பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணியை உறுதிப்படுத்துவதில் பா.ஜ.க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு முயற்சித்தனர். ஆனால் அ.தி.மு.க. ஏற்கவில்லை. இதனால் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம், புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. இதில் பா.ம.க., தே.மு.தி.க.வை தவிர மற்ற கட்சிகள் பா.ஜ.க கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டன.பா.ம.க.வையும், தே.மு.தி.க.வையும் இழுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வந்தது. அ.தி.மு.க.வுடனும் பேசிக் கொண்டிருப்பதால் இரு கட்சிகளும் எந்த அணியில் சேருவது என்று முடிவெடுக்கப்படாமல் இருந்தது.கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர்கள் கிஷன்ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் சென்னை வந்தனர். கிண்டி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் அவர்களை டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது கூட்டணியை உறுதி செய்து உள்ளார். பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வுடன் பேசிய பிறகு தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்ய திட்டமிட்டிருந்தனர்.இந்நிலையில், பாஜகவுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூட்டணி அமைக்க பாமக முடிவு செய்துள்ளது.அதன்படி, மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து பா.ம.க சந்திக்கிறது. இதனை, பாமக மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் உறுதி செய்தார்.மேலும், நாளை ஒப்பந்தம் ஆன பிறகு தொகுதிகள் குறித்து அறிவிப்போம் என்றும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ராமதாஸ் நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
Category:
மாநில செய்திகள்
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர்கள் தேர்வு..
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் முத்தலைவர்கள் தேர்வு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆலமரம் வட்டாரத் தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். செயலாளர் சசி ஞானசேகரன், முன்னாள் செயலாளர் R.கலைச்செல்வன் மற்றும் உறுப்பினர் R.அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் பொன் அறிவழகன் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஆசிரியர் P. திருமலைக் கொழுந்து, T. சுரேஷ், R. பாண்டியராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 2024-2025 ஆண்டின் புதிய தலைவராக K . ஆனந்த், செயலாளராக K.P தங்கராஜ், பொருளாளராக S.ஜேக்கப் சுமன் ஆகியோரை அரிமா சங்க நிர்வாகி முனைவர் த. அருணாச்சலம் தேர்வு செய்தார். பொருளாளர் Dr K.S. சினேகா பாரதி நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்களவைத் தேர்தல் 2024: திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் களமிறங்கும் தொகுதிகள்..!
by Askar
written by Askar
மக்களவைத் தேர்தல் 2024: திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் களமிறங்கும் தொகுதிகள்..!
திமுக!
- சென்னை வடக்கு
சென்னை தெற்கு
மத்திய சென்னை
காஞ்சிபுரம் ( தனி)
அரக்கோணம்
வேலூர்
தருமபுரி
திருவண்ணாமலை
சேலம்
கள்ளக்குறிச்சி
நீலகிரி (தனி)
பொள்ளாச்சி
கோவை
தஞ்சாவூர்
தூத்துக்குடி
தென்காசி (தனி)
ஸ்ரீபெரம்புதூர்
பெரம்பலூர்
தேனி
ஈரோடு
ஆரணி
- காங்கிரஸ்!
- திருவள்ளூர் (தனி)
கடலூர்
மயிலாடுதுறை
சிவகங்கை
திருநெல்வேலி
கிருஷ்ணகிரி
கரூர்
விருதுநகர்
கன்னியாகுமரி
புதுச்சேரி
- சிதம்பரம் (விசிக)
விழுப்புரம் (விசிக)
- மதுரை (சிபிஎம்)
- திண்டுக்கல் (சிபிஎம்)
- திருப்பூர் (சிபிஐ)
நாகப்பட்டினம் (சிபிஐ)
- நாமக்கல் (கொமதேக)
- திருச்சி (மதிமுக)
- ராமநாதபுரம் (ஐயூஎம்எல்)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -18
(கி.பி 1299-1922)
உஸ்மானிய பேரரசர் பயாசித் சிற்றரசுகளை வெற்றி கொள்ளும்போது
அதன் படைப்பிரிவுகளையும்
தனது படைப்பிரிவுகளோடு
இணைத்து இருந்தார்.
சிற்றரசுகளின் படைவீரர்களுக்கு
சம்பளங்கள் கிடைத்ததால், உஸ்மானிய படையில் பணிபுரிந்தனர்.
தைமூரின் படையோடு இணைந்திருந்த சிற்றரசர்கள், தைமூரின் படையில் முன் அணியில் வந்தபோது,
அதனை கண்ட பயாசித்தின்
படையில் இணைந்திருந்த
சிற்றரசுகளின் வீரர்கள் தங்கள் மன்னர்கள் மீது உள்ள பிரியத்தால் பிரிந்து சென்று தங்கள் மன்னர்களோடு சேர்ந்து தைமூரின் படையோடு இணைந்து கொண்டனர்.
இந்நிகழ்வு போரில் உஸ்மானிய பேரரசர் பயாசித்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
தைமூரின் படையில் வீரர்களின் எண்ணிக்கை இதனால் திடீரென கூடியது.பயாசித்தின்
படையில் வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.
முதல்நாள் போர் முடிந்து இரவில் போர் நிறுத்தப்பட்டது.
மன்னர் பயாசித்தின் கூடாரத்தில் மன்னர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பயாசித்தின் படைவீரர்களின் எண்ணிக்கை (70,000 )
எழுபதாயிரமாக குறைந்தது.
ஆகவே அமைச்சர்களும்
தளபதிகளும் பின்னடைந்து தலைநகர் சென்று விடுவோம்.
பிறகு இன்னும் படைகளை திரட்டி வலுவாக்கிக்
கொண்டு மீண்டும் தைமூரோடு மோதுவோம் என்று ஆலோசனை வழங்கினார்கள்.
அதுவரை பின்னடைவயோ,
தோல்விகளையோ
சந்திக்காத உஸ்மானிய பேரரசு முதல் முறையாக பின்னடைவை சந்தித்தது.
ஆகவே மன்னர் பயாசித் பின்னடைந்து தலைநகர் செல்வதை ஒப்புக்
கொள்ளவில்லை.
இறுதிவரை போராடுவோம் என்று சூளுரைத்தார்.
