சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 10 இடங்களில் சோதனை நடத்தினர். ரேசன் கடைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் என்பவரது வீடு, வேப்பேரியில் உள்ள தொழில் அதிபர் இரானி உள்பட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.போயஸ்கார்டனில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.மற்ற இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூன் வீட்டில் மட்டும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.4,730 கோடி அளவுக்கு இதில் முறைகேடு மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதும் தெரிய வந்திருந்தது.இதில் தொடர்புடைய மணல் ஒப்பந்ததாரர்கள் சிலரது வீடுகளிலும் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.இந்த சோதனையிலும் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
Category:
மாநில செய்திகள்
தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் அனைத்து கோரிக்கைகளும் அரசால் எற்றுக்கொள்ளப்பட்டதால் போராட்டம் வாபஸ் ! வருவாய் துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு !!
by Baker BAker
written by Baker BAker
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கங்தால் வைக்கப்பட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப் பட்தாகவும் , மேம்படுத்தப்பட்ட ஊதியம் தேர்தலுக்கு முன்னரே 75% நிதி உள்ளிட்ட அணைத்தும் கோரிக்கை களையும் எழுத்துப் பூர்வமாக வழங்கப்படுவதாகவும், எதி்ர்வரும் நாட்களில் அரசாணையாக வெளிவர உள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மைய அறிவிப்பின்படி கோரிக்கைகள் அனைத்தும் தமிழக அரசால் ஏற்கப்பட்டு விட்டதால் அனைத்து போராட்டங்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதால் அனைவரும் வழக்கம்போல் பணிக்கு திரும்புவதாக அச்சங்கத்தின் மாநில மையம் தெரிவித்துள்ளது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலக செய்திகள்கீழக்கரை செய்திகள்செய்திகள்தேசிய செய்திகள்மாநில செய்திகள்மாவட்ட செய்திகள்விளையாட்டு செய்திகள்
கீழக்கரை சார்ந்தவருக்கு சவுதி அரேபியாவில் பரிசு விழா !
by Baker BAker
written by Baker BAker
சவுதி அரேபியா ஜித்தா மாநகரில் தமிழர்கள் அதிகமாக வேலை செய்யும் நிர்வணமன அல் ஃபன்னியா (Alfaneyah) கம்பேனியில் விளையாட்டு பேட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு கீழக்கரை, காயல்பட்டிணம் கடையநல்லூர், லெப்பைகுடி ஊரை சேர்ந்தவர்கள் 6 அணிகளாக கலந்து கொண்டதுடன். வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு வெற்றி கோப்பை, மொடல்கள், மற்றும் ரொக்க பரிசுகளை கம்பேனியின் இயக்குணர் SAS சதக்கத்துல்லா, மேலாளர்கள் சீனி அலி, மஹ்ரூப் அப்துல் காதர், நீயாசுதீன் மற்றும் அஸ்மாவில் ஆகியோர் வழங்கினர்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெங்களூருவில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு!-மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு..
by Askar
written by Askar
பெங்களூருவில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு!-மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு..
பெங்களூரில் எப்போதும் இல்லாத வகையில் இவ்வாண்டு கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.
குடிநீர் கிடைக்காமல் மக்கள் பரிதவிப்பதை தவிர்க்க மாநகர குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
குடிநீர் பஞ்சத்தின் தாக்கம் சாமானிய மக்களுக்கு மட்டுமில்லாமல், முதல்வர் சித்தராமையாவின் அரசு அலுவலக இல்லமான கிருஷ்ணா, துணை முதல்வரின் அரசு இல்லம், சில அமைச்சர்களின் வீடுகளுக்கும் காவிரி குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவில் 20 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் தனியார் பள்ளிகள் வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவுரை வழங்கி உள்ள நிலையில், பெங்களூருவில் தோட்டம், கார் கழுவுதல், கட்டுமானப் பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
கட்டுப்பாடுகளை மீறி தண்ணீரை பயன்படுத்தினால் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தடையை தொடர்ந்து மீறினால் 5 ஆயிரம் அபராதத்துடன் தினமும் 500 கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்தார்..
மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிக்கப்படவுள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அருண் கோயலின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
அருண் கோயல் பதவி விலகியதன் மூலம் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.2027ஆம் ஆண்டு வரை பதவிக் காலம் உள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.
அவரது ராஜிநாமாவைத் தொடர்ந்து தேர்தல் ஆணையர்கள் மூவரில் தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார்.கோயல் ஓய்வுபெற்ற பஞ்சாப் கேடர் ஐஏஎஸ் அதிகாரி. அவர் நவம்பர் 2022 இல் தேர்தல் ஆணையராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பால் தினகரனின் மனைவி இவாஞ்சிலின் பேச்சுக்கு எதிராக ஜேம்ஸ் வசந்தன் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்வி..
by Askar
written by Askar
பால் தினகரனின் மனைவி இவாஞ்சிலின் பேச்சுக்கு எதிராக ஜேம்ஸ் வசந்தன் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்வி..
சமீபத்தில் பால் தினகரனின் மனைவியான இவாஞ்சலினின் பேச்சு கேலிக்கு உள்ளான நிலையில் இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
இவாஞ்சலின் பால் தினகரன் ஒரு வீடியோவில், தங்கள் குடும்பம் கனடாவில் இருக்கும் போது அதிகமாக கஷ்டப்பட்டதாகவும் அந்த நேரத்தில் சொந்த வீடு இல்லாமல் அங்கு ஒரு ஹோட்டலில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி இருந்தோம். ஆனால் தாங்கள் செய்த பிரேயர் காரணமாக தங்களுக்கு கடவுள் ஒரு சொந்த வீடு வாங்கும் அளவிற்கு வசதிகள் கொடுத்தார் என்றும், அதுபோல இரவு நேரத்தில் தன்னுடைய கனவில் ஒரு தேவதை வந்து உனக்கு என்ன கார் வேண்டும் என்று கேட்டார்.
