பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் நீண்ட இழுபறிக்கு பிறகு இப்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், தேனி, சிவகங்கை ஆகிய 9 தொகுதிகளும் புதுவை ஒரு தொகுதியும் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.அதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.இந்த தேர்தலில் கூடுதலாக 2 தொகுதி சேர்த்து 12 தொகுதிகள் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜய்குமார், முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, அப்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வ பெருந்தகை ஆகியோர் கடந்த மாதம் அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று பேசினார்கள். அத்துடன் காங்கிரஸ் விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்தார்கள்.ஆனால் தி.மு.க. தரப்பில் 5 பிளஸ் 1 என்று கூறப்பட்டது. இது தொடர்பாக டெல்லி தலைவர்களுடன் தி.மு.க. தலைவர்கள் பேசினார்கள்.பேச்சுவார்த்தை முழுவதும் டெல்லி தலைவர்களுடனேயே தொடர்ந்தது. தி.மு.க. தரப்பில் ஒரு கட்டத்தில் 6 பிளஸ் 1 என்று முடிவாக சொல்லியதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.வடமாநிலங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்குவதில் இழுத்து பிடித்தது போல் தமிழகத்திலும் சிக்கல் ஏற்பட்டதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் தரமுடியாது என்று தி.மு.க. பிடிவாதம் காட்டியது. அதே போல் 12-ல் இருந்து குறைவாக சம்மதிக்கப் போவதில்லை என்று காங்கிரசும் பிடிவாதம் காட்டியது.இதனால் உடன்பாடு காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. வரட்டும் பார்க்கலாம் என்று இரு தரப்பும் கொஞ்ச நாட்கள் விட்டு பிடித்தன.இதற்கிடையில் 3 தொகுதிகளுக்காக முரண்டு பிடித்து வந்த விடுதலை சிறுத்தைகளுக்கு கடைசியில் 2 தொகுதிகள் வழங்கப்பட்டது.இரண்டு தொகுதிகளுக்காக மல்லு கட்டிய வைகோவும் ஒரு தொகுதியை பெற்றுக் கொண்டு அமைதியாகி விட்டார்.கூட்டணியில் இடம்பெற்றுள்ள எல்லா கட்சிகளுக்கும் கடந்த தேர்தலில் ஒதுக்கிய எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கியதால் கூட்டணி பங்கீடு சுமூகமாக முடிந்தது.அடுத்து காங்கிரஸ்தான் என்ற நிலையில் தி.மு.க. தலைவர்கள் நேற்று டெல்லி காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது எல்லா கட்சிகளுக்கும் பழைய எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்து விட்டோம். எனவே நீங்களும் கூடுதல் தொகுதி வேண்டும் என்ற எண்ணத்தை கை விடுங்கள். பழைய எண்ணிக்கையில் அதாவது 9 பிளஸ் 1 தர சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.தொகுதி உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இன்று மாலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதற்காக இன்று மாலை 4 மணிக்கு டெல்லி மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால், அஜய்குமார் ஆகியோர் சென்னை வருகிறார்கள்.விமான நிலையத்தில் இருந்து நேராக அறிவாலயம் செல்கிறார்கள். அவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடுகிறார்கள்.இந்த உடன்பாட்டின் போது எந்தெந்த தொகுதிகள் என்பதும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இதற்கிடையில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற திருச்சி தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்குவதாக கூறப்படுகிறது.அதே போல திமு.க. தமிழகம் முழுவதும் கள ஆய்வு நடத்தியதில் சில தொகுதிகள் காங்கிரசுக்கு சாதகமாக இல்லை என்றும் அதனால் அந்த தொகுதியை மாற்றி கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி கிருஷ்ணகிரி, ஆரணி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. தேனிக்கு பதிலாக மயிலாடுதுறை வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.தலைநகர் சென்னையிலும் ஒரு தொகுதி வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. அதற்காக தென்சென்னை தொகுதியை கேட்கிறது. இது தி.மு.க. கைவசம் இருக்கும் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
Category:
மாநில செய்திகள்
கூகுள் (Google) நிறுவனத்தின் புதிய கொள்கையின் கீழ் மின்னஞ்சலுக்கு (Gmail) புதிய கட்டுப்பாடுகள்; கூகுள் நிறுவனம் அதிரடி..
by Askar
written by Askar
கூகுள் (Google) நிறுவனத்தின் புதிய கொள்கையின் கீழ் மின்னஞ்சலுக்கு (Gmail) புதிய கட்டுப்பாடுகள் வர இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வர இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் மூலம் மொத்தமாக 5,000 மின்னஞ்சல்களுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.
யூடியூப் (YouTube), கூகுள் குரோம் (Google Chrome), கூகுள் மேப் (Google Maps) போன்ற கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஆப்கள் மட்டுமல்லாமல், அடையாள அட்டை ,வங்கி கணக்கு போன்றவற்றுக்கும் மின்னஞ்சல் முக்கியமாக தேவைப்படுகிறது.
இதனால், ஜிமெயில் மின்னஞ்சல் பயனர்களின் (Gmail Users) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், அதுதொடர்பான கட்டுப்பாடுகளும் கூகுள் நிறுவனத்தால் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஸ்பேம் மின்னஞ்சல்களுக்கே (Spam Email) இந்த புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்து மின்னஞ்சல் பயனர்களுக்கும் பொருந்தாது. ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 5,000 மின்னஞ்சல்களை அனுப்பும் நபர்களுக்கு மட்டுமே விதிக்கப்படும்.
இந்த மொத்த அனுப்புநர்கள் (Bulk Senders)அவர்களிடமிருந்து மின்னஞ்சல்களை பெற விரும்பும் பயனர்களுக்கு மட்டுமே அவற்றை அனுப்ப வேண்டும். அப்படி இல்லை என்றால், அந்த மின்னஞ்சல்கள் தானகவே நிராகரிக்கப்பட்டுவிடும்.
இதனால், தனிப்பட்ட பயனர்களுக்கு அவசியமில்லாமல், வரும் ஸ்பேம் மின்னஞ்சல்கள் படிப்படியாக குறைந்து விடும். முன்னதாக, ஸ்பேம் மின்னஞ்சல்கள் மீதான புகார்களின் அடிப்படையில் மட்டுமே, கூகுள் நிறுவனம் அவற்றின் மீது நடவடிக்கையை எடுத்து வந்தது.
