ராமநாதபுரம், செப்.9- ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வி துறை சார்பில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் பயன் குறித்து மாணவ, மாணவிகளுடன் உறுதி மொழி ஏற்று கொண்டார்.
ஒவ்வொரு மாணவ, மாணவியும் தன் படிக்கும் பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒவ்வொருவரும் தனது கடமை பொறுப்புணர்வுடன் செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தினார்.
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார்.
முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிந்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.