் பயிர் செய்துள்ள விவசாயிக்கு தலா ஒரு லட்சம் வரை இழப்பீடு ஏற்படும் அவலம் உள்ளது. மேலும் அதிக வட்டிக்கு வாங்கிய வெங்காய விவசாயம் செய்து வருவதால் இந்த இழப்பீடுகளை தாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் எனவே வேளாண் துறையினர் தங்களது விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட வெங்காய பயிர்களுக்கான உரிய இழப்பீட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேலூரில் குடிமை பொருள் வாகனத்தில் மரம் கடத்தல், சமூக ஆர்வலர்கள் மடக்கிப்பிடித்து வருவாய்த்துறையிடம் ஒப்படைப்பு:
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் மேலூர் செக்போஸ்ட் பகுதியில் குடிமைப்பொருள் என்ற அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட லாரியில் வெட்டப்பட்ட வாகை மரங்கள் 20க்கும் மேல் ஏற்றிச் செல்வதைக் கண்ட சமூக ஆர்வலரான ரவி மற்றும் அவரது நண்பர்கள் லாரியை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரித்தனர்,அப்போது பூஞ்சுத்தி பகுதியில் இருந்து மரங்கள் வெட்டப்பட்டு தூத்துக்குடி பகுதிக்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்தார்,மேலும் இதுகுறித்து அவர்கள் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில், வருவாய்த்துறையினர் நடத்திய விசாரணையில். மரங்கள் அனைத்தும் உரிய அனுமதி பெறாமல் வெட்டப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதை அறிந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் …
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் அமைச்சர் செல்லூர் ராஜுவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் அம்மா கிளினிக் திறந்து வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ யாதவ சமுதாயத்தினரை அவமதித்து பேசியதாக கூறப்படுகிறது.இதையடுத்து திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஒரு கோடிக்கும் அதிகமானோர் தங்கள் சமுதாயத்தில் இருப்பதாகவும்,வரும் தேர்தலில் முக்கிய வாக்கு வங்கியாக தங்கள் சமுதாயம் இருக்கும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
32 கிலோ மீட்டர் சாலை அமைத்ததாக RTI க்கு தவறான தகவல் அளித்த மதுரை மாநகராட்சி.
by mohan
written by mohan
மதுரை வைகை நதி தெற்கு கரையோரப் பகுதிகளில் தெப்பக் குளத்திலிருந்து விரகனுர் வரை 5 கிலோ மீட்டருக்கு சாலை அமைத்தது32 கிலோ மீட்டர் சாலை அமைத்ததாக RTI க்கு தவறான தகவல் அளித்த மதுரை மாநகராட்சி.81கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை நதியின் இரு கரையோரங்களிலும் ஜியோ டாக் எனப்படும் வைகைநதி எல்லை வரையறை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .இதில் தெப்பக்குளத்தில் இருந்து விரகனூர் வரையிலான ஐந்து கிலோ மீட்டர் சாலை மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைக்கான பணிகள் நடந்து வருகிறது .சென்னையைச் சேர்ந்த வக்கீல் கனகராஜ் என்பவருக்கு மதுரை மாநகராட்சி தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் அளித்த பதில் மனுவில் 32 கிலோ மீட்டர் சாலை பணிகள் முடிவடைந்தது உள்ளது. மீதமுள்ள 10 கிலோ மீட்டர் சாலை பணிகள் மட்டும் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளது .முடிவடையாத பணிகளை முடிவடைந்ததாக கூறிய தகவல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.இதனை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரும் தமிழக தகவல் உரிமை பிரிவு தலைவருமான கனகராஜ் என்பவர் இன்று ஆய்வு செய்தார் அதில் தெப்பக்குளத்தில் இருந்து விரகனூர் வரையிலான பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.ஆனால் மீதமுள்ள பணிகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.