புதிய கட்டுப்பாடுகள்
ஆனால், இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் பயனர்கள் புகார் அளிக்கவில்லை என்றாலும், ஸ்பேம் மின்னஞ்சல்கள் தானாகவே நிராகரிக்கப்படும். இதுமட்டுமல்லாமல், வணிக மற்றும் விளம்பரங்களுக்காக மின்னஞ்சல்களை அனுப்புவோர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டுப்பாடுகள் வரும் ஜூன் மாதத்தில் இருந்து அவர்களுக்கு நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் அனுப்பும், மின்னஞ்சல்களில் ஒன் – கிளிக் அன்சப்ஸ்கிரைப் பட்டன் (One-click Unsubscribe Button) இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த பட்டன் மின்னஞ்சலின் உடல் (Body)பக்கத்தில் பயனர்களுக்கு நன்றாக தெரியும்படி இடம்பெற வேண்டும்.
இந்த பட்டனை பயனர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த அனுப்பநரிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களை விரும்பவில்லை என்றால், அன்சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம். அதன்பிறகு அவர்களிடம் இருந்து எந்த ஸ்பேம் மின்னஞ்சல்களும் பயனர்களுக்கு வராது.
இப்படி பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் 2024ஆம் ஆண்டில் வர இருக்கின்றன. கூகுளின் இந்த ஜிமெயில் சேவையை 180 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதால், அதுதொடர்பான கட்டுப்பாடுகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கின்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் நடந்த மகளிர் தின விழா; பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்திட விழிப்புணர்வு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் நடந்த மகளிர் தின விழா; பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்திட விழிப்புணர்வு..
தென்காசி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டம், கொடிகுறிச்சி, USP தனியார் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மகளிர் தின விழா (08.03.2024) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில் கை அச்சு விழிப்புணர்வு மற்றும் மகளிர் லோகோவை தத்ரூபமாக நிறுவப்பட்டு, மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தென்காசி மாவட்ட முதல் நிலை பெண் அலுவலர்களுக்கு தென்காசி தாரகை பெண்கள் விருதும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு விருதுகளையும் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மார்ச் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற்ற உணவுத் திருவிழா, பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், தூய்மை பணியாளர்களுக்கான போட்டிகள் உள்ளிட்டவைகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் விருதுகள் வழங்கி கெளரவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின பெண்கள் முன்னேற்றத்திற்காக புதுமை பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மகளிர் சுய தவிக் குழுக்கள், இலவச பேருந்து பயணம், உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கல்லூரி மாணவிகள் ஜனநாயக கடமையாற்றி தங்களது வாக்குரிமையை செலுத்த வேண்டும். மேலும் தமிழக அரசால் பெண்கள் முன்னேற்றத்திற்கு செயல்படுத்தப்படும் அனைத்து பெண்களும் தங்களது இலக்கை நிர்ணயித்து விடாமுயற்சியுடன் முயன்று பல்வேறு நிலைகளை அடைந்திட வாழ்த்துகிறேன் என அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்களை கூறினார்.
தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கவும், பெண்கள் முன்னேற்றத்திற்காக உறுதுணையாக இருக்கும் வகையில் கை அச்சு இயக்க விழிப்புணர்வை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சமூக நல அலுவலர் செல்வி மதிவதனா ஆகியோர் அச்சுக்களை வைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பெண்களுக்கான அடையாள லோகோவை தத்ரூபமாக நிறுவப்பட்ட லோகோவுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கல்லூரி மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார். மேலும் பெண்கள் தினத்தினை முன்னிட்டு கேக்குகள் வெட்டப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுடன் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்துறை) கனகம்மாள், திட்ட இயக்குநர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்) ஜோஸ்பின் சகாய பிரமிளா, மாரியம்மாள் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், ஜெயபாரதி மாலதி துணை இயக்குநர்.(தோட்டக் கலைத்துறை), பத்மாவதி மற்றும் மாவட்ட அதிகார மாயா பணியாளர்கள், சகி ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்கள் மற்றும் USP கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -9
( கி.பி.1299-1922)
அன்றைய வாடிகன்நகரில் இருந்த கிறிஸ்தவர்களின் மதத்தலைவரான
போப் ஐந்தாவது அர்பன் அவர்களிடம்
உதவி கேட்க ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்தன.
போப்பிடம் ஆலோசனையையும்,
உதவிகளையும், பால்கன் நாடுகளின் அரசர்கள் கேட்டனர்.
போப் ஐரோப்பிய நாடுகளின் எல்லா மன்னர்களும்
ஒன்றிணைந்து உஸ்மானிய படைகளை எதிர்க்க கடிதம் எழுதினார்.
சிலுவைப்போரை துவக்க கடிதம் எழுதினார்.
இருப்பினும் உஸ்மானிய படைகளின் அதிவேக பரவல்களை,
முன்னேற்றங்களை,
பால்கன் படைகளால் தடுக்க முடியவில்லை.
பல நாடுகளை வெற்றிகொண்ட
உஸ்மானிய படைகள்
பால்கன் நாடுகளை
உஸ்மானிய அரசிற்கு கப்பம் கட்ட பணித்தன.
உஸ்மானிய அரசின் நிலப்பரப்பு உர்கான் ஆட்சியில் இருந்ததைவிட
முராத்தின் ஆட்சியில் ஐந்து மடங்கு அதிகமாகி இருந்தது.
முராத் இவ்வளவு விரிந்த நிலப்பரப்பின் பேரரசராக இருந்தாலும்,
அரண்மனைகள்
போன்ற பெரிய அரசமாளிகைகள் இருந்தாலும்,
முராத் அவர்களின் வாழ்க்கை முறை மிக எளிமையாக இருந்தது.
போரில் தனக்கு கிடைத்த செல்வங்களை ஏழைகளுக்கு பிரித்து வழங்கினார்.
முராத் அவர்களின் மகன் சாருஜி பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார்.
தோல்வியடைந்த பால்கன் அரசர்கள்
சாருஜியை தந்தை முராத்திற்கு எதிராக தூண்டினார்கள்.
உங்கள் தந்தையைவிட
நாட்டை ஆள உங்களுக்கு தகுதி இருக்கிறது.ஆகவே தனியாக படை திரட்டி உங்கள் தந்தையை கொன்று அரசை கைப்பற்றுங்கள்.
