மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் இந்துராணி(42).இவர் தன்னுடைய உறவினர்களுடன் உசிலம்பட்டி மண்டபத்தில் நடைபெறும் உறவினர் இல்ல விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளார்.கார் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி அருகில் வரும் போது டிரைவர் முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்ற போது எதிர்பாராதவிதமாக கார் லாரி மீது மோதியது.இதில் காரில் பயணம் செய்த அனைவரும் காயமடைந்தனர்.உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஷேர் ஆட்டோவில்; சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப் பட்டனார்.இதில் தங்கத்தாய்(80) சிகிச்சை பலனின்றி மருத்துவமணையில் உயிரிழந்தார்.இந்துராணி(42) ஒச்சம்மாள்(80) அரவிந்த்(26) பிரகாஷ்(25) ஆகிய 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இது குறித்து உசிலம்பட்டி நகர் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். விசேஷ நிகழ்ச்சிக்கு சென்ற போது விபத்து நடைபெற்றது உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Category:
மாநில செய்திகள்
கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி மேலவலசை அய்யனார் கோயில் 263 ஆம் ஆண்டு எருதுகட்டு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், செப்.13- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் காஞ்சிரங்குடி மேலவலசை பொன்னும் சிறை எடுத்த அய்யனார் கோயில் 263 ஆம் ஆண்டு எருது கட்டு விழா இன்று மதியம் தொடங்கி மாலை வரை நடந்தது.
இதில் சேது கால், வெட்டுகுளம், மேலவலசை, ஆர்.எஸ்.மங்கலம், பால்கரை, பொட்டகவயல், சோழனூர், கலையனூர், காஞ்சிரங்குடி, பால்கரை, கொடி குளம், ஆலங்குளம், வாகை வயல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 55 காளைகள் கலந்து கொண்டன.
கவுரவத் தலைவர் அமீர், கோயில் டிரஸ்டி கிழவன், கிராம தலைவர் கோவிந்தராஜ், துணை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் இதய ரஞ்சித், பொருளாளர் மங்கள சாமி, எழுத்தர், சதீஷ் குமார், தண்டல் பால்சாமி, திருச்செல்வம் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்தனர். களத்தில் சீறிப்பாய்ந்து போக்கு காட்டிய காளைகளை அடக்கிய காளையர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் 12.09.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி நகராட்சியில் நடைபெற்று வரும் தேசிய நகர்ப்புற நல குழுமம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் மலையான் தெருவில் நலமையம் கட்டும் பணிகளையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.32 இலட்சம் மதிப்பில் நகராட்சி எல்லைக்குட்பட்ட வண்ணான்குளம் மேம்பாட்டு பணிகளையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.38 இலட்சம் மதிப்பில் TNHB காலனி (L பிளாக்) வார்டு எண் பி. பிளாக் 4, நகரளைவை எண் 37,39,40,41,42ல் பூங்கா அமைத்தல் பணிகளையும், தூய்மை இந்தியா திட்டத்தின் (நகர்புறம் 2.0) கீழ் ரூ.42.50 இலட்சம் மதிப்பில் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா நகரில் உள்ள MCC மையத்தில் பொருள் மீட்பு வசதிகள் (Material Recovery Facilities) மையம் அமைக்கும் பணிகளையும், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.21.80 மதிப்பில் நகராட்சி எல்லைக்குட்பட்ட சக்தி நகரில் பூங்கா அமைக்கும் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என மாவட்ட துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின் போது தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், நகராட்சி ஆணையாளர் S.ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் K.S.ஹசீனா, உதவி பொறியாளர் S.ஜெயப்ரியா மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவி மற்றும் துணைத்தலைவரின் அதிகாரம் பறிப்பு; தென்காசி மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி மாவட்டம் சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவி மற்றும் துணைத் தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லூர் பஞ்சாயத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர்.
இந்த நிலையில் சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவி முத்து மாரி, துணைத் தலைவர் பட்டுராஜ் ஆகியோரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை செங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செங்கோட்டை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கியும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், செப்.13 – இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் ராமநாதபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் (செப்.16) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டை யொட்டி, ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிா்வாகம், ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் தனியாா் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் செப்.16 ல் நடைபெற உள்ளது.
இம்முகாமில், 100 க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்கு தேவையான பணியாளா்களை தோவு செய்ய உள்ளனா். 8 ஆம் வகுப்பு தேறியோர் முதல் முதுகலை, பொறியியல் பட்டதாரிகள் வரை அனைத்து நிலை கல்வித் தகுதி உடையோர் இம் முகாமில் பங்கேற்று, தங்கள் கல்வித் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு பெறலாம். முகாமில் பங்கேற்க விரும்புவோா் இணைய தளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
இம்முகாமில் பங்கேற்க விரும்பும் தனியாா் நிறுவனங்கள், ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது மின்னஞ்சல் மூலம் அல்லது 04567-230 160 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடா்பு கொள்ளலாம். முகாமில் பங்கேற்கும் பணி நாடுநா், தங்களின் சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றுகள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பல நட்சத்திர (Delta Orionis) நிறமாலையை ஆராய்ந்த போது விண்மீன்களிடை ஊடகம் இருப்பதை கண்டறிந்த யோகான்னசு பிரான்சு ஹார்ட்மேன் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 13,1936).
by ஆசிரியர்
written by ஆசிரியர்
யோகான்னசு பிரான்சு ஹார்ட்மேன் ஜனவரி 11, 1865ல் ஜெர்மனியில் பிறந்தார். ஹார்ட்மேன் ஒரு ஜெர்மானிய இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். 1904ல் பல நட்சத்திர டெல்ட்டா ஓரியானிசின் (Delta Orionis) நிறமாலையை ஆராய்ந்த போது கால்சியம் வரிகளைத் தவிர மற்ற அனைத்து வரிகளும் இடம்பெயர்வதைக் கண்டார். இது விண்மீன்களிடை ஊடகம் ஒன்று நிலவுவதைக் குறிக்கிறது எனக் கூறினார்.