அதற்கு முன்னதாகவே 32 கிலோமீட்டர் பணிகள் முடிவடைந்ததாக பொய்யான தகவல்களை அளித்துள்ளனர். மேலும் விரகணூர் அணை பகுதியில் உள்ள மடைகளில் வெங்காயத் தாமரை சூழ்ந்துள்ளதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ளது.மேலும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு செல்லும் தண்ணீரின் அளவு வெளியேற்றும் போது முழுமையாக பாதிக்கப்படுகிறது.வெங்காய தாமரை விரகனூர் டேமில் இருப்பதால் அங்கு மீன் போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கு தடையாக உள்ளது. இதனை பொதுப்பணித்துறை அகற்ற வேண்டும் என்றும் மதுரையில் உள்ள அமைச்சர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி களத்திற்கு தயாராகும் காளைகள்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியில் உள்ள அவனியாபுரத்தில் தை முதல் நாளான பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.இதனை தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற பாலமேடு , அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு “தை” பொங்கல் திருநாள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏதுவாக காளைகள் வளர்ப்போர் தங்கள் மாடுகளை பயிற்சி அளித்து வருகின்றனர்.இதற்காக மண்முட்டுதல் பயிற்சி அளிக்கின்றனர். மணல்மேடுகள் குவியலாக வைத்து அதில் மாடுகள் கொம்புகளால் குத்தி பயிற்சி அளிக்கின்றனர்.இதனால் தன்னை பிடிக்க வரும் மாடுபிடி வீரர்களை குத்தி தூக்கி எறிவதற்கு அளிக்கும் பயிற்சியாக உள்ளது.மேலும் நீண்ட நேரம் ஜல்லிக்கட்டு களத்தில் நிற்பதற்காக நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர்.இதேபோல் நீண்ட நேரம் நடை பயிற்சி உள்ளிட்டவை அளிக்கின்றனர்.இதனால் ஜல்லிக்கட்டு காளைகள் உடல் பலத்துடன் திடகாத்திரமாக ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் களத்தில் நின்று மாடுபிடி வீரர்களை திணறடிக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய பயிற்சி அளிக்கப்படுகிறது .ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க பருத்தி விதை, நாட்டுக்கோழி முட்டை ,கம்பு, மக்காச்சோளம் மற்றும் திணை அரிசி உணவு வகைகளாக வழங்குகின்றனர் இதனால் மாடுகளுக்கு நன்றாக தசைபிடிப்பு களுடன் பொலிவான தோற்றத்தில் காணப்படும். தினமும் திடகாத்திரமான ஜல்லிக்கட்டு காளைக்கு ருபாய் 700 முதல் 1000 ரூபாய் வரை செலவு செய்கின்றனர்.போட்டிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் பிடிபடாமல் வென்று பரிசு பெற்றால் ஒரு ஜல்லிக்கட்டு காளைகளை ஒன்றரை லட்சம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர் என்று ஒரு காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பெண் காவலர்களே இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினசரி காலை 09.00 மணிமுதல் 20.00 மணிவரை அலுவலில் இருப்பார்கள். இவர்கள் காவல் நிலையத்திற்கு வரக்கூடிய மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை கனிவோடு வரவேற்று வருகைக்கான காரணத்தை தெரிந்து கொண்டு காவல் நிலையத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் அழைத்து செல்வர்.வரவேற்பாளர்களுக்கு வேறுபணி வழங்கப்படாமல் வரவேற்பாளராக மட்டும் பணிபுரிவர். இந்த வரவேற்பாளர்களை காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் எளிதில் அடையாளம் காண்பதற்காக அவர்களுக்கு வில்லை (Badge) வழங்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு காவலர்கள் சட்டம் & ஒழுங்கு குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆகிய அனைத்திற்கும் பொதுவான அலுவலராக செயல்படுவார்கள். பொதுமக்கள் அமர்வதற்காக போதுமான இருக்கை வசதிகள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செய்யப்பட்டுள்ளது. எழுத படிக்க தெரியாதவர்களுக்கு புகார் மனுவை எழுதிக்கொடுப்பார்கள்.