பின்புலமாக நாங்கள்
உதவி செய்கிறோம் என்று சாருஜிக்கு ஆசையை தூண்டிவிட,
சாருஜி தனி படைப்பிரிவு ஒன்றை உருவாக்கினார்.
இதனையறிந்த மன்னர் முராத் நேரடியாக சிறுபடையுடன் வந்தபோது சாருஜியுடன் இருந்த வீரர்கள் மன்னரை
நேரடியாக பார்த்ததும்
மன்னிப்பு கேட்டு
மன்னரோடு இணைந்து கொண்டார்கள்.
சாருஜி தனிமைப்
படுத்தப்பட்டார்.
உஸ்மானிய சாம்ராஜ்யத்தில்
குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக
தனது மகன் என்றும் பாராமல் சாருஜிக்கு
கடுமையான தண்டனை அளிக்கப்பட்டது.
பழுக்கக் காய்ச்சிய
இரும்புக்கம்பிகளை
இரண்டு கண்களிலும்
சொருகி இரண்டு கண்களும் குருடாக்கப்பட்டது.
துருக்கியின் காண்ஸ்டாண்டி நோபிள் மன்னர்தான் இந்த சதியை தூண்டினார் என்பதை அறிந்த மன்னர் முராத் அதன் மீது படையெடுக்க ஆயத்தமானார்.
அதனை அறிந்து கொண்ட காண்ஸ்டாண்டி
நோபுள் மன்னர் தனது மகன் தான் சதியை தூண்டினார் என்று குற்றம் சாட்டி தனது மகனின் இரண்டு கண்களையும் குருடாக்கினார்.
இதனால் சமாதானமடைந்த மன்னர் முராத் காண்ஸ்டாண்டி
நோபுள் படையெடுப்பை
நிறுத்தி வைத்தார்.
முராத் பல ஐரோப்பிய இளவரசிகளை திருமணம் செய்து கொண்டார்.
முராத்தின் ஆட்சி நிம்மதியாகவும்
அமைதியாகவும் இருந்தது.
ஆகவே மக்கள் முராத்தின் ஆட்சியை மிகவும் நேசித்தார்கள்.
பிற நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களும்,
யூதர்களும், முராத்தின் ஆட்சியை நேசித்தார்கள்.
ஏராளமான யூதர்கள்
உஸ்மானிய அரசின்
கட்டுப்பாட்டில் உள்ள
பகுதிகளில் கொத்து கொத்தாக குடியேறினர்.
அதற்கான காரணம் என்ன?
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொழுகையில் ஈடுபட்டிருந்த நபர்களை எட்டி உதைத்த காவல் அதிகாரி!-உடனடியாக நடவடிக்கை எடுத்த டெல்லி காவல்துறை..
by Askar
written by Askar
வடக்கு டெல்லியில் சாலையோரம் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் ஆண்கள் இருவரை உதைத்து, தாக்கிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை டெல்லி காவல்துறை பணியிடைநீக்கம் செய்துள்ளது.
தொழுகையில் ஈடுபட்டிருந்த இருவரை அந்த அதிகாரி தாக்குவதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது. இரண்டாவது நபரைஅந்த அதிகாரி தலையில் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் தலையிட்டு அவரைத் தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இண்டர்லோக் மெட்ரோ நிலையத்துக்கு அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தொழுகையாளிகளால் அங்குள்ள பள்ளிவாசல் நிரம்பிவிட்டதால் சில ஆண்கள் வெளியே தொழுததாக சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த அதிகாரியின் மூர்க்கத்தனமான செயலால் கோபமடைந்த மக்கள், சாலையை வழிமறித்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அப்பகுதியில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வடக்கு டெல்லி காவல்துறைத் துணை ஆணையர் எம்.கே.மீனா வெளியிட்ட அறிக்கையில், “காணொளியில் காணப்பட்ட காவல்துறை அதிகாரி உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்று கூறினார்.
இச்சம்பவம் அவமானமிக்கது என டெல்லி காங்கிரஸ் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுளது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இளைஞர்களை ஈர்க்கும் ஈஷா மஹா சிவராத்திரி விழா: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்
written by Abubakker Sithik
இளைஞர்களை ஈர்க்கும் ஈஷா மஹா சிவராத்திரி விழா: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்
“ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது” என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அவர்கள் பெருமிதத்துடன் கூறினார்.
கோவை ஈஷா யோக மையத்தில் 30ஆவது ஆண்டு மஹா சிவராத்திரி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் திரு.ஜகதீப் தன்கர் அவர்கள் விழாவில் பேசியதாவது: “சத்குரு முன்னிலையில் நடத்தப்படும் ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் நான் கலந்து கொள்வதை என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமையாகவும் பாக்கியமாகவும் உணர்கிறேன். நம் பாரத கலாச்சாரத்தில் மஹா சிவராத்திரி விழா மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் ஈஷாவில் நடத்தப்படும் மஹாசிவராத்திரி விழாவானது தனித்துவமானது; ஈடு இணையற்றது. உலகம் முழுவதும் உள்ள நவீன காலத்து இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
மதம், மொழி, இனம், தேசம், கலாச்சாரம் என அனைத்து எல்லைகளையும் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக இது திகழ்கிறது. இது மிகவும் பாராட்டுக்குரியது. அத்துடன், ஈஷாவில் கர்மா, பக்தி, ஞானம், க்ரியா என நான்கு மார்கங்களிலும் யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது. சத்குரு அவர்கள் யோகாவை உலகம் முழுவதும், பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்று வருகிறார். மனித குல நல்வாழ்விற்காக அவர் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
இவ்விழாவில் சத்குரு தொடக்க உரையாற்றுகையில், “இன்று நடைபெறும் மஹாசிவராத்திரி விழா ஈஷாவில் நடத்தப்படும் 30 ஆவது மஹாசிவராத்திரி விழாவாகும். 1994 ஆம் ஆண்டு நாம் நடத்திய மஹா சிவராத்திரி விழா, வெறும் 70 பேருடன் மட்டுமே நடத்தப்பட்டது. அப்போது 75 வயது பாட்டி ஒருவர் இரண்டே பாடலை இரவும் முழுவதும் பாடிக் கொண்டேயிருப்பார். இருப்பினும் அவருடைய பக்தி மெய் சிலிர்க்க வைக்கக்கூடியது. கடந்த ஆண்டு மஹாசிவராத்திரி விழாவை மட்டும் உலகம் முழுவதுமிருந்து சுமார் 14 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 20 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மஹாசிவராத்திரி நாளில் கோள்களின் அமைப்பால், ஒருவரின் உயிர் சக்தியானது இயல்பாகவே மேல்நோக்கி செல்லும். எனவே இந்நாள் வெறும் விழிப்புடன் மட்டுமே இருக்கும் நாளாக இல்லாமல், நம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை விழிப்படைய செய்யும் நாளாகவும் அமைய வேண்டும் என்பது என் விருப்பம்.” எனக் கூறினார்.
இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் மட்டுமின்றி அவரது துணைவியார் டாக்டர். சுதேஷ் தன்கர், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்தவர்களை சத்குரு வரவேற்றார். பின்னர் ஈஷாவில் உள்ள சூரிய குண்டம், நாகா சந்நிதி, லிங்க பைரவி, தியான லிங்கம் உள்ளிட்ட சக்தி ஸ்தலங்களுக்கு சென்று தரிசித்தனர். மேலும் தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்ச பூத க்ரியா நிகழ்விலும் பங்கேற்றனர்.
மாலை 6 மணிக்கு தொடங்கிய விழா மறுநாள் காலை 6 மணி வரை உற்சாகமாகவும், வெகு விமர்சையாகவும் நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். விழா மேடையானது வாரணாசி கோவில் கோபுரங்களின் தோற்றத்துடன் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டிருந்து, இது அனைவரையும் கவர்ந்திழுத்தது.
இரவு முழுவதும் களைகட்டிய கலை நிகழ்ச்சிகளில், கிராமி விருது வென்ற திரையிசை பாடகர் சங்கர் மஹாதேவன் இசை நிகழ்ச்சி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து, தெய்வீகம், விவசாயம் மற்றும் மண் சார்ந்த பாடல்களை தன் கம்பீர குரலால் பாடி அரங்கை அதிர செய்தார் தமிழ் நாட்டுபுற பாடகர் மகாலிங்கம். அதுமட்டுமின்றி மும்பை தாராவியை சேர்ந்த இளைஞர்கள் தமிழிலும், இந்தியிலும் ராப் பாடல்களை பாடி மக்களின் உற்சாகத்தை பன்மடங்கு கூட்டினர். மேலும் லெபனீஸ் டிரம்ஸ் இசைக்குழுவினர், கர்நாடக இசையின் புகழ்பெற்ற பாடகர் திரு. சந்தீப் நாரயணன், பிரதிவி கர்தவ் மற்றும் சூஃபி பாடகர்கள், குரு தாஸ் மன், ரதஜீத் பட்டாசர்ஜி உள்ளிட்ட உலகின் தலைச்சிறந்த கலைஞர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
இதுமட்டுமின்றி மஹா சிவராத்திரியின் முக்கிய நிகழ்வான நள்ளிரவு மற்றும் பிரம்மமுஹூர்த்த வேளையில் லட்சக்கணக்கான மக்கள் சத்குருவுடன் அஉம் நமச்சிவாய மந்திர உச்சாடனம் மற்றும் சக்தி வாய்ந்த தியான நிகழ்வுகளிலும் மேற் கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேட்டுப்பாளையம் துவக்கப் பள்ளியைநடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தீர்மானம்!
by Baker BAker
written by Baker BAker
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் முக்கிய தீர்மானமாகசிறுமுகை சாலையில் அமைந்துள்ளவள்ளுவர் நகர துவக்கப் பள்ளியில் சுமார்400 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வரும் நிலையில் துவக்க பள்ளியாக செயல்பட்டு வரும் வள்ளுவர் துவக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தகுழந்தைகள் கல்வி கற்க புதிய வகுப்பறைகளை கட்டுவதற்கும்ரூபாய்12 லட்சம் நிதியைஒதுக்கீடு செய்யஇன்று நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பெத்தரி தெருவில் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு (WIM) விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பெண்களின் வலிமை மற்றும் கண்ணியத்தை வலியுறுத்தி மாபெரும் பொது கூட்டம் விம் மாவட்ட தலைவி ரம்ஜான் பேகம் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவி முபினா முன்னிலையில் நடைபெற்றது. விம் நகர் செயலாளர் மசூதா வரவேற்புரை வழங்கினார். விம் நகர் தலைவி செய்யது ஜாபிரா தொகுப்புரை வழங்கினார். இக்கூட்டத்தில் பெண்கள் வலிமை பெற வேண்டும் முன்னேற்றம் பெற வேண்டும் என்றும் அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றும் குறிப்பாக அரசியலில் பெண்கள் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. விம் மாநில செயற்குழு உறுப்பினர் கதிஜா பீவி , எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கீழை ஐஹாகீர் அருஸி , பெரியபட்டிணம் ஊராட்சி மன்ற தலைவி அக்பர் ஜான் , ஐந்தாவது வார்டு உறுப்பினர் ரஜப்பு நிஷா , விம் மாவட்ட பொதுச் செயலாளர் சித்தி நிஷா , கீழக்கரை எஸ்டிபிஐ கட்சியில் 18 வது வார்டு கவுன்சிலர் சகினா பேகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். எஸ்டிபிஐ கட்சியின் நகர் செயற்குழு உறுப்பினர் பைசல் கருத்துரை வழங்கினார். விம் நகர் பொருளாளர் சையது சுல்தான் பீவி நன்றி உரை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் விம் நகர் துணைத் தலைவி அஜிதா பேகம் , துணைச் செயலாளர் அஸ்மது நிஷா , செயற்குழு உறுப்பினர் ரஹ்மத் ரமீஸா பேகம் , முபிதா , நஸ்ரின் தஸ்லிமா , எஸ்டிபிஐ கட்சியின் நகர் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது.ஒரே நேரத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றதால், செயலி முடங்கியுள்ளது.
by Askar
written by Askar
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை இன்று மாலை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர். முதல் உறுப்பினராக கட்சி தலைவர் விஜய் சேர்ந்தார்.
இதன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.வாட்ஸ் அப், டெலிகிராம், தொலைபேசி எண் வாயிலாகவும் கட்சியில் உறுப்பினராக இணையலாம் எனவும், தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம் என்று விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது.ஒரே நேரத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றதால், செயலி முடங்கியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்களை நலமா என்று கேட்கும் முதலமைச்சர், தமிழக ஜீவாதார உரிமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு வாய் திறந்து விளக்கம் சொல்லாமல் மௌனமாய் இருப்பது ஏன்? ஆர்.பி.உதயகுமார் கேள்வி..
by Askar
written by Askar
மக்களை நலமா என்று கேட்கும் முதலமைச்சர், தமிழக ஜீவாதார உரிமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு வாய் திறந்து விளக்கம் சொல்லாமல் மௌனமாய் இருப்பது ஏன்? ஆர்.பி.உதயகுமார் கேள்வி..