அப்போது தான் தன்னுடைய வீட்டில் இருந்த கார் புக்லெட் புத்தகத்தில் இடம் பிடித்திருந்த ஒரு போட்டோவை காட்டி இந்த கார் தான் வேண்டும் என்று சொன்னேன். பிறகு அந்த தேவதை போய்விட்டது. அடுத்த நாள் நான் தூங்கி கண் விழித்ததுமே என்னுடைய கணவர் பால் தினகரன் உனக்கு என்ன கார் வேண்டும் என்று அந்த தேவதை கேட்டது போலவே கேட்டார். அப்படியாக நாங்கள் கனடாவில் இருக்கும் போது எங்களுக்கு கடவுள் வீடு வாங்குவதற்கும் கார் வாங்குவதற்கும் ஆசிர்வாதம் செய்தார் என்று பேசி இருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பல கேள்விகளோடு உடைய நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில், திருமதி இவாஞ்சலின் பால் தினகரன் அவர்களுக்கு, அண்மையில் நீங்கள் பேசியிருந்த ஒரு காணொலி என் கவனத்துக்கு வந்தது.
இந்தக் குறிப்பிட்டக் காணொலி கிறிஸ்தவர் மட்டுமல்லாது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் அது நேர்மறையான காரணத்துக்காக அல்ல; ஏளனத்துக்கும் நகைப்புக்கும். இந்தக் கேலியும் கிண்டலும் உங்களைப் பற்றியோ, உங்கள் குடும்பத்தைப் பற்றியோ தனிப்பட்ட விதத்தில் இருந்திருந்தால் என்னை ஒன்றும் பாதித்திருக்காது.
உங்களுக்காக கொஞ்சம் பரிதாபப்பட்டுவிட்டு, என் வேலையைப் பார்த்திருப்பேன். ஆனால், அது ஆண்டவரையும், ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் தவறாகக் காட்டியதால் இந்தப் பகிர்வு. உங்கள் குடும்பம் எவ்வளவு செல்வாக்கான குடும்பம் என்பது உலகத்துக்கே தெரியும். புகழிலும், பேரிலும் மட்டுமல்ல; பணத்திலும், சொத்திலும்தான்.
பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு நீங்கள் அதிபதி என்பது ஊரறிந்த ரகசியம். உங்கள் மாமனார் காலத்திலிருந்து இன்று உங்கள் பேரப்பிள்ளைகள் வரை அத்தனை பேரும் எப்படிப் படாடோபமான செல்வச் செழிப்பில் திளைக்கிறவர் என்பது மறைக்கவே இயலாத உண்மை. உலகப் பணக்காரர் பட்டியலில் ஏன் உங்கள் குடும்பத்தின் பெயர் வருவதில்லை என்று நாங்கள் வியப்பதுண்டு!
உங்கள் குடும்பம் எதற்கு, எப்படி கனடா நாட்டுக்குச் சென்றது; அந்தக் குடியுரிமை எப்படி வாங்கினீர்கள்; பின் எதற்காக, எப்படி அமெரிக்காவுக்கு மாற்றலாகிச் சென்றீர்கள்; இன்று டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரத்தில் எவ்வளவு பெரிய வீட்டை வாங்கிக் குடியிருக்கிறீர்கள்; வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்தச் செய்தியை எவ்வளவு ரகசியமாக பல ஆண்டுகள் ஒளித்துவைத்தீர்கள்;
அவர்களுக்குத் தெரிந்தால் உங்கள் பலகோடி வருமானம் போய்விடும் என்பதால் அதிகப் படிப்போ, உலக அறிவோ இல்லாத பல இலட்ச பாமர விசுவாசிகளை எப்படி இங்கிருப்பது போலவே ஏமாற்றி வந்தீர்கள் என்பவைப் போன்ற பல தகவல்களை மேல் மட்டக் கிறிஸ்தவர் அறிவர். இந்தச் சூழலில் நீங்கள் “எப்படி ஒரு வீடு கூட இல்லாமல் ஓட்டலில் தங்கியிருந்தோம்” என்று நடிகையர் திலகம் அவர்கள் திறமையை மிஞ்சும் விதமாகக் குரலை தாழ்த்தி, உதடுகள் துடிக்க, வரும் கண்ணீரை அடக்க முயல்வது போலெல்லாம் ஒரு சாகஸம் செய்திருக்கிறீர்கள்!
ஒரு வீடு இல்லாமல் இத்தனை குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு போய் கனடா நாட்டில் ஒரு நட்சத்திர விடுதியில் நாட்கணக்கில் தங்கக்கூடியவருக்கு எவ்வளவு பண வலிமை இருக்கும் என்று கொஞ்சம் அறிவு உள்ளவன் கூட யோசிப்பான் என்று உங்களுக்குத் தோணலையா? இவ்வளவு அப்பட்டமாகப் பொய் பேசினால் அசிங்கமாகி விடுமே என்றுகூட உங்களால் சிந்திக்க முடியலையா?
எதற்காக தேவையற்ற இந்தப் பொய் நாடகம்? அதுவும் இத்தனை ஆண்டுகள் கழித்து? வேதத்திலுள்ள நல்ல செய்திகளை மட்டும் நீங்கள் பேசினால் போதும்; உங்களுடைய பொய்சாட்சிகள் வேண்டாம்! வீடு வாங்கிய கதையும், கார் வாங்கிய கதையும், இந்த அம்மா விடுற கதைகளையும் கேட்கக் கேட்கக் கொதிக்கிறது என்று பல கிறிஸ்தவ விசுவாசிகள் புலம்புகிறார்கள். தமிழ்க் கிறிஸ்தவச் சமூகமே அவமானத்தில் குறுகி நிற்கிறது.
உங்கள் குடும்பத்தின் உண்மையான பின்னணியை அக்குவேறு ஆணிவேறாகப் பட்டியலிடக் காத்திருக்கின்றனர் பலர். அது கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் மட்டுப்படுத்திவிடும் என்கிற ஒரே காரணத்துக்காக அமைதி காக்கின்றனர். கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்க முயல்கிற பல கோமாளிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்க உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது.