அர்ஜென்டினாவின் லா பிளாட்டா வானியல் ஆய்வகத்தின் இயக்குநராக நவம்பர் 1922 முதல் மே 1934வரை இருந்தார். அப்போது இவர் வானியற்பியலில் வான்காணகப் பணிகளை வழிநடத்தினார். இவர் மூன்று சிறுகோள்களைக் கண்டுபிடித்தார். சிறுகோள்கள் 965 ஆஞ்செலிகா (நவம்பர் 4, 1921), 1029 லா பிலாத்தா (ஏப்ரல் 28, 1924), 1254 எர்ஃபோர்டியா (மே 10, 1932) ஆகிய மூன்று சிறுகோள்களைக் கண்டுபிடித்தார். இலீப்சிக் பல்கலைக்கழகத்தில் நிலா மறைப்புகளைப் (சந்திர கிரகணம்) பற்றி ஆய்வு செய்து லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் 1891ல் முனைவர் பட்டம் பெற்றார்.
ஓரியனின் பெல்ட்டின் மூன்று நட்சத்திரங்களில் மேற்கு திசையில் மிண்டகா உள்ளது. இது வானத்தில் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒன்றான கண்ணுக்கு எளிதில் தெரியும், இது பழங்காலத்திலிருந்தே அறியப்படுகிறது.1900 ஆம் ஆண்டில் பாரிஸ் ஆய்வகத்தில் ஹென்றி-அலெக்ஸாண்ட்ரே டெஸ்லாண்ட்ரெஸ் எடுத்த ரேடியல் திசைவேக அளவீடுகள், மின்தாக்கா ஒரு மாறுபட்ட ரேடியல் திசைவேகத்தைக் கொண்டிருப்பதைக் காட்டியது. எனவே இது ஒரு ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் பைனரி ஆகும்.
1904 ஆம் ஆண்டில் போட்ஸ்டாம் ஆய்வகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத் தகடுகளைப் பயன்படுத்தி ஜோகன்னஸ் ஃபிரான்ஸ் ஹார்ட்மேன் சுற்றுப்பாதை காலம் 5.7 நாட்கள் என்பதைக் காட்டியபோது, அவரது ஆரம்ப சுற்றுப்பாதை கால மதிப்பீடு 1.92 நாட்கள் எனக் காட்டப்பட்டது. நட்சத்திர நிறமாலையில் 393.4 நானோமீட்டரில் உள்ள கால்சியம் K வரி நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை இயக்கம் காரணமாக கோடுகளின் குறிப்பிட்ட இடப்பெயர்வுகளில் பங்கெடுக்கவில்லை என்பதையும் ஹார்ட்மேன் கவனித்தார். மேலும் மிண்டகாவுக்கு பார்வை வரிசையில் ஒரு மேகம் கால்சியம் இருப்பதைக் கண்டறிந்தது. இது விண்மீன் ஊடகத்தின் முதல் கண்டறிதல் ஆகும்.
விண்மீன்களிடை ஊடகம் இருப்பதை கண்டறிந்த யோகான்னசு பிரான்சு ஹார்ட்மேன் செப்டம்பர் 13,1936ல் தனது 71வது அகவையில் கோட்டிங்கன் ஜெர்மனியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். சந்திரனின் வெகு தொலைவில் உள்ள சந்திர பள்ளம் ஹார்ட்மேன் குழிப்பள்ளம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தொலைநோக்கியைக் குவியவிக்கும் கருவி ஒன்று ஆர்ட்மேன் மறை என்று பெயரிடப்பட்டுள்ளது
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் ஆணி படுக்கையில் படுத்தவாறு 3 நிமிடத்தில் 80 கான்கிரீட் கற்களை உடைத்து பொறியாளர் கின்னஸ் சாதனை.!!
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் விஜய் நாராயணன், டேக்வாண்டோ மீதான ஈடுபாட்டால் தனது 23 வயதிலிருந்து தொடர்ந்து டேக்வாண்டோ கற்கத் தொடங்கியுள்ளார்.
இதையடுத்து டேக்வாண்டோவில் பல்வேறு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் டேக்வாண்டோவில் பல்வேறு பிரிவுகளில் இதுவரை 29 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
அதில் தற்போது ஆணி படுக்கையில் படுத்தபடி உடலுக்கு மேற்புறம் ஆணி படுக்கையை வைத்துக் கொண்டு 3 நிமிடத்தில் 80 கான்கிரீட் கற்களை உடைக்கும் கின்னஸ் சாதனையை நாராயணன் படைத்துள்ளார்.
முந்தைய கின்னஸ் உலக சாதனையாக மூன்று நிமிடத்தில் 50 கான்கிரீட் பிளாக் கற்களை உடைத்ததே சாதனையாக இருந்த நிலையில், 3 நிமிடத்தில் 80 கான்கிரீட் கற்களை உடைத்து புதிய சாதனையை படைத்துள்ளார் பொறியாளர் விஜய் நாராயணன். இதையடுத்து இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேக
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது.பிரசித்தி பெற்ற சோழவந்தான் பிரளயநாத(சிவன்)கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர்.சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. எம்விஎம் குழுமத்தலைவர் மணிமுத்தையா,கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன்,மற்றும் கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி,அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். சிறப்புஅர்ச்சனை,பூஜைகள், தீபாரதனை நடந்தது பிரதோஷ கமிட்டினர் பிரசாதம் வழங்கினர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அவனியாபுரத்தில் பெண் முகத்தில் மிளகாய் பொடியை தூவி செயின் பறிப்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை அவனியாபுரம் சந்தோசம் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராபின்சன் அருள்ராஜ். இவரது மனைவி ஞான சுதன் சிலி(வயது 38).. இவர் வீட்டின் அருகில் ஸ்டேசனரரி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவர் கணவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் ஞானசுதன்சிலி மட்டும் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார் .