போரின் நடுவில், பயாசித்தை தைமூரின் வீரர்கள் சூழ்ந்து கொண்டனர்.
பயாசித் அவர்களின் மெய்க்காவல் படைகளை கொன்று குவித்து இறுதியில் பயாசித்தை கைது செய்து கைகளில்
விலங்கு பூட்டி தைமூரிடம் அழைத்து சென்றனர்.
உஸ்மானிய படைகள் தோல்வியைத் தழுவியது.
மிகப்பெரிய வீரர்களின் இழப்புகளும் ஏற்பட்டது.
பயாசித்தை கண்ட தைமூர் கைவிலங்கு களை கழற்றி அவரை சுதந்திரமாக இருக்க உத்தரவிட்டார்.
பயாசித்திற்கு நல்ல உணவுகளும்,
உடைகளும் வழங்க தைமூர் உத்தரவிட்டார்.
நன்றாக ஓய்வு கொடுத்து அடுத்த நாள் தனது அவைக்கு மன்னர் பயாசித்தை அழைத்து
வரச்செய்தார்.
மன்னர் பயாசித்தை
தைமூர் தானே முன்வந்து கைலாகு கொடுத்து ஆரத்தழுவினார்.
தைமூரின் படை வீரர்களுக்கு இந்நிகழ்வு ஆச்சரியமாக இருந்தது.
அடுத்து தைமூர் இட்ட ஒரு உத்தரவு அங்கிருந்த அனைவரையும்
ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்து சென்றது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் திங்கட்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவிப்பு..
by Askar
written by Askar
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.
கோவை மாநகருக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு 18.03.24 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
கனரக வாகனங்கள்.. காலை 6 மணி முதல் மற்றும் 19ம் தேதி காலை 11 மணி வரை இரண்டு நாட்கள் நகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை.
அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு. காந்திபுரம் செல்லும் வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவு, காளப்பட்டி நால் ரோடு, சரவணம்பட்டி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு செல்பவர்கள் எல் அண்ட் டி பைபாஸ், சிந்தாமணி புதூர், சிங்காநல்லூர் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அவினாசி சாலை SNR சந்திப்பு வழியாக 100 அடி ரோடு மேம்பாலம், சிவானந்தா காலனி மேட்டுப்பாளையம் சாலை, டி.பி ரோடு. புரூக் பீல்ட்ஸ் ரோடு, அவினாசி ரோடு பழைய மேம்பாலம் ஆகிய பகுதிகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
19ம் தேதி காலை 7 மணி முதல் 11 மணி வரை அவிநாசி சாலையை அனைத்து வாகன ஓட்டிகளும் தவிரக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
திருச்சி சாலையிலிருந்து சத்தியமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்பவர்கள் இராமநாதபுரம் சந்திப்பு, லட்சுமி மில், மகளிர் பாலிடெக்னிக் சந்திப்பு, ஆவாரம்பாளைம் ரோடு, கணபதி வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
ஹோப் காலேஜ், பீளமேடு மற்றும் எஸ்.என். ஆர் ஆகிய பகுதிகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருச்சி சாலையிலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு செல்பவர்கள் வழக்கமான பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சத்தி சாலையிலிருந்து கணபதி, காந்திபுரம் வழியாக அவிநாசி ரோடு செல்பவர்கள் சரவணம்பட்டி சோதனை சாவடியிலிருந்து இடது புறம் திரும்பி காளப்பட்டி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
சத்தி சாலையிலிருந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்பவர்கள் கணபதி, ஆவாரம்பாளையம் மேம்பாலம், மகளிர் பாலிடெக்னிக், லட்சுமி மில் சந்திப்பு, கிட்னி சென்டர் மற்றும் இராமநாதபுரம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் துடியலூர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சரவணம்பட்டி வழியாகவோ அல்லது GN Mill மேம்பாலத்தின் கீழே வலது புறம் திரும்பி KNG புதூர் வழியாகவோ அல்லது கவுண்டம்பாளையம் மேம்பாலத்தின் கீழே வலது புறம் திரும்பி இடையர்பாளையம் வழியாகவோ நகருக்குள் செல்லலாம்.
மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் அனைத்தும், மேட்டுப் பாளையம் சாலை சங்கனூர் பிரிவு சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கண்ணப்ப நகர் வழியாக கணபதியை அடைந்து காந்திபுரம் செல்ல வேண்டும்.
காந்திபுரத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் சத்தி ரோடு. கணபதி, சூரியா மருத்துவமனை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மணியகாரம்பாளையம் வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்லலாம்.
மருதமலை வடவள்ளி பகுதியிலிருந்து வரும் நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் லாலி ரோடு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி காந்திபார்க், தெலுங்குவீதி, ராஜவீதியை அடைந்து நகருக்குள் செல்லலாம்.
மருதமலை வடவள்ளி பகுதியிலிருந்து மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் லாலிரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி GCT சந்திப்பு, கோவில் மேடு, தடாகம் ரோடு இடையர்பாளையம் சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
உக்கடம் பகுதியிலிருந்து ஒப்பணக்காரவீதி, பூமார்க்கெட், சிந்தாமணி, டி,பி ரோடு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி. பேரூர் புறவழிச்சாலை, செல்வபுரம் உயர்நிலைப்பள்ளி, சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு சொக்கம்புதூர் வழியாகவோ அல்லது செட்டிவீதி, சலீவன் வீதி, காந்திபார்க் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி லாலிரோடு சந்திப்பு, GCT சந்திப்பு, கோவில் மேடு, தடாகம் ரோடு இடையர்பாளையம் சந்திப்பு வழியாகவோ செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு கொடுத்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கேற்றவாறு தங்களது பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், ஆவணமின்றி கையில் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்..?
by Askar
written by Askar
தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், ஆவணமின்றி கையில் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்..?
நாடளுமன்ற தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் எவ்வளவு பணம் கையில் எடுத்து செல்லலாம் என பலரும் குழம்பி உள்ளனர். இனி குழப்பம் வேண்டாம். அதாவது நடத்தை விதி அமலில் இருந்தாலும் கூட பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்குள்ளான ரொக்கப்பணத்தை தாராளமாக எடுத்து செல்லாம். பறக்கும்படையினர் மறித்தால் பணத்துக்கான உரிய காரணத்தை கூறிவிட்டு செல்லலாம்.