நற்செய்தியைப் பரப்பவேண்டிய பொறுப்பிலுள்ள நீங்கள் ஏன் இப்படிப் பொய்ச்செய்தியைப் பரப்பி பணம் பறிக்க முயல்கிறீர்கள்? மூத்த தினகரன் ஐயா தொடங்கிய அந்த நல்ல பணியை, உங்களுக்கென்று கொடுக்கப்பட்டிருக்கிற ஊழியத்தை கொஞ்சமேனும் உண்மையுடனும், மனச்சான்றுடனும் செய்ய முற்படுங்கள்.
இருக்கிற பணம் போதும். இதற்கு மேலும் ஏன் இப்படி வெறிபிடித்து அலைகிறீர்கள்? மக்களின் சாபத்துக்குக் கூட நீங்கள் தப்பித்து விடலாம். ஆண்டவரின் சினத்துக்கு ஆளாகிவிடாமல் கொஞ்சம் திருந்திச் செயல்படப் பாருங்கள். பலர் இன்னமும் உங்களை நம்புகிறார்கள். அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதா, உங்களை நினைத்து வேதனைப்படுவதா என்று புரியவில்லை! என்று பதிவிட்டு இருக்கிறார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
71 ஆவது உலக அழகியாக மகுடம் சூடினார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா..
by Askar
written by Askar
71 ஆவது உலக அழகியாக மகுடம் சூடினார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா..
இந்தியாவில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் இந்த அழகி போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது.
28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அழகி போட்டி இந்தியாவில் மீண்டும் நடைபெற்றது.
மும்பையில் உலக அழகி போட்டியின் இறுதி போட்டி நேற்று (மார்ச் 9) நடந்தது.
71ஆவது உலக அழகியாக செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெண் தேர்வு.
கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகியானார்.
உலக அழகி கிறிஸ்டினாவுக்கு 2021 ஆம் ஆண்டு உலக அழகியான கரோலினா மகுடம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -10
(கி.பி.1299-1922)
கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகளில் யூதர்கள் கொடுமைப்
படுத்தப்பட்டனர்.
ஆகவே யூதர்கள் உஸ்மானிய கிலாபத் பகுதிகளில் வந்து தஞ்சம் அடைந்தனர்.
உஸ்மானிய முஸ்லீம் அரசு யூதர்களை அரவணைத்தது.
யூதர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது.
யூதர்களுக்கு நிறைய சலுகைகளை செய்து கொடுத்தது.
கிறிஸ்தவ தேவாலயங்கள் பாதுகாக்கப்பட்டன.
பாதிரியார்களுக்கு
அரசாங்கத்தின் சலுகைகள் வழங்கப்பட்டன.
ஐரோப்பிய கிறித்தவ மன்னர்களின் பகுதிகளில் ஏராளமான வரிகள் வசூலிக்கப்பட்டன.
உஸ்மானிய இஸ்லாமிய ஆட்சியில் வரிவிகிதங்கள் மிகக்குறைவாகவும்,
எளிதாகவும் இருந்தன.
அதிகாரிகளும்
வசூல்களை செய்வதில் கெடுபிடிகள் இல்லாமல் நடந்து கொண்டனர்.
முஸ்லீம்களிடம் ஜகாத் 2.5% எனவும்,
மற்ற மக்களிடம்
ஜிஸியா என்ற பெயரில் ஜகாத்தைவிட குறைவான வரியும் வசூலிக்கப்பட்டன.
ஆகவே உஸ்மானிய கிலாபத்தில் வாழ்ந்த
முஸ்லீம்களும்,
கிறிஸ்தவர்களும்,
யூதர்களும் மிக மகிழ்ச்சியில் இருந்தனர்.
முராத்தின் ஆட்சிகாலத்தில் நிறைய கல்வி நிலையங்கள்,
மஸ்ஜிதுகள்,
மதரசாக்கள் என ஏராளமான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.
கி.பி.1381 ஆம் ஆண்டில் செர்பியா மற்றும் பல்கேரியா நாடுகள் ஒன்றிணைந்து
உஸ்மானிய படையை எதிர்த்து போருக்கு வந்தன.
இந்தப் போரிலும்
உஸ்மானிய ராணுவம் மிக எளிதாக வெற்றி பெற்றது.
உஸ்மானிய ராணுவத்தின் சிறந்த தளபதி லாலா சாஹின் மரணமடைந்தார்.
அவருக்கு பதிலாக
தளபதியாக தைமூர்தாஸ் பதவி ஏற்றார்.இவர்தான்
துருக்கிய உஸ்மானிய கொடியை வடிவமைத்தார்.
உஸ்மானியர்களின்
முன்னோடிகளான
செல்ஜுக்கியர்களின்
கொடியில் இருந்த
நட்சத்திரத்தையும்,
பிறையையும் எடுத்து கொண்டு சிவப்பு கொடியில் பதித்தார்.
இதுவே துருக்கியர்களின் கொடியாக புகழ்பெற்றது.
குதிரைப்படையை
தைமூர்தாஸ் மிக நவீனமாக மாற்றி அமைத்தார்.
அதிகமான குதிரைகள் வாங்கி
பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
உஸ்மானிய ராணுவத்தின் குதிரைப்படை மிக வலுவானதாக இருந்தது.
உஸ்மானிய ராணுவ வலிமையால் ஆசியாவின் பல பகுதிகளையும்
ஐரோப்பாவின் பல பகுதிகளையும் கைப்பற்றினார்கள்.
உஸ்மானிய ராணுவத்தின் முன்னேற்றத்தையும்
வெற்றிகளையும் அன்றைய நாடுகளால் தடுக்க முடியவில்லை.
மன்னர் முராத்தின்
மூத்த மகன் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டதால் தண்டனை அறிவிக்கப்பட்டு
இரண்டு கண்களிலும்
பழுக்க காய்ச்சிய இரும்புக்கம்பியை
சொருகி இரண்டு கண்களும் குருடாக்கப்பட்டன.