அப்போது அந்த கடைக்கு வந்த மர்ம நபர் அவரிடம் பொருட்கள் வாங்குவது போல் நடித்து அவரது கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவினார். அவர் வேதனையால் அலறிக்கொணடிருந்த போது அவர் அணிந்திருந்த ஒன்பது பவுன் தாலி செயினை பறித்துச் சென்று ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஞான சுதன் சிலி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் கண்ணில் மிளகாய் பொடி தூவி செயின் பறித்த நபரை அவனியாபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் 3 இடங்களில் அதிநவீன வசதியுடன் தொடங்கப்பட்ட சோதனைசாவடி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.
மதுரையில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையிலும்., பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தமிழக காவல்துறை அறிவுறுத்தலின்படி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை புறநகர் பகுதிகளில் அதிக அளவு நடைபெறும் வழிப்பறி., கொலை., கொள்ளை., கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி சிவப்பிரசாத் உத்தரவின் பேரில் வாகன சோதனைச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இன்று மதுரை மாவட்டத்தில் ஒத்தக்கடை., விரகனூர் மற்றும் கூத்தியார் குண்டு ஆகிய 3 முக்கிய இடங்களில் அதிக அளவு நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு புதிதாக அமைக்கப்பட்ட இன்று இரவு திறந்து வைத்தார். இந்த மூன்று இடங்களில் 24 மணி நேரம் சோலார் மின் வசதியுடன் 360 டிகிரி சுழலும் அதிநவீன கேமராக்களுடன் மொத்தம் 21 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இன்று முதல் கனிகாணிக்கப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசுகையில்.,_l
முன்பகை காரணமாக பழிக்கு பலியாக நடைபெறும் சம்பவங்கள் குறித்தும் அவர்களுடைய நடவடிக்கை குறித்தும் கண்காணித்து அவர்களிடம் ஏற்கனவே வாங்கிய (110-வழக்கு) ஒப்புதல் மூலம் மீண்டும் குற்ற சம்பவங்கள் ஈடுபட்டால் அவர்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் ஆஜர் படுத்தி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறோம்.
குற்றவாளிகள் உள்ளூரிலோ அல்லது வெளியூரிலோ இருந்தால் அவளுடன் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. உசிலம்பட்டி., நாகமலை புதுக்கோட்டை., ஆஸ்டின் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தை திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளின் குறித்து வழக்கு போடாதது ஏன் தொடர்பாக ஆர்டிஓ மற்றும் ஏ டி எஸ் பி குழு நியமித்து எத்தனை வழக்குகள் போட்டு உள்ளார்கள் வழக்கு போடாதது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு போடாத நபர்கள் மீது வழக்கு கண்டிப்பாக பதியப்படும்.
நேரடியாகவே செல்போன் மூலம் கண்காணிப்பு கேமராக்களை பார்ப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டு எங்கெங்கு கேமராக்கள் பயனில்லாமல் உள்ளதோ அதை உடனடியாக சரி செய்வதற்கான ஏற்பாடுகளும் செல்போன் செயலி மூலம் கண்டறிந்து அவற்றை சரி செய்யப்படும் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அண்ணாமலையின் செருப்பை பாதுகாக்க வைத்த இந்திய வீரர்களிடம் அண்ணாமலையும் பாஜகவும் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்-எம்.பி. மாணிக் தாகூர் பேட்டி.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சென்னையில் இருந்து இன்டிகோ மானம் மூலம் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.மாணிக் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனை தொடர்ந்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. மாணிக் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தால் அப்போது அவர் கூறுகையில்:-
*பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செருப்பை மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாத்தது குறித்த கேள்விக்கு*
மத்திய பாதுகாப்பு படை வீரர்களை அண்ணாமலையின் செருப்பை பாதுகாப்பதற்காக பணியமர்த்தியது மிகவும் வருத்தம் மற்றும் வேதனை பட வேண்டிய விஷயமாக உள்ளது, பாதுகாப்புக்கு பிரச்சினை இல்லாத அண்ணாமலைக்கு சிஆர்பிஎஃப் Z கேரக்டரி கொடுத்து அமித்ஷா அனுப்பி வைத்த ஒரு விளைவாக அண்ணாமலையின் செருப்பை பாதுகாக்கின்ற வேலையை வழங்கி இருக்கிறார்கள். இந்திய நாட்டு வீரர்களை அவமானப்படுத்தும் அண்ணாமலையும் பாஜகவும் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்காக உள்துறை அமைச்சர் அமைச்சருக்கு இது குறித்து உண்மையை தெரிய வைக்க கடிதம் எழுத இருக்கிறேன்.
*திமுக அமைச்சர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜக நேற்று நடத்தி ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு*
பாஜகவை பொருத்தமட்டிலே மக்கள் கவனத்தை திசை திருப்பவே இதை செய்திருக்கிறார்கள். கேஸ்,பெட்ரோல், வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. இந்த பிரச்சனை பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது. இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களை மாற்ற வேண்டும் என்று அமைச்சர்களை கைது செய்ய வேண்டும் என்று கேட்பது இது மிகவும் கேளிக்கை கூறிய விஷயமாக இருக்கிறது
*ஜி 20 மாநாட்டில் மல்லி ஜார்ஜ் கார்கே அரசியல் கட்சித் தலைவரை அழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு*
கேட்டது கட்சி தலைவரே இல்லை, நாங்கள் எதிர்க்கட்சித் தலைவரை கேட்டோம். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்பது பிரதமருக்கு அடுத்து உள்ள பொறுப்பு.