நீங்கள் நலமா என்று கேட்கும் முதல்வரே, அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேறாமல் போச்சு, சட்டம் ஒழுங்கு சீரழிந்து போச்சு, சொத்து வரி, குடிநீர்வரி, மின்கட்டணம் உயர்ந்து போச்சு, விலைவாசி விண்ணை தொடுகிற அவல நிலைக்கு தமிழகம் ஆளாச்சு, போதை பொருள் அதிகமாச்சு, தமிழக வாழ்வாதார உரிமை பறிபோச்சு, என்று இப்படி வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்ட உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை.
தேர்தலுக்கு, தேர்தல் மட்டுமே நீங்கள் நலமா என்று கேட்கிற முதல்வரே, இன்றைக்கு மக்கள் நீங்கள் கொடுத்த 520 வாக்குறுதிகளில் நிறைவேற்றாத வாக்குகளிலே எத்தனை எத்தனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மனிதநேயம் உள்ள, மனசாட்சி உள்ள மனிதராக இருப்பவர்களிடம் நீங்கள் நலமா என்று கேட்டால் அவர்கள் எப்படி நலம் என்று சொல்லுவார்கள்
சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னனாக இங்கே தமிழ்நாட்டில் இருக்கிற ஜாபர்க்கு நீங்கள் பதவி கொடுத்து உள்ளீர்கள். உள்துறையை கையில் வைத்து இருக்கிற முதல்வர் இதுவரை மக்களுக்கு எந்த விளக்கமும் சொல்லவில்லை.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோர் நிதி ஒதுக்கீடு செய்தார்கள் அது குறித்து வாய் திறக்கவில்லை. முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சிக்கிறது அதற்கு கண்டனத்தை தெரிவிக்கவில்லை, பாலாறு அணைகட்ட ஜெகன்மோகன் ரெட்டி முயற்சிக்கிறார் இப்படி தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகள் எல்லாம் பறிபோகிறது அதை காப்பாற்ற எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழகத்தில் கெட்டுப்போன சட்டம் ஒழுங்கை காப்பாற்றவில்லை, போதை பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்துவில்லை, கொலை கொள்ளை கற்பழிப்பு என்று தமிழகம் இன்றைக்கு அதிர்ச்சிக்குள்ளாயிருக்கிறது.அரசின் நலத்திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் நீங்கள் எந்த முயற்சியும் எடுக்காமல் நீங்கள் நலமா என்று கேட்டால் எப்படி மக்கள் பதில் சொல்வார்கள்.
அரசின் அதிகார மையப்புள்ளியாக இருக்கிற உதயநிதி ஸ்டாலினை உச்சநீதிமன்றம் இன்றைக்கு கண்டித்து இருக்கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி மத சுதந்திரத்தை பற்றி பேசி உள்ளீர்கள், இந்திய அரசியல் அமைப்பு சட்டங்களை, சுதந்திரத்தை மீறி இருக்கிறீர்கள், பேச்சுரிமையிலே மீறி இருக்கிறீர்கள் என்று நீதியரசர் கண்டித்துள்ளார்.
மேலும் பொதுவழியில் வெளியிடும் கருத்துக்கள் உண்மையாக, துல்லியமாக இருக்க வேண்டும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.ஒரு பொறுப்புள்ளவர் இப்படி செயல்படலாமா என்று உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்க பிறகும், அவர் எப்படி அமைச்சர் பதவியில் நீடிக்கிற தார்மீக உரிமையை பெறுகிறார் என்பதுதான் இன்றைய அரசியல் அறிஞர்கள் மக்கள் உடைய கருத்தாக இருக்கிறது.
என்ன செய்வது அதிகார மையத்தின் முக்கிய புள்ளியாக உள்ளார் .இது குறித்து முதலமைச்சர் வாய் திறந்து விளக்கம் சொல்வாரா? மக்கள் நலமா என்று கேட்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதிலை சொல்லவில்லை.
தொடர்ந்து நிலைப்பாட்டை தவறுவதற்கு என்ன காரணம் தமிழ்நாடு மக்களுக்கு தெரியவில்லை, இதற்கெல்லாம் நீங்கள் விளக்கம் சொல்லாமல் மௌனம் சாதித்தால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் உங்களுக்கு தக்க பதிலடியை மக்கள் புகட்டுத்துவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஜாபர் சாதிக்கிற்கு நான் விருது அளித்ததாகக் கூறப்படுவது தவறு. நான் கொடுத்தது வெறும் பரிசுப்பொருள்தான்!- டி.ஜி.பி சங்கர் ஜிவால் விளக்கம்..
by Askar
written by Askar
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக்குடன், தமிழக காவல்துறைத் தலைவர் டி.ஜி.பி சங்கர் ஜிவால் ஒரு புகைப்படத்தில் இணைந்து காணப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்தப்படம் குறித்து டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
விமான நிலையங்கள் மூலமாக அவர் தப்பிவிடக்கூடாது என்பதால் தேடப்படும் குற்றவாளி என்பதற்கான ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
ஜாபர் சாதிக்கிற்கு தாம் விருது எதுவும் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒருமுறை பரிசுப்பொருள் மட்டும் கொடுத்ததாக தமது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக், தாம் சென்னை காவல் ஆணையராக இருந்தபோது ரகசிய கண்காணிப்புக் கேமராக்களை காவல்துறைக்கு சொந்த செலவில் வாங்கிக் கொடுத்ததாக டி.ஜி.பி. கூறியுள்ளார்.
