32
இராமநாதபுரம் மாவட்டம், ஆர்எஸ் மங்கலத்தில் இயங்கி வரும் அரசினர் கால்நடை மருத்துவமனையில் முன்பாக முறையாக சாலை வசதி இல்லாததால் மழை நேரங்களில் நீர் தேங்கி சேறும் சகதியுமாக சாக்கடை குளம் போல் காட்சி அளிக்கிறது.கால்நடை மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கிறது.எனவே ஆர்.எஸ். மங்கலத்தில் இயங்கிவரும் அரசினர் கால்நடை மருத்துவமனை வளாகத்தின் முன்பாக சாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.