மாறாக ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை கையிலோ, பைக், காரிலோ எடுத்த செல்லும்போது பறக்கும்படையினர், போலீசார் தடுத்து நிறுத்தினால் அதற்கான உரிய ஆவணங்களை கட்டாயம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்த கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். மேலும் ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுபற்றி உடனடியாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இப்படி பணம் பறிமுதல் செய்யப்படும்போது பணத்துக்கான உரிய ஆவணத்தை வீடு, அலுவலகங்களுக்கு சென்று எடுத்து வந்து காண்பிக்கலாம். அது சரியான ஆவணமாக இருக்கும்பட்சத்தில் உங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மீண்டும் ஒப்படைக்கப்படும். இல்லாவிட்டால் அந்த பண பறிமுதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஏப்ரல் 19, 26 ஆகிய தேர்தல் தேதிகள் வெள்ளிக்கிழமை வருவதால் அவைகளை மாற்ற வேண்டும்!-தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்..
by Askar
written by Askar
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதேப்போல் ஏப்ரல் 26ம் தேதி கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய தேதிகள் முஸ்லிம்கள் மஸ்ஜித்களில் கட்டாய கூட்டு பிரார்த்தனை செய்யும் ஜும்ஆ நாளான வெள்ளிக்கிழமையாகும். இதனால் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பூத் ஏஜெண்ட் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்களின் பணியும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
ஆகவே, ஒரு தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் முக்கிய பொறுப்பு என்பதால், அனைத்து தரப்பு மக்களும் எளிமையான முறையில் வாக்குகளை செலுத்தும் வகையில் முதல் கட்ட (ஏப்ரல் 19) மற்றும் இரண்டாம் கட்ட (ஏப்ரல் 26) தேர்தல் தேதிகளை மாற்றி அமைக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -17
( கி.பி 1299-1922)
உஸ்மானிய பேரரசர் பயாசித் தங்களது நாடுகளை அபகரித்துக்
கொண்டதாக முஸ்லீம் சிற்றரசர்கள்
தைமூரிடம் விண்ணப்பித்தார்கள்
தைமூர் தனது பிரமாண்டமான ஏழு லட்சம் வீரர்கள் கொண்ட படையுடன் பயாசித் மீது படை எடுத்தார்.
தைமூரின் படைகளோடு முஸ்லீம் சிற்றரசர்களும் படையோடு வந்தனர்.
துருக்கியை நோக்கி தைமூரின் படைகள் நகர தலைநகரிலிருந்து
தனது 3 1/2 லட்சம் வீரர்களுடன் பயாசித் படையை நடத்திவந்தார்.
தைமூரின் படை முகாமிட்டு இருந்த
இடத்திற்கு அரைமைல் தூரத்திற்கு முன்பே தனது படை முகாம்களை அமைக்க பயாசித் உத்தரவிட்டார்.
அன்றைய இரவு நிலவே இல்லாத கருமை சூழ்ந்து இருந்தது.
தனது கூடாரத்தின் அருகில் ஒரு உயரமான நான்கு கால் ஏணி போன்ற அமைப்பை ஏற்படுத்தி மன்னர் பயாசித் அவர்களே அதன் மீதுஏறி தனது பார்வையை நாலாபுறமும் சுழல விட்டார்.
கூடாரங்கள் பெரிதாக இல்லை.சில கூடாரங்களே இருந்தன.
வலது ஓரத்தில் நடுவே தைமூரின் பெரிய கொடியும், அடர்த்தியான படைப்பிரிவுகளுமாக
தெரிந்தது.
அங்கிருந்த சூழலில்
அது மன்னர் தைமூர் தங்கியிருந்த இடம் என்று பயாசித் யூகித்தார்.
இருப்பினும் மன்னர் படையின் நடுவில் இல்லாமல் வலது ஓரத்தில் கூடாரமும்,
எந்த ஆடம்பரங்களும்
இன்றி தங்கியிருந்தது பயாசித்திற்கு பெரும் ஆச்சரியம் அளித்தது.
வலது ஓரத்தில் இருந்த உயரமான விளக்குகளும்,
பரபரப்பாக பலர் வருவதில் இருந்தும்
அங்கு மன்னர் தைமூரே தங்கி இருக்கிறார் என்பது நிச்சயம் ஆனது.
உஸ்மானிய மன்னர் பயாசித் படையின் அளவை பார்த்து ஆறுலட்சம் வீரர்கள் இருக்கலாம் என எடை போட்டார்.
காலையில் தனது படைகள் எவ்வாறு போரிடவேண்டும் என்று மனதில் ஒரு போர்திட்டத்தை வரைந்தார்.
தனது தளபதிகளை அழைத்து நம்மைவிட தைமூரின் வீரர்கள் ஏறக்குறைய ஒரு மடங்கு அதிகமாக இருக்கிறார்கள்.
இருப்பினும் நாம் துரிதமாக போரிட்டு தைமூரை வளைத்துக்
கொண்டால், தைமூரின் படைகளை சரணடைய வைத்து விடலாம்.
ஆகவே படைகள் தைமூர் இருக்கும் வலது ஓரத்தை குறிவைத்தே மொத்தமாக
நகர்ந்து தைமூரை வளைத்துக்
கொள்ளலாம் என்ற திட்டத்தை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள்.
அதேபோல சற்று வலதுபுறமாக திரும்பி
உஸ்மானிய முழுப்படையும் ஒரே வேகத்தில் முன்னேறியது.
மன்னர் பயாசித் முதல் வரிசையிலேயே
முன்னேறி சென்றார்.
அவரைச் சுற்றி அவரின் மெய்க்காவல் படை வீரர்கள் ஆயிரம் பேர்
மன்னரை நாலு புறங்களிலும் பாதுகாப்பாக சூழ்ந்து வந்தனர்.
உஸ்மானிய பயாசித்தின் படைகள்
ஒட்டுமொத்தமாக ஒருபுறம் முன்னேறியதால் தைமூரை காணும் தூரத்தில் பயாசித் முன்னேறிவிட்டார்.