எனினும் ஜாபர் சாதிக் குற்றவாளி எனத் தெரிய வந்ததும் அந்தக் கேமராக்களை உடனடியாக அகற்றி விட்டதாகவும், குறிப்பிட்ட அந்தப் புகைப்படத்தில் ஜாபர் சாதிக் இருப்பது உண்மைதான் என்றும் டிஜிபி அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவருக்கு நான் விருது அளித்ததாகக் கூறப்படுவது தவறு. நான் கொடுத்தது வெறும் பரிசுப்பொருள்தான்,” என்று டி.ஜி.பி சங்கர் ஜிவால் மேலும் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தின் பொதுக்கல்வித் துறையைப் பாதுகாக்கக் குரல்கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்
by Askar
written by Askar
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழகத்தின் பொதுக்கல்வித் துறையைச் சீர்படுத்தப்பட வேண்டும், அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், பொதுக்கல்வித் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் சரிசெய்யப்பட வேண்டும், இதற்காக சமூகத்தில் ஆளுமைகளாகக் கொண்டாடப்படும் சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டவர்கள் தங்கள் மவுனத்தைக் கலைத்துக் குரல்கொடுக்க வேண்டும் என, தனது அறச்சீற்றத்தை முகநூல் பதிவாக வெளியிட்ட காரணத்திற்காகக் கல்விச் செயற்பாட்டாளர் ஆசிரியை சு. உமா மகேஸ்வரி அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
‘இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்’ என அடிமைகால ஆட்சியிலிருந்த அடக்குமுறை தான் நினைவுக்கு வருகின்றது. சமூகநீதி ஆட்சி எனக் கூறிக்கொள்ளும் ஆட்சியில், சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கக் கூட அனுமதி மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. ஆமாம் சாமி என எசப்பாட்டு மட்டுமே தங்கள் ஆட்சியில் கேட்க வேண்டும் என எண்ணுவது கூட கருத்துச் சுதந்திர அடக்குமுறைதான். தங்கள் அரசை நோக்கி வரும் குறைகளை, கோரிக்கைகளை உள்வாங்கி அதனைச் சரிசெய்வது தான் ஒரு மக்கள் நலன் அரசின் சரியான செயல்பாடாக இருக்க முடியும். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளை நம்பித்தான் மக்கள் வாக்களித்து இந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பட்சத்தில் மக்களிடத்திலிருந்து வெளிப்படும் எதிர்க்குரல்களை நசுக்குவது ஏற்புடையதல்ல.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, ஊதிய முரண்பாட்டைக் களைதல், சம வேலைக்குச் சம ஊதியம், காலி பணியிடங்களை நிரப்புதல் என்பன போன்ற நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுக் கல்வித்துறை சார்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த பிரச்சினை வெறும் ஆசிரியர்கள் சார்ந்தது மட்டும் கிடையாது. அவர்கள் உருவாக்கும் மாணவர்களின் கல்வி நலன் சார்ந்தது. பொதுக் கல்வியை மேம்படுத்தத் திட்டங்கள் மட்டும் போதாது, அந்த திட்டத்தை முறையாகச் செயல்படுத்த ஊழியர்கள், ஊழியர்களுக்கான ஊதியங்கள் ஆகியவற்றையும் செயல்படுத்த வேண்டியது அரசின் கடமையாக இருந்துகொண்டிருக்கிறது.
பொதுக் கல்வியின் மூலமாகவே தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கின்றது. பொதுக்கல்வித் துறை தான் 80 சதவீத தமிழக மாணவர்களின் ஆணிவேராக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், சமீப காலங்களில் பொதுக்கல்வித் துறையின் நிலை மிக மோசமாகச் சென்று கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊதியத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதேபோல் இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் தங்களின் ஊதியத்திற்காகவும், பணி நிரந்தரத்திற்காகவும் நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறபோது, அங்குப் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கேள்விக்குள்ளாகும் சூழல் ஏற்படுகின்றது. இதன்மூலம் அரசுக் கல்விப் பணியாளர்களை மட்டுமல்ல, மாணவர்களையும் சேர்த்தே வஞ்சிக்கிறது. இதைத் தான் தனது அறச்சீற்றம் கொண்டு ஆசிரியர் சு. உமா மகேஸ்வரி அவர்கள் முகநூல் பதிவாக வெளியிட்டுள்ளார்.
இலக்கிய விழாக்கள் , புத்தக விழாக்கள் என்று இந்த அரசு ஆரம்பிக்கும் விழாக்கள் குறித்து பெருமிதம் பேசும் ஆளுமைமிக்க இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும், சீரழிந்து வரும் அரசின் பொதுக் கல்வித்துறை குறித்துப் பேசாமல் இருக்கிறார்கள். முகநூலில் இயங்கும் ஏராளமான எழுத்தாளர்கள் ஆசிரியர்களாக இருக்கின்றனர். ஆசிரியர்களாக இருந்து எழுத்தாளர்களாக இருப்பவர்களுக்குக் கூடுதல் சமூக அக்கறை இருக்க வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயில்பவர்கள் பெரும்பாலும், இந்த சமூகத்தில் காலம் காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் குழந்தைகள் ஆவர். அவர்கள் வாழ்வு மலர்ந்தால் தான் செழிப்பான சமூகம் உருவாகும். மற்ற காரணிகள் கடந்து, சமூகத்தின் ஆணிவேராக இருக்கும் கல்விச் சூழலை அவர்கள் கவனப்படுத்த வேண்டும். ஆனால், ஏனோ அவர்கள் மறுக்கின்றனர்? அல்லது கடந்து போகின்றனர்? என்று ஆசிரியர் சு. உமா மகேஸ்வரி அவர்கள் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் அறச்சீற்றம் நியாயமானதே. இதற்காக அவரை பணியிடை நீக்கம் செய்தது என்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.
ஆகவே, ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்களின் பணியிடை நீக்கத்தைத் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, பொதுக்கல்வித் துறை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, விளிம்புநிலை மக்களின் கல்வி ஆதாரமாக இருந்து கொண்டிருக்கும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை அரசினர் அருங்காட்சியகத்தில் பன்னாட்டு தமிழ் இலக்கிய கருத்தரங்கம்; நினைவு பரிசு வழங்கல்..
written by Abubakker Sithik
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பன்னாட்டு இலக்கிய கருத்தரங்கம்
நெல்லை அரசு அருங்காட்சியகமும், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையும் இணைந்து உலக தாய்மொழி நாள் விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் விதமாக தாய் தமிழும் தமிழர் பண்பாடும் என்கிற பன்னாட்டு இலக்கிய கருத்தரங்கினை நடத்தினர். இந்நிகழ்வில் தொடக்க விழாவில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் பிரியதர்ஷினி வரவேற்புரை ஆற்றினார். அகவை முதிர்ந்த தமிழறிஞர் சங்கத்தின் மாநில தலைவர் கவிஞர் சுப்பையா தமிழ் மொழி குறித்து வாழ்த்து பாடலை பாடினார். நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தலைமையுரை ஆற்றினார். அவரது உரையில் மொழிக்கு எல்லாம் தாய் மொழியாம் நம் தமிழ் மொழியினையும் உலகின் தலைசிறந்த பண்பாடாம் தமிழர் பண்பாட்டினையும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இந்த பன்னாட்டு இலக்கிய கருத்தரங்கின் மிக முக்கியமான நோக்கம் என்று உரைத்தார்.
