தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் 12.09.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி நகராட்சியில் நடைபெற்று வரும் தேசிய நகர்ப்புற நல குழுமம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் மலையான் தெருவில் நலமையம் கட்டும் பணிகளையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.32 இலட்சம் மதிப்பில் நகராட்சி எல்லைக்குட்பட்ட வண்ணான்குளம் மேம்பாட்டு பணிகளையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.38 இலட்சம் மதிப்பில் TNHB காலனி (L பிளாக்) வார்டு எண் பி. பிளாக் 4, நகரளைவை எண் 37,39,40,41,42ல் பூங்கா அமைத்தல் பணிகளையும், தூய்மை இந்தியா திட்டத்தின் (நகர்புறம் 2.0) கீழ் ரூ.42.50 இலட்சம் மதிப்பில் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா நகரில் உள்ள MCC மையத்தில் பொருள் மீட்பு வசதிகள் (Material Recovery Facilities) மையம் அமைக்கும் பணிகளையும், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.21.80 மதிப்பில் நகராட்சி எல்லைக்குட்பட்ட சக்தி நகரில் பூங்கா அமைக்கும் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என மாவட்ட துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின் போது தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், நகராட்சி ஆணையாளர் S.ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் K.S.ஹசீனா, உதவி பொறியாளர் S.ஜெயப்ரியா மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.