அண்ணாமலைக்கு இதைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை,அண்ணாமலை ஐபிஎஸ் படித்திருக்கிறார்.
எல்.ஓ.பி நாங்கள் சொல்வது எதிர்க்கட்சி துணை தலைவர் பற்றி தமிழ்நாட்டை பொறுத்த மட்டிலே முதலமைச்சருக்கு அடுத்து lop தான் அதிகாரம் உள்ளது. அண்ணாமலை தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார். இது பெரும் வருத்தம் அளிக்கிறது.
*பத்து வருடங்களாக எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் பாரத் எனும் பெயர் மாற்றம் என்று உதயநிதி கூறியது குறித்த கேள்விக்கு*
உதயநிதியோட பார்வை ரசிக்க கூடியதாக இருந்தது. பத்து வருடங்களில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் தனக்கு முன்னால் இருக்கும் பெயர் பலகையை மாற்றிய மோடியின் சாதனையக பார்க்க வேண்டும். மோடி கருப்பு பணத்தை ஒழிப்போம், இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் கொடுப்போம் என்று சொன்னார் எதுவா நடக்கவில்லை என்பது மிக தெளிவாக தெரிகிறது.
*’பாரத் என பெயர் மாற்றத்திற்கு இன்னும் முறையான அரசு ஆணை வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் குறித்த கேள்விக்கு*
அதானி ஊழலை சுப்ரீம் கோர்ட்டில் இருந்தும் மற்றும் சி.பி, டிடி உடைய தலைவராக மாற்றுவதற்காகவும் நடைபெற்ற பிரச்சனை தான் இது, அதானே காப்பாற்றுவதற்காக தான் இந்த பெயர் மாற்றம் இது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்காது.
*திமுக அமைச்சர்கள் மீது அதிமுக தொடர்ந்து வழக்கு தொடரப்பட்ட வருகிறது குறித்த கேள்விக்கு*
ஜனநாயக உரிமை தொடர்ந்து அதை யாரும் அவதூறாக பேசப்படுகிறார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்களோ அவர்கள் வழக்கை சந்திக்கக் கூடியவர்கள், திமுக அமைச்சர்கள் வழக்கை சந்திப்பார்கள் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் தமுமுக-மமகவின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகர தலைவர் முகமது பஸ்ஸில் தலைமை வகித்தார். தமுமுக நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், நகர பொருளாளர் முகம்மது அலி முன்னிலை வகித்தார். இதில் தமுமுக மாவட்ட பொருளாளர் முகம்மது பாசித் மற்றும் ரியாத் மண்டல செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், விழி அணி மாநில துணை செயலாளர் முகம்மது ரபீக், மமக மாவட்ட துணை செயலாளர் செய்யது மசூது, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, சுற்றுச்சூழல் அணி மாவட்ட பொருளாளர் சேகனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முக்கிய ஆலோசனை வழங்கினர். நகர துணை செயலாளர் சம்சுதீன், லத்தீப், ராஜப்பா, நகர மருத்துவ சேவை அணி பாதுஷா மற்றும் வார்டு நிர்வாகி முஜீப், முன்னாள் தமுமுக நகர செயலாளர் அப்துல் ரஹீம், முன்னாள் தமுமுக துணை செயலாளர் சித்திக் மற்றும் நயினா முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடையநல்லூரில் தமுமுக மமக வின் மக்கள் நலபணிகளை துரிதப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான முகாம் வரும் 19ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை சகாய மாதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
இம்முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில், பேரணி நடந்தது.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தலைமை ஆசிரியர் கோபி துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் உதயகுமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், பிறந்த குழந்தை முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். முகாமில் வட்டார கல்வி அலுவலர் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். புதுப்பித்துத் தரப்படும். தேவைப்படுவோருக்கு உபகரணங்கள் வழங்கப்படும். உதவித் தொகை பெற்று தரப்படும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெறலாம்,” என்றார். பேரணி,அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து பெருமாள் கோயில் தெரு, ராஜவீதி, சிவன் கோயில் தெரு வழியாக சென்று பள்ளியை அடைந்தது முடிந்தது.பொதுமக்களுக்கு முகாம் குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மாணவ, மாணவியர், ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம்: ராமேஸ்வரத்தில் மராத்தான் ஓட்டம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், செப்.12- முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளை (அக்.15) முன்னிட்டு ராமேஸ்வரத்தில் மாரத்தான் போட்டி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாரத்தான் போட்டிக்குரிய ஏ.பி.ஜே.அப்துல் கலாம் உருவம் பொறித்த லோகோவை மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் வெளியிட்டார்.
ஆட்சியர் கூறுகையில், அப்துல் கலாமின் சாதனைகளை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாள் அக்.15 தேசிய மாணவர் தினத்தன்று சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டி அப்துல் கலாம் நினைவிடத்திலிருந்து துவங்கி பாம்பன் மேம்பாலம் வரை 21 கி.மீ வரை ஒரு போட்டி, நினைவிடம் முதல் தங்கச்சிமடம் வரை 5 கி.மீ தூர ஒரு போட்டி என 2 கட்ட போட்டி நடைபெறுகிறது. 21 கிமீ தூர போட்டியில் பங்கேற்க ரூ.750ம், 5 கிமீ தூர போட்டியில் பங்கேற்க ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். போட்டியில் 500 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவதால் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் https://www.townscript.com/e/kalam-half-mrathan-24420 என்ற இணைத்தில் 80980 30808 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
இப்போட்டியில் பங்கேற்க உள்ளோருக்கு டி-சர்ட், தொப்பி, புரத உணவுப் பொருள் வழங்கப்படும். போட்டியில் முதலிடம் பிடிப்பவருக்கு பதக்கம், பாராட்டு சான்று, காசோலை வழங்கப்படும்.