காணாமல் போன ஆவணங்கள் (Missing Documents) தொடர்பான புகாரினை CCTNS வலைதளத்தில் எவ்வாறு பொது மக்கள் பதிவு செய்யவேண்டும் என்பது பற்றியும், இதற்கு காவல்துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ள இவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
எனவே வரவேற்பு காவலர்களின் பணியை காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொண்டுள்ளார்கள்….செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சூராளுர் கிராமத்தை சேர்ந்த சங்கரன் (60) நேற்று இரவு தனது 2 சக்கர வாகனத்தில் குடியாத்தம் பகுதியில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு பைக்கில் காப்பு காட்டில் வந்த போது குறுக்கே வந்த காட்டு பன்றி மீது மோதியதில் நிலைதடுமாறி விழுந்தார். பின்பு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு இறந்தார்.
கே.எம்.வாரியார்
வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சமையல் எரிவாயு விலை உயர்வுமத்திய அரசை கண்டித்து திமுக., மகளிரணி ஆர்ப்பாட்டம்
by mohan
written by mohan
சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்திய ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி திமுக., மகளிரணி சார்பில் ராமநாதபுரத்தில் இன்று (21.12.2020) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக., மகளிரணி மாநில துணை செயலரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், மண்டபம் ஒன்றிய பெருந்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, ஒன்றிய பெருந்தலைலர்கள். கே.டி.பிரபாகரன் (ஒன்றிய செயலாளர்) , முகமது முக்தார் (திருவாடானை) . ராதிகா பிரபு (ஆர்.எஸ்.மங்கலம்), தமிழ்ச்செல்வி போஸ் (கமுதி), சத்யா குணசேகரன் (போகலூர்), முதுகுளத்தூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் க.முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகர், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் மலைக்கண்ணு, ராமநாதபுரம் ஒன்றிய துணை செயலாளர் வி.சி கே.புகழேந்தி, மாநில வர்த்தக அணி துணை செயலர் முகவை கிருபானந்தம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, துணை அமைப்பாளர் கே.சம்பத் ராஜா, மண்டபம் பேரூர் செயலாளர் டி.ராஜா, மண்டபம் ஒன்றிய முன்னாள் செயலாளர் வி.சி.கனகராஜன், பெருநாழி போஸ், ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் உறுப்பினர் போஸ், மண்டபம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கலைமதி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மகளிரணி மாவட்ட செயலர் கற்பகம் நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புரெவி புயலால் பாதித்த மீனவ குடும்பங்களுக்கு நீதிபதி நிவாரண பொருட்கள் விநியோகம்
by mohan
written by mohan
வங்க கடலில் டிச.2ல் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புரெவி புயலாக மாறியது. பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதன் எதிரொலியாக தனுஷ்கோடி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கடற்கரை கிராமங்களில் வசித்த மீனவர்கள் தாழ்வான பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.வாழ்வாதாரம் பெரிதும் பாதித்த மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தியது. புயலால் பாதித்த மீனவர்களுக்கு 25 கிலோ அரிசி மூடை , 19 தொகுப்புகள் அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டது.இதன்படி தனுஷ்கோடி கம்பிபாடு, பழைய தனுஷ்கோடி, பாலம் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். சண்முகசுந்தரம் நிவாரண பொருட்களை வழங்கினார். பாம்பன் பகுதியில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட தோப்புக்காடு, முந்தல்முனை பகுதியில் வாழும் மீனவ மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடியைச்சேர்ந்த 36 மீனவர்கள், 5 படகுளை இலங்கை கடற்படை கடந்த 14 ஆம் தேதி சிறைபிடித்து சென்றது. இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 7 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோட்டைபட்டினம் மீனவர்கள் 4 பேரை ஒரு படகுடன் இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது.தமிழக மீதான இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், கச்சதீவு பகுதியில் சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், இலங்கையில் மூழ்கிய தமிழக படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமகிருஷ்ணகுடில் சுவாமி பிரணவானந்தா தலைமை வகித்தார். தமிழ்நாடு மீனவர் சங்க மாநிலச் செயலர் என்.ஜே.போஸ், ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் என்.தேவதாஸ், செயலர் சேசுராஜ், மீனவன் மீனவர் சங்க தலைவர் எமரிட், மீனவர் சங்கத் தலைவர் மகத்துவம், பொறுப்பாளர் சகாயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கை தலைமன்னாரைச் சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான் 36. இவர், இலங்கை போரின்போது அகதியாக தமிழகம் வந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி, பெயின்டிங் வேலை செய்தார். சிவபிரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் முஜிபுர் ரஹ்மான் 2019 டிச.26 ல் மண்டபம் முகாமில் இருந்து மர்மப் படகில் இலங்கைக்கு சட்ட விரோதமாக சென்றார். இதனையடுத்து, இலங்கையில் இருந்து ரூ.60 ஆயிரம் கொடுத்து மர்மப்படகு மூலம் தனுஷ்கோடி வந்தார். மண்டபம் அகதி முகாமில் இருந்து இலங்கை சென்று விட்டு தமிழகத்திற்கு மீண்டும் வந்த முஜிபுர் ரஹ்மானிடம் புலனாய்வு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இலங்கை மன்னாரில் இருந்து முஜிபுர் ரகுமானை தனுஷ்கோடிக்கு சட்ட விரோதமாக அழைத்து வந்த படகு ஓட்டியை இலங்கை கடற்படையினர் தலைமன்னாரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வியப்பூட்டும் கணிதத்தின் அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்த, தமிழக கணித அறிஞர் சீனிவாச இராமானுஜன் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 22, 1887). – தேசிய கணித தினம்.
by mohan
written by mohan
சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan) டிசம்பர் 22, 1887ல் கும்பகோணம் சாரங்கபாணி தெருவில் வாழ்ந்த சீனிவாசனுக்கும் கோமளத்திற்கும், ஈரோட்டில் பிறந்தார். இவர் பெற்றோருக்கு இவருக்குப் பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்துபோயினர். இராமானுஜன் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார். இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார். இராமானுஜம் தாய்வழி தாத்தா வேலைபார்த்த கடை 1891 ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்திற்கு இடம்மாறியதால், இவர் குடும்பமும் காஞ்சிபுரம் வந்தது. 1892ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் இராமானுசன் தொடக்கக் கல்வியைப் பெறத் தொடங்கினார். 1894ம் ஆண்டில் அவர் தெலுங்கு வழி கல்விக்கு மாற்றப்பட்ட சில நாள்களிலேயே அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார்.
பத்து வயதிற்குள்ளேயே இச்சிறுவனுடைய கணித வல்லமையும் நினைவாற்றலும் ஆசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. ஆரம்பப் பள்ளியின் கடைசித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் தேறியதால் அவனுக்கு கும்பகோணம் டவுன் மேல்நிலைப் பள்ளியில் அரைச்சம்பளக் கல்விச் சலுகை கிடைத்தது. 1897ம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார். 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல்(Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினான். தன்னைவிட 7, 8 வயது சிறியவனான இப்பள்ளி மாணவன் இக்கல்லூரிப் பாடபுத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல், அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டான் என்றதும் அந்தக் கல்லூரி மாணவனுக்கு ஒரே வியப்பு. முக்கோணவியல் என்ற பெயர் இருந்தாலும் அப்புத்தகத்தில் சில உயர் கணித விஷயங்கள், உதாரணமாக, பகுவியலில்(Analysis) கூறப்படும் தொடர் வினை(Continuous processes) களைப் பற்றிய விஷயங்கள், அடுக்குக்குறிச் சார்பு(exponential function), கலப்பு மாறியின் மடக்கை(logarithm of a complex variable), மிகைபரவளைவுச் சார்புகள் (hyperbolic functions) முடிவிலாத் தொடர்கள் மற்றும் பெருக்கீடுகள் (infinite series and products) இதைப்போன்ற கணிதத்தின் உயர்தரப் பொருள்களெல்லாம் பாடத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தன.