முராத்தின் இளையமகன் பயாசித் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார்.
கி.பி 1388 ஆம் ஆண்டில் செர்பியா மற்றும் அல்பேனியா நாடுகளின் கூட்டணி படைகள் உஸ்மானிய ராணுவத்தை தாக்கின.
கோசோ என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் இளவரசர் பயாசித் தலைமையில் உஸ்மானிய படைகள்
போரை எதிர்கொண்டன.
இந்தப் போரில் இளவரசர் பயாசித்திற்கு இடி,மின்னல் என்று பெயர் சூட்டப்பட்டது.
அப்படி என்ன நடந்தது??
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஈஷாவில் பல்லாயிரம் ஆண்டு பண்பாட்டை பறைச்சாற்றும்‘தமிழ் தெம்பு’ திருவிழா; ஆதியோகி முன்பு மார்ச் 17-ன் தேதி வரை தினமும் நடைபெறும்
உலகின் தொன்மையான ஆன்மீக கலாச்சாரமான தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை கொண்டாடி மகிழும் விதமாக ‘தமிழ் தெம்பு’ என்னும் மண் சார்ந்த பண்பாட்டு கலை திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 17-ம் தேதி வரை தினமும் நடைபெற உள்ளது. மஹாசிவராத்திரி விழாவை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தமிழர்களின் ஆன்மீகம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய தமிழர் வாழ்வியல் கண்காட்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், ரேக்ளா பந்தையம், நாட்டு மாடுகள் கண்காட்சி மற்றும் சந்தை, பாரம்பரிய உணவு திருவிழா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. மேலும், குதிரை சவாரி, ஒட்டக சவாரி, ராட்டிணம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற உள்ளது.
இந்நிகழ்ச்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். மாலையில் பல்வேறு ஊர்களில் தலைச்சிறந்து விளங்கும் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். முதலாம் நாளான (மார்ச் 9) அன்று மாலை 6 மணியளவில் திருப்பூரை சேர்ந்த கலைக் குழுவின் சலங்கை ஆட்டம் நடைபெற்றது. இது தவிர விழாவில், கைலாய வாத்தியம், ஆதியோகி திவ்ய தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேலும், இரண்டாம் நாளான நாளை மதுரையை சேர்ந்த கலை குழுவின் பறை இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதோடு வரும் மார்ச் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நாட்டு மாட்டு சந்தையும், மார்ச் 17 அன்று ரேக்ளா பந்தையமும் நடைபெற உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் அதிநவீன ஏசி பேருந்து; வியர்வையில் குளித்த பயணிகள்..
மதுரை பயணி ஒருவரின் ஏசி அனுபவம்: மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி TN58N2568 என்கின்ற அரசு பேருந்து நேற்று காலை 9.50 மணி அளவில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பியது.
திருமங்கலத்திற்கு ரூபாய் 40 கட்டணம் செலுத்தினோம். பேருந்து ஏறிய பிறகு தான் தெரிய வருகிறது இது செயற்கையான ஏசி பேருந்து இல்லை எனவும், கதவை திறந்து வைத்து ஏசி போடும் பேருந்து என தெரிய வந்தது.
இதனால் மனம் நொந்து போய் நடத்துனரிடம் கேட்டதற்கு எதுவாக இருந்தாலும் நீங்க நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளுங்கள் என அலட்சியப் போக்கில் பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. போதிய அளவில் பராமரிப்பு இல்லாமல் எவ்வித பாதுகாப்பு குளிர்சாதன வசதிகள் இல்லாமல் அதற்கான கட்டணத்தையும் வசூல் செய்து தானியங்கி கதவு திறந்து வைத்து மக்களை பயணம் செய்து வைத்தது பொதுமக்களிடையே பயணிகள் இடையே கொந்தளிப்பு ஏற்படுத்தியது. வெயிலு வெயிலுனு ஏசி பஸ்சுல போனா – ஏசி போடாம கதவை திறந்து விட்டு ஹாயா பஸ்ஸை ஓட்டுகிறார்கள் – வியர்வையில் குளித்த நொந்து போய் வேறு வழியின்றி சென்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 44-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு பரிசளிப்பு விழா !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 44-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஏ.சேக்தாவூது தலைமையில் முகமது சதக் அறக்கட்டளையின் தலைவர் முகமது யூசுப், செயலாளர் ஹாஜியாணி ஷர்மிளா, செயல் இயக்குனர் ஹமீது இப்ராஹிம், ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மின்னியல் துறையின் தலைவர் எஸ்.பி.நாகராஜன் வரவேர்ப்புரை வழங்கினார். இவ்விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், ராமநாதபுரம் ஸ்ரீ ரமணா கட்டட கட்டுமான தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் காந்தி , ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரான ராமையா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து கடந்த வருடம் அனைத்து துறைகளிலும் பாலிடெக்னிக் கல்லூரியின் செயல்பாடு, வளர்ச்சி மற்றும் வெற்றிகள் பற்றி எடுத்துரைத்து ஆண்டு அறிக்கையினை கல்லூரி பி.மருதாச்சலமூர்த்தி சமர்ப்பித்தார். இவ்விழாவில் கடந்த ஏப்ரல் 2023 மற்றும் அக்டோபர் 2023 வாரிய தேர்வுகளில் ஒவ்வொரு பருவத்திலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் , பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கும் , கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் விஷ்ணு மாநில அளவில் தரம் பெற்று 700 க்கு 696 மதிப்பெண்கள் மற்றும் நான்கு பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்தமைக்கும் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் மின்னணுவியல் துறை தலைவர் பி.பாலசுப்ரமணியன் நன்றிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர் சிறப்பாக செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முடிவுக்கு வந்தது இழுபறி; திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு..