கலாமின் சாதனைகளை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள உங்கள் கனவுகளுக்காக ஓடுங்கள்” என்பதே இந்த ஓட்டத்தின் உள்நோக்கம் ஆகும். மாநில அளவில் துவங்கப்படும் இப்போட்டி வரும் காலத்தில் அப்துல் கலாம் பிறந்த நாளில் நாடே பார்க்கும் வகையில் ராமேஸ்வரத்தில் பல்வேறு சாதனை விழாக்கள் நடைபெறும் வகையில் இந்த விழா முன்னேற்றமாக திகழ வேண்டும். இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், செப்.12- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பருத்திக்கார தெருவைச் சேர்ந்தவர் செய்யது ரிபாயா, 37. இவருக்கும், சகுபர் சாதிக் அலி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து செய்யது ரிபாயா 2 பிள்ளைகளையும் கடன்பட்டு வளர்த்தார். கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாததால் மன உளைச்சல் அடைந்த செய்யது ரிபாயா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரித்து வருகிறார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்; திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் 66-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ஷெரிப், மாவட்டத் துணைச் செயலாளர் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேக் தாவுது, ஜேசுராஜன், ஒன்றிய செயலர்கள் ரவிசங்கர், அழகு சுந்தரம், சீனித்துரை, நகர செயலாளர் சாதீர், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரன், சாமிதுரை, அணி அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜ் டாக்டர் அன்பரசன் இசக்கி பாண்டியன் பரமசிவன் தங்கராஜ் பாண்டியன், ஜே.கே. ரமேஷ் முத்துராமலிங்கம், சங்கரநாராயணன், நசீம், ஆயிரபதி முத்துவேல், பொன் செல்வன், கோ.மாறன், சரவணன், பரமசிவன், கருப்பண்ணன், சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா, ஷேக் பரித், ராமராஜ், மாரிமுத்து, ஜபருல்லாகான், பாப்பா, கலாநிதி, காசி கிருஷ்ணன், கொடி கோபாலகிருஷ்ணன், கணேசன், இஞ்சி இஸ்மாயில் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்றிய திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் செல்லத்துரை தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஆனைகுளம் அப்துல்காதர், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், ஒன்றிய துணைச் சேர்மன் ஐவேந்திரன், திட்டக்குழு உறுப்பினர் முருகன், நகர்மன்ற உறுப்பினர் சிட்டி திவான் மைதீன், ஒன்றிய கவுன்சிலர் பகவதி அப்பன், எஸ் பி கே.டி. குமார், நெடுவயல் கணேசன், முருகானந்தம், நல்லையா பீர் முகமது, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீரான் முதலியான் கான், நகரத் துணைச் செயலாளர் காசி உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர் சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளி உபகரணங்கள்; தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 11.09.2023 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார். தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 3-மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் தலா ரூ.8,500 வீதம் மொத்தம் ரூ.25,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட துரை. இரவிச்சந்திரன் வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 337 மொத்தம் மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) ஷேக், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி, உதவி மக்கள் தொடர்பு தொடர்பு அலுவலர் ரா. ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செயற்கை முறையில் புதிய கதிரியக்கத் தனிமங்களை கண்டறிந்து நோபல் பரிசு வென்ற, மேரி கியூரி மகள் ஐரீன் ஜோலியட் கியூரி பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 12, 1897).
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ஐரீன் ஜோலியட் கியூரி (Irene Joliot-Curie) செப்டம்பர் 12, 1897ல் பிரான்சின் பாரிஸில் பிறந்தார். புகழ்பெற்ற நோபல் தம்பதிகளான மேரி கியூரி மற்றும் பியரி கியூரியின் மகளும் பிரெஞ்சு அறிவியலாளரும் ஆவார். 1906 ஆம் ஆண்டில், ஐரீன் கணிதத்தில் திறமையானவர் என்பது தெளிவாகத் தெரிந்தது. மேலும் அவரது தாயார் பொதுப் பள்ளிக்கு பதிலாக அதில் கவனம் செலுத்தத் தேர்ந்தெடுத்தார். மேரி பல புகழ்பெற்ற பிரெஞ்சு அறிஞர்களுடன் சேர்ந்து, முக்கிய பிரெஞ்சு இயற்பியலாளர் பால் லாங்கேவின் உட்பட கூட்டுறவு ஒன்றை உருவாக்கினார். இதில் பிரான்சில் மிகவும் புகழ்பெற்ற கல்வியாளர்களின் குழந்தைகளாக இருந்த ஒன்பது மாணவர்களின் தனிப்பட்ட கூட்டமும் இருந்தது. ஒவ்வொன்றும் ஒருவருக்கொருவர் அந்தந்த வீடுகளில் கல்வி கற்பதற்கு பங்களித்தன. கூட்டுறவு பாடத்திட்டம் மாறுபட்டது மற்றும் அறிவியல் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சியின் கொள்கைகளை மட்டுமல்லாமல் சீன மற்றும் சிற்பம் போன்ற மாறுபட்ட பாடங்களையும் உள்ளடக்கியது. சுய வெளிப்பாடு மற்றும் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது. ஐரீன் இந்த சூழலில் சுமார் இரண்டு ஆண்டுகள் படித்தார்.