தொடர்ந்து தமிழக அரசின் உ வே சா விருத்தாளர் எழுத்தாளர் நாறும்பூநாதன், தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளர் விருது பெற்ற கவிஞர் சிவசெல்வ மாரிமுத்து ஆகியோரை பாராட்டும் விதமாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாழ்த்துரை நிகழ்த்தினார்கள். நிகழ்வில் திருவருள் லத்தீப் வாழ்த்துரையை தொடர்ந்து பன்னாட்டு கலைச்செம்மல் முனைவர் முகமது முகைதீன் தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் கருத்தரங்க சிறப்புரையினை வழங்கினார். அவரது உரையில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ் மொழியின் மூலமாகவும், தமிழர் பண்பாட்டின் மூலமாகவும் இணைந்து பண்பட்டதோர் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அதை வெளிப்படுத்தும் விதமாக இந்த இலக்கிய கருத்தரங்கம் நடைபெறுகின்றது என்றுரைத்தார்.
தொடர்ந்து சதக்கத்துல்லா அப்பா கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் பொன் சக்தி கலா நன்றி உரை ஆற்றினார். முதல் அமர்வு இலக்கிய அமர்வாக நடத்தப்பட்டது. அந்த அமர்விற்கு ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் ஜெயமேரி தலைமை ஏற்றிருந்தார். தொல்லியல் நோக்கில் தமிழர்கள் என்கிற தலைப்பில் முனைவர் அனுசியா (தமிழ் துறை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி) சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து சங்கத்தமிழர் வாழ்வியல் என்கிற தலைப்பில் நாகர்கோயில் தெ.தி இந்து கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் சொர்ணபமீலா சிறப்புரை ஆற்றினார்.
இரண்டாம் அமர்வு பண்பாட்டு அமர்வாக நடத்தப்பட்டது. இந்த அமர்வில் தூத்துக்குடி போப் கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர் ஹன்னா லில்லி தலைமை வகித்தார். திருநெல்வேலி தட்சிணமாற நாடார் சங்க கல்லூரி தமிழ் துறை தலைவர் கிரிஜா தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து தென்காசி ஜேபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் ராஜன் ஜான் தமிழர் பண்பாட்டில் காதலும் கற்பும் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகர் மன்ற தலைவர் பேச்சுரிமை பறிப்பு ! நகர்மன்ற உறுப்பினர் மகளிர் தின வாழ்த்து !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டரங்கில் நகர மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் நகராட்சி ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் 1 வது வார்டு உறுப்பினர் பாதுஷா கீழக்கரையில் வடக்கு தெரு டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து நெடுஞ்சாலை வரை 500 மீட்டர் புதிய சாலை அமைப்பதற்கு தில்லையேந்தல் பஞ்சாயத்து நிர்வாகம் புறக்கணித்து வருகிறது இதில் கீழக்கரை மக்கள் மற்றும் அவசர ஊர்திகள் செல்ல மிகுந்த சிரமப்பட்டு வருவதால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் தலையிட்டு தாங்களே முன்வந்து சாலை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் மேலும் சாலை அமைக்கவில்லை என்றால் சாலையில் உருண்டு பிரண்டு போராட்டம் நடத்துவேன் என்று எச்சரித்தார். அதனைத் தொடர்ந்து பன்னிரண்டாவது வார்டு உறுப்பினர் உம்முல் சல்மா கூறுகையில் கருவாட்டுக் கடை பகுதியில் இருந்து பிக் பஜார் வரை கழிவுநீர் வாருகால் அமைத்து தர வேண்டும் என்றும் முத்தலிபு அரிசி கடை பகுதியில் வாருகால் குழாய்கள் மறுசீரமைக்கு தர வேண்டும் என்றும் நீண்ட நாளாக கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். 19 ஆவது வார்டு உறுப்பினர் சப்ராஸ் நவாஸ் கூறுகையில் நகராட்சியில் போதுமான நிதி பற்றாக்குறை இருப்பதால் நகராட்சியின் நிதியை கருத்தில் கொண்டு முக்கியமான தீர்மானங்களை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இருபதாவது வார்டு உறுப்பினர் ஷேக் உசேன் கூறுகையில் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு நகர்மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற பெண் உறுப்பினர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து போற்றி புகழ்ந்தார். அதனைத் தொடர்ந்து நகராட்சியில் டெண்டர் விடப்பட்டு அதன் வேலைபாடுகளை கள ஆய்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என்று கடந்த நகர்மன்ற கூட்டத்தில் தெரிவித்த போது அமைத்து தருவதாக துணைத் தலைவர் வாக்குறுதி அளித்தார் அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை என இருபதாவது வார்டு உறுப்பினர் ஷேக் உசேன் விளக்கம் கேட்டார். பதில் அளிக்காமல் அமர்ந்திருந்தார் துணைத் தலைவர். கூட்டத்தில் விவாதங்கள் நடைபெறும் பொழுது நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை தெரிவிக்கும் பொழுது நகர் மன்ற தலைவரை பேச விடாமல் தானாகவே முன்வந்து பதில் கூறி வருகிறார். அவரிடம் வைத்த கேள்விக்கு பதில் கூறாமல் மன்றத் தலைவரிடம் கேட்கும் கேள்விக்கெல்லாம் இடைமறித்து பேசுகிறார். இதனால் நகர் மன்ற உறுப்பினர்கள் கூறும் கோரிக்கைக்கும் முறையாக நகரமன்ற தலைவரால் பதில் அளிக்க முடியவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயமாக உள்ளது. நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் இருந்தும் அவர்களிடம் கேள்வி எழுப்பினார் அவர்கள் பதில் கூற விடாமல் ஏன் துணைத் தலைவர் தடுக்கிறார் என்பது சில உறுப்பினர்களிடம் கேள்வியாகவே இருந்துள்ளது. அடையாளப்படுத்துவதற்காக முன் வருகிறாரா என்ற சந்தேகங்கள் எழுகிறது இதனால் நகர்மன்றத்தில் தீர்மானங்கள் முறையாக விவாதிக்க முடிய வில்லை என்று வருத்தப்படுகின்றனர். இனிவரும் நகர்மன்ற கூட்டங்களில் நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் முறையாக உறுப்பினருக்கு பதிலளித்தால் மட்டுமே இது போன்ற குழப்பங்கள் தீரும் என்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்றும் பொதுவான கருத்தாகவே உள்ளது. மேலும் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட கூட்டம் 20 நிமிடங்களில் முடிந்தது .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் கோயிலில் ரூபாய் 96 லட்ச மதிப்பீட்டில் புதிய வாகன நிறுத்துமிடம்!- முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
by Askar
written by Askar
திருப்பரங்குன்றம் கோயிலில் ரூபாய் 96 லட்ச மதிப்பீட்டில் புதிய வாகன நிறுத்துமிடம்!- முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் முருகன் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.