அப்போது நடந்த சில நிகழ்வுகள் வரலாற்றை தலைகீழாக மாற்றி விட்டது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெட்ரோல்,டீசல் விலை அதிரடியாக ரூ.15.30 குறைப்பு! ஆச்சரியத்தில் வாகன ஓட்டிகள்..
by Askar
written by Askar
அட இங்கே இல்லைங்க!
லட்சத்தீவுகளில் பெட்ரோல், டீசல் விலை ரூ15.30 குறைப்பு..
லட்சத்தீவுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.15.3 வரை குறைக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைத்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசு கடந்த 14ம் தேதி அறிவித்தது.
இந்நிலையில் தற்போது லட்சத்தீவுகளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.15.30 குறைத்து அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
CAA வை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆலந்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..
by Askar
written by Askar
CAA வை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆலந்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் சார்பாக ஆலந்தூரில் மக்களை மத ரீதியாக பிளவு படுத்தும் வகையில் அமல்படுத்த பட்ட CAA வை கண்டித்தும் பாஜக ஒன்றிய அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முஹம்மது யூசுப் தலைமையில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு துவங்கி நடைபெற்றது.
இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர் முஹம்மது சித்திக் பேசும்போது,
“CAA வை வைத்து இஸ்லாமிய ஒரு போதும் மிரட்ட முடியாது, இந்த சட்டம் சிறுபான்மை சமூகத்தை விட மற்ற சமூகங்களுக்கு தான் மிக பெரிய அளவில் பாதிப்பு உண்டாக்கும், பாஜக ஒன்றிய அரசுக்கு விரைவில் முடிவு கட்டும் நாள் நெருங்கி விட்டது, பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி வெல்வது காலத்தின் கட்டாயம் என உரையாற்றினார்.
துணை தலைவர் முஹம்மது முனீர் பேசும்போது,
“CAA வில் மத பாகுபாடு காட்டி உத்தமன் போல பாஜக வேடம் போடுகிறது CAA சட்டம் நிறைவேற்ற பாராளுமன்றத்தில் வாக்களித்த அதிமுகவை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது என உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம் திருமுருகன் காந்தி பேசும்போது,
“ஒன்றிய பாஜக அரசு நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயலை தான் பத்தாண்டுகளில் செய்தது ஒரு நல்லது கூட செய்யவில்லை, வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வீழ்வது உறுதியாகி விட்டது என்று உரையாற்றினார்.
மற்றும் மாநில செயலாளர்கள் சையத் அலி பல்லாவரம் ஜாகிர் உசேன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இதில் காஞ்சி மாவட்டம் நிர்வாகிகள் ஆலந்தூர் நிர்வாகிகள் இந்திய மாணவர் முன்னணி நிர்வாகிகள் சமூக நீதி மாணவர் இயக்கம் நிர்வாகிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதே நோன்பு திறக்கும் நேரம் நெருங்கியதும் காஞ்சி மாவட்டம் சார்பாக வந்து இருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கும் நோன்பு திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன ஆர்ப்பாட்டம் களத்தில் நோன்பாளிகள் நோன்பு திறந்து ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர்கள் முஹம்மது யூசுப் கலிமுல்லாஹ் இனாயத்துல்லாஹ் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகள் நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் மே பதினேழு இயக்கம் நிர்வாகிகள் என பல்வேறு கட்சிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெண்கள் ஆண்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரெயில்கள் ரத்து!பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படும் என தகவல்..
by Askar
written by Askar
சென்னை கடற்கரை – தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், “தெற்கு ரெயில்வேயில் கடற்கரை மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று மெட்ரோவில் அதிக பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு இடமளிக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நீலம் மற்றும் பச்சை வழித்தடம் இரண்டிலும் வழக்கமாக மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இயக்கப்படும் ரெயில் சேவைக்குப் பதிலாக, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும்.
வழக்கமான ஞாயிறு கால அட்டவணையின்படி, காலை 05:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், இரவு 08:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை, ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். மேற்கண்ட அட்டவணை மாற்றம் 17-03-2024-ந்தேதி மட்டுமே பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவிக்கையில் :- இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி 2024 நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் 20.03.2024 அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கவும், 27.03.2024 அன்று வேட்புமனு கடைசி நாளாகவும், 28.03.2024 அன்று வேட்புமனு பரிசீலனையும் மேற்கொள்ளப்பட்டு 19.04.2024 வாக்குப்பதிவும், 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப் பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. இதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்படவும் மற்றும் அரசு இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் அனுமதியின்றி உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. 1950 மற்றும் 1800 425 7092 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையும் மற்றும் 04567-230410, 04567-230411, 04657-230412, 04567-230413 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம். அதன் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதையொட்டி, 48 பறக்கும் படை குழு, 24 நிலையான கண்காணிப்பு குழு என கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு, தேர்தல் விதிமுறைகள் மீறுவது கண்டறிந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் பொதுமக்கள் ரூபாய் 50,000/க்கும் மேல் கொண்டு செல்வதாக இருந்தால் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். காவல்துறை மற்றும் துணை இராணுவம் ஐந்து கம்பெனிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளார்கள். மாவட்டத்தை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேர்தல் சிறந்த முறையில்நடத்திட உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு , பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது, என்னென்ன கட்டுப்பாடுகள்! எதற்கு அனுமதி! எதற்கு அனுமதி இல்லை!-தேர்தல் ஆணையம் அறிவித்த முழுமையான தகவல்கள்..
by Askar
written by Askar
543 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
ஒட்டுமொத்தமாக முதற்கட்ட தேர்தலில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் வந்து விடுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து (இன்று பிற்பகல் 3 மணி) தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டதால், அதன் பின்னர் மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தேர்தல் கமிஷனின் கவனத்திற்கு கொண்டு வந்த பிறகே அமலுக்கு வரும். தேர்தல் நடத்தை விதிகளினால் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளிலும் கட்டுப்பாடுகள் வந்துவிடுகின்றன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான புதிய நடத்தை விதிகளை ஒவ்வொரு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆட்சியில் இருக்கும் கட்சிகள், வாக்காளர்களை கவரும் வகையில் புதிய திட்டங்கள், நிதி உதவிகளை அறிவிப்பது, எந்தவிதமான வாக்குறுதிகளை அளிப்பது மற்றும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது தடை செய்யப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடு, புதிய திட்டங்களுக்கு மட்டுமல்லாமல் நடந்து கொண்டிருக்கிற திட்டங்களுக்கும் பொருந்தும்.