தூய கணிதத்தின் அடிமட்டத் தேற்றத் தொகை என்று பெயர்கொண்ட அந்தப்புத்தகம், சிறுவன் இராமானுஜனுடைய வாழ்க்கையில் வந்ததால் தனக்கென்று வரலாற்றில் ஒரு அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டது. அப்புத்தகத்தின் உட்பொருள் அவனை அப்படியே ஈர்த்து, அவனுடைய சக்திகளெல்லாவற்றையும் உசுப்பி விட்டது . அப்படியொன்றும் அது பெரிய நூலோ அல்லது பொருள் பொதிந்ததோ அல்ல. அதில் ஏறக்குறைய 6000 தேற்றங்கள் இருந்தன. பாதிக்கு சரியான நிறுவல்கள் இல்லை. இருந்தவையும் நிறைவற்றதாகவே இருந்தது. இராமானுஜனுக்கு இதெல்லாம் ஒரு தவிர்க்கமுடியாத, எனினும் சுவையான, சவாலாக அமைந்தன. அதிலிருந்த ஒவ்வொரு தேற்றத்திற்கும் சிறுவன் தன் மூளையில் தோன்றிய நிறுவல்களை ஒரு குறிப்பேட்டில் எழுதி வந்தான். இவ்வாய்வில் அவனுக்கே புதிய தேற்றங்களும் தோன்றத் தொடங்கின. எல்லாவற்றையும் எழுதினான். இப்படியே 16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து விட்டான். ஆனால் அவனை உலகம் கணித இயலராகப் பார்க்க இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டன.
இதைவிட ஒரு தரமான புத்தகம் அவன் கையில் கிடைக்காதது விதியின் விளையாட்டு போலும். விட்டேகருடைய ‘தற்காலப்பகுவியல்’ (Modern Analysis) உலகத்தில் அப்பொழுதுதான் வந்துவிட்டிருந்தது ஆனால் கும்பகோணம் வரையில் வரவில்லை. பிராம்விச்சுடைய முடிவிலாத்தொடர்கள் (Infinite Series), கார்ஸ்லா வுடைய ஃபோரியர் தொடரும் தொகையீடுகளும்(Fourier Series and Integrals), பியர்பாயிண்டுடைய மெய்மாறிச் சார்புகளின் கோட்பாடு(Theory of functions of a real variable), ஜிப்ஸனுடைய நுண்கணிதம்(Calculus) ஆகியவைகள் அப்பொழுதுதான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவையெல்லாம் இராமானுஜனுக்குக் கிடைத்திருந்தால் கணித உலகின் வரலாறே மாறியிருக்குமா இருக்காதா என்பதில் இன்றும் கணித இயலர்களுக் கிடையில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. கணிதக் குறியீடுகளின் புகுந்து திறம்பட வினையாற்றி வெளியே வெற்றியுடன் வரக்கூடிய கணித இயலாளரைக் கணக்கியலர் (algorist) என்பர். முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். கணக்கியலருக்கு புதுப்புதுக் கணிதச் சிக்கல்களை கணக்கிட்டு விடுவிப்பதே இயல்பு. அவர் கையாளும் உத்திகள் முன்பின் வழக்கமில்லாததாக இருக்கும்.