by Askar
written by Askar
தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு முடிந்துவிட்டன. இன்று மாலையில் காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்து உள்ளனர். அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.கே.சி.வேணுகோபால், அஜோய்குமார், முகுல் வாஸ்னிக், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வந்தனர்.தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அறிவாலயம் வந்துள்ளனர்.இதற்கிடையில் காங்கிரஸ் கேட்கும் மொத்த தொகுதிகள் குறித்தும், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது, மக்கள் நீதி மய்யத்திற்கு எந்த தொகுதி ஒதுக்குவது, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதித்தார்.இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாட்டில் எங்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தான் வாக்கு வங்கி அதிகம்!- ஜி.கே.வாசன் நம்பிக்கை..
by Askar
written by Askar
தமிழ்நாட்டில் எங்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தான் வாக்கு வங்கி அதிகம் இருப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குழு தொடர்பான தேர்தல் குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் தமாகா தலைவர் ஜிகே வாசன் பங்கேற்றார் ஆலோசனை கூட்டம் நிறைவுற்ற பின்னர், ஜிகே வாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தொகுதி பங்கீடு குழுவின் கூட்டமானது இங்கே நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கடந்த நாட்களில விநியோகிக்கப்பட்ட வேட்பாளர் விண்ணப்பங்கள் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அதைத் தொகுதிவாரியாக பிடித்து வேட்பாளரின் சாதகம் பாதகம் தொகுதியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு, தொகுதியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சியுடன் கலந்து ஆலோசித்து தொகுதிகள் குறித்து முடிவெடுக்கப்படும்.
கடந்த நான்கு நாட்களில் 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. 35 நாடாளுமன்ற தொகுதிக்கு விண்ணப்பங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் எந்த தொகுதியில் நாம் போட்டியிடுகிறோம் என்பது குறித்து கூட்டணியின் தலைமையான பாஜகவிடம் பேசி முடிவு செய்யப்படும்.
சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைத்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது இதற்கு காரணம் போதைப்பொருள் இதைப்பற்றி தமிழ்நாடு அரசு கண்டு கொள்ளவே இல்லை எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு கேட்பதாகவே இல்லை.
தமிழ்நாட்டில் எங்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது எந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பது குறித்து கூட்டணி தலைமையே முடிவு செய்யும் எல்லா மண்டலத்திலும் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகளில் என் பெயரில் கூட ஐந்து விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.
சாதி, மொழி, இனம், மதம் இவை அப்பாற்பட்டு வேட்பாளரின் வெற்றி, தொகுதியின் பலம் இவை பொறுத்து வேட்பாளர் தேர்வு இருக்கும். சரத்குமாரின் இயக்கம் மரியாதைக்குரிய இயக்கம் அவரின் வரவு நல்வரவு வெற்றி கூட்டணி. கூட்டணி தொடர்பாக பாஜகவிடம் நாங்கள் எந்த விதமான நிபந்தனையும் விதிக்கவில்லை தமிழ்நாட்டின் பெரிய கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கருதுகிறது. டாக்டர் ராமதாஸ் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி மட்டுமல்லாமல், இந்தியாவின் மூத்த தலைவராகவும் அவர் இருக்கிறார் அவருக்கான முக்கியத்துவம் இருக்கும்.
தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது நாளுக்கு நாள் எங்களுக்கு ஆதரவு பெருகி கொண்டிருக்கிறது மூன்றாவது முறையாக பிரதமர் மோடியின் வெற்றியை நாம் கொண்டாட வேண்டும் என கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
128 ஆண்டுகள் பழமையான திருநெல்வேலி ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..
by Askar
written by Askar
128 ஆண்டுகள் பழமையான திருநெல்வேலி ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..
திருநெல்வேலி ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் மற்றும் மான்புறு மங்கை விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆசிரியர் பயிற்சி முதல்வர் முனைவர் ஜெயமேரி தலைமை தாங்கினார். முனைவர்.ஃபிரியா வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட இளைஞர் நீதிக் குழுமம் உறுப்பினர் வழ. ஆரோக்கிய மேரி.எம்.எல். கலந்து கொண்டு சமூகத்தில் பெண்களின் பங்கு பற்றி சிறப்புரையாற்றினார்.
விழாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக சமூகத்தில் பணியாற்றிய நெல்லை இளைஞர் நீதிக் குழுமம் உறுப்பினர் வழ.ஆரோக்கியமேரி, நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி, செல்வி. ரர்ஜர் பீவி ஆகியோர்க்கு மான்புறு மங்கை விருதை முனைவர் ஜெயமேரி. நறுமுகை நற்றமிழ்ச் சங்கம் கௌரவத் தலைவர் லயன் தம்பான் ஆகியோர் இணைந்து வழங்கி கௌரவித்தனர்.
தொடர்ந்து பெண்களின் முன்னேன்றத்திற்கு பெரிதும் துணை நிற்பது தன்னம்பிக்கையே. சுற்றமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் மாணவிகள், பேராசிரியர்கள்,அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் முனைவர் அனுசுயா நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உடல்களை தேடும் ஆரோக்கியம்; ரமலான் ஒரு ஆன்மீக பயிற்சி களம்! அழகான ஆலோசனைகள் வழங்கும், கவிஞர் கப்ளிசேட்..
by syed abdulla
written by syed abdulla
ரமலான் ஆன்மாவை வலுப்படுத்துகிறது.
கட்டுப்பாட்டுடன் வாழ்க்கையை போதிக்கிறது.
ரமலான் ஒரு ஆன்மீக பயிற்சிகளம்.
ரமலான் வழங்கும் ஆரோக்கியங்கள்
நம்மை ஆச்சரியப்
படுத்துகிறது.
நாம்தான் கண்டு கொள்வதே இல்லை.
சஹர் உணவை முடிந்தவரை பிற்படுத்தியும்,
நோன்பு திறப்பதை முடிந்தவரை முற்படுத்தியும்,
இஸ்லாமிய வழிகாட்டல் நமக்கு சொல்லித் தருகிறது.