திருப்பரங்குன்றம் திருக்கோயில் பகுதியில் திருவிழா மற்றும்திருமண மூர்த்தங்கள் நடைபெறும் போது கடும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
இதனை தொடர்ந்து சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கொண்டு வரப்பட்ட திட்டத்தின் மூலம் ரூபாய் 96 லட்சம் மதிப்பீட்டில் சரவணபவகை அருகில் புதிய வாகன நடத்துமிடம் அமைக்கப்பட்டது.
அதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். காணொலிக்காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கை அருகில் புதிய வாகன காப்பகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லதுரை , துணை ஆணையர் சுரேஷ், மற்றும் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, மற்றும் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர் ஸ்விதா விமல், மற்றும் காவல்துறை உதவி ஆணையர் குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.இந்நிலையில், மாலேகான் நகருக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று நம்பூர் சாலையில் உள்ள திருமண மண்டப அலுவலகத்திற்குள் நுழைந்தது.
அந்த அலுவலகத்தின் கதவு திறந்து இருந்ததால் வாசல் வழியாக சிறுத்தை உள்ளே நுழைந்த நிலையில், அங்கு அலுவலக கேபினில் மோகித் விஜய் அகிரே (13), என்ற சிறுவன் தனது செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான்.அலுவலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை, கேபினில் இருந்த சிறுவனை பார்க்காமல் நேராக உள் அறைக்குச் சென்றது. சிறுத்தையை பார்த்தும் சிறிதும் அச்சப்படாத அந்த சிறுவன் அலுவலகத்திற்கு வெளியே சென்று கதவை வெளியில் இருந்து மூடினான். இந்தச் சம்பவம் காலை 7 மணி அளவில் நடந்துள்ளது.சிறுத்தை புகுந்தது குறித்து வனத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை, மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை கூண்டில் ஏற்றிச்சென்ற பிறகே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.திருமண மண்டபத்தின் அலுவலக அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை அலுவலகத்திற்குள் நுழைவதும், உடனே சிறுவன் அசால்டாக வெளியே சென்று பூட்டு போட்டு பூட்டுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. துணிச்சலாக செயல்பட்ட சிறுவனின் சாதுர்யத்தைப் பாராட்டி பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக கூட்டணியில் விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகள் ஒதுக்கீடு..
by Askar
written by Askar
திமுக கூட்டணியில் விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகள் ஒதுக்கீடு..
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கொமதேக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுவதில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்நிலையில் திமுக-விசிக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் வருகை தந்தனர். இ தனைத் தொடர்ந்து திமுக-விசிக இடையிலான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஒதுக்கப்பட்ட சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் இந்த முறை விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், “திமுக கூட்டணியில் விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகள் கையெழுத்தானது. 2 தனி தொகுதி, ஒரு பொது தொகுதி கேட்டிருந்த நிலையில், 2 தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனி சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம். இன்னும் தகவல் வரவில்லை. நிச்சயம் விசிக தனி சின்னத்தில் தான் போட்டியிடும். 2019 தேர்தலில் கையாண்ட பகிர்வு முறைபோல் இந்த முறையும் கையாளப்பட்டது” என்று தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலஞ்சி டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்லூரியில் பரிசளிப்பு விழா..
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் செங்கோட்டை அரசு நூலகம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் அமிர்தம் செல்லத்துரை, அந்தோணி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் (பொ). தங்கம் வரவேற்றார்.
திருநெல்வேலி திருமண்டல உப தலைவர் ரெவ சுவாமிதாஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ ஆசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். நூலகர் டாக்டர் ஏஞ்சலின், உதவி பேராசிரியர்கள் ஷீலா நவரோசி, முத்துலட்சுமி, லீதியாள் சொர்ண ஜெயா, ஹெப்சி, அனிதா, உடற்கல்வி ஆசிரியர் ஐசக், அலுவலக பணியாளர் பிரெட்ரிக், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..
by Askar
written by Askar
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4% அகவிலைப்படி உயர்வு வழங்க டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 விழுக்காட்டிலிருந்து 50% ஆக உயர்ந்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நடப்பாண்டின் முதல் 6 மாதங்களுக்கு இதுவரை உயர்த்தப்படவில்லை. 2023-ஆம் ஆண்டின் கடைசி 6 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வை கடந்த அக்டோபர் மாதத்தில் தான் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கு முன்பு வரை மத்திய அரசுப் பணியாளர்களுக்கு மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்து 6 மாதங்களுக்குப் பிறகு தான் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஊதியத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தி வந்தது. இப்போதும் அதேபோல், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அரசு தாமதப்படுத்தக் கூடாது.மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட்டு விட்டால், அதன்பிறகு ஜூன் மாதத்தில் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் வரை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க முடியாது. எனவே, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாக , அமைச்சரவையைக் கூட்டி 4% அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.
இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.
இவ்வாறு பாமக தலைவை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சமையல் காஸ் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அவரது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது;
மகளிர் தினத்தில் சமையல் காஸ் விலையை மேலும் 100 ரூபாய் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் நிதிச்சுமையை குறைக்கும். குடும்பங்களின் நல்வாழ்வுக்கு ஆதரவாக இருப்பதுடன் ஆரோக்கியம் உறுதி செய்வதுடன் பெண்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
பெண்கள் எளிதாக வாழ வழி செய்யவும் பெண்கள் அதிகாரம் உறுதி செய்வதும் எங்களின் நோக்கம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
You must be logged in to post a comment.