ஐரீன் பதிமூன்று வயதில் இருந்தபோது, அத்தை ப்ரொன்யா (மேரியின் சகோதரி) உடன் கோடைகாலத்தை கழிக்க ஐரேன் மற்றும் அவரது சகோதரி ஆவ் போலந்திற்கு அனுப்பப்பட்டனர். ஐரீனின் கல்வி மிகவும் கடுமையானது. அந்த இடைவெளியின் ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒரு ஜெர்மன் மற்றும் முக்கோணவியல் பாடம் இருந்தது. 1914 வரை மத்திய பாரிஸில் உள்ள கொலேஜ் செவிக்னேயில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதன் மூலம் ஐரீன் மீண்டும் ஒரு மரபுவழி கற்றல் சூழலில் நுழைந்தார். பின்னர் அவர் சோர்போனில் உள்ள அறிவியல் பீடத்திற்குச் சென்றார். 1916 ஆம் ஆண்டு வரை உலகப் போரினால் தனது ஆய்வுகள் தடைபட்டபோது தனது இளங்கலை முடித்தார். ஐரீன் தனது தாயார் மேரி கியூரிக்கு உதவியாளராக உதவுவதற்காக கல்லூரியில் ஒரு நர்சிங் படிப்பை எடுத்தார். அவர் தனது தாயை ஒதுக்கி போர்க்களத்தில் ஒரு செவிலியர் ரேடியோகிராஃபராக தனது பணியைத் தொடங்கினார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு அவர் பெல்ஜியத்தில் ஒரு கதிரியக்க வசதியில் தனியாக இருந்தார்.
கதிரியக்கத்தைப் பயன்படுத்தி உடல்களில் சிறு துண்டுகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று டாக்டர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். மேலும் உபகரணங்களை எவ்வாறு சரிசெய்வது என்று தானே கற்றுக் கொண்டார். பெல்ஜியத்தில் எக்ஸ்ரே வசதிகளில் உதவி செய்ததற்காக அவர் ஒரு இராணுவ பதக்கத்தைப் பெற்றார். போருக்குப் பிறகு, 1918ல் கணிதம் மற்றும் இயற்பியலில் தனது பட்டப்படிப்பை முடிக்க பாரிஸில் உள்ள சோர்போனுக்கு திரும்பினார். ஐரீன் பின்னர் தனது பெற்றோரால் கட்டப்பட்ட ரேடியம் நிறுவனத்தில் தனது தாயின் உதவியாளராக பணிபுரிந்தார். அவரது முனைவர் பட்ட ஆய்வு பொலோனியத்தின் ஆல்பா சிதைவு, அவரது பெற்றோரால் கண்டுபிடிக்கப்பட்ட உறுப்பு (ரேடியத்துடன் சேர்த்து) மற்றும் மேரியின் பிறந்த நாடான போலந்தின் பெயரிடப்பட்டது. ஐரீன் 1925ல் அறிவியல் மருத்துவரானார்.
1924 ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்டத்தின் முடிவை நெருங்கியபோது, கதிரியக்க வேதியியல் ஆராய்ச்சிக்குத் தேவையான துல்லியமான ஆய்வக நுட்பங்களை இளம் வேதியியல் பொறியியலாளர் ஃப்ரெடெரிக் ஜோலியட்டுக்கு கற்பிக்க ஐரீன் கியூரியிடம் கேட்கப்பட்டது. பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார். 1928 முதல் ஜோலியட்-கியூரி மற்றும் அவரது கணவர் ஃப்ரெடெரிக் ஆகியோர் அணுக்கருக்கள் பற்றிய ஆய்வு முயற்சிகளை இணைத்தனர். 1932 ஆம் ஆண்டில், ஜோலியட்-கியூரி மற்றும் அவரது கணவர் ஃப்ரெடெரிக் ஆகியோர் மேரியின் பொலோனியத்தை முழுமையாக அணுகினர். பாசிட்ரானை அடையாளம் காண காமா கதிர்களைப் பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் சோதனைகள் பாசிட்ரான் மற்றும் நியூட்ரான் இரண்டையும் அடையாளம் கண்டிருந்தாலும், அவை முடிவுகளின் முக்கியத்துவத்தை விளக்குவதில் தோல்வியுற்றன. கண்டுபிடிப்புகள் பின்னர் முறையே கார்ல் டேவிட் ஆண்டர்சன் மற்றும் ஜேம்ஸ் சாட்விக் ஆகியோரால் கோரப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகள் உண்மையில் மகத்துவத்தைப் பெற்றிருக்கும், ஜே.ஜே. தாம்சன் 1897ல் எலக்ட்ரானைக் கண்டுபிடித்ததைப் போலவே, அவை இறுதியாக ஜான் டால்டனின் அணுக்களின் மாதிரியை திட கோளத் துகள்களாக மாற்றின.
இருப்பினும், 1933 ஆம் ஆண்டில், நியூட்ரானின் துல்லியமான எடை அளவீட்டை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஜோலியட்-கியூரி மற்றும் அவரது கணவர். ஜோலியட்-கியூரிஸ் விஞ்ஞான சமூகத்தில் தங்கள் பெயரைப் பெற தொடர்ந்து முயன்றனர். அவ்வாறு அவர்கள் நடத்திய ஒரு சுவாரஸ்யமான பரிசோதனையிலிருந்து ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கினர். அலுமினியத்திற்கு எதிராக ஆல்பா கதிர்களைப் பயன்படுத்துவதற்கான பரிசோதனையின் போது, புரோட்டான்கள் மட்டுமே கண்டறியப்பட்டன. கண்டறிய முடியாத எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான் ஜோடியின் அடிப்படையில் புரோட்டான்கள் நியூட்ரான்கள் மற்றும் பாசிட்ரான்களாக மாற்றப்படுவதை அவர்கள் முன்மொழிந்தனர். பின்னர் அக்டோபர் 1933ல், இந்த புதிய கோட்பாடு ஏழாவது சொல்வே மாநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. சோல்வே மாநாடு இயற்பியல் மற்றும் வேதியியல் சமூகத்தின் முக்கிய விஞ்ஞானிகளைக் கொண்டிருந்தது. ஐரினும் அவரது கணவரும் தங்கள் கோட்பாட்டையும் முடிவுகளையும் சக விஞ்ஞானிகளுக்கு வழங்கினர். ஆனால் அவர்கள் கலந்துகொண்ட 46 விஞ்ஞானிகளில் பெரும்பாலானவர்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றனர். இருப்பினும் அவர்கள் பின்னர் சர்ச்சைக்குரிய கோட்பாட்டை உருவாக்க முடிந்தது.