இன்றைய மருத்துவ உலகம் அதையே வழிமொழிகிறது.
சூரிய உதயத்திற்கு நெருக்கமாக உண்பதையும்,
சூரியன் மறைந்தவுடன்
உண்பதையும்
(இஃப்தார் நேரம்) ஆரோக்கியம் என்கிறது மருத்துவ உலகம்.
நமது சஹர் உணவாக
Protein அதிகம் இருக்கிற உணவுகள்
(முட்டை, பால்)
நார்ச்சத்து அதிகமுள்ள vegetables
மற்றும் நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள்
நீர் இவற்றை சஹர் உணவாக உண்ணுங்கள்.
இனிப்புகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.
ஏறக்குறைய 13-14 மணி நீண்ட நேரம் நமது உணவுப் பாதை
முழு ஓய்வு கொள்கிறது.
இதனால் உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது.
நமது உடலில் தேவையான புதிய செல்கள் உருவாகி
நமது உடலை புதிதாக கட்டமைக்கிறது.
நோன்பு திறக்கும்போது எண்ணெய் பலகாரங்களை அறவே ஒதுக்கி விடுங்கள்.
நல்ல பழங்களை கொண்டு நோன்பு திறங்கள்.
எண்ணெயில் பொறிக்காத Non veg சாப்பிடுங்கள்.
Grilled (சுட்ட) Non veg சாப்பிடுங்கள்.
Don’t eat fried items.
பொறிக்கப்பட்ட
எண்ணையில் மூழ்கடிக்கப்பட்ட பொருள்களை ( Fried)
தவிர்த்து விடுங்கள்.
சிறிதளவு சோறு,
ரொட்டி என எடுத்துக்
கொள்ளுங்கள்.
அதுவே இரவு உணவாக முடியட்டும்.
இரவில் படுக்கும் போது பால் குடித்து அமைதியாக இருக்கும் இன்சுலினை தூண்டாதீர்கள்.
Low Carb High protein
உணவுகள் வயிற்றில் கொழுப்புகள் சேராமல் உடல் பருமனாகாமல்
தொப்பையில்லாமல்
காப்பாற்றுகிறது.
ரமலானில் இதுபோன்ற உணவுகளை நல்ல இடைவெளிகளில்
சாப்பிடும்போது
உடல் ஆரோக்கியமாகிறது.
செல்கள் தன்னை புதுப்பித்துக் கொள்வதால் Cancer
மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளால் ஏற்படும் நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
Ramadan is for fasting
Ramadan is not for feasting.
ரமலானை ஆன்மீக விழா நாட்களாக நினைக்காமல்
வகைவகையான உணவுத் திருவிழா
நாட்களாக நமக்குள்
விதைத்து கொண்டோம்.
ரமலான் என்றாலே
வகைவகையான
உணவுகள்,
வகைவகையான இனிப்புகள்
என்று ஏற்படுத்தி கொண்ட புரிதல்களால்,
அய்சாம்மா…இந்த ரமலானில பச்சி, போண்டா வேண்டாம்..
உடம்புக்கு கெடுதல்னு சொல்றாங்க…
அதனால வேணாம் என ரஹீம்மாமு சொல்ல…
ஏங்க… ஏதாவது ஒன்னை ஏதாவது ஒரு டாக்டர் சொல்லிக்கிட்டே இருப்பாரு…
டப்பா full லா பச்சி மாவை என்ன செய்ய என மொம்மானி புலம்ப,
பக்கத்தூட்டு அலமேலு அம்மாவுக்கு கொடுத்துரு..
அப்புறம் சாப்பட்டுபோட்டு
நெஞ்சு எறியுது..
வயிறு எறியுன்னு
சொல்லக்
கூடாதுன்னு மாமு சொல்ல..
பச்சி மாவு பக்கத்து வீட்டுக்கு பயணமானது.
இந்த வருச நம்ம உணவு முறைய கடை பிடிச்ச அய்சாதாய் மொம்மானிகிட்ட
Review கேட்டுக்கலாம்.
ரமலான் பசித்திருத்தலை அதன் ஆன்மீக ஆரோக்கிய நன்மைகளை
நமக்கு புரியவைப்பதும்,
மனதை கட்டுப்பாடுகளால் வலுவாக்குவதும்
நமக்கான வரம்.
நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்
அவர்களின் உணவு
பேரீத்தபழமும்
ஜம்ஜம் தண்ணீருமாக
இருந்தது.
அந்த எளிய உணவே
மனித சமூகத்திற்கான பாடம்.
உண்ணுங்கள்
பருகுங்கள்
வீண்விரயம் செய்யாதீர்கள்
என்ற திருமறையின்
வரிகள் நமக்குள்
ஏதாவது மாற்றம் நிகழ்த்த வேண்டும்.
சாப்பாட்டு மேசையில்
பரவிக்கிடக்கும்
சிதறிக்கிடக்கும்
உணவுகளை விட
எளிய உணவுகள்
ஆன்மாவையும்
உடலையும் வலுவாக்கும்.
உணவுமுறைகள்
சரியாக இருந்தால்
Hormone கலாட்டாக்கள்
செய்யாமல் Insulin போன்ற Hormone கள்
ஓய்வுகொள்ளும்
போது உடல் மட்டுமல்ல
மனமும் ஆரோக்கிய
மடைகிறது.
இந்த ரமலானில்
இதுபோன்ற உணவுகளை
முயற்சியுங்கள்.
உடலாலும்
உள்ளத்தாலும்
நீங்கள் ஆசீர்வதிக்கப்
படுவீர்கள்…!