தேசியம், மண்டலம் மற்றும் மாநில அளவில் நடைபெறும் திட்டங்களை அரசு அதிகாரிகள்தான் எந்தவொரு அரசியல் கட்சியினரின் சேர்க்கை இல்லாமல் செயல்படுத்த வேண்டும். ஆனால் அது, ஆளும் கட்சிக்கு சாதகமாக வாக்காளர்களை கவரும் வகையில் இருந்துவிடக்கூடாது. இதில் மேலும் தெளிவு பெற தலைமை தேர்தல் அதிகாரிகளை அணுக வேண்டும்.
குறிப்பிட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஏற்கனவே செய்யப்பட்டு இருந்தாலும் அல்லது கவர்னர் உரையிலோ, பட்ஜெட் அறிக்கையிலோ அந்த திட்டம் இடம் பெற்றிருந்தாலும், அதை ஒரு சாக்காக எடுத்துக் கொண்டு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு, அந்தத் திட்டங்களை தொடங்கி வைக்கவோ, அறிவிக்கவோ கூடாது. அது வாக்காளர்களை கவரும் நடவடிக்கையாக அமைந்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் குற்றமாகிவிடும்.
அரசின் திட்டங்களுக்கு புதிதாக நிதி ஒதுக்கவோ அனுமதி அளிக்கவோ கூடாது. அமலில் இருக்கும் மக்கள் நலத்திட்டங்கள் என்றாலும்கூட, அவற்றை அமைச்சர்கள் ஆய்வு செய்யவோ செயல்படுத்தவோ கூடாது.
மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவோ அல்லது திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை அளிப்பது என்றாலுமோ தேர்தல் கமிஷனின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளக்கூடாது. (எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மேற்கொள்ளும் தொகுதி மேம்பாட்டுப் பணிகளும் அதில் அடங்கும்).
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு பணிக்கான ஆணை வழங்கப்பட்டு இருந்தாலும், பணி தொடங்கியிருக்காத நிலையில் புதிதாக அந்தப் பணியை தொடங்கக் கூடாது. ஏற்கனவே பணி தொடங்கப்பட்டு இருந்தால் அதை தொடர்ந்து நடத்தலாம். பணி முடிந்ததும், அதிகாரிகள் திருப்தி அடைந்தால் அதற்கான பணத்தை விடுவிக்கலாம்.
வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் தொடர்பான அவசர கால நிவாரணம் வழங்கும் திட்டங்கள், வயது முதிர்ந்தோருக்கான திட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு கூறாது. ஆனால் இதற்கான முன் அனுமதியை தேர்தல் கமிஷனிடம் பெற்றிருக்க வேண்டும். ஆனாலும், அதை கவனத்தை ஈர்க்கும் விழாக்கள் மூலம் ஆட்சியில் உள்ள கட்சிகள் வழங்கக்கூடாது. இது மற்ற கட்சிகளை பாதிக்கும்.
அரசுத் திட்டங்களின் நிதியுதவியுடன் இயங்கும் தண்ணீர் லாரி, ஆம்புலன்ஸ் போன்றவற்றில் எழுதப்பட்டுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள், தேர்தல் முடியும்வரை மூடப்பட வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே, அரசு திட்ட உதவிகளைப் பெறுவோரின் பெயரை தேர்வு செய்திருந்தார் அதை அவர்களுக்கு வழங்கலாம்.
மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளைக் கொண்டு, ஏற்கனவே பட்டியலிடப்பட்டு அனுமதிக்கப்பட்டு இருக்கும் புதிய திட்டப் பணிகளை தொடங்கலாம். ஏற்கனவே முடிவுற்ற டெண்டர்களின்படி, தேர்தல் கமிஷனின் அனுமதிக்குப்பிறகு பணிகளை தொடங்கலாம். உலக அளவிலான டென்டர் கோரப்பட்டு இருந்தால் அவற்றை இறுதி செய்யலாம்.
பிரதமர், முதல்-அமைச்சர் நிவாரண நிதியை நேரடியாக பயனாளிகளுக்கு, தேர்தல் கமிஷனின் அனுமதி பெறாமல் வழங்கலாம். அரசு வாகனங்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது. வீட்டில் இருந்து அலுவலகம் செல்வதற்கு மட்டும் அமைச்சர்கள் அரசு வாகனங்களை பயன்படுத்தலாம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதிகாரிகளை தனியாகவோ அல்லது குழுவாகவோ அழைத்து, முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் காணொலிக் காட்சி மூலம் பேசக்கூடாது. மிகவும் அவசர நிலை என்றால், தலைமைத் தேர்தல் அதிகாரியை அணுகி அனுமதி பெற்று பேச வேண்டும்.
எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ, சாதி, மதம், இனம், மொழி தொடர்பான வேற்றுமைகளை பேசி மக்களிடையே கசப்பு உணர்வையும், சலசலப்பையும் ஏற்படுத்தக்கூடாது. அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டுவது, அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், பழைய சம்பவங்கள், பணிகள் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். ஒருவரது பொது வாழ்க்கைக்கு சம்பந்தப்படாத தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசக் கூடாது.
ஒரு வேட்பாளர் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரின் குடும்பத்தினருக்கு எந்த தொந்தரவும் அளிக்கக்கூடாது. அவரது வீட்டு முன் பிரசாரக் கூட்டம் என்ற பெயரில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
ஓட்டுக்காக சாதி, மத உணர்வை தூண்டக்கூடாது. மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் பிற வழிபாட்டு தலங்கள் எதுவும், தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படக் கூடாது. ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு மது, பணம், பரிசுப் பொருள் கொடுக்கக் கூடாது. ஓட்டுபோட வாக்காளர்களை மிரட்டக் கூடாது.
