Home செய்திகள் மதுரையில் தீபாவளி அன்று ஏற்பட்ட தீவிபத்தின் போது மீட்பு பணியில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை.

மதுரையில் தீபாவளி அன்று ஏற்பட்ட தீவிபத்தின் போது மீட்பு பணியில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை.

by mohan

மதுரையில் தீபாவளியன்று தனியார் ஜவுளிகடையில் ஏற்பட்ட தீ விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த தீயணைப்பு வீரர் சிவராஜ் என்பவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சிவராஜின் மனைவி அங்கையற்கண்ணி (29) கணவர் இறப்பிற்கு பிறகும் பாறைப்பட்டியில் உள்ள தனது கனவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் சிவராஜ் மறைவிற்கு தமிழக அரசு சார்பாக 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்திருந்தனர். அந்த பணத்தை பிரிப்பதில் அங்கையற்கண்ணிக்கும் அவரது மாமனார் வீட்டிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கையர்க்கன்னி மதுரை கீழகுயில்குடி அருகேயுள்ள சீனிவாசா காலனியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு தனது இரு குழந்தைகளுடன் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து கணவன் இறப்பு மற்றும் பணம் குறித்த விவகாரம் உள்ளிட்ட மனஉளைச்சலில் கடந்த இரு தினங்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அங்கையர் கன்னி  காலை 11 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த அங்கையற்கண்ணி தூக்கிட்டுள்ளார்.சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கையர்கன்னியை மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் அங்கயற்கண்ணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பணியில் உயிரிழந்தவர் குடும்பத்தில் உள்ள வர்களுக்கு வேலைகான பணி ஆணை இன்னும் சில தினங்களில் அங்கையர்கன்னிக்கு கிடைக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com