கவிஞர், கப்ளிசேட்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் உலக மகளிர் தின விழா; முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பங்கேற்று சிறப்புரை..
written by Abubakker Sithik
ஆண்கள் நேரத்துக்கு தகுந்த மாதிரி சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறி கொள்வார்கள். பெண்கள் அப்படி மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என மதுரையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் ஆர்பி. உதயகுமார் பேச்சு
மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள யூனியன் கிளப் கூட்டரங்கில் வைத்து உலக மகளிர் தின விழா பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், சரவணா பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை சேர்மன் மருத்துவர். சரவணன், ஆடிட்டர் சேதுமாதவா, தொழிலதிபர் சூரஜ் சுந்தர சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மருத்துவத்துறை, கலைத்துறை, எழுத்துத் துறை, இப்படி பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிருக்கு ஸ்த்ரி ரத்னா விருது வழங்கி கெளரவ படுத்தினர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயயகுமார் பெண்களை வாழ்த்தி பேசும் போது ஆண்கள் விருது வாங்கும் போது வீட்டில் உள்ள பெண்கள் கீழே அமர்ந்து பார்த்தோம். இன்று அவர்களுக்கு விருது வழங்கி கெளரவ படுத்துவதை கீழே அமர்ந்து பார்க்கிறோம் என்றார். சர்வதேச மகளிர் தினம் இன்று ஜனாதிபதியாக பெண் ஒருவர் இருக்கிறார். மதுரையில் மீனாட்சி ஆட்சி புரிகிறார். முன்பெல்லாம் கணவருடைய பெயரை சொல்வதென்றால் அருகில் உள்ளவர்களை அழைத்து பெயரை சொல்லும் படி கூறிய காலம் மாறி இன்று
பெண்கள் ராக்கெட் ஏறி செல்கிறார்கள். இந்த மாற்றத்துக்கு காரணம் இது போன்ற விழாவை நடத்தி அமுக்கி வைக்கப்பட்ட, புதைத்து வைக்கப்பட்ட பெண்களின் திறமையை உலகத்திற்கு அடையாளம் காணும் விதமாக அன்பின் வடிவமாக இருக்கும் பெண்களின் பெருமையை உலகளாவிய சர்வதேச அளவில் போற்றி பாராட்டப்படுவதால் தான். இந்த காலம் மாற்றத்திற்கு காரணம் பெண்களால் தான் இந்த உலகம் இயங்கும் என இந்த நாடு சொல்கிறது. இந்த பாராட்டு ஆசீர்வாதம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. மன்னிக்கும் குணம் பெண்களுக்கு தான் அதிகம் உள்ளது. அதனால் தான் பெண்களை கருணையின் வடிவம் என்கிறார்கள்.
தலைமுறையை உருவாக்க கூடிய பொறுப்பு 10 மாதம் குழந்தையை சுமக்கும் அந்த தெய்வீக சுமையை பெண்களுக்கு கடவுள் ஏன் கொடுத்திருக்கிறார். ஆண்களுக்கு பொறுமை இல்லை. அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி பொறுமை நிதானம் கடமையும் பெண்களுக்கு இருக்கிற காரணத்தினால் தான் பெண்களுக்கு கடவுள் அந்த தெய்வீக சுமையை கொடுத்திருக்கிறார். பெண் குழந்தை பிறந்தால் சுமை என்ற காலம் மாறியதற்கு காரணம் யார் என்றால் ஜெயலலிதா தான். பெண்களுக்காகவே சிந்தித்து சிந்தித்து எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். ஆண்கள் நேரத்துக்கு தகுந்த மாதிரி சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறி கொள்வார்கள். பெண்கள் அப்படி மாற்றிக்கொள்ள மாட்டார்கள். எத்தனை கொடுமைகள், சோதனைகள், துன்பங்கள் , சுமைகள் சவால்கள் துயரங்கள் கண்ணீர் வந்தாலும் தன்னுடைய கருணை உள்ளம் மாறாதவர்கள் மகளிர் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 49 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை,
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.360 அதிகரிப்பு.
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 49,200 ரூபாய்க்கு விற்பனை.
கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,150க்கு தங்கம் விற்பனை.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களிடம் கடந்த 2000-ஆம் ஆண்டில் “ஸ்த்ரிசக்தி” புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அவர்கள். அவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.
இந்த செய்தியினை கேள்விப்பட்ட மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்கு புதியதாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தினார்.
இதன்படி பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்குப் புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல்.!? முடிவுக்கு வருகிறதா கூட்டணி இழுபறி..!?
by Askar
written by Askar
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் நீண்ட இழுபறிக்கு பிறகு இப்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், தேனி, சிவகங்கை ஆகிய 9 தொகுதிகளும் புதுவை ஒரு தொகுதியும் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.அதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.இந்த தேர்தலில் கூடுதலாக 2 தொகுதி சேர்த்து 12 தொகுதிகள் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜய்குமார், முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, அப்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வ பெருந்தகை ஆகியோர் கடந்த மாதம் அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று பேசினார்கள். அத்துடன் காங்கிரஸ் விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்தார்கள்.ஆனால் தி.மு.க. தரப்பில் 5 பிளஸ் 1 என்று கூறப்பட்டது. இது தொடர்பாக டெல்லி தலைவர்களுடன் தி.மு.க. தலைவர்கள் பேசினார்கள்.பேச்சுவார்த்தை முழுவதும் டெல்லி தலைவர்களுடனேயே தொடர்ந்தது. தி.மு.க. தரப்பில் ஒரு கட்டத்தில் 6 பிளஸ் 1 என்று முடிவாக சொல்லியதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.வடமாநிலங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்குவதில் இழுத்து பிடித்தது போல் தமிழகத்திலும் சிக்கல் ஏற்பட்டதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் தரமுடியாது என்று தி.மு.க. பிடிவாதம் காட்டியது. அதே போல் 12-ல் இருந்து குறைவாக சம்மதிக்கப் போவதில்லை என்று காங்கிரசும் பிடிவாதம் காட்டியது.