1934 ஆம் ஆண்டில், ஜோலியட்-கியூரிஸ் இறுதியாக விஞ்ஞான வரலாற்றில் தங்களின் இடத்தை முத்திரையிட்ட கண்டுபிடிப்பை மேற்கொண்டார். இயற்கையாக நிகழும் கதிரியக்கக் கூறுகளை தனிமைப்படுத்திய மேரி மற்றும் பியர் கியூரி ஆகியோரின் பணியைக் கட்டியெழுப்பிய ஜோலியட்-க்யூரி, ஒரு உறுப்பை மற்றொன்றாக மாற்றுவதற்கான ரசவாதியின் கனவை உணர்ந்தார். போரனில் இருந்து கதிரியக்க நைட்ரஜனை உருவாக்குதல், அலுமினியத்திலிருந்து பாஸ்பரஸின் கதிரியக்க ஐசோடோப்புகள் மற்றும் மெக்னீசியத்திலிருந்து சிலிக்கான், அலுமினியத்தின் இயற்கையான நிலையான ஐசோடோப்பை ஆல்பா துகள்களுடன் (ஹீலியம்) கதிர்வீச்சு செய்வது பாஸ்பரஸின் நிலையற்ற ஐசோடோப்பை உருவாக்குகிறது. 27Al + 4He → 30P + 1n. இந்த முதல் கண்டுபிடிப்பு முறையாக பாசிட்ரான் உமிழ்வு அல்லது பீட்டா சிதைவு என அழைக்கப்படுகிறது. அங்கு கதிரியக்க கருவில் உள்ள ஒரு புரோட்டான் ஒரு நியூட்ரானாக மாறி ஒரு பாசிட்ரான் மற்றும் எலக்ட்ரான் நியூட்ரினோவை வெளியிடுகிறது.
அதற்குள், மருத்துவத்தில் பயன்படுத்த கதிரியக்க பொருட்களின் பயன்பாடு வளர்ந்து வந்தது. இந்த கண்டுபிடிப்பு கதிரியக்க பொருட்கள் விரைவாகவும், மலிவாகவும், ஏராளமாகவும் உருவாக்க அனுமதித்தது. செயற்கை முறையில் புதிய கதிரியக்கத் தனிமங்களை இவரும் இவரது கணவர் பிரெடரிக் ஜோலியட்-கியூரியும் இணைந்து கண்டறிந்து, 1935ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றனர். இதன்மூலம் இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசு வென்ற பெருமை இவர்களது குடும்பத்திற்கு கிட்டியது. ஜோலியட்-கியூரிக்கு அறிவியல் பீடத்தில் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது. நோபல் பரிசு வென்ற, மேரி கியூரி மகள் ஐரீன் ஜோலியட் கியூரி மார்ச் 17, 1956ல், தனது 58வது அகவையில் லுகேமியாவால் பாரிஸில் உள்ள கியூரி மருத்துவமனையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இது பொலோனியம் -210 கதிர்வீச்சு காரணமாக இருக்கலாம்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இமானுவேல் சேகரனின் 66 வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக தற்போது மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
*சந்திரபாபு நாயுடு கைது குறித்த கேள்விக்கு:*
வேறு மாநிலத்தில் நடக்கும் பிரச்சனை எனக்கு தெரியாது, நான் கருத்து கூறினால் சரியாக இருக்காது. அவரும் ஒரு முன்னாள் முதல்வர் என்பதால் தீர்ப்பு நியாயமாக இருக்க வேண்டும்.
*எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தை எதிர்ப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு:*
நல்லது தான் அப்போதுதான் பாஜக வளரும். கலைஞர் இருந்தால் கூட எதிர்ப்புகளை சமமாக கையாண்டு விடுவார். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார் மேலும் தமிழ் காப்பியங்களுக்கு அவர் உரை எழுதுவார். அரசியலில் ஒரு பால்ட் லைன் உருவானால் தான் புதிய கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும். மோடியின் திட்டங்கள் மறுபடியும் பாஜகவின் தனித்துவத்தை தாண்டி உதயநிதி ஸ்டாலின் வந்த பிறகு பாஜகவின் வளர்ச்சி அதிகம்.
சனாதனத்திற்கு எதிராக ஆதரவாகவும் எதுவும் பேசாமல் வெறும் பேச்சாக மட்டும் இருப்பதை மக்கள் பார்க்கிறார்கள். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் அதை பார்ப்பீர்கள்.
*அமைச்சரின் தலைக்கு பரிசுத்தொகை அறிவிப்பது குறித்த கேள்விக்கு:*
அது தவறு தான் அப்படி ஒருவரின் தலைக்கு பரிசுத்தொகை நிர்ணயிக்கிறார் என்றால் அவர் சனாதனத்தை பின்பற்றவில்லை என்று அர்த்தம். சனாதனத்தை பின்பற்றுகிறேன், ஒருவரின் தலைக்கு விலை வைப்பேன் என்றால் அவர் ஒரு போலி சாமியாராக தான் இருக்க வேண்டும். இதை வன்மையாக கண்டிப்பது மட்டுமல்ல இது ஏற்புடையதல்ல. தலைக்கு வேலை வைப்பதற்கு யார் அவர். வெளியூரிலிருந்து வந்து யாருக்கு விலை வைப்பது.