தனிப்பட்ட யாருடைய நிலம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றை அவரது அனுமதி இல்லாமல் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது. ஒரு அரசியல் கட்சி நடத்தும் பொதுக் கூட்டத்தில் மற்ற கட்சியினர் புகுந்து கேள்வி கேட்பது போன்ற செயலில் ஈடுபட்டு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது.
ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்ற கட்சியினர் அகற்றக் கூடாது. ஒரு கட்சி அல்லது வேட்பாளர், பொதுக்கூட்டம் நடத்துவது பற்றி முன்கூட்டியே போலீசிடம் தகவல் அளிக்க வேண்டும். ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுமதியை பெறவேண்டும். காலை 6 மணிக்கு முன்பும், இரவு 10 மணிக்கு பின்பும் அதை பயன்படுத்தக் கூடாது. ஊர்வலத்திற்கு அனுமதி பெற்றிருந்தால், அது செல்லும் இடம், நேரம் ஆகியவற்றை பின்னர் மாற்றக் கூடாது. கொடும்பாவி பொம்மைகளை எரிக்கக்கூடாது.
தேர்தலின்போது தங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் வகையில், தற்காலிகமாக அதிகாரி யாரையும் ஆளும் அரசு நியமிக்கக்கூடாது. அரசு சாரா பணி நியமனங்கள், பொதுத்துறையில் பணி நியமனங்களை செய்யக்கூடாது. வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
85 வயதிற்கும் மேற்பட்டவர்கள், 40% மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்- ராஜீவ்குமார் அறிவிப்பு..
by Askar
written by Askar
100 வயதைக் கடந்த 2.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்
85 வயதிற்கும் மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு
85 வயதிற்கும் மேற்பட்டவர்கள், 40% மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம் – ராஜீவ்குமார்
லோக்சபா தேர்தலில் தகுதியானவர்களை தேர்வு செய்யுங்கள்
குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை நாளிதழ்களில் வெளியிட வேண்டும் – ராஜீவ் குமார்
பண பலம், ஆள் பலம், விதிமீறல் போன்றவை தேர்தல் ஆணையம் முன் உள்ள சவால்கள் – ராஜீவ்குமார்
விதிமீறல் பற்றி 1905 என்ற எண்ணில் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து புகார் செய்யலாம் – ராஜீவ்குமார்
வேட்பாளர்கள் குறித்த விபரங்களை செயலியில் அறிந்து கொள்ள ஏற்பாடு – ராஜீவ்குமார்
ஹெலிகாப்டர் முதல் யானை வரை அனைத்து மூலமாகவும் வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் அனுப்பப்படும்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்த முதல்வரின் அறிவிப்பு; கவிஞர் பேரா வரவேற்பு..
written by Abubakker Sithik
இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்த முதல்வரின் அறிவிப்பு; பொதிகை தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் பேரா வரவேற்பு..
சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து பொதிகை தமிழ்ச்சங்க நிறுவனர் கவிஞர் பேரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்பான் மகாகவி பாரதி. மூத்த தமிழ் அறிஞர் பரிதிமாற்கலைஞர் தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழி என்றழைத்து மகிழ்வார். வளம் மிக்க நமது தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி நிலை கிடைப்பதற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பங்களிப்பு அளப்பரியது. ஒரு நூற்றாண்டு கால தமிழர்களின் கனவுகளை நினைவாக்கும் விதமாக செம்மொழி என்கின்ற தகுதியை முத்தமிழறிஞர் கலைஞரின் முயற்சியால் தமிழ் அடைந்தது.
அந்த செம்மொழியாம் தமிழுக்கு முதல் செம்மொழி மாநாட்டினை கோயம்புத்தூரில் டாக்டர் கலைஞர் நடத்தினார். இப்போது 2025-ஆம் ஆண்டில் ஜூன் மாதம் சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பை பொதிகைத் தமிழ்ச் சங்கம் வரவேற்கிறது. இந்த மாநாடு சிறப்பாக நடந்திடவும், தமிழ் மொழி இன்னும் உயர்ந்து விளங்கிடவும் முயற்சி எடுத்து வரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளையும் மனமாற பாராட்டுகிறோம். சென்னையில் 2025- ஆம் ஆண்டில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுமென அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் நீடித்து வரும் தொகுதி பங்கீடு இழுபறி! திங்கட்கிழமை முடிவுக்கு வருகிறதா..?
by Askar
written by Askar
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை விரைந்து முடித்தாலும் காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.தமிழகத்தில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை இந்த முறை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் சில தொகுதிகளை பிடிவாதமாக கேட்பதால் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நீடித்தது.இதனால் ம.தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது.திருச்சி, ஆரணி தொகுதிகளை தவிர பிற தொகுதி கள் காங்கிரசுக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது.கரூர் தொகுதி ஜோதிமணிக்கு மீண்டும் ஒதுக்கப்பட உள்ளது. 2 தொகுதிகளில் மட்டுமே நீடித்து வந்த பிரச்சினை காங்கிரஸ் மேலிடம் வரை சென்றது.திருச்சி தொகுதியை ம.தி.மு.க. விற்கு கொடுக்க வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது.தி.மு.க. தரப்பில் இருந்து தொகுதிகளை இறுதி செய்ய காங்கிரசுக்கு பல முறை அழைப்பு கொடுத்தும் மேலிட தலைவர்களிடம் இருந்து இசைவு வராததால் செல்வப்பெருந்தகை பேச்சு வார்த்தைக்கு போகாமல் இருந்து வருகிறார்.இந்நிலையில் நாளை மும்பையில் நடக்கும் காங்கிரஸ் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்கள் செல்கிறார்கள். அதனால் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திங்கட் கிழமை இறுதி செய்யப்பட உள்ளது.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கையெழுத்து இடுகிறார்.கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 7 தொகுதிகள் மீண்டும் வழங்கப்பட உள்ளது. 2 தொகுதிகள் மட்டுமே மாற வாய்ப்பு உள்ளது.எனவே 18-ந்தேதி காங்கிரஸ், ம.தி.மு.க.விற்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டு தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
லஞ்சம் பெறுவதையும் தடுக்க வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதைச் சகித்துக்கொள்ள முடியாது, மதுரை உயர்நீதிமன்றம் காட்டம்..
by Askar
written by Askar
லஞ்சம் பெறுவதையும் தடுக்க வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதைச் சகித்துக்கொள்ள முடியாது, மதுரை உயர்நீதிமன்றம் காட்டம்..
லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை 2-வது முறையாகத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைகிளை, லஞ்சம் பெறுவதைத் தடுக்க வேண்டிய அமலாக்கத்துறையிலேயே லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர் சுரேஷ்பாபு மீது சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க அவரிடம் இருந்து ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, அங்கித் திவாரி ஜாமீன் கோரி முதலில் தாக்கல் மனுக்களை திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்தது. அடுத்து, அங்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதில், 100 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன், இதுவரை தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி அங்கித் திவாரி 2வது முறையாக உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அங்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த சீராய்வு மனு மார்ச் 12-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விவேக்குமார் சிங், இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனக் கூறி வழக்கில் இருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து, அங்கித் திவாரியின் ஜாமீன் கோரி தாக்கல் செய்த சீராய்வு மனு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதி தண்டபாணி முன்பு வெள்ளிக்கிழமை (15.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார், அங்கித் திவாரி வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞரின் பதிலைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தண்டபாணி, இந்த வழக்கில் லஞ்சஒழிப்புத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது எனக் கூறி அங்கித் திவாரியின் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
மேலும், “அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் இந்த வழக்கு தீவிரமானது. அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல்கள் அதிகரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. சட்டவிரோத செயல்களையும், லஞ்சம் பெறுவதையும் தடுக்க வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதைச் சகித்துக்கொள்ள முடியாது” என்று நீதிபதி தண்டபாணி தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -16
( கி.பி 1299-1922)
டெல்லியிற்க்குள் தைமூரின் முழுப்படைகளும் நுழைந்தன.
கட்டிடங்களில் தளபதிகள் தங்கிக்கொண்டனர்.
மேலும் வீரர்களுக்கு
தங்க கூடாரங்களும் அமைக்கப்பட்டன.
தைமூரின் பயத்தால் டெல்லி சுல்தான் முஹம்மதுஷாவும்
தளபதி மல்லுகானும்
தப்பி ஓடிவிட்டனர்.
அரசவை கூட்டப்பட்டது.
டெல்லியின் முக்கிய
அமைச்சர்கள்
அதிகாரிகள் வந்து தைமூருக்கு பணிந்து சென்றார்கள்.
தைமூருக்கு யானையை கண்டாலே
பயம்.100 க்கு மேற்பட்ட யானைகள்
தைமூரின் முன்பு வந்து மண்டியிட்டன.
தைமூருக்கு யானைகளை பார்ப்பது விநோதமாகவும்,
மகிழ்ச்சியாகவும் இருந்தது.
ஒரு யானையின் மீது அமர்ந்து டெல்லியை மகிழ்ச்சியுடன் வலம் வந்தார்.
அதில் சில யானைகளை சில அரசர்களுக்கு பரிசாக அனுப்பி வைத்த தைமூர்,
ஆசியா முழுவதும் தன் வசமாகிவிட்டதை
அறிவிக்க வைத்தார்.
நீண்ட பயணம் செய்ததால் தைமூரின் வீரர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.
டெல்லி கருவூலத்தில் இருந்த செல்வங்களை தைமூர் தன்னுடன் எடுத்துச் செல்ல திட்டமிட்டார்.
நாடுகளை பிடித்து செல்வங்களை கொள்ளையடிக்கவே
மன்னர்கள் இதுபோன்ற படை எடுப்புகளை நடத்தினர் என்பதை புரியவேண்டும்.
போர் நடந்ததே முஸ்லீம் மன்னர்களுக்குள்
என்பதையும்
கொல்லப்பட்டவர்கள்
இருபுறத்திலும் முஸ்லீம்களே என்பதையும் அறிய வேண்டும்.
தைமூர் அரண்மனையில் இருக்க தைமூரின் தளபதிகளும்,
வீரர்களும் டெல்லியின் செல்வங்களை கொள்ளை அடித்தனர்.
எதிர்த்தவர்களை கொன்றனர்.
தலைகளை வெட்டி
பிரமிடுகளைப்போல
அடுக்கி வைத்ததாக
கூறுவதெல்லாம்
கொஞ்சம் ஓவராக இருந்தாலும்,
போர்,செல்வங்களை
எடுத்துக்
கொள்ளுவது
போன்ற செயல்களில் ஈடுபடும் போது மக்களை பயமுறுத்த
போர்வீரர்கள் இதுபோன்ற பயமுறுத்தல் உத்திகளை கையாளுவது சர்வசாதாரணமாக நடைபெறுவதாகும்.
இரண்டு வாரங்களே
டெல்லியில் தங்கியிருந்த தைமூரை பல இளவரசர்கள்
சரணடைந்து காணிக்கைகளை செலுத்தினர்.
தைமூர் டெல்லியில் எந்த
ஆட்சியாளரையும் நியமிக்கவில்லை.
வடசிந்து மற்றும் பஞ்சாபின் ஆளுநராக கிஸ்ருகானை நியமித்தார்.
பொதுவாக தைமூருக்கு வெற்றி கொண்ட பகுதிகளில் ஆள்வதில் பிரியம் இல்லை.அடுத்த பகுதிக்கு நகர்ந்துவிடுவார்.
அவர் தனது தலைநகர் சாமர்கந்துவிற்கு
தனது சில படைப்பிரிவுகளையும்
சில தளபதிகளையும் பணித்து, அவர்கள் போர்
செல்வங்களையும்
அள்ளிச் செல்லவும்,
சாமர்கந்தை சிறந்த நகரமாக கட்டமைக்க
டெல்லியின் கைவினை கலைஞர்களையும்
அழைத்து செல்லவும் உத்தரவிட்டார்.
அவர்கள் தப்பிவிடாமல் இருக்க
கைவிலங்கிட்டு அழைத்துச்
சென்றனர்.