இதனால் உடன்பாடு காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. வரட்டும் பார்க்கலாம் என்று இரு தரப்பும் கொஞ்ச நாட்கள் விட்டு பிடித்தன.இதற்கிடையில் 3 தொகுதிகளுக்காக முரண்டு பிடித்து வந்த விடுதலை சிறுத்தைகளுக்கு கடைசியில் 2 தொகுதிகள் வழங்கப்பட்டது.இரண்டு தொகுதிகளுக்காக மல்லு கட்டிய வைகோவும் ஒரு தொகுதியை பெற்றுக் கொண்டு அமைதியாகி விட்டார்.கூட்டணியில் இடம்பெற்றுள்ள எல்லா கட்சிகளுக்கும் கடந்த தேர்தலில் ஒதுக்கிய எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கியதால் கூட்டணி பங்கீடு சுமூகமாக முடிந்தது.அடுத்து காங்கிரஸ்தான் என்ற நிலையில் தி.மு.க. தலைவர்கள் நேற்று டெல்லி காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது எல்லா கட்சிகளுக்கும் பழைய எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்து விட்டோம். எனவே நீங்களும் கூடுதல் தொகுதி வேண்டும் என்ற எண்ணத்தை கை விடுங்கள். பழைய எண்ணிக்கையில் அதாவது 9 பிளஸ் 1 தர சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.தொகுதி உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இன்று மாலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதற்காக இன்று மாலை 4 மணிக்கு டெல்லி மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால், அஜய்குமார் ஆகியோர் சென்னை வருகிறார்கள்.விமான நிலையத்தில் இருந்து நேராக அறிவாலயம் செல்கிறார்கள். அவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடுகிறார்கள்.இந்த உடன்பாட்டின் போது எந்தெந்த தொகுதிகள் என்பதும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இதற்கிடையில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற திருச்சி தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்குவதாக கூறப்படுகிறது.அதே போல திமு.க. தமிழகம் முழுவதும் கள ஆய்வு நடத்தியதில் சில தொகுதிகள் காங்கிரசுக்கு சாதகமாக இல்லை என்றும் அதனால் அந்த தொகுதியை மாற்றி கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி கிருஷ்ணகிரி, ஆரணி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. தேனிக்கு பதிலாக மயிலாடுதுறை வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.தலைநகர் சென்னையிலும் ஒரு தொகுதி வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. அதற்காக தென்சென்னை தொகுதியை கேட்கிறது. இது தி.மு.க. கைவசம் இருக்கும் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கூகுள் (Google) நிறுவனத்தின் புதிய கொள்கையின் கீழ் மின்னஞ்சலுக்கு (Gmail) புதிய கட்டுப்பாடுகள்; கூகுள் நிறுவனம் அதிரடி..
by Askar
written by Askar
கூகுள் (Google) நிறுவனத்தின் புதிய கொள்கையின் கீழ் மின்னஞ்சலுக்கு (Gmail) புதிய கட்டுப்பாடுகள் வர இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வர இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் மூலம் மொத்தமாக 5,000 மின்னஞ்சல்களுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.
யூடியூப் (YouTube), கூகுள் குரோம் (Google Chrome), கூகுள் மேப் (Google Maps) போன்ற கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஆப்கள் மட்டுமல்லாமல், அடையாள அட்டை ,வங்கி கணக்கு போன்றவற்றுக்கும் மின்னஞ்சல் முக்கியமாக தேவைப்படுகிறது.
இதனால், ஜிமெயில் மின்னஞ்சல் பயனர்களின் (Gmail Users) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், அதுதொடர்பான கட்டுப்பாடுகளும் கூகுள் நிறுவனத்தால் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஸ்பேம் மின்னஞ்சல்களுக்கே (Spam Email) இந்த புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்து மின்னஞ்சல் பயனர்களுக்கும் பொருந்தாது. ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 5,000 மின்னஞ்சல்களை அனுப்பும் நபர்களுக்கு மட்டுமே விதிக்கப்படும்.
இந்த மொத்த அனுப்புநர்கள் (Bulk Senders)அவர்களிடமிருந்து மின்னஞ்சல்களை பெற விரும்பும் பயனர்களுக்கு மட்டுமே அவற்றை அனுப்ப வேண்டும். அப்படி இல்லை என்றால், அந்த மின்னஞ்சல்கள் தானகவே நிராகரிக்கப்பட்டுவிடும்.
இதனால், தனிப்பட்ட பயனர்களுக்கு அவசியமில்லாமல், வரும் ஸ்பேம் மின்னஞ்சல்கள் படிப்படியாக குறைந்து விடும். முன்னதாக, ஸ்பேம் மின்னஞ்சல்கள் மீதான புகார்களின் அடிப்படையில் மட்டுமே, கூகுள் நிறுவனம் அவற்றின் மீது நடவடிக்கையை எடுத்து வந்தது.
புதிய கட்டுப்பாடுகள்
ஆனால், இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் பயனர்கள் புகார் அளிக்கவில்லை என்றாலும், ஸ்பேம் மின்னஞ்சல்கள் தானாகவே நிராகரிக்கப்படும். இதுமட்டுமல்லாமல், வணிக மற்றும் விளம்பரங்களுக்காக மின்னஞ்சல்களை அனுப்புவோர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டுப்பாடுகள் வரும் ஜூன் மாதத்தில் இருந்து அவர்களுக்கு நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் அனுப்பும், மின்னஞ்சல்களில் ஒன் – கிளிக் அன்சப்ஸ்கிரைப் பட்டன் (One-click Unsubscribe Button) இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த பட்டன் மின்னஞ்சலின் உடல் (Body)பக்கத்தில் பயனர்களுக்கு நன்றாக தெரியும்படி இடம்பெற வேண்டும்.
இந்த பட்டனை பயனர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த அனுப்பநரிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களை விரும்பவில்லை என்றால், அன்சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம். அதன்பிறகு அவர்களிடம் இருந்து எந்த ஸ்பேம் மின்னஞ்சல்களும் பயனர்களுக்கு வராது.
இப்படி பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் 2024ஆம் ஆண்டில் வர இருக்கின்றன. கூகுளின் இந்த ஜிமெயில் சேவையை 180 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதால், அதுதொடர்பான கட்டுப்பாடுகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கின்றது.
You must be logged in to post a comment.