வெறும் மாறிகளிருக்குமிடத்தில் சார்புகளைப் பொறுத்தி சிக்கலை இன்னும் கடினமாக்குவது போல் தோன்றும் அளவுக்கு பெரிதாக்கி, அரிய மேதைகளெல்லாம் செய்யமுடியாததை செய்து முடிப்பர். தூய கணிதம் கட்டாயமாக வேண்டும் ஒருங்கல்(convergence), இருப்பு(existence), முதலிய கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களுடைய உள்ளுணர்வின் போக்கிலேயே வானத்தில் பறந்து பிரச்சினையின் இருண்ட பாகங்களுக்கு சரியானபடி வெளிச்சம் தெரியச் செய்துவிடுவர். சில சமயம் தவறுதலான விடைக்கே சென்றிருந்தாலும் அவர் காட்டிய வெளிச்சம் இதர கணித இயலருக்கு புதுப் பாதைகளை வகுத்து கணித முன்னேற்றத்திற்கு முன்னோடியாகி விடும், விந்தையையும் வரலாறு சொல்லும். இப்படியெல்லாம் இருந்தவர் தான் இந்திய மேதைக் கணக்கியலர் சீனிவாச இராமானுஜன். மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி. ஆனால் இவ்விருவருக்கும் கல்லூரிப் படிப்பின் முழு வலுவும் ஆழமான அடித்தளமாக இருந்தது. இராமானுஜனுக்கோ முறையான கல்லூரிப் படிப்பிற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எவரும் அவரை திருத்திக் கற்பிக்கும் முன்னமேயே அவர் ஒரு பெரிய கணித வல்லுனர் ஆகிவிட்டார். ஆய்லருடனோ அல்லது ஜாகோபியுடனோ, ஏன் எந்தக் கணித வல்லுனருடனோ அவரை ஒப்பிட்டாலும் அவரை ‘படிக்காதவர்’ என்றே கூறவேண்டும். தன்னால், தானே கற்பித்துக் கொண்ட மேதை அவர்.
18, 19வது நூற்றாண்டுகளில் அடுக்கு அடுக்காக உலகை மேவிய கணிதம் யாவும் அவர் வழியில் தட்டுப்படாமலே அவரால் உலகிலுள்ள அத்தனை கணித இயலர்களுக்கும் புதிதாகச் சொல்வதற்கு எவ்வளவோ இருந்தது. இருபதாவது நூற்றாண்டில் ஒரு விண்மீன் போல் அவர் திடீரென்று தோன்றியதும், உலகில் அப்பொழுது மேன்மையானதென்றுப் பெயர் பெற்றிருந்த பல பல்கலைக் கழகங்களில் முறைப்படி அவருடைய ஆராய்ச்சிக் கருத்துக்கள் அரங்கேறியதும் ஒரு சுவையான பரபரப்புக் கணித வரலாறு. குறிப்பாக அது இந்திய தேசத்திற்குச் சிறந்த பெருமையைத் தந்தது. 1903 டிசம்பரில் சென்னைப் பல்கலையின் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் காரணமாக கும்பகோணம் அரசுக் கல்லூரியில் F.A. (இந்தக்காலத்து 11, 12 வது) வகுப்பிற்கு ‘சுப்பிரமணியம் உபகாரச்சம்பளம்’ பெற்றான். அவன் கற்க வேண்டியிருந்த பாடங்கள் ஆங்கிலம், கணிதம், உடற்செயலியல், ரோமானிய கிரேக்க வரலாறு, மற்றும் வடமொழி. ஆனால் கணிதம் தான் அவனுடைய காலத்தையும் சக்தியையும் விழுங்கிக்கொண்டது.