டெல்லி தைமூரின் படையால் சீரழிந்த தாகவும் அது சீராக பல ஆண்டுகள் ஆன தாகவும்,
டெல்லியின் தெருக்களில் பிணங்கள் குவிந்து இருந்ததாகவும்,
அங்கு பிணந்திண்ணி கழுகுகளும்,
கழுதைப்புலிகளும்
சுற்றி திரிந்ததாகவும்,
கழுதை புலிகள் கத்துவது பேய் கத்துவதைப்போல இருந்ததால்,
மனிதர்கள் பயந்ததாகவும்,
டெல்லி தெருக்களில் இரண்டு மாதங்கள் ஆள்நடமாட்டமே இல்லை எனவும்
எழுதி வைத்திருப்பது
உண்மையாக தெரியவில்லை.
தொழுகை நடத்துகிற
தைமூர் குறிப்பாக தனது மதமக்களாகிய
முஸ்லீம்கள் நிறைந்திருக்கிற
டெல்லியை இவ்வளவு மோசமாக சீரழித்தார் என்பது பொய் புரட்டுகள் ஆகும்.
உஸ்மானிய பேரரசர் பயாசித்தைப்பற்றி
தைமூரிடம் சிற்றரசர்கள் நேரிடையாக வந்து குறைகள் கூறினார்கள்.
அது தைமூரின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தியது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.3 கோடியே 74 இலட்சத்து 16 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 485 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 3 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வழங்கினார். தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் 15.03.2024 அன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.3 கோடியே 74 இலட்சத்து 16 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 485 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 3 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கிஷோர் சிறப்புரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்) வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்று கடந்த இரண்டரையாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு அரும்பணிகளை செய்து வருகிறார். தென்காசி மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டம். தற்போது திருநெல்வேலியில் இருந்து தனி மாவட்டமாக பிரிந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டத்தின் மீது தனி அக்கறை கொண்டு பல புதிய நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். நமது முதலமைச்சர் ஏழை மக்களின் முதலமைச்சராக திகழ்ந்து வருகிறார். இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக ரூ 1 கோடியே 12 இலட்சம் தமிழக அரசால் செலவழிக்கப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்த கண்காட்சியினை பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை மூலமாக கட்டப்பட்டுள்ள ரூ.1 கோடியே 28 இலட்சத்து 16 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 5 புதிய கட்டடங்களையும், கூட்டுறவுத் துறையின் மூலம் ரூ.67 இலட்சத்து 80 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 4 புதிய கட்டடங்களையும், ரூ.1 கோடியே 78 இலட்சம் கட்டப்பட்டுள்ள தென்காசி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக ரூ.3 கோடியே 74 இலட்சத்து 16 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து வருவாய்த்துறை மூலமாக 226 பயனாளிகளுக்கு ரூ.51.89 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தின் மூலமாக 11 பயனாளிகளுக்கு ரூ.15.46 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், இணை இயக்குநர் வேளாண்மை துறையில் 05 பயனாளிகளுக்கு ரூ.0.39 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத்துறையின் மூலமாக 30 பயனாளிகளுக்கு ரூ.77.36 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மூலமாக 80 பயனாளிகளுக்கு ரூ.4.38 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக 97 பயனாளிகளுக்கு ரூ.93.13 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத்துறை மூலமாக 10 பயனாளிகளுக்கு ரூ.3.62 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலமாக ரூ.64 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும். கலை பண்பாட்டுத்துறை மூலமாக 5 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் 16 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 54 இலட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் என மொத்தம் ரூ.4 கோடியே 3 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் வழங்கினார்.
முன்னதாக கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தென்காசி சித்திரசபை மாணவிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி ஒன்றியக் குழுத்தலைவர் ஷேக் அப்துல்லா, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன், தென்காசி ஒன்றியக்குழு துணைத் தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், செயற்பொறியாளர் (கட்டடம் மற்றும் பராமரிப்பு) அணிட்டா சாந்தி, உதவி செயற்பொறியாளர் (கட்டடம் மற்றும் பராமரிப்பு) இப்ராகிம், உதவி பொறியாளர் செல்வி.ராணி, செய்தி மக்கள் தொடபு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்புஇ அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும்!- சரத்குமார் ஆசை..
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் நடிகர் சரத் குமாரும் கலந்துகொண்டார். முன்னதாக, பிரதமர் மோடி திருவனந்தபுரம் வரை விமானத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா உடன் இணைத்த பின்னர் இது எனது கன்னி பேச்சு.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிலும் நம் தேசத்திலும் நல்ல கருத்தை பதிவு செய்துவருகிறார். அவரின் கருத்தை நான் 40 தொகுதிகளிலும் முன்நிறுத்துவேன்.
நான் ஒருபோதும் எடுத்த காரியத்தை முடிக்காமல் இருந்ததில்லை. அந்த வகையில் நான் இந்தக் காரியத்தை எடுத்துள்ளேன்.
எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் நாட்டுக்காக பிரதமர் மோடி நல்லாட்சி செய்துவருகிறார். நான் அந்தக் கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்துள்ளேன். நாட்டில் ஊழலற்ற நல்லாட்சி தேவை.
தமிழ்நாட்டில் நடைபெறும் ஊழலாட்சிகள் அகற்றப்பட வேண்டும். கடந்த 57 ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்துவிட்டார்கள்.
இந்தத் திராவிடம் குடும்ப ஆட்சியும், மன்னராட்சியும்தான் நடத்துகிறது. தி.மு.க.வில் தொண்டன் தலைமைக்கு வரமுடியாது.
2025ல் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா வரும்போது அதனை வழிநடத்த மோடி வர வேண்டும். உழைப்பால் உயர்ந்தவர் மோடி.
அண்ணாமலையை பொறுத்தமட்டில், தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். சுதந்திர இந்தியாவில் இது முக்கியமான காலகட்டம்.
மோடி 3வது முறையாக பிரதமர் ஆக வர வேண்டும். அதற்காக தாமரை ஒவ்வொரு தொகுதிகளிலும் மலர வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா வெல்ல வேண்டும் என்றார்.
தொடர்ந்து, பாரத் மாதா கி ஜெய். தமிழ் அன்னையை வணங்குகிறேன் என தனது உரையை நிறைவு செய்தார்.
You must be logged in to post a comment.