*சினிமா மூலம் அரசியல் பேசுவது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கருத்து குறித்த கேள்விக்கு:*
ஜாதிய வன்மங்கள் கொண்ட திரைப்படங்கள் தமிழ் திரையுலகத்தில் வருகிறது. சினிமாவில் என்ன கருத்துக்களை சொல்கின்றோம் என்பது முக்கியம். முக்கியமான கருத்துக்கள் சினிமா மூலம் சொல்ல வேண்டும் அதற்கு நான் உடன்படுகிறேன். ஆனால் ஒரு சில இடங்களில் வன்முறைகள் நடப்பதற்கு சினிமாவே காரணமாகிவிடுகிறது.
*ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு:*
அதற்கான ஒரு வரைமுறை உள்ளது. தற்போது அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. 1952 இல் இருந்து 67 வரை நாலு முறை ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெற்றுள்ளது. இது பாஜகவின் கொள்கை முடிவு தான் ஆனாலும் கூட உடனடியாக கொண்டு வர முடியாது.
*பாரத் பெயரும் மாற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கேள்விக்கு:*
அரசியலமைப்பு அறிஞர்கள் கூட இந்தியாவை பாரத் என்றும் பாரத் என்பதை இந்தியா என்றும் உபயோகிப்பதால் எந்தவித சட்ட சிக்கலும் ஏற்படாது என்று சொல்கிறார்கள். இந்தியாவை பாரத் என்று ஒரு சில இடங்களில் பிரதமர் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தியுள்ளார். இல்லாத பிரச்சனையை எதிர்க்கட்சியினர் உருவாக்குகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கின்றது தான் செய்கிறோமே தவிர புதிதாக எதுவும் செய்யவில்லை. பாரதம் என்கிற வார்த்தை இந்தியாவை அழகாக நுட்பமாக காட்டுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து.
*இந்தியா கூட்டணி வந்ததால் பாரதப் பெயர் மாற்றம் இன்று விமர்சனம் குறித்த கேள்விக்கு:*
பாஜக கொண்டு வந்துள்ள பல முக்கிய திட்டங்களில் பாரத் என்கிற பெயர் உள்ளது. எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை எப்பொழுது மக்கள் அவர்களைப் பற்றிய பேசுவதாக சிந்திக்கிறார்கள். இந்தியா கூட்டணி என்று நாங்கள் வைத்ததால் தான் அண்ணாமலை உயிரோடு இருக்கிறார் என்று கூட சொல்வார்கள்.
*பாஜக கூட்டணியில் ஒபிஎஸ் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு:*
அதிகாரப்பூர்வ கருத்துக்கள் வெளியாகி உள்ள நிலையில் இது குறித்து மாநில தலைவராக நான் கருத்துக்கூற எதுவும் இல்லை.
*ஜி 20 மாநாட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்காதது குறித்த கேள்விக்கு:*
அது கட்சித் தலைவரை அழைப்பதற்கான மாநாடு அல்ல அப்படி என்றால் ஜே.பி.நட்டாவையும் தான் அழைத்திருக்க வேண்டும். முன்னாள் பிரதமர்கள் மற்றும் தற்போதைய முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாரை அழைக்க வேண்டுமோ அழைத்துள்ளார்கள். காங்கிரஸ் தலைவரை அழைக்க வேண்டும் என்றால் ஜேபி நட்டாவையும் அழைக்க வேண்டும் என்று நான் சொல்வேன்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை விமான்பயணி் தவறவிட்ட பொருளை உடனடியாக மீட்ட பாதுகாப்பு படையினர்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை அழகப்பன் நகர் விரிவாக்கப் பகுதியில் உள்ள காந்தி தெருவை சேர்த்தவர் ஆனந்தன். இவரது மகன் சண்முகசுந்தரம் (வயது 62) இவர் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக இன்று காலை 10:30 மணி அளவில் மதுரை வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் இமானுவேல் சேகரன் குருபூஜை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் வருகை முன்னிட்டு ஏராளமான கூட்டமும் பரபரப்பாக இருந்தது.
அப்போது சண்முகசுந்தரம் தனது உடமைகளை வைத்து தள்ளுபண்டியில் தள்ளி வந்து காரில் ஏற்றும்போது சூட்கேஸ் மற்றும் இதர சாமான்களை ஏற்றிவிட்டு பாஸ்போர்ட் பணம் மற்றும் ஆவணங்கள் நிறைந்த கைப்பையை தள்ளுவண்டியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார். மதுரை விமான நிலைய வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த கருப்பசாமி எனும் வீரர் அதிவிரவு அதிரடிப்படை வீரர்கள் கியூ ஆர் டி டீம் )தள்ளு வண்டியில் கைப்பை இருப்பதை பார்த்து சோதனை செய்த போது சண்முகசுந்தரத்தின் பாஸ்போர்ட் மற்றும் இந்திய பணம் 38,000 சிங்கப்பூர் பணம் மற்றும் ஆவணங்கள் ஆகியவை இருந்தது .
இதனை தொடர்ந்து அவரை தொலைபேசி மூலம் அழைத்துவிமான நிலைய பயணிகள் முனைய அலுவலகத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டது. பணம் மற்றும் பாஸ்போர்ட் தொலைந்து மிகவும் பதட்டமான சூழ்நிலையில் இருந்த சண்முகசுந்தரம் விமான நிலையத்தின் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களால் பத்திரமாக மீட்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விமானத்தில் மயக்கம் அடைந்த துபாய் பயணிக்கு சிகிச்சை அளித்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததும் பயணிகள் உடைமையை பத்திரமாக மீட்டுக் கொடுத்ததும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் சேவை பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.