கணிதம் தவிர மீத மெல்லாவற்றிலும் தேர்வில் தோல்வியே கண்டான். உபகாரச் சம்பளத்தை இழந்தான். கும்பகோணத்தை விட்டு எங்கோ ஆந்திர மண்ணில் தன்னை இழந்து சுற்றித் திரிந்தான். ஓராண்டு காலம் கழித்துத் திரும்பி கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கே வந்து சேர்ந்தான். ஆனால் 1905 டிசம்பர் தேர்வுக்கு வேண்டியிருந்த உள்ளமைச் சான்று (attendance certificate) கிடைக்காததால் தேர்வு எழுத முடியவில்லை. கும்பகோணம் கல்லூரியும் அத்துடன் அவனை இழந்தது. பின்னர் இவர் பச்சையப்பா கல்லூரியிலும் கல்வி கற்றார். இங்கு எஸ்.பி.சிங்காரவேலு முதலியாரிடம் கணிதம் கற்றார். இருவரும் சேர்ந்து விவாதித்து விடை காண்பார்கள். எஸ்.பி.சிங்காரவேலு முதலியார் சுவாமி விவேகானந்தரின் சென்னை சீடர்களில் ஒருவர். இவரை ’கிடி’ என்று செல்லமாக அழைப்பது சுவாமி விவேகானந்தரின் வழக்கம். இன்றும் சென்னை பச்சையப்பா கல்லூரியில் கணிதத்தில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ’எஸ்.பி.சிங்காரவேலு முதலியார்’ பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
மோசமான உடல்நிலை காரணமாக கும்பகோணம் திரும்ப வேண்டியிருந்தபோது, தனது நோட்டு புத்தகங்களை தன் வகுப்புத் தோழரிடம் கொடுத்து, ஒருவேளை தான் இறந்து விட்டால், சிங்காரவேலு முதலியார் அல்லது எட்வர்டு பி.ரோஸ் (Edward B. Ross) அல்லது மெட்ராஸ் கிரிஸ்டியன் காலேஜுக்கு கொடுத்துவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவனுடைய ‘நோட்புக்குகள்’ அவனை இழக்கவில்லை. சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் நூலகத் தலைவராக இருந்த பேராசிரியர் எஸ். ஆர்.ரங்கனாதன் எழுதியது “உள்ளிருந்து அவனை ஒரு ஜோதி ஊக்குவித்த வண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவனுக்கு தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. F.A.தேர்வு கூட தேறமுடிய வில்லையே என்ற ஏக்கம் அவனுடைய கணித ஊக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேலையில்லாமல் வளய வருவதும் அவனுடைய ஆய்வுகளின் தரத்தையோ அளவுகளையோ குறைக்கவில்லை. சூழ்நிலை, பொருளாதாரம், சமூக கௌரவம் ஒன்றும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை.
இராமானுஜம் மனதிலும் கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச்சதுரங்கள்(Magic Squares), தொடர் பின்னம்(Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள்(Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள்(Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர்(hypergeometric series), இவையும், மற்றும் இவையொத்த மற்ற உயர்தர கணிதப்பொருள்கள் தாம். இவைகளைப் பற்றிய அவனுடைய கண்டுபிடிப்புகளை யெல்லாம் தன்னுடைய மூன்று நோட்புக்குகளில் எழுதினான். நிறுவல்கள் அநேகமாக எழுதப்படவில்லை. தற்காலத்தில் இந்த நோட்புக்குகளின் நகல்கள் (212, 352, 33 பக்கங்கள் கொண்டவை) டாடா அடிப்படை ஆய்வுக் கழகம், சென்னைப்பல்கலைக் கழகம், ஸர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. 1985லிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் கணித உலகிற்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் சொல்கிறார் ப்ரூஸ் பர்ண்ட்.
சீனிவாச இராமானுஜன் தனது 22வது வயதில் ஒன்பதே வயது நிரம்பியிருந்த ஜானகியைக் கைப்பிடித்தார். 1910ல் இந்தியக்கணிதக் கழகத்தைப்பற்றி கேள்விப்பட்டார். இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான் இக்கழகம் இணை ஆட்சியராக இருந்த பேராசிரியர் வி. ராமஸ்வாமி அய்யர் என்பவரால் துவக்கப்பட்டிருந்தது. இராமானுஜன் அவரது உதவியை நாடி திருக்கோவிலூருக்கு ஓடினார். 1911ல் இந்தியக்கணிதக் கழகத்தின் ஆய்வுப் பத்திரிகையில் (Journal) இராமானுஜனின் முதல் ஆய்வுக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. இதற்குள்ளாக, சென்னை துறைமுக அலுவலகத்தின் தலைவரான ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் என்பவரும் இராமானுஜத்தைப் பற்றி கேள்விப்பட்டு அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். துறைமுக அலுவலகத்தில் ஓர் எழுத்தர் கணிதத்தில் சாதனைகள் புரிந்து வருகிறார் என்ற செய்தி பரவலாக சென்னை கல்விக் கூடங்களில் பேசப்படத் துவங்கியது. மே 1, 1913 முதல் இராமானுஜன் சென்னை பல்கலைக் கழகத்தில் மாதம் ரூ.75 சம்பளத்துடன் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். அன்று தொடங்கி அவருடைய குறுகிய ஆயுள் முடிய அவருக்கு இந்த ஆராய்ச்சி தான் தொழில்.
கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914–1918) இராமானுஜனுக்கு மட்டுமல்ல பேராசிரியர் ஹார்டிக்குமே பொன்னான ஆண்டுகள் தாம். இதை ஹார்டியே சொல்கிறார். பிற்காலத்தில், இராமானுஜன் யாருமே எதிர்பார்க்காத 32 வயதிலேயே மரணமடைந்த பிறகு ஹார்டி அவரைப் பற்றி சொல்லும்போது ‘இங்கு வருவதற்கு முன்னால் அவர் என்ன புத்தகம் படித்திருந்தார். இன்னின்ன புத்தகங்களைப் பார்த்திருந்தாரா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. நான் கேட்டிருந்தால் ஒருவேளை சொல்லியிருப்பாரோ என்னமோ. ஆனால் ஒவ்வொருநாள் நான் அவருக்கு காலை வணக்கம் சொல்லும்போதும் அவர் எனக்கு ஐந்தாறு புதுத் தேற்றங்களை காட்ட ஆயத்தமாயிருந்ததால் எனக்கு வேறு எதையுமே பேச வாய்ப்புமில்லை.
1918ல் F.R.S. (Fellow of the royal Society) என்ற கௌரவம் அவருக்குக்கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு ட்ரினிடி கல்லூரியின் ஃபெல்லோவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு கௌரவங்களையுமே பெற்ற முதல் இந்தியர் அவர்தான். இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்த, தமிழக கணித அறிஞர் சீனிவாச இராமானுஜன் ஏப்ரல் 26,1920ல் தனது 32வது அகவையில் சென்னையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இராமானுசன் அவர்கள் பெயரால் 1997ல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமைச்சர் செல்லூர் ராஜூவை பதவி நீக்கம் செய்ய கோரி யாதவ மகா சபை ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை அருகே மினி கிளினிக் திறப்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு யாதவ சமுதாய மக்களின் அறிவு திறன் குறித்து தவறாக பேசினார்.
அமைச்சரின் பேச்சிற்கு யாதவ சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைதொடர்ந்து தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன். இன்று (21.12.2020) ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூவை பதவியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்க வேன்டும் என கோஷமிட்டனர். யாதவ மகா சபை நிர்வாகி ராமு, யாதவ மகா சபை சட்ட ஆலோசகர் அன்பு செழியன், மண்டபம் ஒன்றிய அதிமுக., முன்னாள் செயலர் லோகநாதன், ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் முனியசாமி, மாவட்ட கவுன்சிலர் கவிதா (கதிரேசன்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்பு செழியன் கூறியதாவது: யாதவ சமுதாய மக்களை தவறாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, யாதவ சமுதாய தலைவர்கள் முன்னிலையில் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம், ஆர்எஸ் மங்கலத்தில் இயங்கி வரும் அரசினர் கால்நடை மருத்துவமனையில் முன்பாக முறையாக சாலை வசதி இல்லாததால் மழை நேரங்களில் நீர் தேங்கி சேறும் சகதியுமாக சாக்கடை குளம் போல் காட்சி அளிக்கிறது.கால்நடை மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கிறது.எனவே ஆர்.எஸ். மங்கலத்தில் இயங்கிவரும் அரசினர் கால்நடை மருத்துவமனை வளாகத்தின் முன்பாக சாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.